"பந்தியாய் விதி கீழ்ரேகை பலகோணம் பெற்று நின்றால்
அந்தியாய் வாழ்வில் அன்னார் ஆயுளின் அதிர்ஷ்டம் தன்னில்
சொந்தமாய் வாரீசின்றி சோர்ந்திடும் பெற்றோருக் கோர்
மைந்தராய்த் தெற்று தோன்றி வாழ்ந்திட காட்டும் தானே.'
பொருள்: விதி ரேகையின் அடியில்,கங்கண ரேகைக்கருகில், சதுரக்குறி தோன்றினால், சொத்து, சுகம் இருந்தும், புத்ர பாக்கியம் உள்ள இல்லாதவருக்கு, சுவீகார புத்திரராகச் செல்லும், அதிர்ஷ்டம் பெறுவார்.
உப்பு விற்கப்போனேன், மழை பொழிந்து வீணானது. பஞ்சு விற்கப் போனேன், காற்றடித்ததால் நஷ்டம் வந்தது என்று புலம்பும் மனிதர்களைத் தான் காணமுடிகிறது. இயற்கயையும், காலத்தையும் குறைசொல்வதால் எந்த நன்மையும் வரப்போவதில்லை. உண்மையில், குறைகூற வேண்டியது, காலத்தை அறிந்து செயலாற்றாதவர்களை தான். ப
"பந்தியாய் விதி கீழ்ரேகை பலகோணம் பெற்று நின்றால்
அந்தியாய் வாழ்வில் அன்னார் ஆயுளின் அதிர்ஷ்டம் தன்னில்
சொந்தமாய் வாரீசின்றி சோர்ந்திடும் பெற்றோருக் கோர்
மைந்தராய்த் தெற்று தோன்றி வாழ்ந்திட காட்டும் தானே.'
பொருள்: விதி ரேகையின் அடியில்,கங்கண ரேகைக்கருகில், சதுரக்குறி தோன்றினால், சொத்து, சுகம் இருந்தும், புத்ர பாக்கியம் உள்ள இல்லாதவருக்கு, சுவீகார புத்திரராகச் செல்லும், அதிர்ஷ்டம் பெறுவார்.
உப்பு விற்கப்போனேன், மழை பொழிந்து வீணானது. பஞ்சு விற்கப் போனேன், காற்றடித்ததால் நஷ்டம் வந்தது என்று புலம்பும் மனிதர்களைத் தான் காணமுடிகிறது. இயற்கயையும், காலத்தையும் குறைசொல்வதால் எந்த நன்மையும் வரப்போவதில்லை. உண்மையில், குறைகூற வேண்டியது, காலத்தை அறிந்து செயலாற்றாதவர்களை தான். பருவம் தவறிப்பயிர் செய்தால் விளைச்சல் வீணாகும். காலம் தவறிய கல்வியால், வாழ்க்கைப் பாழாகும். காலம், கடவுள் கொடுத்த கொடை. ஜோதிடம் எனும், காலக்கண்ணாடியின் துணைகொண்டு செயலாற்றினால், வெற்றியை நம் வசமாக்கலாம். காலத்தை அறிந்தால் ஞாலத்தையே (உலகை) ஆளமுடியும். ஜாதகமும், கைரேகை சாத்திரமும் எதிர்காலத்தைக் காட்டும் இரண்டு கண்கள். இதை அறிந்தால், வாழ்க்கை யின் சுமைகள் சுகமாக மாறும்.
கைரேகையும் புதிரான அடையாளங்களும்
ஒருவர் வாழ்க்கையில், விதியின் குறியீடுகளாக அமைவதே கை ரேகையின், புதிரான அடையாளங்கள்.
சதுரம்
சதுரக் குறியீடு, வெற்றியின் அடையாள மாகும். ஆனாலும், சதுர அடையாளத்தின் பலன் இருப்பிடத்தைப் பொருத்து மாறுபடும். உள்ளங்கையில் ஒரு சதுர அடையாளம் இருந்தால் எல்லோரிடமும் நல்ல மரியாதை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். இது செல்வத்திற்கான நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும். செல்வத்தைக் குவிப்பதிலும், பண விவகாரங்களை நிர்வகிப்பதிலும் சிறந்தவராக்கும். திருமணத்திற்குப் பிறகு செல்வம் பெருகும்.
குரு மேட்டில் அமையும், சதுரக் குறியீடு, அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். குருவின் மேட்டில் சதுர வடிவில் குறி இருந்தால் அது ஒருவரின் நல்ல ஒழுக்கத்தைக் குறிக்கிறது. குரு மேட்டில் சதுர வடிவில் குறி இருப்பவர் கள் திறமையான நிர்வாகிகள். ஏழையாகப் பிறந்தாலும், தங்கள் கடின உழைப்பால் உயர் பதவிகளை அடைவார். குருமேட்டில் சதுரம் தென்பட்டால் நல்ல இல்வாழ்க்கை அமையும்.
சனியின் மேட்டில்: ஆபத்திலிருந்து பாதுகாப்பைத் தரும். சொத்து மற்றும் நிதி பாதுகாப்பை உறுதிசெய்கிறது. ஏமாற்றத் தைத் தவிர்க்கலாம்.
சூரிய மேட்டில்: தொழிலில் நஷ்டத்தைத் தவிர்க்கலாம்.
புதன் மேட்டில்: புத்திரக் கூர்மையால், ஆபத்தைத் தவிர்க்க உதவும்.
சந்திர மேட்டில்: தண்ணீரில் வரும் கண்டம் நீர்த்துப்போகும்.
செவ்வாய் மேட்டில்: விபத்து நடந்தாலும், ஆபத்தைக் குறைக்கும்.
சுக்கிர மேட்டில்: இங்கு அமைந்துள்ள சதுர அடையாளம் தீய பழக்கங்களில் அடிமையாக்கும். கணவன் அல்லது மனைவியைப் பிரிந்து வாழும் நிலை உண்டாகும். பெண்களால் அவமரியாதை கிடைக்கும்.
இதய ரேகையில் சதுரம்: மன அழுத்தம் மற்றும் கவலைகளால் சூழப்பட்டிருப்பதைக் குறிக்கிறது. தற்கொலை எண்ணமும் ஏற்படலாம். இரக்கப்பட்டு பிறருக்குச் செய்யும் உதவியே தொல்லையாக முடியும். துரோகிகளால் தொல்லை வரும்.
விதி ரேகையில் சதுரம்: வாழ்க்கையில் எதிர்பாராத ஆதரவால் வெற்றி உண்டாகும். பணப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் போது, திடீர் தன வரவால், சூழ்நிலையை சமாளிக்கும் வாய்ப்பு உண்டகும்.
உறவினர் மற்றும் நன்பர்களின் உதவியும் கிடைக்கும்.
சூரிய ரேகையில் சதுரம்: பொதுவாக விஷயங்களை சீராகச் செய்யலாம். வாழ்க்கையில் சில சிரமங்களை நீங்கள் சந்தித்தாலும், அவற்றை வெற்றிகரமாகத் தீர்க்கமுடியும்.
ஆரோக்கிய ரேகையில்: சதுர அடையாளம் இருப்பது பாதுகாப்பின் உறுதியாகும். பெரிய ஆபத்துக்களிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது
இதய முத்திரை
நடுவிரல் மற்றும் மோதிரவிரல் நுனிகள் கட்டைவிரல் நுனியைத் தொடவேண்டும். விரல் நுனி கட்டைவிரலின் அடியைத் தொடவேண்டும். சுண்டுவிரல் நேராக இருக்கவேண்டும்.
பலன்
இதயம் நலமாகும். மனதில் உறுதி உண்டாகும்.
(தொடரும்)
செல்: 63819 58636