"படித்தறம் பிரபுத் தானம் பன நிதி இருப்புத் தானம்

கொடு நிதி புழக்கத்தானம் கும்பிடு துரை சேர் தானம்

நெடுந்தொழில் பெரியத் தானம் நேரிடக் காட்டும்

தொடி முதல் ரவி மேடேறும் தூய தன ரேகை தானே'.

Advertisment

பொருள்: கங்கண மேட்டில் தோன்றி அல்லது ஆயுள் ரேகையில் பிரிந்து தோன்றி சூரிய மேட்டை நோக்கி செல்லும் ரேகையே தன ரேகை. இதுவே செல்வம், செல்வாக்கு, ஆளுமை, அதிகாரம் போன்றவற்றை சுட்டிக்காட்டும் ரேகையாக அமையும்.

பசு கூட்டத்தில் தன் தாயை சரியாக கண்டறிந்து சேரும் கன்றினைப்போல் அவரவர் செய்த கர்மா, எல்லா பிறவிகளிலும் அவர்களை தேடி சென்றடையும். எங்கே சென்றாலும் நம்மைபின் தொடரும் நம் நிழல்போல், நம் வினைப்பயன் தொடர்ந்து வரும். முன்ஜென்ம கர்மம் புரியாதவரை வாழ்க்கையின் மர்மம் விலகாது. முன்ஜென்ம வினைப்பயனை கண்டறிந்து இந்த பிறவியின் நிகழ்வுகளைக் கணிப்பதே ஜோதிடம். தாயின் கருவிலிருக்கும்போதே, உருவாகும் கை ரேகைகள் கர்மாவை நிர்ணயம் செய்யும்.

vv

Advertisment

தன ரேகை (சூரிய ரேகை)

இடது கையில் மோதிர விரலின் கீழே இருக்கும். மலைமீது சூரியன் தெரிவதுபோல இந்த ரேகை காணப்படும். சிலர் கையில் இரண்டு ரேகைகள் இருக்கும். இந்த ரேகைதான் சூரிய ரேகை. சூரிய ரேகை என்பது அப்பல்லோ கோடு என்றும் அழைக்கப்படுகிறது. இது சூரியமேடு மற்றும் மோதிர விரலுக்கு கீழே தொடங்கி கீழ்நோக்கி நகரும். இந்த ரேகை இருப்பவர்களுக்கு புகழ் மற்றும் நற்பெயர் குறைவில்லாமல் கிடைக்கும். இந்த ரேகை மிகவும் அரிதானது.

* குறுக்கீடு இல்லாத சூரிய ரேகை இருந்தால் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். நல்ல விதி ரேகையால் கிடைக்கும் வெற்றியைவிட, பன்மடங்கு அதிக வெற்றியை சூரிய ரேகை வழங்கிவிடும்.

* சூரிய ரேகை ஒருவரின் கற்பனைத் திறனை பற்றியும் உணர்த்தக்கூடும். இது கலைகளின்மீதும் இருக்கும் ஆர்வத்தை உணர்த்தும். கலைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் பலரும் இந்த சூரிய ரேகையை பெற்றிருப்பார்கள்.

* வலிமையான சூரிய ரேகை இருப்பவர்கள் அதிக வெற்றிகளை குவிப்பார்கள்.

* இந்த ரேகை ஒழுங்கின்றி இருந்தால் அவர்களின் வெற்றி நிரந்தரமானதாக இருக்காது. அவர்கள் எவ்வளவு சீக்கிரம் மேலே செல்கிறார்களோ அவ்வளவு விரைவில் கீழே விழுந்துவிடுவார்கள். நீளமான அப்போலோ ரேகை என்பது மிகவும் அபூர்வமானது.

* சூரிய ரேகை தலைமை ரேகையில் சென்று முடிந்தால், மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்கள்.

* இதய கோட்டில் முடிந்தால் பரந்த மனம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு பெண்களால் அதிஷ்டம் உண்டு.

* சூரிய ரேகை விதி ரேகையில் முடிந்தால், இளம்வயதிலேயே பெரும் புகழைப் பெறுவார்கள். சுய முயற்சியால் வெற்றி கிடைக்கும்.

* செவ்வாய் மேட்டுடன் தொடர்புகொண்டால், நிலம், வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

* சனி ரேகையை நோக்கி சென்றால், வாழ்க்கையில் பெரும் சரிவைத் தரும்.

* ஒன்றுக்கும் மேற்பட்ட சூரிய ரேகைகள் ஒன்றோடொன்று நேராக பயணித்தால் நல்லது. ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் வெற்றியை குவிப்பார்கள். இந்த ரேகை, நேர் கோடாக இல்லாமல், வளைந்து, நெளிந்து சென்றால் எடுத்த காரியங்கள் வெற்றிபெறாது.

* சூரிய ரேகை மணிக்கட்டு ரேகை வரை நீண்டு செல்வது பங்கு சந்தையில் ஈடுபடுவர்களுக்கு பலன் தரும்.

* நடுவிரலைவிட மோதிர விரல் நீளமாக இருந்து அதில் சூரிய ரேகை இருந்தால், பந்தயத்தில் வெற்றிபெறுவார்கள்.

* சூரிய ரேகை புத்தி ரேகைக்கு மேல் ஆரம்பமாகி சென்றால், வாழ்க்கையின் நடுப் பகுதியில் அதிர்ஷ்டம் உருவாகும்.

* இதய ரேகைக்குமேல் உருவாகி சூரியமேடுவரை சென்றிருந்தால் செல்வம், புகழ், வெற்றி கைவசமாகும்.

* சந்திரமேட்டிலிருந்து சூரியரேகை சென்றிருந்தால் கதை, கவிதை எழுதும் ஆற்றல் உண்டாகும். ஆனால், நிதி நிலைமை திருப்திகரமாக இருக்காது.

* சூரிய ரேகையில், சதுர குறி காணப்பட்டால், எந்த பிரச்சினை வந்தாலும் சமாளிப்பார். தீவுக்குறி இருந்தால், தனிமைப்படுத்தபடுவார். சிலுவைக்குறி இருந்தால், எந்த முயற்சியும் பலனளிக்காது.

(தொடரும்)

செல்: 63819 58636