"ஒராயுள் ரேகை உண்டு ஆயிரத்தொருவருக்கு
ஈராயுள் ரேகை உண்டு ஏர்ப்பரப்பு பங்கை மீது
கூராயுள் ரெண்டு தோன்றில் கோளிரு துன்ப காலம்
நேராருள் கண்டம் நீக்கி ஆயுளை நீட்டும் தானே.'
பொருள்: ஆயிரத்தில் ஒருவருக்கு இரட்டை ஆயுள்ரேகை தோன்றும். அவர்களுக்கு எத்தனை ஆபத்துக்கள் வந்தாலும், அதிலிருந்து தப்பித்து நீண்ட நாள் வாழ்வார்.
கலைந்துபோகும் மேகங்களை நம்பி விதைத்த நெல் பாழாவதுபோல் காலமறியாது செய்யும் முதலீடும் முயற்சியும் வீணாகும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் சில நேரங்களில் பலன் கிடைப்பதில்லை. அவ்வாறு தோற்றவர்கள் விதி சதி செய்து விட்டதாக ஆறுதல் கூறிக்கொள்வார்கள். தகுந்த காலத்தைத் தேர்ந் தெடுத்து முயற்சிசெய்தால் எப்போதும் வெற்றி- எதிலும் வெற்றி என்பதே வாழ்க்கையின் இலக்காக மாறும். காலமறிதலுக்குக் கருவியாக இருப்பது ஜோதிடம் மட்டுமே.
கைரேகையும் புதிரான அடையாளங்களும்
எழுத்துகள் மொழியின் குறியீடு. அந்த குறியீடுகள் மொழிக்கு மொழி வேறுபடுவது போல், ஜோதிடம் எனும் மொழியின் குறியீடாக அமைவதே கைரேகைகளில் காணும் அடையாளங்கள். எழுத்துகளின் கூட்டம் சொல்லாக மாறி, சொற்களின் தொகுப்பு, வாக்கியமாக மாறுவதுபோல், கிரக மேடுகளும் அதில் காணப்படும் அடையாளங்களும் இணைந்தே ஒருவரின் வாழ்க்கையைத் தெரிவிக்கும்.
மாலிகா ரேகை
கட்டை விரலின் அடி பாகத்தில், சங்கிலித் தொடர்போல் அமையும் ரேகையே, மாலிகா ரேகை.
ப் இந்த ரேகை அமைப்புடையவர்கள் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் படிப்படியாக முன்னேறி உயர்நிலையை அடைவார்கள். மலர் மாலைபோல் இந்த ரேகை அமைவது சிறப்பு. இந்த அமைப்பு டையவர்கள் ஜாதகத்தில், கிரகங்களும் வரிசையாக அமைந்து கிரக மாலிகா யோகத்தைத் தோற்றுவிக்கும்.
(கிரக மாலிகா யோகம்: கிரக மாலிகா யோகம் என்பது ராகு மற்றும் கேதுவைத் தவிர்த்து ஏழு தொடர்ச்சியான வீடுகளில் உள்ள கிரகங்களின் மாலையாக உருவாகும். இந்த யோகம் உருவாகும் ஆரம்ப வீட்டின்படி பலன்களைத் தருகிறது.)
ப் சங்கிலித் தொடர்போல் அமையா மல் நேர்க்கோடுபோல் தோன்றினால் பொருளாதார ஏற்றத்தாழ்வு அடிக்கடி உண்டாகும்..
ப் அடிபட்ட வடுபோல் தென்பட்டால் நடுத்தரப் பலன்கள் உண்டாகும். அதிக முன்னேற்றம் இல்லாவிட்டாலும் சராசரி வாழ்க்கை அமையும்.
ப் இந்த ரேகை துண்டுத்துண்டாக இருந்தால், தொழில் நிரந்தரமானதாக அமையாது. இடமாற்றமும், தொழிலில் மாற்றமும் கவலை தரும். மூதாதையர் சொத்தும் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அதை அனுபவிக்கமுடியாது.
ப் மெல்லிய கோடுபோல் அமைந்தால் நிறைவான செல்வம் தரும். ஆனால் ஆரோக்கியம் கெடும். தீராத நோய்களால் தொல்லை உண்டாகும்.
ப் இந்த ரேகையின் தொடக்கத்தில் சிறிய புள்ளிபோன்ற அமைப்பிருந்தால் செல்வந்தராகும் யோகம் உண்டு.
ப் இந்த ரேகையில் குறுக்கீடு இருந்தாலும், தனித்தனி கோடுகளாக அமைந்தாலும் எதிலும் ஆர்வமற்றவர்களாக இருப்பார்கள்.
ப் இந்த ரேகை கத்தரிக்கோல்போல அமைந் தால் திருமணத்தில் தடையும் தாமதமும் உண்டாகும்.
கர்ம ரேகை
சுக்கிர மேட்டில் தொடங்கி கோதுமை ரேகைவரை செல்லும் கோடு சிலருக்கு, நேர்க்கோடாகவும், சிலருக்கு வளைந்த கோடாகவும் அமை யும். இந்த ரேகை அமை யாமலிருப்பதே நல்லது. இந்த ரேகை சென்ற பிறவியில் செய்த தீய கர்மவினையால் உருவாகும் தோல்வி, தடை, கவலை போன்றவற்றை சுட்டிக்காட்டும். வெற்றிக் கான சில குறுக்குவழிகளை மேற்கொள்ளும்படி தூண் டப்படுவார்கள். அதனால், சங்கடத்தில் மாட்டிக்கொள்ளும் நிலை உருவாகும். பெரும்பாலும் இந்த அமைப்புள்ள வர்களுக்கு ஜாதகத்தில் தனித்த கேது பத்தாமிடத்திலிருக்கும்.
ரதி ரேகை
கட்டை விரலின் இரண்டாவது அங்கு லாஸ்தி இணையும் இடத்திற்கு மேல் அமையும் ரேகையாகும். இது நேர்க்கோடா கவோ வளைந்த கோடாகவோ காணப்பட லாம். இந்த ரேகையுடன் இரண்டு அல்லது மூன்று கோடுகள் இணைந்தால், காம இச்சை அதிகமாகி, பல பெண் அல்லது ஆண் தொடர்புகளால் வாழ்க்கை வீணாகும்.
ப் இந்த ரேகையில் பெருக்கல் குறி இருந் தால் குடும்பத்தில் பிரிவினையைக் காட்டும்.
ப் இந்த ரேகையில் கரும் புள்ளியோ, தீவுக்குறியோ இருந்தால் இல்லறம் சிறப்பாக அமையாது.
(தொடரும்)
செல்: 63819 58636