* லக்ஷ்மி. நெய்வேலி.
என் மகனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? ஏதாவது தோஷமிருந்தால் பரிகாரம் கூறவும்.
சிம்ம லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் ராகு, 8-ல் கேது. எனவே நாகதோஷம் உள்ளது. மேலும் 8-ல் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷமும் உண்டு. இவருக்கு 8-ஆமிடத்தில் சனி, செவ்வாய், சூரியன், கேது என நான்கு கிரகக் கூட்டணி உள்ளது. இதனால் இவருக்கும் இவரது தந்தைக்கும் மன வேறுபாடு இருந்துகொண்டே இருக்கும். மேலும் இவரது ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் ஒரே நட்சத்திர பாதத்தில் நிற்கின்றனர். எனவே களஸ்திர தோஷம் பலமாக இருக்கிறது. இவரது ஜாதகப்படி ஒரு காதல், கலப்பு மணம் நடந்து, பின் அதனுள்ளிருந்து பிரிந்து இரண்டாவது மணம் நடக்க வாய்ப்புள்ளது. புதன் தசையில் குரு புக்தி 2024 வரை நடக்கும். இதற்குள் அவசர திருமணம் செய்துவிடுவார். இவ்விதம் சூரியன், செவ்வாய் ஒரே ராசியில், ஒரே பாதத்தில் நிற்கும் ஜாதகர்கள் மயிலாடுதுறை சாலை பூந்தோட்டம் அருகிலுள்ள ருத்ரகங்கை தலம் சென்று பரிகாரம் செய்துகொள்ளவும். மேலும் 8-ஆமிடத்தில் அதிக கிரகக் கூட்டம் உள்ளவர்கள் பைரவரை சனிக்கிழமை வணங்கு
* லக்ஷ்மி. நெய்வேலி.
என் மகனுக்குத் திருமணம் எப்போது நடக்கும்? ஏதாவது தோஷமிருந்தால் பரிகாரம் கூறவும்.
சிம்ம லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம். லக்னத்துக்கு 2-ல் ராகு, 8-ல் கேது. எனவே நாகதோஷம் உள்ளது. மேலும் 8-ல் செவ்வாய் இருப்பதால் செவ்வாய் தோஷமும் உண்டு. இவருக்கு 8-ஆமிடத்தில் சனி, செவ்வாய், சூரியன், கேது என நான்கு கிரகக் கூட்டணி உள்ளது. இதனால் இவருக்கும் இவரது தந்தைக்கும் மன வேறுபாடு இருந்துகொண்டே இருக்கும். மேலும் இவரது ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் ஒரே நட்சத்திர பாதத்தில் நிற்கின்றனர். எனவே களஸ்திர தோஷம் பலமாக இருக்கிறது. இவரது ஜாதகப்படி ஒரு காதல், கலப்பு மணம் நடந்து, பின் அதனுள்ளிருந்து பிரிந்து இரண்டாவது மணம் நடக்க வாய்ப்புள்ளது. புதன் தசையில் குரு புக்தி 2024 வரை நடக்கும். இதற்குள் அவசர திருமணம் செய்துவிடுவார். இவ்விதம் சூரியன், செவ்வாய் ஒரே ராசியில், ஒரே பாதத்தில் நிற்கும் ஜாதகர்கள் மயிலாடுதுறை சாலை பூந்தோட்டம் அருகிலுள்ள ருத்ரகங்கை தலம் சென்று பரிகாரம் செய்துகொள்ளவும். மேலும் 8-ஆமிடத்தில் அதிக கிரகக் கூட்டம் உள்ளவர்கள் பைரவரை சனிக்கிழமை வணங்குவது நன்று.
* பெயர் வெளியிட விரும்பாத வாசகி, புதுக்கோட்டை.
இப்போது எனக்கு 71 வயதாகிறது. ஒரே மகள் வெளிநாட்டில் இருக்கிறாள். நான் தனியாக வசிக்கிறேன். உடல்நிலை அடிக்கடி பாதிக்கி றது. அடுத்தவருக்கு துன்பம் கொடுக்காத நிலையில்- மருத்துவமனையில் அவதிப் படாத நிலையில் என அந்தி மக் காலம் அமையுமா?
14-4-1951-ல் பிறந்தவர். சிம்ம லக்னம், கடக ராசி, புனர்பூச நட்சத்திரம். நீங்கள் தங்களது இறுதிக்காலம் பற்றிக் கேட்டுள்ளீர்கள். பொதுவாக நான் யாருக்கும் இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதில்லை. முருக பக்தையான தங்களுக்கு சில வரிகள் கூற கடமைப்பட்டுள்ளேன். நடப்பு சூரிய தசை. இதில் 2023, மார்ச் மாதத்திலிருந்து சுக்கிரபுக்தி நடக்கும். இது 2024 வரை நடக்கும். இதில் எம்பெருமான் முருகன் விருப்பப்பட் டால், ஒரு ஆன்மிகம் சார்ந்த இடத்தில் இறுதிப்பொழுது கழியும். அல்லது சந்திர தசை சந்திர புக்தியில், உறங் கும்போது இறைவனடி சேரலாம். ஜனனம்- மரணம் இரண்டும் இறைவனின் விருப்பம். இறைவனின் எண்ணம்போல் எல்லாம் நிகழும். ஜோதிடர் களின் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷய மாகும்.
* செ. சிவக்குமார், புதுச்சேரி-13.
என் மனைவி பெயரில் யு.கே.ஜி வரை பள்ளி நடத்திவருகிறேன். கடந்த 2019-ல் புதிதாக சிறு கட்டடம் கட்டி மற்றுமொரு பள்ளியை ஆரம்பித்தோம். ஆனால் அதன்பின் வந்த கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளியை நடத்துவது மிகவும் சிரமமாக உள்ளது. அடுத்து என்ன செய்யலாம்?
மனைவி எஸ். வனஜா 4-7-1976-ல் பிறந்தவர். துலா லக்னம், கன்னி ராசி, ஹஸ்த நட்சத்திரம். லக்னத்தில் ராகு, 7-ல் கேது. நடப்பு குரு தசை. துலா லக்னத்துக்கு 6-ஆமதிபதியான குரு சூரிய சாரம் வாங்கி 9-ல் உள்ளதால், நீங்கள் கல்வி சம்பந்தமான தொழிலைத் தொடங்கியுள்ளீர்கள். இதில் நன்மையும் காணப்படுவதுபோல் தீமையும் ஒளிந்திருக்கிறது. ஒரு 6-ஆம் அதிபதியும், பாதகாதிபதியும் சம்பந்தம் கொள்ளும்போது அங்கே வேண்டாத செயல்கள் ஆரம்பித்துவிடும். எனவே, நீங்கள் எந்தத் தொழில் தொடங்கியிருந்தாலும் இந்த இன்னலை அனுபவித்திருப்பீர்கள். நடப்பு குரு தசை ராகு புக்தி. ஒரு மாறுபட்ட சிந்தனை, யோசனைமூலம் இந்தப் பள்ளியை நடத்திவிடுவீர்கள். அடுத்துவரும் சனி தசை நன்மையே செய்யும். உங்கள் 10-ஆம் அதிபதி சந்திரன் பாபகர்த்தாரி யோகம் பெறுவது, தொழிலைவிட்டு ஓடி விடும் யோசனையைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். ஆயினும் அவர் அம்சத்தில் உச்சம் என்பதால் எப்பாடு பட்டாவது பள்ளியை நடத்திவிடுவீர்கள். இவ்வாறு, வேண்டாத செயல்களால் அவதிப் படுவோர், வேலூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீயோக நரசிம்மரையும், ஸ்ரீயோக ஆஞ்சனேயரையும் வழிபடுவதோடு, சற்று நேரம் அங்கு தங்கிவிட்டு வரவும். இதனால் தோஷம் நீங்கிவிடும்.
* செல்வராஜ், சென்னை-63.
தற்போது எனக்கு என்ன தசை நடக்கிறது? அதனால் ஏற்படும் நன்மை- தீமை என்ன?
30-9-1958-ல் பிறந்தவர். மேஷ லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். நீங்கள் தசாபுக்தி விவரம் கேட்டுள்ளீர்கள். நடப்பு குரு தசை 20-1-2020 முதல் 20-1-2036 வரை. இதில் சனி புக்தி 2022, மார்ச்முதல் 2024, செப்டம்பர் வரை நடக்கும். குரு தசை உங்களுக்கு 9, 12-ன் தசை- 7-ஆமிடத்தில் இருந்து நடத்துகிறார். அம்சத்தில் குரு நீசம். இந்த குரு தசை, உங்களுக்கு தெய்வ தரிசனத்தையும், அவ்வப்போது உடல்நலக்குறைவையும், வேலை செய்யுமிடத்தில் இம்சையையும் தரும். பயணங்களின்போது கவனம் தேவை. குருபகவான் ராகு சாரத்தில் நிற்கிறார். இவ்விதம் குரு, ராகு சம்பந்தம் உடையவர்கள் கும்பகோணம், திருவாரூர் சாலையில், சாக்கோட்டைக்கு அருகிலுள்ள சிவபுரம் எனும் தலத்தை வணங்கவேண்டும்.
* ஆர். சங்கர், ஜமீன் பல்லாவரம், சென்னை.
என் மகனுக்குத் திருமணம் தாமதமாகிறது. எப்போது நடக்கும்?
மகன் ராஜேஷ் 18-6-1986-ல் பிறந்தவர். துலா லக்னம், துலா ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னம், ராசிக்கு நாகதோஷம் உள்ளது. இவரது ஜாதகத்தில் 7-ஆம் அதிபதியும், பாதகாதிபதியும் சாரப் பரிவர்த்தனை. இதுமட்டும் இவரது தாமதத் திருமணத் திற்குக் காரணமல்ல. சனி மாங்கல்ய ஸ்தானத் தைப் பார்த்து, அதனைத் தாமதப்படுத்துகி றார். இன்னொரு காரணம் இந்த ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன் பரிவர்த்தனை. இவ்வித சந்திரன், சுக்கிரன் தொடர்பானது ஆணோ, பெண்ணோ இவர்களுக்கு தாமதத் திருமணம் கொடுக்கும் என கூறப்பட்டுள்ளது. நடப்பு சனி தசை. இதில் சுக்கிர புக்தி 2025 வரை. அதற்குள் திருமணம் நடந்துவிடும். சுக்கிரன் அம்சத்தில் நீசம். எனவே வரும் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து, பின் அது நின்றுபோயிருக்கும். அதுபோன்ற பெண் அமைய வாய்ப்புள்ளது. இவ்விதம் சந்திரன், சுக்கிரன் சம்பந்தத்தால் திருமணத் தடையுடையவர்கள் திருப்பதி சென்று வணங்குவதும், வெள்ளிக் கிழமை ஸ்ரீரங்கநாதரை வழிபடுவதும் மிக நன்று.