"போற்றிடும் ஆயுள் ரேகை பொங்கிடும் இதய ரேகை

காற்றுடும் விதியின் ரேகை கங்கண வரையில் நான்கும்

தேற்றடு முடிவில் சென்று தீங்கொரு தேக்கமில்லார் நூற்றிருபது

நன்ணாண்டு நோயின்றி வாழ்வார் தானே.'

பொருள்: விதி ரேகை, ஆயுள் ரேகை, இதய ரேகை, தீர்க்கமாக அமைந்து தடைகள் இல்லாமலிருந்தால் நூற்றியிருபது வயதுவரை வாழலாம்.

இருளைவிட்டு ஓடுவதால் அதை வெல்ல முடியாது. ஒளியைக்கொண்டே அதை விரட்ட முடியும். ஒளி இல்லாவிட் டால் விழியும் உதவாது; வழியும் தெரியாது. கடலோடிகளுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக வடக்கு நட்சத்திரம் அமையும்.

அதுபோல் துன்பத்தின் இருளில் சிக்கித் தத்தளிப்பவர்களுக்கு ஜோதிடமே ஜோதி யாக நின்று வழிகாட்டும். சாலைகளில் பயணம் செய்பவர்களுக்கு, வழிகாட்டிப் பலகைகள் உதவுவதுபோல், கைரேகைப் பதிவுகள் ஒருவரின் வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுகின்றன.

vv

விரல் அமைப்பு ஆள்காட்டி விரல்

ஆள்காட்டிவிரல்: "தர்ஜனி' என்று அழைக்கப்படும். இது குருவின் ஆதிக்கத்தில் உள்ள விரலாகும். இந்த விரலின் கீழ்தான் குருமேடு இருக்கிறது. இந்த விரலானது சுவாச சம்பந்தமான நரம்புகளுடனும் வயிறு சம்மந்தப்பட்ட நரம்புகளுடனும் நேரடித் தொடர்பு உடையது. எனவே நுரையீரல், வயிறு சம்பந்தப்பட்ட நோய்களை இந்த விரலில் உருவாகும் ரேகை மாறுபாடு களைக்கொண்டு அறியலாம்.

ப் குட்டையான ஆள்காட்டி விரலை யும், நீளமான மோதிரவிரலையும் கொண்ட வர்கள் காம எண்ணம் குறைந்தவர்களாக இருப்பார்கள்.

ப் ஆள்காட்டிவிரல் மோதிர விரலைவிட குட்டையாக இருப்பவர்களின் முகம் கவர்ச்சிகரமாக இருக்கும்.

ப் மோதிரவிரலைவிட, ஆள்காட்டிவிரல் சிறிய தாக இருப்பவர்கள், கணிதத் திலும், அறிவியலிலும் சிறந் தவர்களாக இருப்பார்கள்.

ப் மோதிரவிரலைவிட ஆள்காட்டி விரல் நீளமாக இருந்தால், ஆரோக்கியம் கெடும். உயர் இரத்த அழுத்தம் அதிகமாகக் காணப்படலாம். மிக விரைவில் தீய பழக்கங் களில் சிக்கிக்கொள்வார்.

ப் நீண்ட ஆள்காட்டி விரல்களைக் கொண்டவர்கள் அதிக தன்னம்பிக்கை, மன உறுதி உடையவர்கள்.

ஆள்காட்டிவிரல் குறியீடுகள்

ப் நட்சத்திரக்குறி காணில் - வாக்குவன்மை மிக்கவராவார். பேச்சாளராகவோ, வழக்கறிஞராகவோ, வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.

ப் அறுங்கோணக்குறி இருந்தால்- நுணுக்கமான. ஆராய்ச்சி செய்பவராக இருப்பார். பொதுவாக, விஞ்ஞானிகளுக்கும், அறிவியல் சார்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கும். இது போன்ற அமைப்பு இருக்கும்.

ப் ஒற்றைக் கோடு ஆள்காட்டி விரலின் முதல் அங்குலாஸ்தியிலிருந்தால் தன்னலம் மிக்கவர். பிறரிடம் குற்றம் காண்பவர்

ப் சதுரக்குறி இருந்தால் செல்வமும், செல்வாக்கு முடையவர். சர்வஜன வசிய முடையவர்.

ப் முக்கோணக்குறி காணப்பட்டால்: வருங்கால நிகழ்ச்சிகளை முன்னுரைக்கும் வல்லமை. ஜோதிடர்களுக்கு இந்த அமைப்பு, மிகவும் முக்கியமானது. மூலதனமில்லாமல் லாபகரமாக. வியாபாரம் செய்வார்.

ப் வலைப் பின்னல்: உயர் கல்வியால் புகழைத் தரும். இந்த அமைப்பில், கரும் புள்ளி இருந்தால், குற்றவாளியாகி சிறைத்தண்டனைக்கு உள்ளாவார்.

ப் வட்டக்குறி இருந் தால்: தெய்வ பலத்துடன் அருள் வாக்கு கூறும் தன்மை உண்டாகும்.

ப் சக்கரக்குறி காணப் பட்டால் மக்களின் தலைவ னாகத் திகழ்வார். ஆளுமைத் திறன் அதிகமுடையவர்.

ப் சாய்வான கோடு அமைந்தால் பிறருக்கு தீங்கிழைப்பவர்.

ப் இருகோடு இணை கோடுகளாக அமைந் தால், சூது வாது அற்றவர். தியாக உள்ளம் கொண்டவர். பிறருக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணிப்பார்.

ப் மூன்று கோடிருந்தால்: வாழ்க்கையின் முற்பகுதியில் தோல்வியையும், பிற்பகுதியில் வெற்றியையும் சந்திப்பவர். அனுபவ அறிவு அதிகமுடையவர்.

ப் கூட்டல் குறியிருக்க: மனதிருப்தி யுடையவர். கடவுள் பக்தி அதிகமுடையவர். ஆன்மிகத்தில் சிரந்து விளங்குவார்.

ப் உடுக்கைக்குறி அமைந்தால், தேவை யில்லாத விஷயங்களில் தலையிட்டு, கெட்ட பெயரை சம்பாதித்துக்கொள்வார். எதிர் பாராத விபத்துக்களும் ஏற்படும். கவனம் தேவை.

ப் நேர்க்கோடு மதநம்பிக்கையையும், தர்ம சிந்தனையைக் காட்டும். மத குருமார்களுக்கு, இந்த அமைப்பு காணப்படும்.

ப் குறுக்குக்கோடு மூடநம்பிக்கையையும், முரட்டுத்தனத்தையும் குறிக்கும். பிறர் சொல் கேளாதவர்.

(தொடரும்)

செல்: 63819 58636