"ஊனுடுத்தி ஒன்பது வாசல் வைத்து

வொள்ளெலும்பு,

தூணா, உரோமம், மேய்ந்து

தாம் எடுத்த கூரை தவிரப்போவார் தயக்கம் பல படைத்தார்.''

-தாமரையினார்-அப்பர் (கழிப்பாலை- திருத்தாண்டகம்)

பொருள்: தசைப்பகுதியை பலவிதமாக வளைத்து, அதனைச் சுவர்போல் அமைத்து, அந்த சுவரினைத் தாங்கும் தூண்களாக வெண்மை நிறங்கொண்ட எலும்புகளை வைத்து, சுவரின்மேல் உரோமங்களைப் பரப்பி, தாம் படைத்த குடிசைக்கு ஒன்பது வாயில் களை வைத்தவர் இறைவன்.

vv

கடல்நீரும், கரையை நோக்கிவரும் அதன் அலைகளும், வெவ்வேறாகத் தெரிந்தாலும், இரண்டும் ஒன்றே. அதேபோல், இன்ப- துன்ப நிகழ்வுகளும், நம் வினைப்பயனும் ஒன்று தான். அதைக்கண்டறிந்து எச்சரிப்பதே ஜோதிடத்தின் பயனாகிறது.

உடல் எனும் வீட்டில், உயிரே ஒளியாக அமைகிறது. இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத் துவாரங்கள், வாய், எருவாய் மற்றும் கருவாய் ஆகிய ஒன்பது துவாரங்களே, உட-ன் ஒன்பது வாயில்கள். நவதுவாரங்கள் நவகிரகங்கள்தான். வலது கண்- சூரியன், இடது கண்- சந்திரன், வலது நாசி- செவ்வாய், இடது நாசி - புதன், வலது காது- குரு, இடது காது- சுக்கிரன், எருவாய்- சனி பகவான், வாய்- ராகு, கருவாய்- கேது. மனதின் இயக்கங்களாக அமையும். பயம், வீரம், இழிப்பு, வியப்பு, இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய உணர்வுகளையும் தருவதே நவகிரகங்களின் காரகம்தான்.

பஞ்சபூதங்கள், நவகிரகங்களை இயக்கு கின்றன. அந்த இயக்கத்தின் அடிப்படையே 96 தத்துவங்கள். அந்த தத்துவங்களை முழுவதும் உணர்ந்தால்தான், உடல், மனம், உயிரின் இயக்கம் நன்கு புரியும்.

ஞானேந்திரியம்- 5, பொறிகள்- 5, புலன்கள்- 55, கர்மேந்திரியம்- 5, அந்தக்கரணம்- 4, வித்யா தத்துவம்- 7, சிவ தத்துவம்- 5.

96 தத்துவங்கள்

பூதங்கள்- 5, ஞானேந்திரியம்- 5, பஞ்யநேந்திரிய கிரியைகள்- 5, கன்மேந்திரியம்- 5, கன்மேந்திரிய கிரியைகள்- 5 அறிவு- 1, கரணம்- 4, நாடி- 10, வாய்வு- 10, ஆசயம்- 5, கோசம்- 5, ஆதாரம்- 6, மண்டலம்- 3, மலம்- 3, தோஷம்- 3, ஈஷனை- 3, குணம்- 3, விராகம்- 8, வினை- 2, அவஸ்தை- 5.

பஞ்சபூதங்கள்

1. ஆகாயம்: பரவெளி- நிறம்- ஸ்படிகம்.

கூறுகள்: காமம், குரோதம், லோபம், மோஹம், மதம்.

2. வாயு: காற்று- நிறம்- புகை, பச்சை, ஸ்படிகம்.

கூறுகள்: இருத்தல், நடத்தல், ஓடல், கிடத்தல், நிற்றல்.

3. நெருப்பு: நிறம்- சிகப்பு.

கூறுகள்: பயம் அகங்காரம், சோம்பல், நித்திரை, மைதுனம்.

4. நீர்: நிறம் - ஸ்படிக வெள்ளை.

கூறுகள்: உதிரம் மச்சை, சிறு நீர், மூளை, சுக்கிலம்.

5. நிலம்: நிறம்- பொன்மை.

கூறுகள்: ரோமம், தோல், நரம்பு, எலும்பு, தசை.

பஞ்சேந்திரியங்கள்

1. காது: சப்தங்களை கேட்கும்.

2. மேல் தோல்: ஸ்பரிச உணர்வு.

3. கண்: ரூபங்களை பார்க்கும்.

4. நாக்கு: அறுசுவைகளை அறியும்.

5. நாசி: வாசனைகளை அறியும்.

பஞ்யநேந்திரியங்களின் செயல்கள்

1. சப்தம்: செவியில் நின்று கேட்பது.

2. ஸ்பரிசம்: தேகத்தில் தொடு உணர்ச்சி.

3. ரூபம்: கண்ணில் காட்சிகளை காட்ட்டும்.

4. ரசம்: நாவில் அறுசுவையினை அறிவிக்கும்.

5. கந்தம்: நாசியில் வாசனையை உணர்த்தும்.

கன்மேந்திரியங்கள்

1. வாக்கு: வாய்- பேசுவது.

2. பாணி: கை- ஆட்டி அசைத்து வேலை செய்தல்.

3. பாதம்: கால்- நடத்தல்.

4. உபஸ்த்தம்: நீர்வரும் குறி- காமசுகம் அனுபவித்தல்.

5. குதம்: ஆசனவாய்.

கன்மேந்திரிய செயல்கள்

Advertisment

1. வசனம்: வாயில் இருந்து பேசுவிப்பது.

2. தானம்: கையில் இருந்து கொடுப்பது.

3. கமனம்: கா-ல் நின்று நடத்துவிக்கும்.

Advertisment

4. ஆனந்தம்: அந்தரங்கத்தில், கர்மானந் தம் விளைவிக்கும்.

5. விசர்ஜனம்: அபானத்தில் நின்று மலத்தை வெளியேற்றும்.

அறிவு

அறிவு அல்லது மனம். இது ஆகாயத்தின் கூறு, உடலை இயக்கும்.

நாடிகள்

1. இடகலை: வலது கால் பெருவிர-ல் இருந்து அசைந்து இயங்கி ஏறி இடது நாசியை பற்றி நிற்கும்.

2. பிங்கலை: இடதுகால் பெருவிர-ல் இருந்து அசைந்து இயங்கி ஏறி வலது நாசியை பற்றி நிற்கும்.

3.சுழுமுனை: குதத்தை பற்றி நின்று ஏறி பிராண வாயுவை சேர்ந்து தலையளவு முட்டி நிற்கும்.

4. சிங்குவை: உண்ணாக்கில் நின்று பானத்தை விழுங்கும்.

5. புருடன்: வலக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்.

6. காந்தாரி: இடக்கண்ணில் இருந்து கருமணியை ஆட்டி வைக்கும்.

7. அத்தி: வலது காதில் சத்தங்களை கேட்க வைக்கும்.

8. குரு: இடது காதில், சத்தங்களை கேட்க வைக்கும்.

9. அலம்புடை: கழுத்தில் இருந்து நாசியில் கசிந்து நீரை ஏற்ற இறக்கங்கள் செய்யும்.

10. சங்கினி: உபஸ்தத்தில் இருந்து ஆனந்தத்தில் மிஞ்சாமல் காக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636