உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (41)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-41

"இதயம் ஆயுள் என்று வடவரில் சிலபேர் கூறும்

இதய ரேகை தன்னில் கீழ்நோக்கும் கிளைகளெல்லாம்

உறுதியாய் உலகில் யார்க்கும் உற்பத்தி சுழற்சி வேகம்

கருதிய அம்பு பாயும் காதலாம் ரேகை தானே.'

பொருள்: இதய ரேகையை ஒட்டி அதன் கீழ்பாகத்தில் பெரிதாய் ஒரு கிளை ரேகை தோன்றினால் அதுவே காதல் ரேகையாகும்.

விதைத்தவுடன் பயிர்கள் முளைப்ப தில்லை. வயிற்றில் கரு உருவானதிலிருந்து குழந்தைப் பிறப்பு வரையில், அதன் வளர்ச்சியில் நவகிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. மலர்கள், கனிகள் போன்ற எல்லாவற்றுக்கும் பருவகாலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இயற்கையும் காலத்தை அனுசரித்தே இயங்கவேண்டி யுள்ளது. உயிருள்ளதும், உயிரற்றதும் காலத்தின் கட்டளைக்கு அடிபணிந்தேயாக வேண்டும். காலத்தின் அதிசூட்சுமமான ரகசியத்தை அறியும் அறிவிய

"இதயம் ஆயுள் என்று வடவரில் சிலபேர் கூறும்

இதய ரேகை தன்னில் கீழ்நோக்கும் கிளைகளெல்லாம்

உறுதியாய் உலகில் யார்க்கும் உற்பத்தி சுழற்சி வேகம்

கருதிய அம்பு பாயும் காதலாம் ரேகை தானே.'

பொருள்: இதய ரேகையை ஒட்டி அதன் கீழ்பாகத்தில் பெரிதாய் ஒரு கிளை ரேகை தோன்றினால் அதுவே காதல் ரேகையாகும்.

விதைத்தவுடன் பயிர்கள் முளைப்ப தில்லை. வயிற்றில் கரு உருவானதிலிருந்து குழந்தைப் பிறப்பு வரையில், அதன் வளர்ச்சியில் நவகிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. மலர்கள், கனிகள் போன்ற எல்லாவற்றுக்கும் பருவகாலம் வரையறுக்கப்பட்டுள்ளது. இயற்கையும் காலத்தை அனுசரித்தே இயங்கவேண்டி யுள்ளது. உயிருள்ளதும், உயிரற்றதும் காலத்தின் கட்டளைக்கு அடிபணிந்தேயாக வேண்டும். காலத்தின் அதிசூட்சுமமான ரகசியத்தை அறியும் அறிவியலே ஜோதிடம்.

v

கைரேகையும் புதிரான அடையாளங்களும்

இரவு நேரத்தில் வானத்தைப் பார்ப்பவர்களுக்கு அது வான வேடிக்கையாக மட்டுமே தெரியும். வான சாஸ்திரமும் ஜோதிடமும் தெரிந்தவர்களுக்கு மட்டுமே வானம், எதிர்காலம் பற்றிய ஞானத்தைத் தரும் போதிமரம். அதேபோல், கைரேகை சாத்திரம் தெரிந்தவருக்கு, உள்ளங்கை யிலுள்ள ஒவ்வொறு அடையாளமும் ஒரு நிகழ்வைத் தெரிவிக்கும். கைரேகை சாத்திரத்தில் முக்கியமாக ஆராயப்படுவது கட்டைவிரல் ரேகைகள். மற்ற விரல்களுடன் சேராமல் தனித்திருப்பதே கட்டை விரலின் தன்னிகரில்லா தனித்தன்மையைக் காட்டும். நெற்றியில் திலகம் வைப்பதற்கும், குருமார்கள், சீடர்களுக்கு புருவ மத்தியில் ஸ்பரிச தீட்சை தருவதற்கும் பயன்படுத்தும் விரல் கட்டை விரல் தான். ஆராய்ந்தால் கட்டை விரலில் பல ஆன்மிக ரகசியங்களை அறியலாம். கட்டை விரல் ரேகைகளில் எண்ணிலடங்காத அமைப்புகளிருந்தாலும், நான்குவித ரேகைகள் மிக முக்கியமானவை.

1. கோதுமை ரேகை (புஷ்ப ரேகை),

2. மாலிகா ரேகை, 3. கர்ம ரேகை, 4. ரதி ரேகை.

கோதுமை ரேகை

கோதுமை மணிபோலவும் மலராத, அரும்பின் தோற்றமும் கொண்ட ரேகை. கட்டை விரலின் மத்தியில் அமைவது சிறப்பு. இந்த ரேகை அமைப்புடையவர்களுக்கு உணவுக்குப் பற்றாக்குறையும், ஏழ்மையும் வராது. வாழ்க்கையில் மலையளவு தொல்லை வந்தாலும் கடுகுபோல் சிறுத்துவிடும். முயற்சிக்குமேல் பலன் பெறுவார்கள்.

ப் நீண்டு வளைந்திருக்கும் கோதுமை ரேகை உடையவர்களுக்கு இளமையில் துன்பமும் நடு வயதில் மகிழ்ச்சியும் வரும்.

ப் மூன்று கோடுகளாக அமைந்தால் பிரச்சினைகளும், கவலைகளும் தொடர்கதையாகும். இந்த அமைப்புள்ள வர்களுக்கு மன உறுதியும், திடமான கொள்கையும் இருக்காது. சூதாட்டத்தில் அதிக ஆர்வமுடையவர்.v ப் கோதுமை ரேகை யின் உள்ளே கோடுகள் அமைந்தாலும், தீராத தொல்லையை அனுபவிப் பார்.

ப் துவக்கத்தில் ஒரு ரேகை யாக ஆரம்பித்து, நடுவில் கோதுமை வடிவம் காட்டி, முடிவில் ஊசி முனைபோல் முடிந்தால் இளம் வயதில் பெற்றோ ரைப் பிரிதல், கல்வியில் தடை போன்றவற்றைக் காட்டினாலும், நடு வயதில் குபேர வாழ்க்கை அமையும்.

ப் இந்த ரேகை முடியுமிடத்தில் தீவுக்குறி தென்பட்டால், வாழ்க்கைத்துணையைப் பிரிந்து வாழும் நிலையுண்டாகும்.

ப் வில் போன்று அமைந்த கோதுமை ரேகை அமைதியில்லாத வாழ்வையும், ஏழ்மையையும் தரும்.

குறியீடுகள்: கோதுமை ரேகையிலமையும் அபூர்வ அடையாளங்கள், விதியைத் தெளிவு படுத்தும்.

ப் நடுவில் பிளவுபட்டும், இடையில் புள்ளிகள் இருந்தாலும் கடின உழைப்பால் மட்டுமே வாழ்க்கையை நடத்தமுடியும். எதுவும் எளிதில் நிறைவேறாது. தொடக்கத் தில் தோற்றாலும் முடிவில் வெற்றிபெறுவார்.

ப் தெளிவான கோதுமை ரேகை, கட்டை விரல் ஓரத்தில் தொடங்கி, மறுமுனை வரை நீண்டிருந்தால், இளமையில் இளவரசர்போல் வளர்ந்து, சக்கரவர்த்தியாக வாழ்வார். வாழ்க்கையில் எப்போதும் வெற்றி, எதிலும் வெற்றி கிடைத்துக்கொண்டே இருக்கும். இவர்கள் கலைத்துறையிலும் பிரகாசிப்பார்கள். இதுபோன்ற அமைப்பு டையவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருப்பார்.பெரும்பாலும் இந்த அமைப்பு டையவர்களுக்கு சுக்கிரன் கேந்திர ஆட்சி, உச்சம் பெற்றிருக்கும். பஞ்சமகா புருஷ யோகங்களில் சிறந்த யோகமான மாளவிகா யோகத்தைப் பெறுவார். இந்த யோகம் கொண்டவர்கள் எதையும் ஆடம்பரமாக, முழுமையாக, மகிழ்வுடன் அனுபவிப்பார்கள்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala221124
இதையும் படியுங்கள்
Subscribe