உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (47)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-47

"சத்துறப் பொங்கி நின்ற சந்திர மேட்டின்மீது

அத்துற நெடுக ரேகை அடுக்காகத் தோன்றி நின்றால்

வித்துறப் பெருகி நின்ற வெகு புத்திராளோர் ஏடாய்

புத்திரர் பல பேர் தோன்ற புகழினைக் காட்டும் தானே.'

பொருள்: புதன் மேட்டுக்கு கீழே, இதய ரேகையைத்தொட்டு, சந்திர மேட்டின்மீது, அது அடிப்பகுதி தொட்டு, பல கிளை ரேகைகள் அடுக்கடுக்காக உருவானால், பல குழந்தைகளைப் பெரும் பாக்கியம் உண்டாகும். அவர்களால், புகழும் உண்டாகும்.

எல்லா உயிர்களையும் இயக்குவதே காற்றுதான் என்றாலும், இலைகள் அசையும் வரை காற்றின் இருப்பை அறியமுடியாது. அதே போல், எப்போதும், நாம், கர்மாவால் இயக்கப்பட்டாலும், எதிர்பாராத நிகழ்வு கள் நடக்கும் வரை கர்மாவின் விளைவை உணர முடிவதில்லை.மரத்தை, மகிழ்ச்சி யோடு தாலாட்

"சத்துறப் பொங்கி நின்ற சந்திர மேட்டின்மீது

அத்துற நெடுக ரேகை அடுக்காகத் தோன்றி நின்றால்

வித்துறப் பெருகி நின்ற வெகு புத்திராளோர் ஏடாய்

புத்திரர் பல பேர் தோன்ற புகழினைக் காட்டும் தானே.'

பொருள்: புதன் மேட்டுக்கு கீழே, இதய ரேகையைத்தொட்டு, சந்திர மேட்டின்மீது, அது அடிப்பகுதி தொட்டு, பல கிளை ரேகைகள் அடுக்கடுக்காக உருவானால், பல குழந்தைகளைப் பெரும் பாக்கியம் உண்டாகும். அவர்களால், புகழும் உண்டாகும்.

எல்லா உயிர்களையும் இயக்குவதே காற்றுதான் என்றாலும், இலைகள் அசையும் வரை காற்றின் இருப்பை அறியமுடியாது. அதே போல், எப்போதும், நாம், கர்மாவால் இயக்கப்பட்டாலும், எதிர்பாராத நிகழ்வு கள் நடக்கும் வரை கர்மாவின் விளைவை உணர முடிவதில்லை.மரத்தை, மகிழ்ச்சி யோடு தாலாட்டும் தென்றலும் காற்று தான், வேரோடு சாய்க்கும் புயலும் காற்று தான்.மனித வாழ்வில் எப்போது அதிஷ்டக் காற்று வீசும், எப்போது புயலும், சூறாவளி யும் சூழ்ந்திருக்கும் என்பதை அறிவிப்பதே, ஜோதிட விஞ்ஞானத்தின் நோக்கம்.

ss

விரல் அமைப்பு

நடு விரல்

நடுவிரல்: நடுவிரல் கையின் மையத்தில் அமைந்துள்ளது. சமநிலை, பொறுப்பு மற்றும் நமது சுய உணர்வைக் குறிக்கிறது. இது ஒழுக்கம், அமைப்பு மற்றும் கர்மாவை நிர்வகிக்கும் சனி கிரகத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இந்த விரலின் அமைப்பு, ஒருவரின் முடிவெடுக்கும் திறமையைக் சுட்டிக்காட்டும்.

* நடுவிரல் உருண்டு, நீண்டிருந்தால், தீராத நோயைக்காட்டும். கயிறு போன்று முறுக்கிக்கொண்டிருந்தால், கடின மனமுடையவர். நீண்டு, கூர்மையாக இருந்தால் லட்சியவாதி.

* நடுவிரலின் முதல் அங்குலாஸ்தி ஓரளவு நீண்டிருந்தால் தத்துவ ஞானி, பேரறிஞர், எதையும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடியவர். அதுவே அதிகமாக நீண்டிருந்தால் மூடநம்பிக்கையும், குழப்பமும் உடையவர்கள். விரக்தியால் வாழ்க்கையில் எந்த முடிவுக்கும் போவார்.

*நடுவிரலின் முதல் அங்குலாஸ்தி குறுகலாக இருந் தால், அலட்சிய தன்மையும், எதிலும் பொறுப்பற்ற குணமும் அமையும்.

*நடுவிரலின் இரண்டாவது அங்குலாஸ்தி அதிகமாக நீண்டிருந்தால் ஆராய்ச்சி செய்வதில் ஆர்வமுடையவர்.

*நடுவிரலின் இரண்டாவது அங்குலாஸ்தி, குட்டையாக இருந்தால், குறுக்குவழியில் முன்னேற துடிப்பவர்கள். மந்திர, மாந்திரீகத்தில் ஈடுபாடு உடைவர்கள்.

*நடுவிரலின் மூன்றாவது அங்குலாஸ்தி அதிகமாக நீண்டிருந்தாலும் அகலமாயிருந்தாலும் தனிமை விரும்பியாக இருப்பார்.

*நடுவிரலின் மூன்றாவது அங்குலாஸ்தி அதிகமாக குறுகி இருந்தால் பேராசைக்காரர்கள். தன்னலம் அதிகமுடையவர். தங்கள் முன்னேற் றத்திற்காக பிறரைக் கெடுக்கவும் தயங்க மாட்டார்கள்.

*நடுவிரல் குரு விரலை நோக்கி சாய்ந்திருந்தால் சுயமுயற்சியில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள்.

*நடுவிரல் சூரிய விரலை, சார்ந் திருந்தால் இயற்கை ஆர்வலர்கள். கலைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.

நடு விரல் குறியீடுகள்

*நட்சத்திரக்குறி காணில்: தாங்கள் வாக்கினால் வம்பு, வழக்கில் சிக்கிக்கொள்வார்கள்.

*அறுங்கோணக்குறி இருந்தால், முற்போக்கு சிந்தனையாளர்கள்.தொழிலாளர் சங்க பிரதிநிதியாக தலைவ னாக இருப்பார்கள்.

*ஒற்றைக்கோடு ஆள்காட்டி விரலின் முதற் அங்குலாஸ்தியிலிருந்தால், லட்சியவாதிகள். எடுத்த காரியம் முடிப்பார்.

*சதுரக்குறி இருந்தால், அடிமைத் தொழில் செய்வார்.

*முக்கோணக்குறி காணப்பட்டால்: தீயவர்களின் நட்பில் சிக்கிக் கொள்வார்.

*வலைப் பின்னல்: சதிவலையில் மாட்டிக் கொள்வார். கூட இருப்பவரே குழிபறிப்பார்.

*கரும் புள்ளி இருந்தால், வாழ்க்கை முழுவதும் துன்பம் உண்டாகும்.

*வட்டக்குறி இருந்தால், செல்வாக்கு உண்டாகும்.

*சக்கரக்குறி காணப்பட்டால், வாழ்க்கையில் எந்தக் குறையும் இருக்காது.

*கூட்டல் குறியிருக்க போராடும் குண முடையவர். அரசியலில் சிறந்து விளங்குவார்.

*உடுக்கை குறி அமைந்தால் வாக்கு வல்லமையுடையவர். ஆசிரியர், வழக்கறிஞர் வியாபரிகளுக்கு இந்த அமைப்பு காணப்படும்.

*குறுக்குக் கோடு: தீய எண்ணங்களை உடையவர்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala030125
இதையும் படியுங்கள்
Subscribe