நடுவிரல், மோதிரவிரல் மற்றும் சுண்டுவிரல் நுனிகள் கட்டை விரலைத் தொட்டு, ஆள்காட்டி விரல் நீட்டப்பட வேண்டும்.
பலன் தசைகளின் இறுக்கத்தை நீக்கி மன அழுத்ததைக் குறைக்கும்.
"புகர் தழி வெள்ளி மேட்டில் நடுவிற் முக்கோனம் தோன்றி
அகமுற திருத்தம் பெற்றால்
அவருக்கும் பருவநாளில்
வருமுறை மாமன் அத்தை மக்களில் ஒருவர் இன்றேல்
தருமுறை மக்கள் என்றோர் தாரமாய் காட்டும்தானே.'
பொருள்: ஆண்களுக்கு சுக்கிர மேட்டின் மத்தியில் அழுத்தம் திருத்தமாக முக்கோணம் அமைந் தால் மாமன் மகள் அல்லது அத்தை மகளை மணக்கும் வாய்ப்புண்டு. உலகில் மாறாமலிருப்பது பிறப்பும், இறப்பும். வாழ்க்கை என்பதே ஒருகால அளவுதான். நம்மைப் படைத்த பிரம்மனுக் கும் ஆயுட்காலம் வரையறுக்கப்பட்டுள்ளது. குபேரன், இந்திரன் போன்ற தேவ பதவ
நடுவிரல், மோதிரவிரல் மற்றும் சுண்டுவிரல் நுனிகள் கட்டை விரலைத் தொட்டு, ஆள்காட்டி விரல் நீட்டப்பட வேண்டும்.
பலன் தசைகளின் இறுக்கத்தை நீக்கி மன அழுத்ததைக் குறைக்கும்.
"புகர் தழி வெள்ளி மேட்டில் நடுவிற் முக்கோனம் தோன்றி
அகமுற திருத்தம் பெற்றால்
அவருக்கும் பருவநாளில்
வருமுறை மாமன் அத்தை மக்களில் ஒருவர் இன்றேல்
தருமுறை மக்கள் என்றோர் தாரமாய் காட்டும்தானே.'
பொருள்: ஆண்களுக்கு சுக்கிர மேட்டின் மத்தியில் அழுத்தம் திருத்தமாக முக்கோணம் அமைந் தால் மாமன் மகள் அல்லது அத்தை மகளை மணக்கும் வாய்ப்புண்டு. உலகில் மாறாமலிருப்பது பிறப்பும், இறப்பும். வாழ்க்கை என்பதே ஒருகால அளவுதான். நம்மைப் படைத்த பிரம்மனுக் கும் ஆயுட்காலம் வரையறுக்கப்பட்டுள்ளது. குபேரன், இந்திரன் போன்ற தேவ பதவி களும் கால நிர்ணயத்திற்குட்பட்டவையே. நவகிரகங்களில் முதன்மையான சூரியனும் ஒரு குறிப்பிட்ட கால அளவே ஒளியைக் கொடுத்துவிட்டு ஓய்ந்துவிடும். அவதார புருஷர்களும் விதிவசத்தால் அவதிப்பட் டதை நம் புராணங்கள் விளக்கும். ஆழ்ந்து சிந்தித்தால் காலத்தின் கட்டளைப்படி இயங் கும் விதியே முதன்மையானது என்பதை அறிய முடியும். பிரம்மனையும் அண்டத்தை யும் ஆட்டிப்படைக்கும் பிரம்மாண்ட சக்தியே காலம்தான். காலத்தின் ரகசியத்தைக் கற்றுக்கொடுக்கும் கலையே ஜோதிடம்.
ஜாதகமும் கைரேகையும் இரு நதிகளாக ஓடினாலும் முடிவில் கால விஞ்ஞானம் என்னும் பெருங்கடலில் கலக்கின்றன.
கைரேகையும் புதிரான அடையாளங்களும்
கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் போன்ற பலவித கணிதக் குறியீடுகள் ஒரு எண்ணின் மதிப்பை மாற்றுவதுபோல் கைரேகைகளில் காணப்படும் புதிரான அடையாளங்கள் வாழ்க்கையின் கூட்டல், கழித்தல் கணக்குகளை சுட்டிக்காட்டும். கணிதம் தெரிந்தவருக்கே கணிதக் குறியீடு கள் புரியும். கைரேகையைப் படிக்கத் தெரிந்தவரே உள்ளங்கையில் அமையும் ரகசிய அடையாளங்களைப் புரிந்து கொள்ளமுடியும்.
* தனுசு ரேகை: இந்த ரேகை மிகவும் அரிதானது. இந்த ரேகை குரு அல்லது மேல்செவ்வாய் மேட்டில் அமைந்தால் சிறப்பு. இதே ரேகை சனி மேட்டில் அமைந்தால் சுய புத்தியில்லாமல் பிறர் சொல்கேட்டு வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்வார்.
* அஸ்திர ரேகை- அம்பு: இது சுறுசுறுப்பைக்காட்டும் குறியீடாகும். எதிலும் ஆர்வமும், ஊக்கமும் உடையவராக் கும். தொடுத்த அம்பு தவறாமல் தன் இலக்கை அடைவது போல், எடுத்த காரியம் முடிப்பார்.
* குடை ரேகையும் சக்கர ரேகையும்: உள்ளங்கையில் குடைச் சின்னமும் சக்கரமும் சேர்ந்து அமைந்தால் சக்கரவர்த்திக்கு நிகரான வாழ்க்கை அமையும்.ஒன்று மட்டும் இருக்க, ஓரளவு செல்வாக்கு கிடைக்கும்.
* சங்கு- சக்கர ரேகை: இந்த அமைப்புள்ளவர்கள் உலகம் புகழும் அவதார புருஷர்களாக இருப்பர். இராமருக்கு கை மற்றும் கால்களில் சங்கு- சக்கரம் இருந்தததாக இராமாயணக் குறிப்பு உள்ளது.
* ராஜ ரத ரேகை: இந்த ரேகை வலது கையிலிருக்க பெரிய தொழிலதிபராக விளங்குவார். மன்னர்போல் படைபலம் கொண்டவர். அரசு தலைமைப் பொறுப்பிலிருக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த ரேகை சூரிய மேட்டில் அமைவது சிறப்பு.
* பறவைக் குறியீடு: இதை, "ய' எழுத்தின் அடையாளம் என்றும் கூறுவதுண்டு. இதய ரேகையில் இந்தக் குறியீடு காணப்பட்டால் வாழ்க்கையின் இறுதிநாள் வரை உழைத்துக்கொண்டிருப்பார். ஆனாலும் அடிக்கடி அதிர்ஷ்டம் அவர் வீட்டுக்கதவைத் தட்டும். இந்த "ய' அடையாளம் செழிப்பையும் புகழையும் கவர்ந்திழுக்கும். அதிக சுதந்திரத்தை விரும்புபவராகவும் சேமிப்பில் ஆர்வம் காட்டாதவராகவும் இருப்பார்.
* ஆமைக்குறி: ஆமைக்குறி தெய்வீக சின்னங்களில் ஒன்றாகும்.
அடக்கம், மன அமைதி, பொறுமைக்கு இலக்கணமாக அமைவது. ஆமை வடிவக்குறி இருந்தால், அது பணக் காரராகும் வாய்ப்பு இருப்பதையும், எதிலும் வெற்றியை அடைவதையும் குறிக்கும்.
* ஏணிக் குறியீடு: இந்த அடையாளத்தை உள்ளங்கையில் உடையவர்கள் பெரும்பாலும் சமூக சேவகராக இருப்பர். பிறர் முன்னேற உதவி செய்பவராகவும், தொண்டு நிறுவனம் நடத்துபவராகவும் இருக்கக்கூடும். ஆசிரியர்கள், ஆலோசகர்களுக்கு இந்த குறியீடு அமைய வாய்ப்புண்டு.