உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (28)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-28

"இடம் தொழில் இருப்பு மாற்றம் இடு தீக்கோள் களவு பேதம்

மடி சிறை வழக்கு தண்டம் மனை மக்கள் கண்டம் ஊனம்

தொடு கடன் அலைதல் போக்கு தொடி முதல் சனி மேடேகும்

நெடுவரை காட்டும் அன்னார் நல்விதி ரேகை தானே.'

பொருள்: கங்கண மேட்டில் துவங்கி, சனி மேடு நோக்கிச் செல்லும் நெடிய ரேகையே, விதி ரேகையாகும். தொழில் மாற்றம், இருப்பிட மாற்றம், கடன், தொல்லை, அபராதம், சிறை தண்டனை, மனைவி, மக்களின் கண்டம், ஊனம் போன்றவற்றை சுட்டிக்காட்டும் ரேகையாக அமையும்.

நம் உடலுக்கு ஒரு நாளைக்கு 21,600 மூச்சுக் கலைகளும், 72,000 நாடிகளின் இயக்கமும் அவசியமாகிறது. ஜாதகத்தில், லக்னம், ஒவ்வொரு நாளும், 21,600 பாகை கலைகளையும், 72,000 நாடி புள்ளிகளை யும் கடந்து செல்லுகிறது. ஒவ்வொருவரின் ஜாதகமும், தனித்தன்மை உடை

"இடம் தொழில் இருப்பு மாற்றம் இடு தீக்கோள் களவு பேதம்

மடி சிறை வழக்கு தண்டம் மனை மக்கள் கண்டம் ஊனம்

தொடு கடன் அலைதல் போக்கு தொடி முதல் சனி மேடேகும்

நெடுவரை காட்டும் அன்னார் நல்விதி ரேகை தானே.'

பொருள்: கங்கண மேட்டில் துவங்கி, சனி மேடு நோக்கிச் செல்லும் நெடிய ரேகையே, விதி ரேகையாகும். தொழில் மாற்றம், இருப்பிட மாற்றம், கடன், தொல்லை, அபராதம், சிறை தண்டனை, மனைவி, மக்களின் கண்டம், ஊனம் போன்றவற்றை சுட்டிக்காட்டும் ரேகையாக அமையும்.

நம் உடலுக்கு ஒரு நாளைக்கு 21,600 மூச்சுக் கலைகளும், 72,000 நாடிகளின் இயக்கமும் அவசியமாகிறது. ஜாதகத்தில், லக்னம், ஒவ்வொரு நாளும், 21,600 பாகை கலைகளையும், 72,000 நாடி புள்ளிகளை யும் கடந்து செல்லுகிறது. ஒவ்வொருவரின் ஜாதகமும், தனித்தன்மை உடையது. அதேபோல், கை ரேகைககளில் காணப்படும் குறியீடுகளும், புள்ளிகளும், தனித்தன்மை யுடையவை. அதை புரிந்து கொண்டால், வாழ்க்கை சக்கரத்தின் சுழற்சியை அறிந்து பயன்பெறலாம்.

c

விதி ரேகை

உள்ளங் கையின் அடியில், மணிக்கட்டின் அருகிலிருந்து நடுவிரலை நோக்கி உள்ளங்கையின் மையத்தை நோக்கி உள்ளது. இது கல்வி மற்றும் தொழில் சார்ந்த வெற்றிகள் மற்றும் தோல்விகளைச் சுட்டிக் காட்டும். சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது.

* விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக் குறி, தீவு போன்றவை இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடுவரை செல்வது நல்லது. அது போன்ற அமைப்பு உள்ளவர்கள் நிறைந்த செல்வமும், செல்வாக்கும் பெற்று வாழ்வார்கள்.

* விதி ரேகையில், சிலுவைக் குறியீடு இருந்தால், திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும் ப் விதி ரேகையும், ஆயுள், புக்தி, இதய ரேகைகளும் நன்றாக அமைந்திருந்தால், இவர் களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும், புத்திசாலித் தனமும், நல்ல தொழில் அமைப்பும் ஏற்படும்..

* விதி ரேகை கட்டை விரலின் அருகில் ஆயுள் ரேகையின் எந்த புள்ளியில் ஆரம்பித் தாலும், காம உணர்ச்சி அதிகம் பெற்றவராக இருப்பர். இவர்களுக்கு, புக்தி ரேகையும் பலமற்று காணப்பட்டால், காமத்தால், செல்வமும், ஆரோக்கியமும் கெடும்.

* விதி ரேகை ஆயுள் ரேகையுடன் சேர்ந்திருந்தால், இளம் வயதிலேயே குடும்பப் பொறுப்பை ஏற்கும் நிலை வரும்.

* விதி ரேகை ஆயுள் ரேகையிலிருந்து எழுந்து மேல் நோக்கிச் சென்றால், சுய முயற்சியாலேயே வெற்றியடைவார்கள்.

* விதி ரேகை இதய ரேகையால் தடுக்கப்பட்டு நின்று விட்டால், முன்னேற்றம் குடும்ப உறவுகளால் தடைப்படும்.

* இதய ரேகையால் தடுக்கப்பட்ட விதி ரேகை, இதய ரேகையுடன் சேர்ந்து இரண்டும் ஆள்காட்டி விரலின் அடியில் குரு மேட்டிற்குச் சென்றால், எதிலும் சுலபமாக வெற்றி கிடைக்கும்.

* விதி ரேகை மோதிர விரல் பக்கம் சாய்ந் திருந்தாலும், விதி ரேகை யிலிருந்து ஒரு கிளை ரேகை மோதிர விரலுக்கு அடிப்பாகத் துக்குச் சென்றாலும், சட்டத் துறையில் வெற்றியுண்டு.

* விதி ரேகை மோதிர விரலின் அடி வரை சென்றிருப்பதுடன், அங்கிருந்து சில கிளைகள் மற்ற கிரக மேடுகளுக்குச் சென்றால், அந்தந்த மேட்டுக் கிரகத்திற்குரிய தொழில் களே, ஜீவனமாக அமையும்..

* விதி ரேகையிலிருந்து ஒரு கிளை சுண்டு விரலின் அடியில் புதன் மேட்டை நோக்கிச் சென்றால் தகவல் தொடர்பு துறையில், முன் னேற்றம் அடைந்தவர்களாகத் திகழ்வார்கள்.

* விதி ரேகையிலிருந்து ஒரு கிளை மோதிர விரலின் அடியில் சூரிய மேட்டினை நோக்கி சென்றால், பொதுஜன ஆதரவு கிடைக்கும்..

* விதி ரேகை ஆள்காட்டி விரல் பக்கம் சாய்ந்திருந்தாலும், விதி ரேகையிலிருந்து ஒரு கிளை ஆள்காட்டி விரல் பக்கம் சென்றாலும், அதிகாரமான பதவியில் இருப்பார்கள்.

* விதி ரேகை, சந்திர மேட்டிலிருந்தோ, சுக்கிர மேடிலிருந்தோ, அபூர்வமாக உற்பத்தி யாகி அந்த ரேகை சனி மேட்டை அடைந்தால், மனைவியால் வாழ்க்கை முன்னேற்றமடைவார்.

* விதி ரேகையில் சங்கிலித் தொடர் இருந்தால், அது வாழ்க்கையில் மகிழ்ச்சியின்மை காட்டும்.

* விதி ரேகையின் முடிவில், இரண்டு கிளைகள் பிரிந்து, அதில் ஒரு ரேகை குரு மேட்டுக்கும், ஒரு கிளை சனி மேட்டுக்கும் சென்றால் செய்யும் தொழிலில், உயர்ந்த இடத்திலிருப்பார்.

bala230824
இதையும் படியுங்கள்
Subscribe