""கேளடா தலையோட்டின் மூட்டைப் பார்த்து
கேவலமாய் தலையெழுத்தீ தென்பார் மாந்தர்
தாளட அவர் கையி லெழுத்தமைந்தால்
தவறில்லை சாமளையின் கடாட்சத்தாலே
வாளடா சிவசுப்ர மண்யர்தானே
மலயமுற்ற குறுமுனிக்காய் வழுத்தினர் பார்
ஆளடா வதிற் சிறிதே தெரிந்தமட்டும்
அவனியோர்க் குரைத்திட்டே னதி காப்பே!!!''
-கமல முனிவர்
பொருள்: கபாலத்திலுள்ள கோடுகளைப் பார்த்து அதை தலையெழுத்து என்று எண்ணி, கேவலமாக ஏமாறும் மக்கள் தன் கையில் எழுதப்பட்டுள்ள எழுத்தை அறியமாட்டார். தேவி சாமளையின் அருளால் சிவசுப்ரமணியரால் குறு முனிஅகத்தியருக்கு உபதேசிக்கப்பட்ட அஸ்தரேகை (கைரேகை)சாத்திரத்தை இந்த உலகிற்கு சிறிதளவு தருவேன் என்பதே கமல முனிவரின் வாக்கு.
புள்ளிகளைக் கோடுகளால் இணைப்பதன் மூலம் கோலம் உருவாகும்.இதுதான் வாழ்க்கை யின் அடிப்படை சித்தாந்தம். ஜனன ஜாதகத்தில் லக்ன புள்ளியுடன் மற்ற பாவங்கள் அமையும், புள்ளிகளை ஒருங்கிணைந்து பார்க்கும்போது, விதியின் போக்கு தெரிகிறது. தசாபுக்தி என்பது ஒரு நகரும் புள்ளி. நேர்கோடுகளாலும் வளைந்த கோடுகளாலும் புள்ளிகளை இணைக்கும்போது வெவ்வேறு வடிவங்கள் தோன்றுகின்றன. நிகழ்வுகள் எனும் புள்ளிகள் காலத்தால் இணைக்கப்படுவதே வாழ்க்கைக்கோலம்.கிரேக்க நாட்டு அறிஞர் அரிஸ்டாடில் சொன்னதுபோல், ""மனிதனின் கைகளிலுள்ள ரேகைகள் வெறும்கோடுகள் அல்ல; அது அவன் வாழ்க்கை வழிமுறை பற்றி இறைவனால் எழுதப்பட்ட வாசகங்கள்'' கமலமுனிவர், கைரேகை சாஸ்திரத் தையும், இவ்வுலகிற்கு அளித்தார்.
நமது கைகளில் இருக்கும் ரேகைகளின்அமைப்பிற்கும் ஜோதிடத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் அமைப்பிற்கும் நேடியான தொடர்புகள் இருக்கின்றன. நாடி ஜோதிடத்தில் பெருவிரல் ரேகையைக்கொண்டு, ஜனன ஜாதகத்தைக் கணிக்கிறார்கள். இரட்டைக் குழந்தைகளின் ஜனன ஜாதகம், ஒரேமாதிரி இருந்தாலும், கைரேகை மாறி இருக்கும். உலகில் எத்தனை கோடி மக்கள் இருந்தாலும். ஒரேமாதிரியான கைரேகை இருப்பதில்லை என்பதை விஞ்ஞானமும் ஒப்புக்கொள்கிறது.
கட்டைவிரல் நீங்கலாக, மற்ற நான்கு விரல்கள் பன்னிரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவும் ஒரு அங்குலாஸ்தியாக கணக்கிடப்படும். ஒரு அங்குலாஸ்தியே ஜாதகக் கட்டத்தின் ஒரு பாவம். கட்டைவிரலே, லக்னம். ஆண்களுக்கு வலதுகையைப் படிக்கவேண்டும் பெண்களுக்கு இடதுகையைப் படிக்கவேண்டும்
கைரேகை கலையில் ஐந்து அங்கங்கள் உள்ளன.
ப் கைகளின் வகைகள்
ப் விரல்களின் வகைகள்
ப் உள்ளங்கையிலுள்ள கிரக மேடுகள்
ப் உள்ளங்கையிலுள்ள ரேகைகள்
ப் உள்ளங்கையிலுள்ள குறியீடுகள்
இடதுகை: இடதுகையானது வலது மூளையால் (வடிவத்தை உணர்தல், உறவு களை உணர்தல்) கட்டுப்படுத்தப்படுகிறது. இது மனிதரின் உள்ளார்ந்த விஷயங்களை இயற்கையான இயல்பை, உள்ளார்ந்த ஆளுமை, சிந்தனையைப் பிரதிபலிக்கிறது. ஆன்மிக வளர்ச்சியின் ஒரு பகுதி.
வலதுகை: வலதுகையானது இடதுபக்க மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது. (தர்க்கம், காரணகாரியம், தகவல் தொடர்பு). புறத்தோற்றம், சமூக சூழ்நிலை, செல்வாக்கு, அனுபவத்தைக் குறிக்கும்.
பஞ்சபூத தத்துவம்
நிலத்திற்குரிய கைகள்: பொதுவாக பரந்தும், சதுரமான உள்ளங்கை, விரல் அமைப்பையும், கடினமான தோலையும் கொண்டிருக்கும். மணிக்கட்டில் இருந்து விரல்களின் அடிவரையில் இருக்கும் உள்ளங்கையின் நீளம் வழக்கமாக விரல்களின் நீளத்திற்கு சமமாக இருக்கும்.
காற்றிற்குரிய கைகளானது: நீண்டவிரல்களுடன் செவ்வகமான உள்ளங்கைகளுடன் இருக்கும். பொதுவாக உலர்ந்ததோலுடன் காணப்படும். மணிக்கட்டில் இருந்து விரல்களின் அடிவரையில் உள்ளங்கையின் நீளம் பொதுவாக விரல்களின் நீளத்தைவிட குறைவாக இருக்கும்.
நீருக்குரிய கைகள்: குறுகியதாகவும், முட்டை வடிவ உள்ளங்கையையும், நீண்ட, இலகுவான, கூம்புவடிவமான விரல்கள்போலவும் காணப்படும். மணிக்கட்டில் இருந்து விரல்களின் அடிவரையில் உள்ளங்களையின் நீளம் பொதுவாக உள்ளங்கையின் பரந்த பகுதியில் இருக்கும் அகலத்திற்கும் குறைவாகவும், விரல்களின் நீளத்திற்கு சமமாகவும்
இருக்கும்.
நெருப்புக்குரிய கைகள்: நீள் சதுரவடிவத்திலான உள்ளங்கையுடன் இருக்கும். பழுப்பு நிறதோலையும், குட்டையான விரல்களையும் கொண்டி ருக்கும். மணிக்கட்டிலிருந்து விரல்களின் அடிவரையிலுமான உள்ளங்கையின் நீளம் பொதுவாக விரல்களின் நீளத்தைவிட அதிகமாக இருக்கும்.
உலகம் நம் கைகளில்
நம் உள்ளங்கையில் தெய்விக சக்தி நிறைந்துள்ளது. உள்ளங்கையின் மேல் பாகத்தில் லட்சுமியும், நடுப்பாகத்தில் சரஸ்வதியும், கீழ்ப்பகுதியில் மகாவிஷ்ணுவும் வாசம்செய்கிறார்கள். தினமும் காலை எழுந்ததும், நம்உள்ளங்கைகளைப் பார்த்தால், செல்வத்தைத்தரும் லட்சுமியையும், ஞானத்தைத்தரும் சரஸ்வதியையும், சுகபோக வாழ்வைத் தரும், விஷ்ணுவையும் தரிசிக்கலாம். இதுதவிர, உள்ளங்கைகளில் குடிகொண்டிருக்கும்."அங்குலாஸ்தி' தேவதைகளின் ஆசியால், எதிர்காலத்தை யறிந்து, வாழ்க்கையில் வெற்றிபெறலாம்.
(தொடரும்)
கந்தர்வநாடி ஜோதிடர் லால்குடி கோபாலகிருஷ்ணன்
செல்: 63819 58636