Advertisment

சொந்தத் தொழில் யோகம்!

/idhalgal/balajothidam/yogam-own-business

தாவது ஒரு தொழிலைச் செய்தால் தான் இவ்வுலகில் வாழமுடியும். சம்பாதனை என்பதை எந்த வகையிலும் சம்பாதிக்கலாம். தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் சிலருக்குதான் உண்டாகும். பலர் தொழிலில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்துள்ளனர். தொழில் மூலம் லாபம் ஈட்டும் அமைப்பிருந்தால்தான் தொழிலில் சாதனை செய்யமுடியும். பொதுவாக ஜனன ஜாதகம் பலமாக இருந்தால்தான் சொந்தத் தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.

Advertisment

ஜென்ம லக்னம் மற்றும் சந்திரன், சூரியன், சனி, புதன், குரு ஆகிய கிரகங்கள் பலமாக இருந்தால்தான் சொந்தத் தொழில் யோகம் உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு தொழில் ஸ்தானமான 10-ஆம் வீடு பலம்பெற வேண்டும். அது மட்டுமின்றி தன ஸ்தானமான 2-ஆம் வீடும், லாப ஸ்தானமான 11-ஆம் வீடும், கூட்டுத்தொழில் ஸ்தானமான 7-ஆம் வீடும் வலுவுடன் அமையப்பெற்றால் நற்பலன் அடையமுடியும். ஜென்ம லக்னத்திற்கு 2, 11-க்கு அதிபதிகள் இணைந்தோ பரிவர்த்தனைப் பெற்றோ இருப்பது சிறப்பாகும். அதுபோல 2, 10-க்கு அதிபதிகள், 2, 7-க்கு அதிபதிகள், 10, 11-க்கு அதிபதிகள், 7, 10-க்கு அதிபதிகள் இ

தாவது ஒரு தொழிலைச் செய்தால் தான் இவ்வுலகில் வாழமுடியும். சம்பாதனை என்பதை எந்த வகையிலும் சம்பாதிக்கலாம். தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் சிலருக்குதான் உண்டாகும். பலர் தொழிலில் ஈடுபட்டு நஷ்டம் அடைந்துள்ளனர். தொழில் மூலம் லாபம் ஈட்டும் அமைப்பிருந்தால்தான் தொழிலில் சாதனை செய்யமுடியும். பொதுவாக ஜனன ஜாதகம் பலமாக இருந்தால்தான் சொந்தத் தொழில் செய்து சம்பாதிக்கும் யோகம் உண்டாகும்.

Advertisment

ஜென்ம லக்னம் மற்றும் சந்திரன், சூரியன், சனி, புதன், குரு ஆகிய கிரகங்கள் பலமாக இருந்தால்தான் சொந்தத் தொழில் யோகம் உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு தொழில் ஸ்தானமான 10-ஆம் வீடு பலம்பெற வேண்டும். அது மட்டுமின்றி தன ஸ்தானமான 2-ஆம் வீடும், லாப ஸ்தானமான 11-ஆம் வீடும், கூட்டுத்தொழில் ஸ்தானமான 7-ஆம் வீடும் வலுவுடன் அமையப்பெற்றால் நற்பலன் அடையமுடியும். ஜென்ம லக்னத்திற்கு 2, 11-க்கு அதிபதிகள் இணைந்தோ பரிவர்த்தனைப் பெற்றோ இருப்பது சிறப்பாகும். அதுபோல 2, 10-க்கு அதிபதிகள், 2, 7-க்கு அதிபதிகள், 10, 11-க்கு அதிபதிகள், 7, 10-க்கு அதிபதிகள் இணைவதும் பரிவர்த்தனைப் பெறுவதும் சிறப்பாகும். குறிப்பாக 10-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் பெறுவதும், கேந்திர திரிகோணத்தில் அமையப் பெறுவதும் தொழில் யோகத்தை வலிமைப்படுத்தும்.

நவகிரகங்களில் முக்கிய கிரகமான சூரியன், குரு பலம்பெற்று, ஜென்ம லக்னத்திற்கு 7 முதல் 12-ஆம் பாவம் வரை அல்லது 10 முதல் 3-ஆம் பாவம் வரை 5-க்கும் மேற்பட்ட கிரகங்கள் இருப்பது நல்ல அமைப்பாகும். குறிப்பாக அதிக கிரகங்கள் 10-ஆம் வீட்டில் இருப்பதும், 10-ஆம் அதிபதியுடன் சேர்க்கைப் பெற்றிருப்பதும் தொழில் யோகத்தை பலப்படுத்தும்.

சொந்தமாகத் தொழில் செய்யும் யோகம் ஏற்பட ஜென்ம லக்னமும், சந்திரனும் வலுப்பெற வேண்டும். ஜென்ம லக்னாதிபதி பலம்பெற்றால்தான் தைரியம், துணிவு, சுயமாக சிந்திக்கும் நிலை, செயல்படும் வலிமை உண்டாகும். அதுபோல மனோகாரகன் என வர்ணிக்கப்படும் சந்திரன் பலமாக அமையப்பெற்றால்தான் மனவலிமை உண்டாகும். சொந்தத் தொழில் செய்வதற்கு சில கிரகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அக்கிரங்கள் ஏதாவது ஒருவகையில் பலம்பெற்றால்தான் சொந்தத் தொழில் யோகம் உண்டாகும். குறிப்பாக தொழில்ரீதியாக கிரகங்களின் காரகத்துவத்தைப் பார்த்தால், நவகிரகங்களில் தலைவனாக விளங்கக்கூடிய சூரியன் முக்கியப் பங்கு வகிக்கிறார். ஆத்ம காரகன் சூரியன் பலம்பெற்றால்தான் நல்ல உடலமைப்பு உண்டாகும். தைரியத்துடன் உழைக்கும் சக்தி உண்டாகும்.

Advertisment

lakshmi

சூரியன் பலத்துடன் இருந்தால்தான் சமுதாயத்தில் பெயர், புகழ், கௌரவம் போன்றவை உண்டாகும். சூரியன் பலமிழந்திருந்தால் தனித்து செயல்படும் தன்மை குறைந்துவிடும். சூரியன் வலி−மையுடன் அமையப்பெற்று சுபர் பார்வையுடன் இருந்தால் தொழில் செய்யும் வலிமை உண்டாகும்.

புதன் தொழில் அமைப்பிற்கு மிக முக்கிய கிரகமாக விளங்குகிறார்.

அறிவுத்திறன், சிந்திக்கும் ஆற்றல், புத்திக்கூர்மை, திட்டம் தீட்டுதல், கணக்கிட்டு செயல்படும் திறன் போன்றவற்றுக்கு புதன் அதிபதியாவார். அதுமட்டுமின்றி வணிகம், ஸ்பெகுலேஷன் போன்றவற்றுக்கு புதனே காரகனாவார். புதன் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால்தான் எதையும் எதிர்கொள்ளும் பலம், சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றியமைத்துக் கொண்டு செயல்படும் வலிமை உண்டாகும். அதுபோல பேச்சுத் திறமைக்கும் புதன்தான் காரகன். ஆக, புதன் பலம்பெற்றால்தான் தொழிலில் எப்படிப் பேசவேண்டுமோ அப்படிப் பேசும் ஆற்றல், எதையும் கணக்கிட்டு செயல்படும் ஆற்றல் உண்டாகும்.

குரு தனகாரகன் ஆவார். பண நடமாட்டத்திற்கும், கொடுக்கல்- வாங்கலுக்கும் குருவே காரகன் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் குரு பகவான் பலம்பெற்றிருந்தால்தான் அவர் கொடுக்கல்- வாங்கலில் திறமையாக செயல்படமுடியும். பண விஷயத்தில் சரியாகச் செயல்பட்டு லாபத்தை ஈட்ட முடியும். குரு பலமிழந்தவர்கள், குரு வக்ரம் பெற்ற பலர் கொடுக்கல்- வாங்கலில் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளார்கள். ஆக, தொழில் செய்வதற்கு குருவின் பலம் மிக முக்கியமாகும்.

சனி வேலையாட்களுக்குக் காரகன் ஆவார். ஜாதகத்தில் சனி பலமாக இருந்தால்தான் வேலையாட்களை வழிநடத்தும் பலம் உண்டாகும். சனி ஜாதகத்தில் வலுவிழந்திருந்தாலும் வக்ரம் பெற்றிருந்தாலும் வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. அதுபோல வேலையாட்களால் பல்வேறு நஷ்டங்களை சந்திக்க நேரிடும்.

ஆக, நவகிரகங்கள் பலம்பெறுவது மட்டுமின்றி, ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவமும் பலம் பெறவேண்டும். 10-ஆம் அதிபதி பலம்பெற்றால்தான் சொந்தத் தொழிலில் சாதிக்க முடியும். ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் அதிபதியும் சந்திரனுக்கு 10-ஆம் அதிபதியும், தொழில் யோகத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி, சந்திரனுக்கு 10-ஆம் அதிபதி இவ்விரு கிரகங்களில் எக்கிரகம் பலம் பெறுகிறதோ, அக்கிரகம் சம்பந்தப்பட்ட தொழில் யோகம் உண்டாகும். 10-ஆம் வீட்டில் பாவிகள் அமையப் பெற்றால் தொழிலில் பல்வேறு சோதனைகள் உண்டாகும்.

ஆக, ஒருவர் ஜாதகத்தில் சூரியன், சந்திரன், புதன், சனி, குரு ஆகிய கிரகங்கள் பலம்பெற்று, ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் அதிபதி 2, 7, 11-க்கு அதிபதியுடன் இணைந்தோ, பரிவர்த்தனைப் பெற்றோ இருந்தாலும், 5-க்கும் மேற்பட்ட கிரகங்கள் 7 முதல் 12-ஆம் பாவத்திற்குள்ளோ அல்லது 10 முதல் 3 ஆம் பாவத்திற்குள்ளோ இருந்தாலும் சொந்தத் தொழில் யோகம் உண்டாகும். குறிப்பாக ஜனன ஜாதகம் பலம்பெற்று, ஜென்ம லக்னத்திற்கு யோகத்தைத் தரக்கூடிய கிரகங்களின் தசா புத்தி வந்தால் தொழிலில் சாதனை செய்யக்கூடிய அமைப்பு உண்டாகும்.

செல்: 72001 63001

balajyothidam100818
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe