"காலும் இரண்டு முகட்டல கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளவும் புக அறி யாதே.''
-திருமந்திரம் (முதல் தந்திரம்)
பொருள்: மனிதர்களின் இரண்டு கால்களே சுவர்களாகவும், முதுகுத் தண்டே அந்தச் சுவற்றிற்கு நடுவில் கூரையைத் தாங்கி யிருக்கும் உத்திரமாகவும், உடலைச் சுற்றியிருக் கும் முப்பத்திரண்டு விலா எலும்புகளே சுவற்றைச் சுற்றி அது விழுந்துவிடாமல் இருக்க வேண்டி வைக்கப்பட்ட சட்டங்களாகவும், தலையே உத்திரத்தின் உச்சியிலிருக்கும் கூரை யாகவும் இருக்கும். இந்த உடலாகிய உன் வீடு எப்படி வீட்டின் மேலே இருக்கும் கூரை பிரிந்து விட்டால் வெறும் சுவர்களும் அதைத் தாங்கி யிருக்கும் சட்டங்களும் மட்டுமே நிற்க உபயோகிக்க முடியாததாக ஒரு வீடு இருக் குமோ, அதுபோலவே தலைவழியே மூச்சுக் காற்று வெளியேறிவிட்டால், வெளியில் சென்ற உயிர் மீண்டும் அந்த உடலுக்கும் புகுந்து கொள்ளும்வழி என்னவென்று தெரியாமல் நிற்கும்.
சிறிய ஆலமரத்தின் விதையிலிருந்து மிகப்பெரிய ஆலமரம் வளர்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளர்வதற்கான உயிர் சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதை யிலே அடங்கிக் கிடக்கிறது. அந்த வித்துக் குப் பீஜம் என்று பெயர். ஒரு ஜனன ஜாதகத் தில் லக்னமே விதை. கைரேகைக் கலையில் கட்டை விரல் ரேகைதான் அடிப்படை. உடல், மனம், உயிர் ஆகிய மூன்றையும் ஆரோக் கியமாக வைக்க உதவும் வழிகாட்டியே ஜோதிடம்.
இயற்கையின் இசை கணக்கிற்கு ஏற்ப அமையும் நடனமே, நம் வாழ்க்கை. இசையின் தாளமும், நடனத் தின் ஜதியும் மாறினால், அதை ரசிக்க முடியாது. மனிதன் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை, கவலை யுடனும், நோய்களோடும் தான் கழிக்கிறான். துக்கமும், தூக்கமும் சேர்ந்ததே வாழ்க்கை என்ற நியதியில் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இந்த நிலைக்கு காரணம், நமது உடலின் "உயிரியல் கடிகார'மும் (இண்ர்ப்ர்ஞ்ண்ஸ்ரீஹப் ஈப்ர்ஸ்ரீந்)-பிரபஞ்ச நேரமும் (ஸ்ரீர்ள்ம்ண்ஸ்ரீ ஸ்ரீப்ர்ஸ்ரீந்) மாறுபடுவதுதான். நமது உடலின் ஒவ்வொரு உயிர் அணுவிலும் இயங்கும் உயிரியல் கடிகாரத்தின் இசைவையும், இயற்கையின் அசைவையும் ஒருங்கிணைத்தால் (ஈண்ழ்ஸ்ரீஹக்ண்ஹய் தட்ஹ்ற்ட்ம்) வெற்றிபெறலாம். நம் முன்னோர்கள், இந்த ஒருங்கிணைப் பின் முறையை முகூர்த்தங்கள் என்று வகைப்படுத்தினார்கள். நம் உடலும், உள்ளமும், பிரபஞ்ச சக்தியும், ஒரே நேர்கோட்டில் இணையும்போது, ஆசை யும், ஆசைபட்டதை அடையும் ஆற்றலும், ஆற்றலால் வெற்றியும், ஒரே நேர்க்கோட்டில் அமையும்.
ஒரு முகூர்த்தம் என்பது நாற்பத்தியெட்டு நிமிடங்கள் (இரண்டு நாழிகைகள்). ஒரு நாளைக்கு 60 நாழிகைகள். ஒரு நாழிகை என்பது 24 நிமிடம். இப்படி ஒரு நாளுக்கு முப்பது முகூர்த்தங்களாக வரும்.
30 வகை முகூர்த்தங்கள்
1. ருத்ர காலை 6.00-6.48
2. ஆஹி காலை 6.48-7.36
3. மித்ர காலை 7.36-8.24
4. பித்ரு காலை 8.24-9.12
5. வசு காலை 9.12-10.00
6. வராஹ காலை 10.00-10.48
7. விச்வேதேவா காலை 10.48-11.36
8. விதி பகல் 11.36-12.24
9. சுதாமுகீ பகல் 12.24-1.12
10. புருஹூத பகல் 1.12-2.00
11. வாஹிநீ மாலை 2.00-2.48
12. நக்தனகரா மாலை 2.48-3.36
13. வருண மாலை 3.36-4.24
14. அர்யமன் மாலை 4.24-5.12
15. பக மாலை 5.12-6.00
16. கிரீச மாலை 6.00-6.48
17. அஜபாத மாலை 6.48- 7.36
18. அஹிர்புத்ன்ய இரவு 7.36-8.24
19. புஷ்ய இரவு 8.24-9.12
20. அச்விநீ இரவு 9.12-10.00
21. யம இரவு 10.00-10.48
22. அக்னி இரவு 10.48-11.36
23. விதாத்ரு நள்ளிரவு 11.36-12.24
24. கண்ட நள்ளிரவு 12.24-1.12
25. அதிதி விடியற்காலை 1.12-2.00
26. ஜீவ- அம்ருத விடியற்காலை 2.00-2.48
27. விஷ்ணு விடியற்காலை 2.48-3.36
28. த்யுமத்கத்யுதி விடியற்காலை 3.36-4.24
29. பிரம்ம விடியற்காலை 4.24-5.12
30. சமுத்ரம் விடியற்காலை 5.12-6.00
இவற்றுள் 26-ஆவது முகூர்த்தமான ஜீவ- அம்ருத முகூர்த்தம் மற்றும் 29-ஆவது முகூர்த்தமான பிரம்ம முகூர்த்தம் ஆகியவை வெற்றிதரும் சிறப்பான முகூர்த்தங்களாகும்.
பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. பிரம்ம முகூர்த்தம் என்பது சூரியன் உதயம் ஆவதற்குமுன் 96 நிமிடம்முதல் 48 நிமிடம் வரை உள்ள விடியற்காலைபொழுது. இந்த பிரபஞ்சத்தின் ஜீவ காந்தம், உயிர்கள்மீது படி யும். அந்த சக்திதான் அனைத்து உயிர்களுக் கும் உடலாகவும், மனமாகவும், உயிராகவும் மாற்றம் பெறும். ஜீவ-அம்ருத முகூர்த்தத்தில் மனம் இறை சக்தியுடன் தொடர்பிலிருக்கும். அந்த ஏகாந்த நேரத்தில் எதை வேண்டினா லும் கிடைக்கும்.
(தொடரும்)
செல்: 63819 58636