கடந்த வாரங்களில் குரு பகவானைப் பற்றிய குறிப்புகளையும் குருமங்கள யோகம் மற்றும் சிவராஜ யோகம் பற்றியும் படித்திருப்பீர்கள். இந்த வாரத்தில் சந்திரனுடன் இணையும் குருவினால் உருவாகும் குருச் சந்திர யோகம் பற்றிக் காணலாம்.
குருச் சந்திர யோகமும், சகடை தோஷமும்
ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள். சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நடைமுறையில் சில யோகங்கள் மட்டுமே பலவிதமான பலன்களை தந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் குருச் சந்திர யோகம். இந்த யோகம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்குமென்று நம்பப்படுகிறது. இந்த அமைப்பில்லாமல் குருவும், சந்திரனும் 6, 8- ஆக- சகடையாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் கடனாளியாக இருப்பார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது.
ஓரளவு ஜோதிட ஞானம் உள்ளவர் கள் ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் ஜாதகத்திலுள்ள சிறப்பான யோகம் பற்றிக் கூறுவார்கள். ஆனால் ஜாதகர் அனுபவிக்கும் பலன்கள் முற்றிலும் மாறுபட்டிருக்கும். சில ஜாதகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த யோகமும் இருக்காது.
ஆனால் அனுபவிக்கும் பலன்கள் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த முரண்பாட்டிற்கு என்னதான் காரணம் என்பதை சற்று உள்ளாழ்ந்து உற்றுநோக்கினால் இந்த புதிருக்கு விடை கிடைக்கும். இதுபோன்ற மாறுபட்ட பலனுக்கான காரணத்தைப் பார்க்கலாம்.
சந்திரன்
ஒரு ஜாதகத்தின் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது விதியெனும் லக்னமாக இருந்தாலும், விதியால் ஏற்படும் வினைகளைத் தீர்மானிப்பது மதியெனும் சந்திரனாகும்.
ஆக, விதிக்கு
கடந்த வாரங்களில் குரு பகவானைப் பற்றிய குறிப்புகளையும் குருமங்கள யோகம் மற்றும் சிவராஜ யோகம் பற்றியும் படித்திருப்பீர்கள். இந்த வாரத்தில் சந்திரனுடன் இணையும் குருவினால் உருவாகும் குருச் சந்திர யோகம் பற்றிக் காணலாம்.
குருச் சந்திர யோகமும், சகடை தோஷமும்
ஜோதிட சாஸ்திரத்தில் யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள். சாஸ்திரத்தில் ஆயிரக்கணக்கான யோகங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நடைமுறையில் சில யோகங்கள் மட்டுமே பலவிதமான பலன்களை தந்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றுதான் குருச் சந்திர யோகம். இந்த யோகம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்குமென்று நம்பப்படுகிறது. இந்த அமைப்பில்லாமல் குருவும், சந்திரனும் 6, 8- ஆக- சகடையாக இருந்தால் வாழ்நாள் முழுவதும் கடனாளியாக இருப்பார்கள் என்ற கருத்து நிலவி வருகிறது.
ஓரளவு ஜோதிட ஞானம் உள்ளவர் கள் ஒரு ஜாதகத்தைப் பார்த்தவுடன் ஜாதகத்திலுள்ள சிறப்பான யோகம் பற்றிக் கூறுவார்கள். ஆனால் ஜாதகர் அனுபவிக்கும் பலன்கள் முற்றிலும் மாறுபட்டிருக்கும். சில ஜாதகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த யோகமும் இருக்காது.
ஆனால் அனுபவிக்கும் பலன்கள் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த முரண்பாட்டிற்கு என்னதான் காரணம் என்பதை சற்று உள்ளாழ்ந்து உற்றுநோக்கினால் இந்த புதிருக்கு விடை கிடைக்கும். இதுபோன்ற மாறுபட்ட பலனுக்கான காரணத்தைப் பார்க்கலாம்.
சந்திரன்
ஒரு ஜாதகத்தின் பிரதானமான பலன்களை எடுத்துரைப்பது விதியெனும் லக்னமாக இருந்தாலும், விதியால் ஏற்படும் வினைகளைத் தீர்மானிப்பது மதியெனும் சந்திரனாகும்.
ஆக, விதிக்குத் துணையாக இருப்பது மதி எனும் சந்திரனாகும். அதனால்தான் சந்திரன் நிற்கும் நட்சத்திரத்தை வைத்து பிறந்தநாள் கொண்டாடுகிறோம்; திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்; ஜாதகரீதியான தசை, புக்தி மற்றும் கோட்சாரப் பலன்கள் கணிக்கிறோம்.எழுதப்பட்ட கர்மா விதிப்படி தான் நடக்கும் என்றாலும், விதியால் ஏற்படப்போகும் விளைவுகளை உணரும் உள்ளுணர்வைத் தருவதும் சந்திரன்தான். ஒரு ஜாதகத்தில் விதிக்குத் தீர்வு தரும் மதி எனப்படும் சந்திரனின் நிலை மிகமிக முக்கியம். ஒருவரின் சுய ஜாதகத்தில் சந்திரனின் மூலம்தான் அனைத்து விதமான யோகங்கள், அவயோகங்கள் ஏற்படுகின்றன.
மனிதன் தன் வாழ்க்கையைத் திறம்பட நிர்வகிக்க மதியாகிய சந்திரனின் வலிமை மிக அவசியம்.சந்திரன் சுப வலிமை பெற்றவர்கள் தனது சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் வாழ்வில் ஏற்படப்போகும் அனைத்து ஏற்ற- இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவார்கள். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் என்பது உடல் மற்றும் மனம். v ஆரோக்கியமான உடலும் தெளிவான சிந்தனையும் கொண்ட ஒருவரே வாழ்வில் வெற்றி பெறமுடியும். அதனால்தான் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரன் லக்னத் திற்கு இணையான முக்கியத் துவத்தைப் பெறுகிறது. எனவே ஒரு ஜாதகத்தில் சந்திர பலம் மிக முக்கியம்.
குருச் சந்திர யோகம்
ஒளி கிரகமான சந்திரனு டன் சுபத்துவம் பெற்ற குரு இணையும்போது குருச் சந்திர யோகம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் சந்திரன் இருக்கு மிடத்தில் குரு சேர்ந்திருந்தாலோ அல்லது குருவின் பார்வை பதியக்கூடிய 5, 7, 9 ஆகிய இடங்களில் சந்திரன் இருந்தாலோ குருச் சந்திர யோகம் உண்டாகும். இந்த யோகம் இருக்கும் ஜாதகர்கள் நீண்ட ஆயுள், நீடித்த புகழ், அழியா செல்வம் , செல்வாக்கு, காரிய சித்தி, சமுதாயத்தில் உயர்ந்த பதவி தேடிவரும்.
சகடை யோகம்
சந்திரனுக்கு 6, 8-ல் குரு இருந்தால் உண்டாவது சகடை யோகம். இதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுள்ள பலன்களே உண்டாகும். வாழ்க்கை வண்டிச் சக்கரம்போல சாண் ஏறினால் முழம் சறுக்கும். ஏற்ற- இறக்கம் மிகுதியாக இருக்கும். அதிர்ஷ்டம் அவ்வப்போது வந்தாலும் வெகு சீக்கிரம் மறைந்துவிடும். இனம் புரியாத மனக்குழப்பம் இருந்துகொண்டே இருக்கும் என்பதால், நிலையான முன்னேற்ற வாழ்க்கை இருக்காது. ஜாதகத்தில் மற்ற சுபகிரகங்களின் அமைப்பு, பார்வையைப் பொருத்து பாதிப்புகள் குறைந்து நல்ல பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
குருச் சந்திர யோகம் யாருக்கு வரம்?
குருவினால் உண்டாகும் யோகங்கள் பல இருந்தாலும், அனைவராலும் பேசப்படும் யோகம் குருச் சந்திர யோகம். பொதுவாக யோகம் என்ற சொல்லுக்கு கிரகச் சேர்க்கை என்று பொருளாகும். சிலர் யோகம் என்றால் அதிர்ஷ்டம் என்று நினைத்து கொள்கின்றனர். குருச் சந்திர யோக அமைப்புள்ள சிலர் யோகத்தையும், பலர் வாழ்க்கையில் தடுமாற்றத்தை சந்திப்பதையும் நடைமுறை யில் பார்க்கிறோம். அதாவது குருச் சந்திர யோகம் பலருக்கு அவ யோகத்தையும் தருகிறது. சகடை யோகம் பலர் வாழ்வில் பெரிய திருப்புமுனையைத் தந்தும் உள்ளது. ஜாதகத் தில் இருக்கும் யோகம் ஏன் வேலை செய்ய வில்லை? ஜோதிடத்தில் எந்தவொரு விதியும் அனுபவப்பூர்வமாக ஒத்துவந்தால் மட்டுமே ஏற்கவேண்டும். குருச் சந்திர யோகம் பலன் தர ஒரு ஜாதகத்தில் குருவும் சந்திரனும் சுபத்துவம் பெறுவது அவசியம். கிரகங்கள் எங்கே இருக்கிறது என்பதைவிட எப்படி இருக்கிறது, என்ன ஆதிபத்தியம் பெறுகிறது என்பது மிக முக்கியம்.
இந்த அமைப்பில் சந்திரன் வளர்பிறைச் சந்திரனாக இருப்பது சிறப்பு. குரு ஆட்சி, உச்சம், திக்பலம் போன்ற அமைப்புகளில் இருப்பது மேலும் சிறப்பு. குருவும், சந்திரனும் நீசம்பெறாமல், அசுப கிரக சம்பந்தம் பெறாமல் இருப்பது நல்லது. அத்துடன் அதாவது சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் கேந்திரங்களில் இருக்கும் கெஜகேசரி யோகமும், குருச் சந்திர யோகமும் சில லக்னங்களுக்கு கெடுதலையே தருகிறது. அதனால் யோகம் இல்லாத சாதாரண வாழ்க்கையே வாழுகிறார்கள்.
அதே போல் குருவும் சந்திரனும் 6, 8- ஆக சகடை அமைப்புள்ள எத்தனையோ நபர்கள் விஐபியாக நல்ல பொருளாதாரத்துடன் வலம்வருகிறார்கள். ஒருவரின் பொருளாதாரம், யோகம், அதிர்ஷ்டம் போன்றவை குருச் சந்திர யோகம், கெஜகேசரி யோகம், சகடை அமைப்புகளால் மட்டும் தீர்மானிக்கபடுவதில்லை. அதேபோல ஒருவர் வாழ்க்கையின் வளர்ச்சியை லக்னம், லக்னாதிபதி மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம், அடுத்தடுத்த தசாபுக்திகளே தீர்மானிக்கின்றன.
அதனால் இது அனுபவத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத விதியே. எனவே, குருச் சந்திர யோகம், சகடை மட்டுமே ஒரு ஜாதகத்தின் பலனைத் தீர்மானிக்காது. மேலும் லக்னரீதியாக குருவும் சந்திரனும் பெற்ற ஆதிபத்தியமே குருச் சந்திரனால் ஏற்படும் யோகம், அவயோகத்தைத் தீர்மானிக்கிறது.
அதன்படி 12 லக்னத்தில் குருச் சந்திர யோகத்தால் மீன லக்னத்தினர் மட்டுமே ஆதிபத்தியரீதியாக அற்புதமான உன்னதப் பலன்களை அனுபவிக்கிறார்கள். மீன லக்னத் திற்கு குரு லக்னாதிபதி, பத்தாம் அதிபதி. சந்திரன் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி. பிற லக்னத்திற்கு ஒரு ஆதிபத்தியரீதியாக சுபப்பலன் நடந்தால் மற்றொரு ஆதிபத்தியரீதியாக எதிர்வினை உண்டு. இரு ஆதிபத்தியம்கொண்ட கிரகங்கள் அனைத் தும் ஒரு ஆதிபத்தியத்திற்கு சுபப் பலனை வழங்கினால் மற்றொரு ஆதிபத்தியரீதியாக ஏதேனும் அசுப விளைவுகளைத் தராமல் போகாது.
எத்தகைய கிரகச் சேர்க்கையாக இருந்தாலும் யோகம், அவயோகம் என்று பொதுவாகப் பலன் சொல்லக்கூடாது. லக்னரீதியான ஆதிபத்தியம், நின்ற வீடு, நட்சத்திர சாரம் போன்றவற்றைப் பொருத்து பலன்கள் மாறுபடும். மேலும் கர்மாரீதியாக குருச் சந்திர யோகத்தை உற்றுநோக்கினால், குரு காலபுருஷ 9-ஆம் அதிபதி. தந்தை மற்றும் தந்தைவழி உறவுகள் பற்றிக் கூறுமிடம். சந்திரன் காலபுருஷ 4-ஆம் அதிபதி தாய் பற்றிக் கூறுமிடம். ஆக தாய் மற்றும் தந்தைவழி உறவுகள்மூலம் ஏற்படும் கர்மவினைப் பதிவின் தொடர்ச்சியே குருச் சந்திர யோகம்.
பரிகாரம்
பொருளாதாரத்தில் உன்னத நிலையை அடைய வியாழக்கிழமை கோவில் யானைக்கு கரும்பு, பழங்கள், இயன்ற உணவு தானம் வழங்க மகத்தான வாழ்வுண்டு. இவ்வளவு விரிவாக எடுத்துக் கூறியும் குருச் சந்திர யோகம் இல்லாததால் வறுமை, கடன் இருப்பதாக நம்புபவர்கள் வியாழக்கிழமை காலை 11.00 மணிமுதல் 12.00 மணிவரையான சந்திர ஓரையில் திருப்பதி வேங்கடாசலபதியை தரிசிக்க வேண்டும். வியாழக்கிழமை மட்டும் பெருமாள் நம்மை காணும்படியான அலங்காரத்தில் இருப்பார். பெருமாளின் கண் திறந்திருப்பது நேத்ர தரிசனம் என்று பெயர். அன்று பெருமாளை தரிசித்தால் பொருள் குற்றம் அகன்று நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
தொடரும்...
செல்: 98652 20406