உடலே உன் வீடு (புதிய வாஸ்து சாஸ்திரம்) லால்குடி கோபாலகிருஷ்ணன்

/idhalgal/balajothidam/your-body-your-house-new-vastu-shastra-by-lalgudi-gopalakrishnan

"அண்டத்திலுள்ளதே பிண்டம்

பிண்டத்திலுள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே.''

-சட்டைமுனி

தேவ தச்சர், மயன் என்பவ ரால் உருவாக்கப்பட்டு, மகான் கள் அருளால் வழிவழியாக வந்த மனையடி சாஸ்திரமே, "வாஸ்து' என்ற பெயர்பெற்றது. கோவில்கள், அரண்மனை, நகர சீரமைப்பு போன்றவற்றிற்கு மட்டுமே, உபயோகப்படுத்தப்பட்டு வந்த, "வாஸ்து' சாஸ்திரம், பொதுமக்களின் பயன் பாட்டிற்கும் வந்தது. இன்றையகால சூழலில், வாஸ்து விஞ்ஞானம், நமக்கு எந்த அளவுக்கு பயன்தரும் என்பதை பரிசீலிக்கவேண்டியது அவசியமாகிறது.

* அடுக்கு மாடி குடியிருப்புகள் பெருகிவிட்ட காலத்தில், எல்லாரும், வடகிழக்கு வாசலிருக்கவேண்டும் என்று எண்ணுவது சாத்தியமாகாது.

ss

* தொழில் சார்ந்து பிரயாணம் செல்வோருக்கு, எந்த வீட்டின் வாஸ்து பலனளிக்கும், ப் ஒரே வீட்டில் வசிக்கும் பலரும் வெவ்வேறு ஜாதக அமைப்பில்

"அண்டத்திலுள்ளதே பிண்டம்

பிண்டத்திலுள்ளதே அண்டம்

அண்டமும் பிண்டமும் ஒன்றே

அறிந்துதான் பார்க்கும் போதே.''

-சட்டைமுனி

தேவ தச்சர், மயன் என்பவ ரால் உருவாக்கப்பட்டு, மகான் கள் அருளால் வழிவழியாக வந்த மனையடி சாஸ்திரமே, "வாஸ்து' என்ற பெயர்பெற்றது. கோவில்கள், அரண்மனை, நகர சீரமைப்பு போன்றவற்றிற்கு மட்டுமே, உபயோகப்படுத்தப்பட்டு வந்த, "வாஸ்து' சாஸ்திரம், பொதுமக்களின் பயன் பாட்டிற்கும் வந்தது. இன்றையகால சூழலில், வாஸ்து விஞ்ஞானம், நமக்கு எந்த அளவுக்கு பயன்தரும் என்பதை பரிசீலிக்கவேண்டியது அவசியமாகிறது.

* அடுக்கு மாடி குடியிருப்புகள் பெருகிவிட்ட காலத்தில், எல்லாரும், வடகிழக்கு வாசலிருக்கவேண்டும் என்று எண்ணுவது சாத்தியமாகாது.

ss

* தொழில் சார்ந்து பிரயாணம் செல்வோருக்கு, எந்த வீட்டின் வாஸ்து பலனளிக்கும், ப் ஒரே வீட்டில் வசிக்கும் பலரும் வெவ்வேறு ஜாதக அமைப்பில் இருப்பதால், எவ்வாறு ஒரே வாஸ்து அமைப்பு நன்மை தரும். மயன் சாஸ்திரம், கட்டடக் கலைக்கான வழிகாட்டி என்ற உண்மையை ஒப்புக்கொண்டாலும், அது, அந்த கட்டடத்தில் வசிப்பவர்களின் விதியை நிர்ணயிக்கு மென்பதை ஒப்புக்கொள்வது அறிவுடமையாகாது.

* கல்லும், மண்ணும் சேர்த்துக் கட்டப்பட்ட. உயிரற்ற ஜடப்பொருளாகிய கட்டடம், உயிர்களின் விதியை நிர்ணயிக்க முடியுமா? ப் எலும்பு எனும் இரும்பு கம்பிகளில் சதையெனும் சுதை பூசப்பட்டு, நரம்பு எனும் மின்சாரக் கம்பிகளால் இணைக்கப்பட்டு, ரத்தக் குழாய்களுடன், ஓய்வில்லாத இயந்திரமாகிய இதயம் அமைக்கப்பட்டு, தோல் எனும் வண்ணம் பூசப்பட்ட, உடலே உன் வீடு என்பதை உணர வேண்டும். உடன்பிறந்ததும், நம்மோடு உடன் கட்டையேறு வதும், உடல் மட்டும்தான் என்பதே உண்மை.

* உயிரற்ற உடல் உணர்வற்றது என்றாலும் உயிர் இயங்க உடல் தேவைப்படுகிறது. வாழைபழம் பழுக்கும்வரை அதன் தோல் தேவைபடுவது போல், உயிருக்கு உடல் வீடாவதால், உடலுக்கு வாஸ்து பார்ப்பதே, நம் வாழ்வை வளமாக்கும்.

* கருவில் இருக்கும் குழந்தையை முதல் மாதம் சுக்கிரன், இரண்டாம் மாதம் செவ்வாய், மூன்றாம் மாதம் குரு, நான்காம் மாதம் சூரியன், ஐந்தாம் மாதம் சந்திரன், ஆறாம் மாதம் சனி, ஏழாம் மாதம் புதன், எட்டாம் மாதம் ஆதான லக்னமும், ஒன்பதாம் மாதம் சூரியனும், பத்தாம் மாதம் சந்திரனும் வளர்ப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறும்.

* அண்டத்திலுள்ளது பிண்டத்திலுண்டு என்ற கோட்பாட்டின்படி- நம்முடல் பஞ்சபூத தத்துவதால் உருவானது (உமிழ் நீர், ரத்தம், வியர்வை, நாளமில்லா- நாளமுள்ள சுரப்பி களின் சுரப்பு நீர்- ஜல தத்துவம் எலும்பு- பிருத்வி எனும் நிலம். தச வாயுக்கள்- வாயு தத்துவம். ஜாடராகினி- காமக்கினி போன்ற பஞ்ச அக்கினிகள்- அக்கினி தத்துவம்) உடல், எட்டு திக்குகளுக்கு கட்டுப்பட்டு, நவகிரக சஞ்சாரத்தால் இயங்குவது.

* இவ்வாறு வளர்க்கப்பட்ட உடல் பஞ்சபூத சமாதியை அடையும்வரை ஸ்தூல உடல் நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் இருக் கிறது.

* நெருப்பு- உடலை எரியூட்டுவது.

* பிருத்வி (நிலம்)- உடலை புதைப்பது.

* நீர்- ஜல சமாதி (ஸ்ரீ ராமர்- சரயு நதி).

* காற்று (கற்பூரம்போல்- ஆண்டாள்- மீரா).

* ஆகாயம்- (பட்டினத்தார்- வள்ளலார்).

இறுதிவரை ஸ்தூல உடல் நவகிரகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

நம்முடைய ஒவ்வொறு உறுப்பும் ஒவ்வொறு ராசி, நட்சத்திர, கிரகத்தின் தன்மைகளில் இயங்குகின்றன.

360 பாகைகள், நவகிரகங்கள், பஞ்ச பூதங்களின் கூட்டு இயக்கமே நம் உடல்.

"நடமாடும் கோவில்' "உடலை வளர்க்கும் உபாயம் அறிந்து உடலை வளர்த்தோர் உயிர் வளர்த்தோரே' என்ற திருமூலரின் கருத்தை உற்று நோக்கினால், உணவும், உடற் பயிற்சியும் உடலை பாதுகாக்கும். மனமே உயிரை வளர்க்கும் என்ற கருத்து புலனாகும்.

தவறான நடை பழக்கத்தால் சிலரின், ஒருகால் செருப்பு ஒருபக்கம் மட்டும் தேய்வதுபோல்- தவறாக வாயால் மூச்சு விடுதல் (பெருமூச்சு ஆயுளை குறைக்கும்) தவறான- சிகை அலங்காரம், உடை- ஆபரணங் கள் ஆகியவற்றால் உடல், நவகிரகங்களின் அருள் மறைவு பிரதேசமாக மாறிவிடுகிறது. இதுவே நோய், பகை, விபத்து போன்ற அசுபப் பலன்களுக்கு காரணமாகிறது.

பிராணாயாமம், யோகாசனம் , சின் முத்திரைகள், தோப்புகரணம் போன்ற பயிற்சி களாலும், பல அணிகலன்களாலும் (காதில் பாம்படம், தண்டட்டி அணிந்த பெண்கள் நெடுநாள் நல்ல கண்ணொளியும்- ஆரோக்கிய மும் பெற்று வாழ்கிறார்கள்.) (அரைஞாண் கயிறு, தண்டை, கருவுற்ற பெண்களுக்கு கரி வலையல்) உடலின் வாஸ்து தோஷத்தை சரி செய்யமுடியும் என்ற உண்மையை வெளிப்படுத்தவும், நவ கிரகங்களின் அருளாசியைப் பெறக்கூடிய வழி முறைகளைச் சொல்வதுமே, இந்த தொடரின் நோக்கம்.

தொடரும்

செல்: 63819 58636

bala160224
இதையும் படியுங்கள்
Subscribe