"புத்தியிறை பிளந்திட்டாலும் உவடதில் உதித்திட்டாலும்
சுற்றுபிறை மேட்டில் மத்தி சுக்கையொன்று உதித்திட்டாலும்
தத்துவிதி தடையின் காலம் தன் சுய அறிவின் கெட்டு
புத்தி தடுமாறி அன்னார் புலம்பிட காட்டும் தானே.'
பொருள்: புத்தி ரேகை பிளவு பட்டாலும், அதில் நட்சத்திரக்குறி காணப்பட்டாலும், சந்திர மேட்டில் நட்சத்திரக்குறி அமைந்தாலும் மனக் குழப்பத்தால் சித்த பிரம்மை உண்டாகும்.
பகலில், கூகையை (ஆந்தை) காக்கை வெல்லும். இரவில் காக்கையை ஆந்தை வெல்லும். சூரியனின் ஆதிக்கம் பெற்றவர்கள் பகலிலும், சந்திரனின் ஆதிக்கம் உடையவர்கள் இரவிலும் வெற்றி யடைவார்களென்பதே ஜோதிடத் தின் அடிப்படை. காலமறிதல் என்பதே வெற்றியின் ரகசியம். காலப்பிரகாசிகையாகத் திகழும் ஜோதிடத்தை அறிந்தால் எந்த நாளும் நல்ல நாளாகவே அமையும். முக்கிய உறுப்புகளாகிய கண், காது, கை- கால்கள் இரட்டையர்களாகப் பிறந்ததுபோல், ஜாதகமும் கைரேகை சாத்திரமும் ஒன்றையொன்று ஒட்டிப் பிறந்தவையே.
கைரேகையும் புதிரான அடையாளங்களும்
கடலோடிகள் துருவ நட்சத்திரத் தைக்கொண்டு திசையறிவதுபோல் கைரேகைகளில் தோன்றும் குறியீடுகள் வாழ்க்கையின் நிகழ்வு களை விளக்கிக் காட்டும். மிக அரிதாக ஸ்வஸ்திக், மீன், திரிசூலம், கோவில் போன்ற தெய்வீக சின்னங்கள் சிலரின் கைரேகைகளில் தென்படும். இதுபோன்ற அரிதான கைரேகை உடையவர்கள் சிறப்பான குணாதிசயங்களை உடையவர்கள். சாதனை புரிவதற்காகவே பிறந்த வர்கள்.
* திரிசூலக் குறியீடு: திரிசூலம் போன்ற குறியுடைய ரேகை ஒருவரது கையில் இருந்தால் மிகவும் ராசியானவர். மூன்று கூர்மையான கோடுகள் இணைந்துள்ள ரேகை இருப்பவரது வாழ்வில் செல்வம் கொட்டும். இதய ரேகையிலுள்ள திரிசூலம் இரக்க குணத்தைக் குறிக்கிறது. குரு மேட்டில் அமையும் திரிசூலக்குறி, ஆன்மிகத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் காட்டும்.
* மீன் குறியீடு: இது மகிழ்ச்சி தரும் குறியீடாகும். இது மிகவும் அரிதான குறியீடு. இந்த குறியீடு ஒருவர் கையில் அமைந்தால் எப்பொழுதும் அவர்களை மகிழ்ச்சியும் வெற்றியும் சூழ்ந்திருக்கும். வெளிநாட்டுப் பயணம், செல்வாக்கு மற்றும் குறைவில்லாத செல்வத்தையும் குறிக்கும். இந்தக் குறியீடு உள்ளவர்கள் பரந்த மனப் பான்மையும், தானம் செய்யும் குணமும் உடையவர்கள். பயண ரேகையைத் தொட்டவாறு மீன் ரேகை இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. மீன் குறியீடு திருமண ரேகை யைத் தொட்டபடி குறுக்கு நெடுக்காக நீண்டு, சுட்டுவிரலுக்கும் இதய ரேகைக் குமிடையே இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி தரும். சூரிய ரேகையைத் தொட்டுக்கொண்டி ருந்தால் புகழும், வெற்றியும் குவிந்து கொண்டே இருக்கும். மீன் ரேகை தொழில் ரேகையுடன் இணைந்தால் செய்யும் தொழிலில் அபார வெற்றி பெறலாம்.
* கொடி குறியீடு: இதுவும் அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகும். இந்த குறியீடு ஒருவரின் வானளாவிய செல்வாக்கை சுட்டிக்காட்டும். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் புகழேணியின் உச்சியை அடைவார். உலக அளவில் புகழ்பெறுவார். எல்லா திசைகளிலும் அவர் வெற்றிக்கொடி பறக்கும்.
* ஸ்வஸ்திக் குறியீடு: ஸ்வஸ்திக் குறியீடு உள்ளவர்களுக்கு வாழ்க்கை யில் தோல்வியே கிடையாது. எந்த வேலை செய்தாலும், முழுமையான ஈடுபாடும், தளராத உழைப்பும், அர்ப் பணிப்பும் உடையவர்கள். ஸ்வஸ்திக் குறி விதி கோட்டின்மேல் இருந்தால் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்..
* தாமரைக் குறியீடு: செல்வத்தின் அதிபதியான லட்சுமியுடன் தொடர்பு டையது. அளவற்ற செல்வத்தைப் பெறக்கூடியவர். மனதளவில் தூய்மையுடையவர்; சொன்ன சொல் மாறாதவர். வாழ்க்கையின் சுகங்கலை அனுபவிக்கும் தகுதி பெற்றவர். ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் வாழ்க்கையில் கோடீஸ்வரராகும் வாய்ப்பு உண்டாகும்.
* கோவில் குறியீடு: உள்ளங்கையில் எந்த இடத்தில் கோவில் குறியீடு இருந் தாலும் சமுதாயத்தில், மிகவும் மதிக்கப் படுபவராகத் திகழ்வார். பிறருக்கு வழி காட்டும் குரு ஸ்தானத்திலும் சீர்திருத்த வாதியாகவும் இருப்பார். இந்த அடை யாளம் குருமேட்டின் உச்சியில் காணப் பட்டால் மிகவும் சிறப்புவாய்ந்ததாகக் கருதப்படும்.