ப் சந்திரசேகர்.
என் மனைவி பிரிந்து போய்விட்டார். திரும்பி வருவாரா?
31-8-1977-ல் பிறந்தவர். துலா லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். உங்கள் ஜாதகப்படி, பிரிந்துபோன மனைவி திரும்பிவர வாய்ப்பில்லை. நடப்பு சுக்கிர தசை. இவர் உங்களுக்கு லக்னம், 8-ஆம் அதிபதி- அம்சத்தில் நீசம். சற்று கஷ்டமான வாழ்க்கைதான். உங்களின் வாழ்வு பெற்றோர், பிள்ளைகளுடன் ஓடும். 50 வயதிற்குப்பின், உங்கள் உறவுக்காரப் பெண்ணை, திருமணம் செய்யாமல் வீட்டு உதவிக்கென்று ஏற்பாடு செய்து கொள்வீர்கள். பூர்வபுண்ணிய குற்றம் இவ்வித வாழ்வைக் கொடுத்துள்ளது. இந்த ஜாதகரைப்போல் சுக்கிரன் கெட்டு, குலதெய்வக் குற்றமும் சேர்ந் திருந்தால் மயிலாடுதுறை, திருவாரூர் சாலையிலுள்ள திருமீயச்சூர் ஆலயத் தில் 12 நரகர்களுக்கு அபிஷேகம் செய்து, ஆலய மூர்த்திகளுக்கும் அர்ச்சனை செய்யவேண்டும். மேலும் அவரவர் குல தெய்வத்தையும் நன்கு வணங்கவேண்டும்.
ப் ஏ. செல்வராஜ், சென்னை-62.
மனை விற்பனை எப்போது ஆகும்?
30-9-1958-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். உங்கள் கா- மனையை வேறு நபர் போலிப் பெயரில் பட்டாபோட்டு விற்றுவிட்டார். அதற்காக நீதிமன்ற வழக்கு நடத்துகிறீர் கள். உங்கள் ஜாதகத்தில் வீடு, மனையைக் குறிக்கும் 4-ஆம் அதிபதி சந்திரன்- கேது மற்றும் செவ்வாயிடையே மாட்டிக்கொண்டு பாபகர்த்தாரி யோகம் பெறுகிறார். மேலும் வீடு, மனையை விற்கும் பாவாதியான 3-ஆம் அதிபதி புதன் 6-ல் உச்சம். ஒரு ஓட்டை சைக்கிளைக்கூட வில்லங்கமில்லாமல் விற்கமுடியாது. நடப்பு குரு தசை. அதில் சனி புக்தி 2024, அக்டோபர்வரை. இப்போது மீனத் திலுள்ள குரு, மேஷத்திற்கு மாறுவதற்குள் உங்கள் மனை உங்கள் கைக்கு வந்துவிடும். வழக்கு விஷயமான செலவும் அதிகமாகும். இவ்விதம் மனை இருந்தும் அதனால் அல்லல்படுவோர். திருச்சி- மண்ணச்சநல்லூர் ஸ்ரீ பூமிநாதேஸ்வரர் கோவில்சென்று வணங்கவும். மேலும் வழக்குகளில் வெற்றி கிடைக்க திங்கட்கிழமைகளில் நெய், உப்பு, வெல்லம், பச்சரிசி, துவரம் பருப்பு சேர்த்து தானம் கொடுத்தால், வழக்குகளில் வெற்றிகிட்டுமென கூறப்பட்டுள்ளது.
ப் நீலகண்டன்.
பல பெண்களைப் பார்த்தும் எதுவும் கூடிவரவில்லை. திருமணம் தாமதமாகிக் கொண்டு வருகிறது. எப்போது பெண் அமையும்?
கும்ப லக்னம், சிம்ம ராசி, உத்திர நட்சத் திரம். லக்னத்துக்கு 2-ல் ராகு, 8-ல் கேது. எனவே நாக தோஷம் உள்ளது. சனி, சந்திரன் பார்வை. சந்திரன் உங்களின் 7-ஆம் அதிபதி. சனி களஸ்திர ஸ்தானாதிபதியைப் பார்ப்ப தால், தாமதத் திருமணம். மற்றும் புனர்பூ யோகமுள்ளது. உங்கள் 5, 7-ஆம் அதிபதிகள் லக்னத்தில் சேர்க்கை. களஸ்திர அதிபதி சுக்கிரன் அம்சத்தில், நீசம். உங்களுக்கு விவா கரத்து பெற்ற பெண் அல்லது வேறுமதப் பெண்ணோடு திருமணம் நடக்கும். நடப்பு ராகு தசையில் சுக்கிர புக்தி 2024 வரை. 2023 மே மாதத்திலிருந்து பெண் அமையும் யோகமுண்டு. தாலி தானம் அவசியம். இவ்விதம் நிறைய வரன் பார்த்தும் திரும ணம் கைகூடாமல் இருப்பவர்கள், திருவாரூர்- பூந்தோட்டம் அருகேயுள்ள திருவீழிமிழலை எனும் திருத்தலத்தில் அரு ளும் மாப்பிள்ளை சுவாமி எனும் பெயர் பெற்ற ஈசனை, மஞசள், குங்குமம், மாலை சாற்றி, அர்ச்சனைசெய்து வழிபடுவது மிக நல்லது.
ப் ரா. மங்கயர்க்கரசி, மதுரை-1.
என் தந்தைக்கு 91 வயது. நோய்வாய்ப் பட்டு கடந்த நான்கு மாதங்களாக நடமாட்டமில்லை. சுயநினைவின்றிப் புலம்புகிறார். குணமாகுமா?
தந்தை தா. குருசாமி 23-3-1932-ல் பிறந்த வர். கடக லக்னம், கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம். நடப்பு சுக்கிர தசையில் சந்திர புக்தி. சந்திரன் கேதுவுடன் ராகு, சூரியன், நீசபங்க புதன் பார்வையில் உள்ளார். எனவே சந்திர புக்தி ஆரம்பித்தவுடன் புலம்பலுடன், படுத்த படுக்கையாக உள்ளார். 2023, பிப்ரவரி மாதத்திலிருந்து ஜூலைவரை சற்று கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். இவ்விதம் முதுமைக் காலத்தில் படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்காக, காஞ்சி புரம் சித்ரகுப்தர் கோவிலில் கொள்ளு, உளுந்து, அவல் படைத்து, அவற்றை பசுக்களுக்கு அளிக்கவேண்டும்.
ப் பொன்னி, மதுரை-1.
என் மகனுக்குத் திருமணம் தடைப் பட்டுக்கொண்டே போகிறது. எப்போது நடக்கும்?
பி. மணிசங்கர் 14-5-1994-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், மிதுன ராசி, திருவதிரை நட்சத்திரம். லக்னத்துக்கு 7-ல் சனி இருப்பதால் திருமணத்தடை உள்ளதா எனக் கேட்டுள்ளீர்கள். அதுவும் ஒரு காரணம். அதைவிட இந்த ஜாதகரின் திருமணத் தடைக்கு லக்னத்து 8-ல் செவ்வாய் இருப்பதே முக்கிய காரணமாகும். இதற்கேற்றவாறு செவ்வாய் தோஷமுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அம்சத்தில் சுக்கிரன் நீசம். நடப்பு மிதுன ராசிக்கு அஷ்டமச்சனி. அது மாறவேண்டும். இவருக்கு 2023 மே மாதம் சனி தசை ஆரம்பம். சனி புக்தியில் திருமணம் நடக்கும். இவருடைய லக்னம் சிம்ம சூரியன். 7-ஆம் அதிபதி சனி. எனவே நிறைய விட்டுக்கொடுத்து பொறுமையாக இருந்தால் இல்லறம் சிறக்கும். இவ்விதம் 8-ல் செவ்வாய் இருந்து கடுமையான தோஷம் கொண்டவர்கள். கும்பகோணம்- நாச்சியார் கோவில் சாலையில், திருச்சிறுகுடி எனும் தலத்தை வழிபட செவ்வாய் தோஷம் நீங்கி, திருமணம் நடக்கும். அருகிலுள்ள நரசிம்மர் சந்நிதியில் இவர் பெயருக்கு அர்ச்சனை செய்யவும்.
ப் செல்லம்மாள், அரும்பாக்கம்.
என் ஒன்றுவிட்ட தம்பி கணேஷ் ஜாத கத்தை அனுப்பியுள்ளேன். இவருக்கு வயது 40 ஆகிவிட்டது. திருமணம் நடக்குமா நடக்காதா என்று கூறுங்கள்.
கணேஷ் 8-11-1982-ல் பிறந்தவர். மகர லக்னம், கடக ராசி, ஆயில்ய நட்சத்திரம். இந்த ஜாதகத் தில் சனி, புதன், சூரியன், சுக்கிரன், குரு என ஐந்து கிரகங்கள் சேர்ந்து லக்ன 10-ஆம் வீட்டில் உள்ளனர். 10-ஆம் வீட்டில் அதி கிரகங்கள் சேர்க்கையானது சந்நியாச யோகம் தருமென்பது ஜோதிடவிதி. எனவே இந்த ஜாதகர் ஏதேனும் மடத்தில் போய் சேர்ந்து விடுவார். நடப்பு சூரிய தசையில் குரு புக்தி. 2023 மார்ச் மாதத்திற்குள் ஏதேனும் சத்சங்கம் போன்று ஆன்மிக இடத்திற்கு இடம் பெயர்ந்துவிடுவார். எதிர்காலத்தில் தலைமை மடாதிபதியாக வாய்ப்புள்ளது.
ப் சி. சுபத்ரா, மயிலாடுதுறை.
என் மகளின் ஜாதகம் அனுப்பியுள் ளேன். அவள் திருமணம் பற்றிக் கூறவும்?
ஆர். கீர்த்தனா 5-8-1999-ல் பிறந்தவர். கன்னி லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் செவ்வாய். எனவே செவ்வாய் தோஷ ஜாதகம். நடப்பு செவ்வாய் தசையில் சனி புக்தி. சனி, இவருக்கு 8-ல் நீசபங்கம். எனவே சனி புக்தி முடியும்வரை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். வீட்டை விட்டு வேறிடத்தில், அனேகமாக மருத்துவ மனையில் இருக்கும் சூழல் அமையும். இடையில் ஒரு விருப்பத் திருமணம் தட்டிப் போகும். இனி 2024, செப்டம்பரில் செவ்வாய் தசை சுக்கிர புக்தியில் திருமணம் நடக்கும். நடப்பு செவ்வாய் தசையில் சனி புக்திக்கு திருவாரூர் அருகில் கரவீரபுரம் சென்று அங்குள்ள சண்டிகேஸ்வரரை வணங்கவும். மேலும் அருகிலுள்ள சிவன் கோவில்களி லுள்ள சண்டிகேஸ்வரரை வழிபடுவது நல்லது. மேலும் சிவன், விஷ்ணு கோவில்களை சுத்தப்படுத்துவதும் நல்லது.
செல்: 94449 61845