"நினை வழி இன்பம் ஈகை நிறை பொறை நேசம் காதல்

வினை வழி பங்கம் நீசம் வேற்றுமை பகை பாடூணம்

அனை வழிச் கேர்க்கை நீக்கம் மாரகம் அனைத்தும் அன்னார்

மனைவியின் வாழ்க்கைக் காட்டும் மன்மத மேடுதானே'.

Advertisment

பொருள்: புதன் மேட்டின் அடிவாரத்திலும், இதய ரேகை முடியும் இடத்திற்கு மேலும், தோன்றும் இடபாகமே, மன்மத மேடு எனப்படும். ஐக்கிய மேடு. இது, மனம், காதல், அன்பு, இன்பம், கற்பு, மனைவியின் வாழ்க்கை போன்றவற்றை விளக்கும். இந்த ரேகையே, ஒருவரின் மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.

vv

நதி ஓடும் பாதையையும், விதியின் போக்கையும், முன்கூட்டியே கணிப்பது கடினம். நாளைய நிகழ்வுகளை, கடவுள் தீர்மானிக்கிறார். அதை ஜோதிட மொழியால் மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும். ஆற்றின் சுழலும், வேகமும் அறிந்தால் மட்டுமே, நீந்தி கரையேற முடியும். கைரேகைகளில் எழுதப்பட்டுள்ள விதியை அறிந்து, மதி நுட்பத்தால், பாதை வகுத்துக்கொண்டால், வாழ்க்கைப் பயணம் இனிதாகும்.

ஐக்கிய ரேகை (களத்திர ரேகை)

இது, புதன் மேட்டின் சரிவில், சுண்டு விரலுக்கு கீழே அமையும். இதை, கல்யாண ரேகை, தார ரேகை, மன்மத ரேகை, என பல பெயர்களால் குறிப்பிடுவார்கள். இது, காதல், அன்பு, காமம், விவாகம், விவாகரத்து, மனைவி (அல்லது) கணவரின் மாரகத்தைக் காட்டும். காதல், அன்பு போன்றவற்றிற்கு காரகனாக இருக்கும் புதனின் மேட்டிற்கு அருகில், இதய ரேகைக்கு மேல், மன்மத மேட்டில், இந்த ரேகை அமைவதே, இந்த ரேகையின் சிறப்பு. இது, ஆழமாகவும், அழுத்தமாகவும் அமைந்தால், நல்ல வாழ்க்கை அமையும்.

காலத்தை, கி.மு.- கி.பி என்று பிரிப்பது போல், மனித வாழ்க்கையை, தி.மு (திருமணத்திற்குமுன்)- தி.பி (திருமணத்திற்கு பின்) என்று பிரிக்கலாம். திருமணத்திற்கு பின் சிறப்பாக வாழ்ந்த வரும் உண்டு. திருமணத்தால், வீழ்ந்தவரும் உண்டு. வாழ்க்கையையே, திருப்பிப் போடும் வலிமை திருமணத்திற்கு உண்டு. ஜாதகத்தில், ஏழாம் பாவத்திற்கும், கை ரேகையில், களத்திர ரேகைக்கும், வாழ்க்கையின் போக்கை தீர்மானிப்பதில் பெரும் பங்கு உண்டு. மற்ற ரேகைகளில் குறையிருந்தாலும், ஐக்கிய ரேகை, வலுவாக அமைந்தால், அமைதியான வாழ்க்கையைப் பெறலாம்.

ப் களத்திர ரேகை குறுகியும், மெலிந்தும் காணப்பட்டால், திருமண தோஷத்தைக் காட்டும். திருமணத் தடை, தாமதம், கணவன்- மனைவிக்குள் உண்டாகும் பிரிவினை, திருமண போன்றவற்றை சுட்டிக்காட்டும்.

ப் துவங்கும்போதே, இரு பிரிவாகக் காணப்படும், களத்திர ரேகை, கணவன், மனைவிக்குள் ஏற்படும் நெருக்கத்தைக் காட்டும்.

ப் களத்திர ரேகை, இதய ரேகையைத் தொடும் காலமே, கணவன் அல்லது மனைவியின் மாரக காலமாக அமையும்.

ப் முடிவில் பிளவு பட்ட களத்திர ரேகை, திருமணப் பிரிவு, கணவன், மனைவிக்குள் உண்டாகும், மன முறிவு, இளம்வயதில் விதவையாகுதல் போன்ற தீய பலன்களைக் காட்டும்.

ப் நடுவில் பிளவு பட்ட களத்திர ரேகையும், திருமண வாழ்வில் வரும் போராட்டங்களைத் தெரிவிக்கும்.

ப் களத்திர ரேகையில், கரும்புள்ளியோ, சூலக் குறியோ காணப்படில், திருமண வாழ்வில், வலியும், வேதனையும் அதிகமாகும். முடிவில், வாழ்க்கைத் துணையை இழக்க நேரிடும். தீவுக் குறி, தென்பட்டால், அது மறையும் வரை, பிரிவு நீடிக்கும். சுக்கிர மேட்டிலிருந்து ஒரு ரேகை உருவாகி, களத்திர ரேகையை தொடர்பு கொண்டாலும்,வாழ்க்கைத் துணையின் தொடர்பு இல்லாமல் போகும்.

ப் சுண்டு விரலின், அடி அங்குலாஸ்தியை நோக்கி சென்று நெருங்கும் காலத்தில், விவாகம் நடந்தேறும்.

ப் சூரிய ரேகையை (தன ரேகை), களத்திர ரேகை, குறுக்கே வெட்டினால், செய்யும் தொழிலில் பாதிப்பு உண்டாகும். ஆனாலும், திருமணத்தால், தன லாபம் உண்டு.

ப் களத்திர ரேகையிலிருந்து கிளை ரேகை தொங்கி, சனி மேட்டில் முடிந்தால், வாழ்க்கைத்துணை அகால மரணமடைவார்.

விஷ்ணு முத்திரை

கட்டைவிரல், மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நீட்டப்பட்டு, ஆள்காட்டி மற்றும் நடுவிரலை மடித்து கட்டை விரலைத் தொடுவது. விஷ்ணு முத்திரை எப்போதும் வலது கையால் பயிற்சி செய்யப்படுகிறது

Advertisment

பலன்

இந்த முத்ரா உடலின், முக்கியமான மூன்று ஆற்றல் மையங்களை செயல் படுத்துகிறது.