"பரிச்செவி ஓதம் சோனை அவய பங்கம் கோரை

விரல் முடம் வடுகூன் முகை கோக்கரை வளைவுக் குற்றம்

அரையின் மேல் காட்டும் அன்னார் ஆயுள் ரேகைக்கு மேலும்

இருதய ரேகைக்கு கீழுமிருப்பது புத்தி ரேகை.'

Advertisment

பொருள்: ஆயுள் ரேகைக்கு மேலும், இதய ரேகைக்கு கீழும், கையின் மத்தியில் தோன்றும் பெரிய ரேகையே, புக்தி ரேகை. பேச்சுத்திறன், கேட்கும் திறன், சிந்திக்கும் திறன் புத்திக்கூர்மை போன்றவற்றைச் சுட்டிக்காட்டும் ரேகையாக அமைவது.

ஒரு மரத்தின் கிளைகள், இலை, பூ, காய், கனி களைப் பார்த்து வியப்படையும் நாம் இவற்றுக்கு ஆதாரமான அந்த மரத்தின் வேர்களைக் காண்பது மில்லை; அதைப் பற்றி யோசிப்பதுமில்லை. வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளுக்கும் கர்மா எனும் வேர்தான் காரணம் என்பதைப் புரிந்து கொண்டால், ஜோதிடக் கலையின் சூட்சமத்தை அறியலாம். மரத்தின் வேர் போல், ஒன்றோடு ஒன்று பிணைந்தும், பிரிந்தும் ஓடும், உள்ளங்கை ரேகைகளை இனம் கண்டுக்கொண்டால் விதியையும், வினைப் பயனையும் அறியலாம்.

pp

Advertisment

புத்தி ரேகை

குரு மேட்டின் அடிப் பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி, உள்ளங் கையில் குறுக்காக செவ்வாய் மேடு (அ) சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை. இந்த ரேகை தெளிவாக இருந்து தீவு, புள்ளி போன்ற குறைபாடு கள் இல்லாது அமைவதே சிறப்பு. இந்த அமைப்பு உள்ளவர்கள், புத்திசாலியாகவும் அதிக ஞாபகசக்தி உடையவர்களாகவும் இருப்பார்கள். புத்தி ரேகை ஒருவரின் மனோநிலையை சுட்டிக்காட்டும். இந்த புத்தி ரேகையின் அமைப்பில், பலவித மாறுபாடுகளைக் காணலாம்.

* ஆயுள் ரேகையின் ஆரம்பப் பகுதியிலிருந்து தொடங்கி, ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டோ அல்லது வெட்டிக் கொண்டோ உள்ளங்கை யின் மறுபக்கம் வரை நீண்டு சென்றால், உணர்ச்சி வசப்படாமல் அறிவின் திறமையால், ஆராய்ந்து செயல்படுபவர்களாக இருப்பார்கள்.

* ஆயுள் ரேகையை, தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கையின் மையப் பகுதி யோடு குட்டையான ரேகையாக இது முடிந்து விட்டால், அனுபவ அறிவு உடையவர்கள்.

* ஆயுள் ரேகையை தொட்டுக்கொண்டு ஆரம்பமாகி, உள்ளங்கை வழியே சென்று புத்தி ரேகை கிளைகளாகப் பிரிந்துவிட்டால், பல திறமைகளைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

* புத்தி ரேகை, இதய ரேகை ஆரம்ப மாகும் இடத்தில் அந்த ரேகையுடன் பின்னிக் கொண்டு தொடங்கி உள்ளங்கை வரையிலும் நீண்டிருந்தால், அறிவைவிட உணர்ச்சி களுக்கு முக்கியத்துவம் தருபவர்களாக இருப்பார்கள்.

* புத்தி ரேகை சனி மேட்டை நோக்கி வளைந்திருந்தாலோ அல்லது ஒரு சிறிய ரேகை சனி மேட்டை நோக்கிச் சென்றால் அறிவுடன், ஆணவும், சர்வாதிகார எண்ணமும் நிரம்பியிருக்கும்.

* புத்தி ரேகை சூரிய மேட்டை நோக்கி வளைந்திருந்தாலும் அல்லது புத்தி ரேகையிலிருந்து சிறிய ரேகை சூரிய மேட்டை நோக்கிச்சென்றாலும் செல்வாக்கு மிகுந்தவராக விளங்குவார்.

* புத்தி ரேகையில் இருந்து ஒரு சிறிய ரேகை புதன் மேட்டை நோக்கிச்சென்றால் சுயத்தொழிலில் சாதனைப் புரிவார்.

* புத்தி ரேகை சந்திரமேட்டை நோக்கி வளைந்திருந்தால் நடிப்பு அழகுக்கலை மற்றும் ஓவியக்கலைகளில் நாட்டம் அதிகமாகும்.

* இரண்டு புத்தி ரேகைகள் ஒன்றுக் கொன்று இணையாகச் சென்றால், அறிவாற்றலால் உலகப்புகழ் பெறுவார்.

* புத்தி ரேகை, துண்டு துண்டாக முறிந்து இருந்தாலும், சங்கிலிபோல் பின்னிக் கொண்டு இருந்தாலும், எப்போதும் மனக் குழப்பம் உடையவராகவே இருப்பார்.

* புத்தி ரேகையின் முடிவில் பல கிளைகளாகப் பிரிந்து வலை போன்று காணப்பட்டால், பொய் சொல்லுதல், பிறரை ஏமாற்றுதல் போன்றவற்றைத் தயக்க மில்லாமல் செய்வார்.

புத்தி ரேகையிலுள்ள குறியீடுகளுக்கான பலன்கள்

* சிவப்பு அல்லது வெண்புள்ளி- வெற்றியும் புகழும் கிடைக்கும்.

* கருப்புப் புள்ளிகள்- குற்றங்களில் ஈடுபாடு உண்டாகும்.

* பெருக்கல் குறி- தந்திரமான எண்ணம்.

* நட்சத்திரக் குறி- குழப்பம், எதிலும் தோல்வி.

* வட்டம்- வம்பு, வழக்கில் மாட்டிக் கொல்வது.

* முக்கோணம்- கவனக் குறைவால் தோல்வி.

* திரிசூலம்- வாழ்வில் செல்வ மழை பொழியும்

(தொடரும்)

செல்: 63819 58636