"முன்னையக் கணிதம்கொண்ட முழு விதி ரேகைமீது
பின்னிய கிளையிலொன்று மேல் நோக்கி தோன்றி நின்றால்
நன்னய அமைப்பு தோன்றும் நாளொரு காலம் தன்னில்
இன்னொரு தொழிலைக் கூட்டும் இயல்பினைக் காட்டும்தானே.'
பொருள்: விதி ரேகையில் மேல் நோக்கி செல்லும், ஒருகிளை ரேகை தோன்றும் காலத்தில் அவர் செய்யும் தொழிலோடு மற்றொரு தொழிலையும் செய்வார். இரு தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.
ஒரு மாடு கட்டப்பட்டிருக்கும் கயிறின் நீளமே அந்த மாடு மேயக்கூடிய நிலத்தின் வட்டத்தைக் நிர்ணயிக்கும். இதுவே, பசு- (மனிதர்), பதி- (கட்டப் பட்டிருக்கும் முளைக்கொம்பு- இறை வன்), பாசம்- (கட்டப்பட்ட கயிறு- விதி). ஒரு மனிதனுக்கு ஜாதகத்தில் அமையும் கொடுப்பினை பலனே, அவன் அனுபவிக்கும் உலக சுகங்களைத் தெரிவிக்கும். ஒருவருக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும், அதை அனுபவிக் கும்
"முன்னையக் கணிதம்கொண்ட முழு விதி ரேகைமீது
பின்னிய கிளையிலொன்று மேல் நோக்கி தோன்றி நின்றால்
நன்னய அமைப்பு தோன்றும் நாளொரு காலம் தன்னில்
இன்னொரு தொழிலைக் கூட்டும் இயல்பினைக் காட்டும்தானே.'
பொருள்: விதி ரேகையில் மேல் நோக்கி செல்லும், ஒருகிளை ரேகை தோன்றும் காலத்தில் அவர் செய்யும் தொழிலோடு மற்றொரு தொழிலையும் செய்வார். இரு தொழில் செய்யும் யோகம் உண்டாகும்.
ஒரு மாடு கட்டப்பட்டிருக்கும் கயிறின் நீளமே அந்த மாடு மேயக்கூடிய நிலத்தின் வட்டத்தைக் நிர்ணயிக்கும். இதுவே, பசு- (மனிதர்), பதி- (கட்டப் பட்டிருக்கும் முளைக்கொம்பு- இறை வன்), பாசம்- (கட்டப்பட்ட கயிறு- விதி). ஒரு மனிதனுக்கு ஜாதகத்தில் அமையும் கொடுப்பினை பலனே, அவன் அனுபவிக்கும் உலக சுகங்களைத் தெரிவிக்கும். ஒருவருக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும், அதை அனுபவிக் கும் யோகம் உள்ளதா? என்பதை அறிந்து கொள்வதே ஜோதிடத்தின் அடிப்படை யாகும். கடலில் பயணம் செய்பவருக்கு, தாகம் எடுத்தால், கடல்நீர் உண்ணும் நீராகாது. இனிப்பு பண்டங்களை விற்பவருக்கு சர்க்கரை நோய் வந்தால் அந்த இனிப்பு பலகாரங் களால் பயனில்லை. ஒருவரின் வாழ்க்கையில், எந்த சுகத்தை அல்லது துக்கத்தை அனுபவிப் பார் என்பதை அறிந்துகொள்ள துணை புரிவதே ஜோதிடம்.
விரல் அமைப்பு அங்குலாஸ்தி பலன்கள்
ஒவ்வொருவரின் உயரமும் அவரவர் கையால் எட்டு ஜான் அளவு தானிருக்கும். எல்லா ஜாதகத்திலும் அஷ்டவர்க்க பரல் களின் கூட்டுத்தொகை ஒன்றாகவே அமையும்.
விரல்களின் ஒவ்வொரு பிரிவும் ஒரு உண்மை யைத் தெரிவிக்கும். கட்டைவிரல் தவிர, மற்ற விரல்கள் மூன்று பாகங் களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அப்படி பிரிக் கப்பட்ட பாகத்துக்கு "அங்கு லாஸ்தி' என்றுபெயர். ஒவ்வொரு விரலின் நகமுள்ள முதல் அங்குலாஸ்தி ஆத்ம சக்தியைக் குறிக்கிறது. இரண்டாவது அங்குலாஸ்தி உடலைக் குறிக்கிறது. மூன்றா வது அங்குலாஸ்தி மனதைக் குறிக்கிறது. மனதையும், உயிரையும் ஒன்றினைப்பது நம் உடலே. ஆத்மா, சரீரம், மனம் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்பில் இருக்கிறதோ, அதேபோல், ஒவ்வொறு அங்குலாஸ்திக்கும் ஒரு பலன் உண்டு.
கட்டைவிரல் (அங்குலாஸ்தி)
கட்டைவிரல் என்பது நமது கைகளில் முக்கியமான ஒருவிரல். மற்ற விரல்களைவிட கட்டைவிரலே துல்லியமாக மனிதனின் வாழ்க்கை நிகழ்வுகளையும் மனதின் பண்புகளையும் வெளிப்படுத்துகிறது.
* சாமுத்திரிகா சாஸ்திரத்தின்படி மெல்லிய மற்றும் நீண்ட கட்டைவிரல்கள் கொண்டவர்கள் மிகவும் தைரியமானவர்கள்.
* பெருவிரலின் முதல் அங்குலாஸ்தி இரண்டாவது அங்குலாஸ்தியைவிட நீள மாயிருந்தால் மன உறுதியும் பிடிவாத குணமும் கொண்ட வர்கள். புகழ்பெற்றாலும் இவர்களுடைய பிடிவாத குணத்தால் பலருடைய விரோதத்தை சம்பாதித்துக் கொள்வார்கள். பெருவிரலின் முதலாவது அங்குலாஸ்தியில் (நகமுள்ள பாகம்) நட்சத்திரக் குறி காணப்பட்டால், சொல்லின் செல்வராக விளங்குவார். புகழ் பெற்ற வழக்கறிஞர்கள் இராஜதந்திரிகளின் பெருவிரல்களில் பெரும்பாலும் இக்குறி காணப்படும்.
* முதல் அங்குலாஸ்தி, பின்பக்கம் வளைந் திருந்தால் சாமர்த்தியம் அதிகமுடையவர். எந்த காரியத்தையும் சாதிக்கும் திறமை யுடையவர். பிறர் மனதைப் புரிந்துக்கொண்டு அதற்கேற் றார்போல் செயலாற்றுவார்.
* பெருவிரலின் முதல் அங்குலாஸ்தியும், இரண்டா வது அங்குலாஸ்தியும், ஒரே அளவாக அமைந்தால், பொறுமை அதிகமுடைய வர். எதையும் ஆராய்ந்து சாதக பாதகம் அறிந்து செய லாற்றுவார்கள். அனுபவ அறிவு அதிகமிருக்கும்.
பொதுவாக வியாபாரத்துறையில் இருப் பவர்களிடம் இந்த அமைப்பைக் காணலாம்.
* பெருவிரலின் முதல் அங்குலாஸ்தியை விட இரண்டாவது அங்குலாஸ்தி நீளமாக இருந்தால் கற்பனை அதிகமுடையவர்.
* திட்டமிடுவதில் வல்லவர். ஆனால், செயலாற்றுவதில் பின்தங்கிவிடுவார். எதையும் ஆராய்ந்து பார்ப்பதிலும் பிறருக்கு கற்றுத் தருவதிலும் திறமையுடையவர். இந்த அமைப்பு உள்ளவர்கள் விரிவுரையாள ராகவோ, ஆசிரியர்களாகவோ இருக்க தகுதி படைத்தவர்கள். தகவல் தொடர்புத்துறை யிலும் சிறந்து விளங்குவார்கள்.
* பெருவிரல், உள்ளங்கைக்குள் தானாக மடிந்தால் மூளை பாதிப்புடையவர். சிலருக்கு மரணத் தருவாயிலும் வலிப்பு நோய் காணும்போதும் பெருவிரல் உள்ளங்கைக்குள் தானாக மடிந்து விடும். பெருவிரலுக்கும் மூளைக்குமான தொடர்பு வலிமையானது.
* பெருவிரலில் மச்சம் இருந்தால், எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
(தொடரும்)