உழைப்பால் உயர்ந்தவர்களும் இருக்கிறார்கள். திடீர் அதிர்ஷ்டத்தால் உயர்ந்து நல்லநிலைக்கு வந்தவர் களும் இருக்கிறார்கள். எவ்வளவு தான் உழைத்தாலும் அதற்குரிய பலன் கிடைப்பதில்லையே என ஆதங் கப்படுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். திறமையுள்ளவராக வும், கடும் உழைப்பாளியாகவும் இருந் தாலும்கூட அதிர்ஷ்டத்தின்மீது சிறிதளவாவது நம்பிக்கை கொண்ட வர்களாகத்தான் இருப்பார்கள். அதிர்ஷ்ட யோகம் என்றால் என்ன? அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்போது- எப்படி வரும்? அதிர்ஷ்டம் பெறக் கூடிய ஜாதகர்களின் கிரகநிலை எப்படியிருக்கும் போன்றவற்றைப் பார்க்கலாம்.
ஜோதிடரீதியாக ஒருவருக்கு அதிர்ஷ்டத்தைத் தருவதில், அதிர்ஷ்டத்தின் அதிபதியாக குரு முன்னிலை வகிக்கிறார்.
ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந் தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாக, மகிழ்ச்சிகர மானதாக இருக்கும். இவர் தனம், புத்திரம், பொருளாதாரநிலை, கொடுக்கல்- வாங்கல், பொதுக்காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வபுண்ணியம் போன்றவற்றிற்குக் காரகன். ஒருவர் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருந்தால் பொருளாதார நிலை, சொத்து சுகம் மிகச்சிறப் பாக இருக்கும். இவை தவிர்த்து பணம் சார்ந்த வங்கி, நிதி நிறுவனங்கள், சிட் பண்டுகள், தங்க நகைக்கடை, நகை செய்யும் வேலை, மஞ்சள் வியாபாரம் போன்ற தொழிலில், உத்தியோகத்தில் இருப்பார்கள்.
ஒருவருக்கு சுய ஜாதகரீதியாக குருவின் அமைப்பு சரியில்லை என்றாலும், கோட்சார குருவின் சுபப் பலன் கிடைத்துவிடும். அதனால் தான் குருவிற்கு தனகாரகன் என்ற பெயர் உள்ளது.
காலபுருஷ தத்துவப்படி குரு 9, 12-க்குடையவர். தனுசு ராசியில் மூலத்திரிகோணம், ஆட்சி. மீனத்தில் ஆட்சி. தனுசு ஒரு நெருப்பு ராசி, மீனம் நீர் ராசி. இரண்டுமே உபய ராசிகள்.
குரு நட்சத்திரத்திலும், குருவின் பார்வையிலும் அதிக கிரகம் இருந்தால் அது யோக ஜாதகம். சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தீய பலன்களைக் குறைத்து, நல்ல பலன்களைச் செய்யும். பாக்கிய ஸ்தானம் மற்றும் அயன- சயன- போக ஸ்தானத்திற்கு பொறுப்பு வகிக்கும் குருபகவான் நல்ல நிலையில் இருக்கும்போது தெளிந்த ஞானம், நல்ல கல்வி, பெற்றோர், குல தெய்வ அருள், புண்ணிய மற்றும் தீர்த்த யாத்திரை, அரசியல் மற்றும் நிர்வாகத்தில் தலைமைப் பதவியில் அமரவைத்து பல மக்களை வழி நடத்தும் பொறுப்பு தருவார். சமூகத்தில் பெரிய மனித தோரணை ஏற்படுத் தக்கூடியவர். திருமணம், இல்லற இன்பம், வெளிநாட்டு வாழ்க்கை, மோட்சம், முக்தி நிலை பெறுதல் போன்றவற்றை 12-ஆமிடத் தின்மூலம் தருவார். குரு பார்க்க கோடி குற்ற நிவர்த்தி. குரு எந்த ஒரு ஜாதகத்தில் கெட்டுப் போகக்கூடாது.
நியாயமான வழியில் கிடைக்கும் உயர்வு, நேர்மையான வழியில் கிடைக்கும் உயர்வு, நல்லவர்களின் உதவியால் கிடைக்கும் உயர்வு என்பதெல்லாம் குருபலம் இருப்பவர் களுக்கே கிடைக்கும். குரு ஆதிக்கம் உள்ளவர் களுக்குக்கூட அவர் தகுதியானவராக இருந் தால்தான் அதிர்ஷ்டம் தேடிவரும். குருபலம் உள்ளவர்கள் அதிர்ஷ்டத்தைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. அதிர்ஷ்டம் இவர்களைத் தேடிவரும். தகுதி, திறமை, உழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அதிர்ஷ்டத்தைத் தருபவர் குரு.
குரு இருக்குமிடத்தை விடப் பார்க்கு மிடம் பலம்பெறும் என்பது உண்மையே. தனித்த குரு செயல்திறன் வெளிப்பாடு குறைவு. குருவோடு சேர்ந்த கிரகத்தின்மூலம் உண்டாகும் அதிர்ஷ்டம் பல மடங்கு உயர்வானது. ஆக, குரு கடாட்சம் பெற்றவர் அதிர்ஷ்டசாலி. குரு பலம் பெற்றவர்களுக்கு என்ன தேவையோ அவற்றைச் சரியாக யோகர்கள் வாயிலாகக் கொடுத்துவிடுவார். எல்லையற்ற தான தர்மம் செய்யும் மனிதனுக்கு என்ன தேவையோ, அவற்றை அளவுக்கு மேல் வாரி வழங்குவார். அதாவது அபரிமிதமான பணம், பொருள் சேர்க்கை, தொழிலில் லாப உயர்வு, மன அமைதி கலந்த சந்தோஷம் என்று அனைத்தும் கிடைக்கும்.
குரு நல்லவரா? கெட்டவரா?
நாயகன் பட கமலஹாசன் நல்லவரா? கெட்டவரா என்ற தீர்ப்பு கூற முடியாததுபோல், இவ்வளவு சுபப் பலன்களை குரு கொட்டிக் கொடுத்தாலும் குரு நல்லவரா, கெட்டவரா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. குரு பார்வை பட்ட இடம் பெருகும் என்பது யாரும் மறுக்கமுடியாத உண்மை. 6-ஆமிடத்தை, 6-ஆம் அதிபதியை குரு பார்த்தால் கடன், நோய் பெருகும். 8-ஆமிடத்தை குரு பார்த்தால் வம்பு, வழக்கு, அவமானம், தீராத- தீர்க்கமுடியாத பிரச்சினை உருவாகும். 12-ஆமிடத்தை, 12-ஆம் அதிபதியை குரு பார்த்தால் கட்டுக்கடங்காத விரயம். மீளமுடியாத இழப்பு உண்டாகும்.
குருவின் பார்வைபட்ட பாவகத்தின் பலன்கள் அதிகரிக்கும். எனது கணிப்பில் குரு 60% சுபர், குரு நல்ல கிரகம் ஆஹா ஓஹோ என்று பலரும் கூறும்போது நான் மட்டும் இவருக்கு மதிப்பினைக் கொஞ்சம் குறைத்துக் கொடுத்துள்ளேன். அதற்குக் காரணம் குருவுடன் சேர்ந்த சில கிரகங்கள் ஜாதகரை தவறாக வழிநடத்துகிறது. உதாரணமாக ஆண் ஜாதகத்தில் குரு, சுக்கிரன் சேர்க்கை இருந்தால் பொன், பொருள் சேர்க்கை அபரிமிதமாக இருக்கும். ஆனால் பல மங்கையருடன் நட்பு ஏற்படும். கூடாநட்பு கேடில் முடியும் என்பதுபோல் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கையைத் தரும். குரு, சுக்கிரன் சேர்க்கை உள்ளவர்கள் "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் அதிகம்' என்பார்கள். நான் குருவிற்கு 60 மதிப்பெண் கொடுத்தது சரிதானே?
இந்த கட்டுரையின் முடிவில் குரு நல்லவரா? கெட்டவரா என்று உங்களுக்குத் தெளிவாகப் புரிந்து விடும். ஆனால் இங்கே குரு நல்லவர் என்று தான் நான் தலைப்பு கொடுத்துள்ளேன்.
எனவே குருவினால் ஏற்படும் சுப யோகங்களை அதிகமாக இந்த கட்டுரையில் காணலாம்.
கோடீஸ்வர யோகம் தரும் குரு மங்கள யோகம்
ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள். சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நடைமுறையில் சில யோகங்கள் மட்டுமே பலவிதமான பலன்களைத் தந்துகொண்டிருக்கிறது.
அதில் ஒன்றுதான் குரு மங்கள யோகம்.
குரு மற்றும் செவ்வாய் சம்பந்தத்தால் ஏற்படும் குரு மங்கள யோகம் பலரை கோடீஸ்வராக மாற்றியுள்ளது. இந்த யோகம் உள்ளவர்களுக்கு வாழ்க்கை யில் நிறைந்த சொத்து சுகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இவர்கள் பிறவி கோடீஸ்வராக இருப்பார்கள்.
சிலர் பிறவியில் ஏழையாகப் பிறந்தாலும் இந்த அமைப்பிருந்தால் படிப்படியாக உழைத்து முன்னேறி உன்னத நிலையை அடைவார்கள்.
இதுவரை குருமங்கள யோகம் பற்றி "பாலஜோதிட'த்தில் எழுத வில்லை என்பதால் விரிவாக கொடுத்துள்ளேன்.
செவ்வாய்
செவ்வாய் பூமிக் காராகன், ரத்த காராகன் மற்றும் யுத்த காராகன் தைரிய வீரியத்திற்குரிய கிரகம். மேலும் உடன்பிறந்த சகோதரம் மற்றும் பெண்கள் ஜாதகத்தில் கணவரைக் குறிக்கும் கிரகமாகும்.
இந்த செவ்வாய் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12-ஆமிடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்பது பொது விதி. ஒரு கிரகத்தினால் ஏற்படும் நன்மை- தீமைகளை உயிர், பொருள், நோய் காரகத்துவம் என மூன்றாக வகைப்படுத்தலாம்.
அதன்படி செவ்வாய் பலம் பெற்றால் உயிர் காரகத்துவமான உடன் பிறந்தவர்களின் அன்பு, அனுசரணை, ஆதாயம் உண்டு. பெண்களுக்கு ஆண்மை, தைரியம், நிறைந்தக் குடும்பத்தை, கட்டுக்கோப்பாக வழிநடத்தும் கணவர் கிடைப்பார்.
பொருள் காரகத்துவமான அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த வராக இருப்பார்கள். செவ்வாய் பலம் குறைந்தால் உடன்பிறந்த ஆண்கள் கலகம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சொத்து தொடர்பான சர்ச்சைகள் இருந்துகொண்டே இருக்கும்.
பெண்களுக்கு கணவரின் அன்பும், அனுசரணையும் இருக்காது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதேபோல் திருமணத்திற்கு செவ்வாய் தோஷம் கணக்கிட வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறினாலும், செவ்வாய் தோஷம் பார்க்கத் தேவையில்லை என்ற கருத்தும் உள்ளது. உலகின் அனைத்து நிகழ்விலும் இரு மாறுபட்ட கருத்துகள் நிலவுவது நாம் அறிந்ததே. அதனால் செவ்வாய் தோஷம் பற்றி ஆயிரம் பட்டிமன்றம் நடத்தி னாலும் இது சர்ச்சைக்குரிய கருத்தாகவே இருக்கும். அதேபோல் ஒரு கிரகத்தின் தன்மையை ஆதிபத்தியரீதியாகவும், நின்ற நட்சத்திர சாரத்திற்கு ஏற்பவும், உடன் இணைந்த, பார்த்த கிரகத்திற்கு ஏற்பவும் அணுகும்போதும் தீர்க்கமான முடிவு கிடைக்கும்.
இத்தகைய குரு மற்றும் செவ்வாய்க்கு ஒரு ஜாதகத்தில் சம்பந்தம் எந்தவிதத்தில் இருந்தாலும் அது குரு மங்கள யோகமாக செயல்படும். புனிதன் குருவிற்கும் மங்களன் செவ்வாய்க்கும் சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் அது குரு மங்களமாக செயல்படும். ராசிக் கட்டத்தின் ஒரே இடத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்தாலும், செவ்வாயின் 4, 7, 8-ஆம் பார்வையில் குரு இருந்தாலும், குருவின் 5, 7, 9-ஆம் பார்வையில் செவ்வாய் இருந்தாலும் குரு மங்கள யோகமாகும். நிச்சயம் வீடு, மனை யோகம் சித்திக்கும். நல்ல ஆடம்பரமான, வசதியான குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து, கௌரவத்துடன் வாழ்வார்கள். தாய்வழி பூர்வீகச்சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தாயும், தந்தையும் பாக்கியவான்கள். தாயார் உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். தாய்வழியில் அதிக உறவினர் கள் இருப்பார்கள். உற்றார்- உறவினர்கள் ஆதரவு, அனுசரணை உண்டு. இவர்கள் பிறவியில் ஏழையாகப் பிறந்தாலும் இந்த அமைப்பிருந்தால் படிப்படியாக உழைத்து முன்னேறி உன்னத நிலையை அடைவார்கள்.
அத்துடன் எந்த கிரகச் சேர்க்கையாக இருந்தாலும் பொதுவாக யோகம், அவயோகம் என்று பலன் சொல்ல முடியாது. இரு ஆதிபத்தியம் கொண்ட கிரகங்கள் அனைத்தும் ஒரு ஆதிபத்திற்கு சுபப் பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்தியரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது.
குரு மங்கள யோகத்தால் உண்டாகும் நன்மைகள்
நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற சொத்து சேர்க்கை, மருத்துவராகும் யோகம், விவசாயத்தின்மூலம் வருமானம், நல்ல மன ஆரோக்கியம், நல்ல நிலையில் இருக்கும் தாய்- தந்தை, சீருடைப் பணி, காவல் துறை, இராணுவத்தில் வேலை, நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில், தீயணைப்புத் துறை, சமையல் வேலை, தொழில் போன்றவை செவ்வாய் மற்றும் குருவின் வலிமையைப் பொருத்து பலன் தரும்.
செல்வாக்கு, சொல்வாக்கு, புகழ், அந்தஸ்து, கவுரவம், மரியாதை, தானாக உயர்வது, எதிரிகள் இல்லாத சூழல், எதிரிகளை வெற்றி கொள்ளும் ஆற்றல், துணிந்து செய்யும் காரிய சித்தி, வெற்றி, சகோதர வழி ஆதரவு, சகோதர மேன்மை, எதையும் சாதிக்கும் ஆண் வாரிசுகள், வாரிசுகளால் உண்டாகும் பெருமை, அதிகார அந்தஸ்து நிறைந்த உத்தியோகம், தொழில், நாடாளும் யோகம், சொத்துகளின் மதிப்பு உயர்ந்து கொண்டே இருத்தல், ரியல் எஸ்டேட், புரோமோட்டர்ஸ், போர்வெல்ஸ், காவல் உயர் அதிகாரி, நிர்வாக அதிகாரிகள் போன்ற மேன்மைகளை உருவாக்குவது இந்த குரு மங்கள யோகம்தான்.
இந்த கிரகச் சேர்க்கை- அதாவது குருவும் செவ்வாயும் மேஷம், சிம்மத்தில் நின்றால் ஜாதகரின் சொத்து மதிப்பைக் கணக்கிட முடியாத விதத்தில் இருந்துகொண்டே இருக்கும்.
இந்த கிரகச் சேர்க்கை, பார்வையில் குருவும் செவ்வாயும் நட்பு, ஆட்சி, உச்சம், நீசபங்கராஜ யோகம், திக்பலமாக இருந்து தசை நடக்கும்போது லக்னாதிபதி வலுவுக்கேற்ப பலனை வாரி வழங்குவார்கள்.
மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு முதன்மையான யோகப் பலனைத் தரும்.
குரு மங்கள யோகத்தால் ஏற்படும் அசுபப் பலன்கள்
இரண்டு கிரகங்களும் எதிர்மறைப் பகை வீடுகளில் ஒன்றாக வரும்போது அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்மறையான விளைவுகளை நோக்கித் திரும்புகிறது.
குரு, செவ்வாய் தரும் குரு மங்கள யோகத்தில் ராகு- கேது இணைவது, சனி இணைவு, பார்வைபெறுவது அல்லது சூரியனால் அஸ்தங்க தோஷ பெறும்போது பலன் குறைவுபடும் அல்லது யோகம் தராது.
ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்ப ராசி, லக்னத்திற்கு சுபப் பலன் குறைவுப் படும். லக்னாதிபதி, ராசியாதிபதி ஓரளவு நல்ல கேந்திர கோணத்தில் பாதிக்காமல் இருப்பதும் யோகத்தை அனுபவிக்க வழிசெய்யும்.
இன்னும் பிற யோகங்களை வரும் இதழ்களில் பார்க்கலாம்.
தொடரும்...
செல்: 98652 20406