உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (31)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-31

"ஒரு உருவில் பரிபாசையாய் உலகில் வரு மக்களுக்கு

அரு உருவில் படலமாக அவராயுல் காலமெல்லாம்

கரு உருவில் வரைந்த வாழ்க்கை கை ரேகை மெய்யே யாகும்

புரி உருவம் புரியாதார்க்குப் பொய்யெனத் தோன்றும் தானே'

பொருள்: அன்னையின் கருவில் இருக்கும் போதே பரிபாஷையில் எழுதப்பட்ட சுருக் கெழுத்தின் வடிவமே கை ரேகை. அதை ஒருவரின் ஜனன காலம்முதல் மரணம் வரை எழுதப்பட்ட கால அட்டவணை யாகவே கருதவேண்டும். இதை புரிந்து கொள்ளாதவருக்கு கை ரேகைக்கலை பொய்யாகவே தோன்றும்.

நீச்சல் தெரிந்தவருக்கு கடலும் காலளவு தான். நீச்சல் தெரியாதவருக்கு கடல் மரண பயத்தை உண்டாக்குகிறது. பாதை தெரிந்துவிட்டால் பயணம் சுகமாகும். வாழ்க்கையின் நிகழ்வுகளை ஜோதிடத் தின் வாயிலாக முன்கூட்டியே அறிந்து கொண்டால் ஆபத்

"ஒரு உருவில் பரிபாசையாய் உலகில் வரு மக்களுக்கு

அரு உருவில் படலமாக அவராயுல் காலமெல்லாம்

கரு உருவில் வரைந்த வாழ்க்கை கை ரேகை மெய்யே யாகும்

புரி உருவம் புரியாதார்க்குப் பொய்யெனத் தோன்றும் தானே'

பொருள்: அன்னையின் கருவில் இருக்கும் போதே பரிபாஷையில் எழுதப்பட்ட சுருக் கெழுத்தின் வடிவமே கை ரேகை. அதை ஒருவரின் ஜனன காலம்முதல் மரணம் வரை எழுதப்பட்ட கால அட்டவணை யாகவே கருதவேண்டும். இதை புரிந்து கொள்ளாதவருக்கு கை ரேகைக்கலை பொய்யாகவே தோன்றும்.

நீச்சல் தெரிந்தவருக்கு கடலும் காலளவு தான். நீச்சல் தெரியாதவருக்கு கடல் மரண பயத்தை உண்டாக்குகிறது. பாதை தெரிந்துவிட்டால் பயணம் சுகமாகும். வாழ்க்கையின் நிகழ்வுகளை ஜோதிடத் தின் வாயிலாக முன்கூட்டியே அறிந்து கொண்டால் ஆபத்துகளைத் தவிர்க்கலாம்.

ஜனன ஜாதகத்தில் திதி நித்யா தேவிகள் ஆட்சி செய்வதுபோல் ஒவ்வொருவர் உள்ளங்கையிலும் ஆதிபராசக்தியின் அம்சமான பஞ்சாங்குலி எனும் தேவதை வாசம் செய்கிறாள். அவளே விதி நாயகி. இந்த தேவதையின் கருணையால் பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் ஜோதிட ஆரூட ரேகை சாஸ்திர வல்லுனராக விளங்கினார்.

vv

ஆரோக்கிய ரேகை

இந்த ரேகை ஆயுள் ரேகைக்கு அருகில் தொடங்கி புதன் மேட்டை நோக்கியோ, சூரிய மேட்டை நோக்கியோ அமையும். சிலருக்கு ஆயுள் ரேகை, இதய ரேகை, விதி ரேகை, மணிக்கட்டு ரேகைகள் ஆகியவற்றில் இருந்தும் ஆரம்பித்து புதன் மேட்டில் முடியலாம். இது உடல் ஆரோக்கியம் குறித்த துல்லியமான விஷயங்களையும் மிகத்தெளிவாக உணர்த்தும். இந்த ரேகை, எல்லார் கைகளிலும் காணமுடியாத அரிதான ரேகை. ஆரோக்கிய ரேகை உள்ளங்கையில் எந்த மேட்டில் இருந்தும் ஆரம்பித்து புதன் மேட்டில்தான் முடியும். புதன் மேட்டில் முடிவுற்றால்தான் அதை ஆரோக்கிய ரேகை எனக் கூறமுடியும் ப் ஆரோக்கிய ரேகையைப் புதன் ரேகை என்று கூறுவது உண்டு. உள்ளங்கையிலுள்ள மற்ற ரேகைகளில் குறை இருந்தாலும் இந்தப் ரேகை நன்றாக அமைந்திருந்தால், திறமை யால், வாழ்க்கையில் முன்னேற்றம் காணலாம்.

* ஆரோக்கிய ரேகையில் தீவுகள் காணப்பட்டால் மூக்கு, தொண்டை பகுதிகளில் குறைப்பாடுகள் தோன்றக்கூடும். சிறிய துண்டுகளாக உடைந்து வரிசையாக காணப்பட்டால் வயிறு சம்பந்தமான கோளாறைக் குறைக்கும். சதுர அடையாளம் இருந்தால் பெரிய ஆபத்துக்களில் இருந்து பாதுகாக்கப்படுவார். சிலுவைக் குறியிருந்தால், அடிக்கடி விபத்தில் சிக்குவார். வளைந்து நெளிந்து செல்லும் ஆரோக்கிய ரேகை, ஜீரண உறுப்புகளில் ஏற்படும் தொல்லையை சுட்டிக்காட்டும். நட்சத்திர குறி காணப்பட்டால், புத்திர பாக்கியத்தில் தடையுண்டாகும். பெண் களுக்கு கருப்பையில் கோளாறு ஏற்படும்.

* ஆரோக்கிய ரேகை, ஆயுள் ரேகையைத் தொடாமல், சற்றே விலகி யிருந்தால், தீர்க்க ஆயுள் என்று கணிக்கலாம். ஆரோக்கிய ரேகையில் இருந்து ஆயுள் ரேகையை, ஒரு கோடு இணைத்தால் எதிர்பாராத விபத்து ஏற்படும்.

* ஆயுள் ரேகை, இதய ரேகை ஆகிய வற்றின் அமைப்பையும் அவற்றில் கணப்படும் குறிகளையும் ஆராய்ந்து பார்த்தபிறகே ஆரோக்கிய ரேகைக்கான பலன்களைத் துல்லியமாக அறியமுடியும். இதய ரேகை, ஆரோக்கிய ரேகை, ஆயுள் ரேகை மூன்றும் சேர்ந்து முக்கோணத்தை உருவாகினால் அது எதிர்பாராத அதிர்ஷ்டம் தரும்.

* ஆரோக்கிய ரேகை, சங்கிலிபோல் அமைந்திருந்தாலும், நடுவில் அறுபட்டி ருந்தாலும், இரட்டைக் கோடுகளாக சென்றாலும் அடிக்கடி நோய்வாய்ப்படும் தன்மையையும் ஆரோக்கியக் குறைவையும் எடுத்துக்காட்டும்

* ஆரோக்கிய ரேகை இல்லாமல் இருப்பவரின் ஆயுள் ரேகையும், இதய ரேகையும், நன்றாக அமைந்திருந்தால், இயற்கையிலேயே நோய் எதிர்ப்புச் சக்தியும் உடல் பலமும் மனோபலமும் உடையவராக இருப்பார்.

* ஆரோக்கிய ரேகை மிகவும் நீளமாகவும் அமைந்தால் அவருக்கு தீராத நோயால் தொல்லை இருக்கும். ரேகையின் நடுவில் கரும் புள்ளி தென்பட்டால் நீண்டநாள் நோயால் அவதிப்படுவார்.

* ஆரோக்கிய ரேகை புத்தி ரேகையை தொட்டிருந்தால், அதிக நோய் எதிர்ப்பு சக்திகொண்டவராக இருப்பார்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala130924
இதையும் படியுங்கள்
Subscribe