உடலே உன் வீடு! - புதிய வாஸ்து சாஸ்திரம் (27)

/idhalgal/balajothidam/your-body-your-home-new-vastu-shastra-27

"மிக்கது ஆயுள் தீர்க்கம் முடிவிரு வினையின் தீர்க்கம்

தக்கது நோயின் தீர்க்கம் தலைவிதி முடிவின் தீர்க்கம்

ஒத்தது கோளின் தீர்க்கம் ஊழ்விதி தீர்க்கம் காட்டும்

சுக்கிர மேடு தந்த சூழிலை ஆயுள் ரேகை.'

பொருள்: குரு மேட்டின் அடியில் தோன்றி, சுக்கிர மேட்டை பிரித்துக் கொண்டு, கங்கண மேட்டை அடையும் ரேகையே, ஆயுள் ரேகை.

ஆயுள், மாரகம், இன்ப- துன்பம், கிரக தசை, பெற்றோர் மாரகம் போன்ற வற்றைச் சுட்டிக் காட்டும்.

பூமியின்மீது அமைந் துள்ள இடங்களைத் துல்லியமாக அறிய, அட்ச ரேகைகளும் தீர்க்க ரேகைகளும் பயன்படுகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டே, ஜாதகத்தில் லக்னம் முதலான பன்னிரண்டு பாவங்களும் வரையறுக்கப்படுகின்றன. இந்த நில பரப்பு ஏழு கண்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. நம் உள்ளங் கைகளில் அமைந்துள்ள, ஏழு மேடுகளும

"மிக்கது ஆயுள் தீர்க்கம் முடிவிரு வினையின் தீர்க்கம்

தக்கது நோயின் தீர்க்கம் தலைவிதி முடிவின் தீர்க்கம்

ஒத்தது கோளின் தீர்க்கம் ஊழ்விதி தீர்க்கம் காட்டும்

சுக்கிர மேடு தந்த சூழிலை ஆயுள் ரேகை.'

பொருள்: குரு மேட்டின் அடியில் தோன்றி, சுக்கிர மேட்டை பிரித்துக் கொண்டு, கங்கண மேட்டை அடையும் ரேகையே, ஆயுள் ரேகை.

ஆயுள், மாரகம், இன்ப- துன்பம், கிரக தசை, பெற்றோர் மாரகம் போன்ற வற்றைச் சுட்டிக் காட்டும்.

பூமியின்மீது அமைந் துள்ள இடங்களைத் துல்லியமாக அறிய, அட்ச ரேகைகளும் தீர்க்க ரேகைகளும் பயன்படுகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டே, ஜாதகத்தில் லக்னம் முதலான பன்னிரண்டு பாவங்களும் வரையறுக்கப்படுகின்றன. இந்த நில பரப்பு ஏழு கண்டங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. நம் உள்ளங் கைகளில் அமைந்துள்ள, ஏழு மேடுகளும், குறுக்கும், நெடுக்குமாக செல்லும் ரேகைகளுமே, இந்த பூமியில் நம் வாழ்க்கையைத் தீர்மணிக்கின்றன. நம் கைகளுக்குள், நம் உலகமே அடங்கும்.

vasthu

சப்த ரேகைகள்

1. ஆயுள் ரேகை, 2. விதி ரேகை, 3. புத்தி ரேகை, 4. இதய ரேகை, 5. ஆரோக்கிய ரேகை, 6. தன ரேகை (சூரிய ரேகை), 7. ஐக்கிய ரேகை (களத்திர ரேகை).

ஆயுள் ரேகை

கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக் கும் நடுவிலுள்ள பகுதியில் தொடங்கி மணிக் கட்டு ரேகை வரையிலும் செல்வது ஆயுள் ரேகையாகும். குறிப்பாக, குரு மேட்டின் அடியில் உற்பத்தியாகி, சுக்கிர மேட்டை வளைத்து, கீழ்நோக்கி கையில் அடிப்பாகம் நோக்கிச்செல்லும் ரேகையே, ஆயுள் ரேகை. ஆயுள் ரேகை ஆழமாக, தெளிவாக, துண்டு படாமல் செவ்வாய் மேடு அல்லது குரு மேடு முதல் மணிக்கட்டு வரை அமைந்திருந் தால், அது மிகச்சிறந்த ஆயுள் ரேகை. உள்ளங் கையிலுள்ள ரேகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆயுள் ரேகை ஒருவரின் ஆயுள், ஆரோக்கியம், உடல் அமைப்பு, வலிமை, வாழ்வில் ஏற்றத்தாழ்வு, பேரழிவுகள், இடமாற்றம், காயங் கள், விபத்து போன்றவற்றை அறிந்துக்கொள்ள உதவும்.

* ஆயுள் ரேகை, பெரு விரலை விட்டு விலகி அமைய வேண்டும். பெருவிரலின் மிக அருகில் ஆயுள் ரேகை வளைந்து செல்லக்கூடாது. அப்படிப்பட்ட வருக்கு ஆயுள் தீர்க்கம் இல்லை. சுக்கிரமேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப் பட்டால், நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாகவும் இருக்கும்

* ஆயுள் ரேகை மிக மெல்லியதாக அமைந்து, அதன் முடிவில் சிலுவைக் குறி தென்பட்டால், அது அகால மரணத்தை தெரிவிக்கும்.

* ஆயுள், புத்தி, இதய ரேகை ஆகிய மூன்று ரேகைகளும் சேர்ந்து, குரு மேட்டில் நின்றால், கொலையால், மரணம் சம்பவிக்கும். அந்த மூன்று ரேகைகளும் கூடுமிடத்தில் நட்சத்திர குறியுமிருந்தால், தூக்கிட்டுக்கொள்வதால் மரணம் உண்டாகும்.

*ஆயுள் ரேகையின் தொடக்கப் புள்ளியில், சிலுவைக்குறி அமைந்தால், விபத்தில் உடல் உறுப்பை இழப்பார்.

* ஆயுள் ரேகை எவ்வித குறுக்கீடும், வெட்டுக்களும் இல்லாமல், கங்கண ரேகையை தொட்டால் அந்த நபர், பூரண ஆயுளாகிய, நூறு வயதுவரை வாழ்வார். மணிக்கட்டுவரை நீளாமல் பாதியிலேயே முடிவடைந்து விட்டால் அது அறுபது வயது வரையுள்ள, மத்திம ஆயுள்.

* ஆயுள் ரேகைக்கு குறுக்கே, வேறு ரேகைகள் ஊடுருவி சென்றால், உடல்நல குறைபாடு ஏற்படுவதைக் குறிக்கும்.

* ஆயுள் ரேகை இரண்டு ரேகைகளாக, இணைக் கோடுகளாக இருந்தால், திடீர் அதிர்ஷ்டத்தால் வாழ்க்கைத்தரம் உயரும்.

* ஆயுள் ரேகை, சங்கிலித் தொடர்போல துவங்கி, பிறகு முடியும் தருவாயில் சீரான ஒரே ரேகையாக முடிந் தால், வாழ்வின் முன் பகுதியில் உடல் நல கோளாறுகள், குடும்ப சண்டை களை கடந்து, வாழ்வின் இறுதிப் பகுதியில் அமைதியுண்டாகும்.

* ஆயுள் ரேகை குரு மேட்டில் உயர்ந்து காணப்பட்டால், உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர் களாக இருப்பார்.

* ஆயுள்ரேகை கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து ஆரம்பித்தால், முன்கோபத் தால், சண்டை, சச்சரவுகளில் ஈடுபடக்கூடிய வர்களாக இருப்பார்.

* ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால், உழைப்பு, உற்சாகம், அதிர்ஷ்டம் உடையவர் களாக இருப்பார்.

* கங்கண ரேகையுடன், ஆயுள் ரேகை கூடுமிடத்தில், சூலம் போன்ற குறி இருந்தால், செவமும், செல்வாக்கும் பெருகும்.

* ஆயுள் ரேகையின், கிளை ரேகைகள், மேல் நோக்கி செல்லுதல் சிறப்பு தரும்.

(தொடரும்)

செல்: 63819 58636

bala160824
இதையும் படியுங்கள்
Subscribe