உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (51)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-51

"பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம்

தரமாறில் தோன்றும் பிறப்பு'' -ஔவையார்.

"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.''

-தொல்காப்பியர்.

பொருள்: இப்பிரபஞ்சமும் அனைத்து ஜீவராசிகளும் பஞ்சபூதங்களின் சேர்க்கை யினால் ஆனது. ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவையே ஐம்பூதங் களாகும்.

ஒரு மருத்துவர் நோயாளிக்கு ஏற்பட்டுள்ள நோயைப் பற்றி விளக்குவதைவிட அவர் நோயைத் தீர்ப்பதே மருத்துவரின் பொறுப்பு. அதுபோல், தங்களை நாடிவருபவர்களுக்கு ஜாதகப் பலன்களை மட்டும் சொல்வதை விட சரியான பரிகாரத்தையும் சொல்லி, அவர் துன்பத்தை அடியோடு போக்குவதே ஜோதிடரின் தலையாயக் கடமை. காட்டுத் தீயில் ஒரு மரத்தின் கிளைகளும், இலையும் கருகினாலும், மழை பெய்தால் அந்த மரத்தின் அழியாத வேரினால் மரம் மறுபடி துளிர்க்கும். முன்ஜென்ம கர்மவி

"பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம்

தரமாறில் தோன்றும் பிறப்பு'' -ஔவையார்.

"நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்.''

-தொல்காப்பியர்.

பொருள்: இப்பிரபஞ்சமும் அனைத்து ஜீவராசிகளும் பஞ்சபூதங்களின் சேர்க்கை யினால் ஆனது. ஆகாயம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவையே ஐம்பூதங் களாகும்.

ஒரு மருத்துவர் நோயாளிக்கு ஏற்பட்டுள்ள நோயைப் பற்றி விளக்குவதைவிட அவர் நோயைத் தீர்ப்பதே மருத்துவரின் பொறுப்பு. அதுபோல், தங்களை நாடிவருபவர்களுக்கு ஜாதகப் பலன்களை மட்டும் சொல்வதை விட சரியான பரிகாரத்தையும் சொல்லி, அவர் துன்பத்தை அடியோடு போக்குவதே ஜோதிடரின் தலையாயக் கடமை. காட்டுத் தீயில் ஒரு மரத்தின் கிளைகளும், இலையும் கருகினாலும், மழை பெய்தால் அந்த மரத்தின் அழியாத வேரினால் மரம் மறுபடி துளிர்க்கும். முன்ஜென்ம கர்மவினையை, பரிகாரங்களால் வேரறுத்தால்தான் வெற்றிகிட்டும். அவித்த நெல் முளைப்பதில்லை. கர்ம வினையைக் கண்டறிந்து நீக்கும் வல்லமை, பாரம்பரிய ஜோதிடத்திற்கும், கை ரேகைக் கலைக்கும் உண்டு என்பதே உண்மை.

சித்தர்கள், மருத்துவம், ஜோதிடம், மாந்திரிகம் போன்ற எல்லா கலைகளுக்கும் அடிப்படையாக அமைந்ததே பஞ்சபூத தத்துவம். பஞ்சபட்சி சாத்திரமும், பஞ்சாங்க

மும், இதன் வெளிப்பாடே. பஞ்சபூத தத்துவத்தை அறிந்தால் மட்டுமே உடற் கூறியலையும், மனதின் ஓட்டத்தையும் அறியமுடியும். ஆகாயத்திலிருந்து காற்று தோன்றியது. காற்றிலிருந்து நெருப்பு தோன்றியது. நெருப்பிலிருந்து நீர் தோன்றி யது. நீரிலிருந்து நிலம் தோன்றியது.

நவகிரகங்கள், பன்னிரு ராசிகள், இருபத் தேழு நட்சத்திரங்கள் ஆகிய அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்) அடக்குவதே பஞ்சபட்சி இரகசியமாகும். பறவைகள், நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து நிலைகளிலும் சஞ்சரிக்கக் கூடியவை யாகும். இதன் காரணத்தினாலேயே சித்தர்கள் பஞ்சபூதங்களின் குறியீடுகளாக பறவைகளை நிர்ணயித்துள்ளார்கள்.

ss

கடவுளின் பஞ்ச உலோகச் சிலை செய்யும் கலவையிலும் பஞ்ச பூதத் தத்துவமே அடிப் படையானது. செம்பு (செவ்வாய்), வெள்ளி (சுக்கிரன்), தங்கம் (குரு), துத்தநாகம் (சனி), ஈயம் (கேது) ஆகிய ஐந்து உலோங்களால் செய்யப்பட்ட சிலையே பஞ்சலோக சிலை யாகும். பஞ்சாங்கத்தில் திதி (சுக்கிரன்- நீர்), வாரம் (செவ்வாய்- நெருப்பு), யோகம் (குரு- ஆகாயம்), கரணம் (புதன்- நிலம்), நட்சத்திரம் (சனி- காற்று).

உடலும்- மனமும் பஞ்சபூதங்களும்

நிலம்: எலும்பு, நரம்பு, தசை, தோல், உரோமம்.

நீர்: ரத்தம், கொழுப்பு, விந்து, சிறுநீர், கால், மூளை.

நெருப்பு: பயம், உடல் உஷ்ணம், பஞ்ச அக்னி.

காற்று: தச வாயுக்கள், ஓடுதல், நடத்தல், இருத்தல், படுத்தல்.

ஆகாயம்: இதயம், மனதின் எண்ணங்கள்.

கை விரல்களும் பஞ்சபூதங்களும்

கட்டை விரல்: ஆகாயம் ஆள்காட்டி விரல்- காற்று.

நடு விரல்: நெருப்பு மோதிர விரல்- நீர் சுண்டு விரல்- நிலம்.

நட்சத்திர பஞ்சபூதங்கள்

நிலம்: அஸ்வினி, பரணி, கிருத்திகை, ரோஹிணி, மிருகசீரிடம்.

நீர்: திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்.

நெருப்பு: உத்திரம், ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுசம்.

காற்று: கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம்.

ஆகாயம்: அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி.

ராசிகளும் பஞ்சபூதங்களும்

நெருப்பு: மேஷம், சிம்மம், தனுசு.

நிலம்: ரிஷபம், கன்னி, மகரம்.

காற்று: மிதுனம், துலாம், கும்பம்.

நீர்: கடகம், விருச்சிகம், மீனம்.

கிரகங்களும் பஞ்சபூதங்களும்

நெருப்பு: சூரியன், செவ்வாய்.

நீர்: சந்திரன், சுக்கிரன்.

ஆகாயம்: குரு.

நிலம்: புதன்.

காற்று: சனி.

நாடி தத்துவம்

புதனும், குருவும், சனியும்: வாதநாடி.

சூரியன், செவ்வாய், ராகு- கேது: பித்தநாடி.

சந்திரன், சுக்கிரன்: கபநாடி.

பஞ்சபட்சியும் பஞ்சபூதங்களும்

நிலம்: வல்லூறு.

நீர்: ஆந்தை.

நெருப்பு: காகம்.

காற்று: கோழி.

ஆகாயம்: மயில்.

பஞ்சபூதங்களின் சுவைகள்

இனிப்பு: (நிலம்+ நீர்)

புளிப்பு: (நிலம்+ நெருப்பு)

உப்: (நீர்+ நெருப்பு)

கசப்பு: (காற்று+ நெருப்பு)

துவர்ப்பு: காற்று+ நிலம்

பஞ்சபூதங்களின் விகிதம் மாறுபடும் போது நோயும், வாழ்க்கையில் தொல்லை களும் உண்டாகின்றன. காலமறிந்து செய லாற்றுவது, சரியான மூச்சுப் பயிற்சி, யோக முத்திரைகளால், பஞ்சபூத சமன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதால், வாழ்க்கை யில் வெற்றி பெறலாம்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala070225
இதையும் படியுங்கள்
Subscribe