* கண்ணகி, தஞ்சாவூர்.

என் உடல்நலம் மிகவும் கஷ்டப் படுத்துகிறது. எப்போது சரியாகும்? பரிகாரம் கூறுங்கள்.

நீங்கள் 10-4-1971-ல் பிறந்தவர். மகர லக்னம், கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம். நடப்பு சனி தசை. இது நீசமாகி தசை நடத்துவதால், உடல்நிலை பாதிப்பு உண்டாகி யிருக்கிறது. மேலும் நடப்பு சனி தசையில் சந்திர புக்தி. இது நீர்ப்போக்கு சார்ந்த பிரச்சினைகளைக் கொடுக்கும். அனேகமாக உங்களுக்கு சிறுநீர் சம்பந்த பிரச்சினை பாடாய்ப்படுத்தும். அடுத்துவரும் செவ்வாய் புக்தியில் மருத்துவமனைக்கு சற்று அலைந்தாலும், நல்ல சுகம் படிபடியாகக் கிடைக்கும். இவ்விதம் சிறுநீரக சம்பந்த பாதிப்புடைய வர்கள் திருவாரூர்- நன்னிலம் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் சென்று வழிபடுவது நல்லது. மேலும் சனி, சந்திர தசாபுக்தியில் நோய் பாதிப் படைபவர்கள் சனீஸ்வரனுக்கு அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுக்கவேண்டும்.

* முரளிகுமார், திருவண்ணாமலை.

Advertisment

உடம்பு சரியில்லை. மருத்துவ மனைக்குச் செல்லவேண்டிய நிலையுண்டா?

நீங்கள் 18-5-1978-ல் பிறந்தவர். மிதுன லக்னம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். காலசர்ப்ப தோஷ ஜாதகம். நடப்பு குரு தசையில் கேது புக்தி. இதில் மருத்துவர்கள் கவனிப்பு தேவைப்படும் காலகட்டம். சற்று கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். இவர்போன்று கடுமையான நோய்த் தாக்கம் இருப்பவர்கள் வைத்தீஸ்வரன் கோவில்சென்று வணங்குவது மிகவும் நல்லது. மேலும் காஞ்சி மகா பெரியவர், சீரடி சாய்பாபா, ஸ்ரீ இராகவேந்திரர் போன்று யாராவது ஒரு சித்தரின் பாதம் பற்றிக்கொள்ள வேண்டும்.

* ஜி. நடரா ஜன், புதுச்சேரி.

Advertisment

என் மகனுக்குத் திருமணம் தள்ளிப்போகிறது. இது வரை எட்டு பெண்வீட்டார் ஜாதகக் கட்டம் சரியில்லை என மறுத்துவிட்டார்கள். எப்போது திருமணம் நடக்கும்? இதற்கு முன் தாங்கள் கூறியபடி என் மகனுக்கு வேலை கிடைத்துள்ளது. எனவே நம்பிக்கையுடன் கேட்கிறேன்.

மகன் தேவா 25-1-1995-ல் பிறந்தவர். மிதுன லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம். இவருடைய ஜாதகத்தில் சனி, செவ்வாய் பார்வை மற்றும் 5, 7-ஆம் அதிபதிகள் இணைவிருப்பதால், இவருக்கு விருப்பத் திருமணமே நடக்கும். சனி, 7-ஆம் அதிபதியைப் பார்ப்பதால், சற்று தாமதத் திருமணமாக இருக்கும். நடப்பு புதன் தசையில் கேது புக்தி. அடுத்துவரும் சுக்கிர புக்தி 2023 ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கும். அப்போது திருமணம் நடக்கும். பெண் உங்கள் சொந்தத்தில் அமைவார். ஆனால் அது உங்கள் குடும்பத்திற்கு சற்று ஆகாத- சண்டையிட்ட குடும்பமாக இருக்கும். எனினும் விருப்பத் திருமணமென்பதால் முடித்து வைத்துவிடுவீர்கள். இவ்விதம் திருமணத்தடை உள்ளவர்கள் விநாயகர் கோவிலில், அரசு, வேம்பு இணைந்த மரத்தில் மஞ்சள் கயிற்றில் மஞ்சள் கட்டி, இரு மரங்களையும் சேர்த்து, வியாழன் காலை குரு ஹோரையில், 6.00-7.00 மணிக்குள் கட்டி, தீபமேற்றி வணங்கினால் சீக்கிரம் திருமணம் நடக்கும்.

aa

* ஒரு வாசகர், அத்தனூர்.

வணக்கம் அம்மா. நாங்கள் நாமக்கல் மாவட்டம். இந்த ஜாதகருக்குத் திருமணத் தடை ஏற்படுகிறது. காரணம் கூறுங்கள்?

எஸ். கார்த்திகேயன், 29-5-1987-ல் பிறந்தவர். மேஷ லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். சந்திரன் உச்சம். இந்த ஜாதகத்தில் சனி, சந்திரன் பார்வையில் உள்ளது. எனவே புனர்பூ யோக ஜாதகம். மேலும் 2-ஆமிடத்தை சனி பார்ப்பதால், குடும்பம் எனும் அமைப்பு ஏற்பட தாமதப்படுத்துகிறார். எனினும் 7-ஆம் அதிபதி சுக்கிரன் லக்னத்தில் இருப்பதால் திருமண பாக்கியம் உண்டு. நடப்பு குரு தசையில் செவ்வாய் புக்தி 2023, ஏப்ரல் வரை. அதற்குள் திருமணம் கைகூட வாய்ப்புள்ளது. திருமணம் முடிந்தவுடன் திருச்செந்தூர் தரிசனம் செய்வதாக வேண்டிக்கொள்ளவும். இவருக்கு ராசிக்கு 2-ல் செவ்வாய் இருப்ப தால் இந்த வேண்டுதல் அவசியம். மேலும் திருமணத்திற்குமுன், தாலிதானம் அவசியம் செய்யவேண்டும்.

* ப்ரியா, கும்பகோணம்.

என் மகனுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கிறது. காரணமென்ன? பரிகாரம் கூறவும்.

29-6-2009-ல் பிறந்தவர். துலா லக்னம், கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம். இந்தப் பையனின் ஆரோக்கிய ஸ்தானத்தில் 6-ஆமிட அதிபதி அமர்வு. எனவே எப்போதும் ஏதோவொரு நோய் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். சனி பார்வை 8-ஆமிடத்திற்கு இருப்பதால் தீர்க்காயுள் ஜாதகம். நடப்பு செவ்வாய் தசை. இதில் சுக்கிர புக்தி. இரு கிரகங்களும் ஒரே நட்சத்திர, ஒரே சாரத்தில் உள்ளனர். இந்தப் பையனை நல்ல மருத்துவரிடம் அழைத்துச்சென்று இடது காது மற்றும் நெஞ்சில் சளி கட்டிக்கொண்டுள்ளதா, ரத்த அழுத்தம் சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதிக்கவேண்டும். ஸ்ரீ தன்வந்திரி பகவானை நன்கு வணங்கவும். ஒருமுறை திருவிடை மருதூர் அழைத்துச்சென்று வணங்குவது நல்லது. குரு, சனி பார்வை உள்ளது. அவ்வப்போது மொச்சையை உணவில் சேர்த்துக்கொள்வது, தானமும் நன்று. இவ்விதம் சரீர பலவீனம் உள்ளவர்கள் கோவை அருகில் வெள்ளலூர் சென்று வணங்குவது நல்லது.

* வசந்திராகவன், சிறுசேரி, சென்னை-103.

எனது மருமகன் ஆர். ரவிச்சந்திரன் ஜாதகத்தையும், என் பேத்தி ஆர். ஜனனி ரவிச்சந்திரன் ஜாதகத்தையும் அனுப்பி யுள்ளேன். மருமகனின் ஜாதகத்தில் குருவின் நிலை பற்றியும், அதனால் ஏற்படும் சாதக பாதங்களையும், பரிகாரத்தையும் கூறவேண்டுகிறேன். பேத்தியின் கல்வி, எதிர்காலம் பற்றியும் கூறுங்கள்.

ரவிச்சந்திரன் 22-3-1975-ல் பிறந்தவர். துலா லக்னம், கடக ராசி, புனர்பூச நட்சத்திரம். இந்த ஜாதகத்தில் குருவின் இருப்பு அதன் பலன்பற்றி மட்டுமே கேட்டுள்ளீர்கள். துலா லக்னத்துக்கு 3, 6-ன் அதிபதி குரு 6-ஆம் வீடான மீனத்தில் ஆட்சி. கூடவே 11-ஆம் அதிபதியான சூரியனும் உள்ளார். இருவரும் ஒரே நட்சத்திர சாரத்தில், ஒரே பாதத்தில் உள்ளனர். பொதுவாக குரு, சூரியன் இணைவு நல்லதுதான். ஆனால் இந்த ஜாதகத்தைப் பொருத்தவரை லக்ன 6-ஆம் அதிபதியும், லக்ன பாதாகாதிபதியும் சேர்க்கை. எனவே வேண்டாத செயல்களின் குற்றம் உண்டு. இவருக்கு, தந்தைவழி சொந்தங்களால் இடையூறு இருக்கும். இவ்விதம் வேண்டாத செயல்களினால் குற்றம் உடையவர்கள், திங்கள் அல்லது வெள்ளிக்கிழமை திருச்சி- பெரம்பலூர் சாலையிலுள்ள சிறுவாச்சூர் மதுரகாளியை வழிபடவேண்டும். ஜனனி ரவிச்சந்திரன் 10-5-2007-ல் பிறந்தவர். கடக லக்னம், மகர ராசி, அவிட்ட நட்சத்தரம். இந்தப் பெண் பிறந்த திலிருந்து சற்று உடல்நலம் குன்றியிருப்பாள். நடப்பு ராகு தசை. ராகு 8-ஆமிடத்திலிருந்து தசை நடத்துகிறார். குடும்பம் சற்று நிம்மதியில்லாமல் இருக்கும். இதில் புதன் புக்தி 2023, ஆகஸ்ட் வரை. இதில் இந்தப் பெண் வீட்டிலிருக்க வாய்ப்பில்லை. இவ்விதம் ராகு தசை நடப்பவர்கள் மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள ராகு நாகனேஸ்வரம், சிரபுரம் என்கிற, அமிர்த ராகு தலம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் இறைவனை வழிபட ராகுவினால் ஏற்படும் தாக்கம் குறையும். மேலும் அருகிலுள்ள கோவிலில் ராகுவுக்கு விளக்கேற்றி வணங்கவும்.

செல்: 94449 61845