செவ்வாயால் உண்டாகும் யோகம்! -திருக்கோவிலூர் பரணிதரன்

/idhalgal/balajothidam/yoga-caused-by-mars-thirukovilur-paranidharan

மீபகாலத்தில் ஜோதிட சாஸ்திரத்தின்மீது அதிகபட்சமான நம்பிக்கை உண்டாகி இருக்கிறது. அதற்குக் காரணம் ஜோதிடம் குறித்த ஆய்வு அதிகரித்துள்ளது. கிரகங்களின் செயல்பாடுகள் பற்றிய உண்மை வெளிபட்டிருப்பதால் ஜோதிடம் என்பது உண்மை என்று நிரூபணமாகி இருக்கிறது.

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் கிரகங்களின் சஞ்சார நிலைக்கேற்பவே பலன்கள் உண்டாகிவருகின்றன என்பதை நாம் உணர்ந்துள்ளோம். நம்முடைய ஜாதகத் தையே நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டால், சனி, ராகு- கேது, குரு போன்ற கிரகங்களின் பெயர்ச்சிகளுக்கு முன்பு, பின்பு என்ற நிலையில் நம்முடைய வாழ்க்கையில் நிறையவே மாற்றங்களைக் நகண்டு வந்திருப்போம்.

கிரகங்கள்தான் நம்மை வழிநடத்துகின்றன என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. இந்த நிலையில் ஜாதகத்தில் நமக்குள்ள பலன்களை நாம் அடையமுடி யாத நிலையும் உள்ளது.

ஒருவருடைய ஜாதகத்தில் தசாபுக்தி நன்றாக இருக்கும். கோட்சார கிரகங்களின் பலன்கள் யோகத்தை வழங்கிடமுடியாத அளவில் இருக்கும். இத்தகைய நிலையில் அந்த ஜாதகருக்கு ஜோதிடர்கள் கூறும் பலன்களை அடையமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும். அதற்கு உண்மையான காரணம் என்ன?

கர்ம வினைகளால் மாறுபடும் பலன்கள்

ஒவ்வொரு மனிதரின் ஜாதகமும் அவருடைய கடந்த பிறவிகளின் கர்ம வினைகளோடு, பூர்வபுண்ணியங்களோடு இணைந்திருப்பதுதான். அதன்காரணமாக ஒருவர் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு தோஷம் உண்டாக வாய்ப்புண்டு. அந்த தோஷம் எதுவென்று தெரிந்துகொள்ளாத வரையில் அவருக்குரிய யோகப் பலன்களை அவரால் அடையமுடியாமல் போகும்.

செவ்வாய் தோஷம்

தோஷங்கள் பல இருந்தாலும், நம்முன் மிகவும் தெளிவாக எல்லாராலும் கூறப்பட்டு வரும் தோஷம் செவ்வாய் தோஷம்.

செவ்வாய் தோஷம் என்பதை மிகப்பெரிய தோஷம் என்பதுபோலவும், திருமண வாழ்க்கைக்கு அதுவே தடையாக இருப்பதாகவும் பஞ்சாங்க ஜோதிடர்களால் பேசப்பட்டுவருகிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் அவரு டைய லக்னத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து அல்லது சுக்கிரனி லிருந்து இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந் தால் அதை செவ்வாய் தோஷமென்று குறிப் பிடுகின்றனர்.

செவ்வாய் என்பவர் யார்? அவர் சஞ்சரிக் கும் இடத்தை வைத்து அந்த இடத்திற்கு எத்தகைய பலனை வழங்குவார் என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

செவ்வாய் என்பவர் யார்?

ஒன்பது கிரகங்களில் செவ்வாய் என்பவர் யார் என்பதை ஆராயும்போது, பூமி தேவியின் கர்ப்பத்தில் உதித்தவர், மின்னலைப் போன்ற ஒளி உடையவர், என்றும் இளமையானவர், சக்திமிக்க ஆயுதங்களை ஏந்தி போர்க்களத்தில் முன் நிற்பவர், மங்களகாரகர் என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.

tt

உடல் உறுதிக்கும், மன உறுதிக்கும் காரகம் இவர். ரத்தத்திற்குக் காரகர். ரத்தக் கலப்ப

மீபகாலத்தில் ஜோதிட சாஸ்திரத்தின்மீது அதிகபட்சமான நம்பிக்கை உண்டாகி இருக்கிறது. அதற்குக் காரணம் ஜோதிடம் குறித்த ஆய்வு அதிகரித்துள்ளது. கிரகங்களின் செயல்பாடுகள் பற்றிய உண்மை வெளிபட்டிருப்பதால் ஜோதிடம் என்பது உண்மை என்று நிரூபணமாகி இருக்கிறது.

ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையிலும் கிரகங்களின் சஞ்சார நிலைக்கேற்பவே பலன்கள் உண்டாகிவருகின்றன என்பதை நாம் உணர்ந்துள்ளோம். நம்முடைய ஜாதகத் தையே நாம் உதாரணமாக எடுத்துக் கொண்டால், சனி, ராகு- கேது, குரு போன்ற கிரகங்களின் பெயர்ச்சிகளுக்கு முன்பு, பின்பு என்ற நிலையில் நம்முடைய வாழ்க்கையில் நிறையவே மாற்றங்களைக் நகண்டு வந்திருப்போம்.

கிரகங்கள்தான் நம்மை வழிநடத்துகின்றன என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை. இந்த நிலையில் ஜாதகத்தில் நமக்குள்ள பலன்களை நாம் அடையமுடி யாத நிலையும் உள்ளது.

ஒருவருடைய ஜாதகத்தில் தசாபுக்தி நன்றாக இருக்கும். கோட்சார கிரகங்களின் பலன்கள் யோகத்தை வழங்கிடமுடியாத அளவில் இருக்கும். இத்தகைய நிலையில் அந்த ஜாதகருக்கு ஜோதிடர்கள் கூறும் பலன்களை அடையமுடியாத நிலை ஏற்பட்டிருக்கும். அதற்கு உண்மையான காரணம் என்ன?

கர்ம வினைகளால் மாறுபடும் பலன்கள்

ஒவ்வொரு மனிதரின் ஜாதகமும் அவருடைய கடந்த பிறவிகளின் கர்ம வினைகளோடு, பூர்வபுண்ணியங்களோடு இணைந்திருப்பதுதான். அதன்காரணமாக ஒருவர் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு தோஷம் உண்டாக வாய்ப்புண்டு. அந்த தோஷம் எதுவென்று தெரிந்துகொள்ளாத வரையில் அவருக்குரிய யோகப் பலன்களை அவரால் அடையமுடியாமல் போகும்.

செவ்வாய் தோஷம்

தோஷங்கள் பல இருந்தாலும், நம்முன் மிகவும் தெளிவாக எல்லாராலும் கூறப்பட்டு வரும் தோஷம் செவ்வாய் தோஷம்.

செவ்வாய் தோஷம் என்பதை மிகப்பெரிய தோஷம் என்பதுபோலவும், திருமண வாழ்க்கைக்கு அதுவே தடையாக இருப்பதாகவும் பஞ்சாங்க ஜோதிடர்களால் பேசப்பட்டுவருகிறது.

ஒருவருடைய ஜாதகத்தில் அவரு டைய லக்னத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து அல்லது சுக்கிரனி லிருந்து இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் இருந் தால் அதை செவ்வாய் தோஷமென்று குறிப் பிடுகின்றனர்.

செவ்வாய் என்பவர் யார்? அவர் சஞ்சரிக் கும் இடத்தை வைத்து அந்த இடத்திற்கு எத்தகைய பலனை வழங்குவார் என்பதை முதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

செவ்வாய் என்பவர் யார்?

ஒன்பது கிரகங்களில் செவ்வாய் என்பவர் யார் என்பதை ஆராயும்போது, பூமி தேவியின் கர்ப்பத்தில் உதித்தவர், மின்னலைப் போன்ற ஒளி உடையவர், என்றும் இளமையானவர், சக்திமிக்க ஆயுதங்களை ஏந்தி போர்க்களத்தில் முன் நிற்பவர், மங்களகாரகர் என்பதைத் தெரிந்துகொள்ளமுடியும்.

tt

உடல் உறுதிக்கும், மன உறுதிக்கும் காரகம் இவர். ரத்தத்திற்குக் காரகர். ரத்தக் கலப்பான சகோதரர்களுக்கும் காரகர். உடலில் எலும்பினுள் ஊண். நாம் பிறந்த மண்ணுக்கு, அதாவது இந்த பூமிக்கு காரகர். உஷ்ணம், கோபம், ராஜதந்திரி இவர். எரிபொருள், தங்கம், தாமிரம் இவர். அரச குலத்தோன், ஆயுதம் தரிப்போன், அமைச்சனும் செவ்வாய். தேசத்தைப் பரிபாலனம் செய்வோருக்கும், நால்வகை படைகளை முன்நின்று இயக்குவோருக்கும், தீப்பிழம்புபோல் அசுத்தத்தை சுட்டெரித்து தூய்மையை நிலைநாட்டுவோருக்கும், யாருக்கும் தலை வணங்காமல் தன்மானத்துடன் வாழ்வோருக்கும் மூலமானவர் செவ்வாய் பகவான்.

சமூகத்தில் முதல் வரிசையில் வைத்து மதிக்கப்படுகின்ற அரசியல் தலைவர் கள், காவல் அதிகாரிகள், நாட்டுத் தளபதி கள், நீதிபதிகள், பொறியியல் வல்லுநர்கள் முதலானவர்களையும், மாவீரம் படைத்த புரட்சியாளர்களையும் தோற்றுவிப்பவர் செவ்வாய் பகவானே. பெருந்தன்மை- அதேநேரத்தில் கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவரைப் பந்தாடும் பராக்கிரமம் இவற்றையெல்லாம் அளித்திடக்கூடியவர் செவ்வாய் பகவான்.

செவ்வாய் என்றால் அதிவேகமாக செயல்படக்கூடிய ஆற்றல்மிக்கவர். தைரியம், வீரியம் போன்றவற்றுக்கு அடிப்படையானவர். செவ்வாயின் ஆதிக்கம் உடையவர்கள் எப்போதும் வேகமாக செயல்படக் கூடியவர்களாகவே இருப்பார்கள்.

பாவகங்களில் செவ்வாய்

இத்தகைய சக்திமிக்க கிரகமான செவ்வாய் அமர்ந்திருக்கும் இடங்களில், செவ்வாய் தோஷத்திற்குரிய இடமாகக் கூறப்படும் இரண்டாவது இடம், குடும்ப ஸ்தானமாகும். குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்துள்ள ஜாதகருக்கு குடும்பத்தின்மீது அதிகபட்சமான அக்கறை இருக்கும். குடும்பத்தை முன்கொண்டு செல்வதில் ஆர்வம் இருக்கும். வேகம் இருக்கும். துடிப்பு இருக்கும்.

அடுத்த இடமான நான்காவது இடத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதையும் செவ்வாய் தோஷமாக கூறப்படுகிறது. நான்காவது இடம் என்பது சுக ஸ்தானம். சுகத்திற்கு அடிப்படையான இடம். ஒரு ஜாதகர் அதிகபட்சமாக சுகத்தை விரும்பக்கூடிவராக இருப்பார் என்றால் அவர் நான்காவது இடத்தில் செவ்வாய் அமர்ந்துள்ள ஜாதகம் கொண்டவராக இருப்பார். சுகத்தின் எல்லையைப் பார்த்துவிடவேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருக்கும். அதற்குரிய ஆசையும் வேகமும் செயலும் கொண்டவராக அந்த ஜாதகர் இருப்பார்.

அடுத்த இடம் ஏழாம் இடம் என்னும் களத்திர ஸ்தானம். இந்த இடத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதும் செவ்வாய் தோஷம் என்று கூறப்படுகிறது. பொதுவாக களத்திரக்காரகன் என்று வருகின்றபோது அவர் சுக்கிர பகவான். சுக்கிரனும் செவ்வாயும் இணைந்த ஜாதகர்கள் அனைவருமே இல்லற வாழ்க்கையில் அதிகபட்சமான நாட்டம் உடையவர்களாக, தாம்பத்திய சுகத்தை அடைய வேண்டும் என்ற வேகம் மிக்கவர்களாக, ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

அடுத்த இடம் எட்டாம் இடம். பொதுவாக ஆயுள் ஸ்தானம் என்னும் எட்டாமிடம் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமாகும். இந்த இடத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதும் செவ்வாய் தோஷம் என்று கூறப்படுகிறது. எட்டாம் இடம் என்பது மறைவு ஸ்தானம். அந்த மறைவு ஸ்தானத்திலிருந்து ஒரு மனிதனை வேகப்படுத்தி வெளிப்படுத்துகின்ற சக்திமிக்கவர் செவ்வாய் பகவான். ஆற்றலை வழங்கி இருட்டில் இருப்பவரை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்ற சக்திமிக்கவர் செவ்வாய் பகவான். ஆசையற்றவருக்கும் ஆசையை ஏற்படுத்தும் சக்தியை வழங்குபவர் செவ்வாய் பகவான். எந்த ஒன்றையும் வென்றிடக்கூடிய ஆற்றல் மிக்கவர் என்பதால் எட்டாமிடத்தில் செவ்வாய் பகவான் அமர்ந்திருக்கும் ஜாதகருக்கு ஆற்றல் அதிகமாக இருக்கும். இல்லற வாழ்க்கையில் ஆசைகள் அதிகமாக இருக்கும்.

அடுத்த இடம் பன்னிரண்டாவது இடம். இந்த இடத்தை அயன சயன ஸ்தானம் என்று கூறுகிறோம். அதாவது படுக்கைக்குரிய இடம் இது. இந்த இடத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் ஜாதகர் செவ்வாய் தோஷம் உடையவர் என்று கூறப் படுகிறது. படுக்கையறையில் ஒருவருக்கு எத்தகைய ஆசைகள் இருக்குமோ அந்த ஆசைகளை எல்லாம் அதிகரித்து வழங்கிடக்கூடியவர் செவ்வாய் பகவான். வம்ச விருத்திக்கு வழியமைக்க இன்ப எண்ணத்தை உருவாக்கி ஆசையுடன் செயல்பட வைப்பவர் செவ்வாய் பகவான்.

செவ்வாய் வழங்கும் யோகம்

மேலே கூறிய இடங்களையெல்லாம் வைத்து, செவ்வாய் பகவான் அந்த இடங்களில் அமர்ந்திருக்கும் நிலையில், அந்த இடங்களுக்குரிய தன்மையில் ஆற்றல் மிக்கவர்களாக, ஆசை கொண்டவர்களாக, வேகம் மிக்கவர்களாக, சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்களாக இருப்பார்கள் என்பதை நம்மால் தெரிந்துகொள்ளமுடியும்.

நேர்மையாக சொல்லவேண்டுமென்றால், இரண்டு, நான்கு, ஏழு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களில் செவ்வாய் பகவான் அமர்ந்திருப்பது தோஷமே அல்ல, யோகமாகும். யோகத்திலும் இது மகா யோகமாகும்.

அதற்குக் காரணம், அந்த இடங்களின் தன்மையை, வீரியத்தை, வேகத்தை அதிகரித்து வழங்கிடக்கூடிய ஆற்றலைத்தான் செவ்வாய் பகவான் ஏற்படுத்துகி றார்.

ஒருவர் பலமிழக்கும் போதுதான், அவருடைய செயல்பாடுகளில் ஈடுபட முடியாமல், நினைத்ததை அடையமுடியாமல் போகும்போதுதான் அது தோஷமாக மாறும். ஆனால், செவ்வாய் பகவான் அமரும் அந்த இடங்களுக்குரிய தன்மை யினை, செயல்பாட்டினை, ஆசையினை அதிகரிக்கிறார். வேகப்படுத்துகிறார் என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு மனிதரை ஆசையுடன் செயல்பட வைக்கின்ற சக்தி, எதிர்பார்ப்புகள்கொண்ட மனம், அதிகபட்சமாக உணர்ச்சியை உண்டாக்கிடக்கூடிய நிலை செவ்வாய் பகவானுக்கே இருக்கிறது. மேலே குறிப்பிட்ட இடங்களில் செவ்வாய் பகவான் அமர்கின்றபோது அந்த மனிதனுடைய வாழ்வியல் தன்மை என்பது அவருடைய இணைக்கு, வாழ்க்கைத் துணைக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக இருக்கும். அதனால் இந்த இடங்களில் செவ்வாய் அமர்ந்திருக்கும் ஜாதகர்கள் ஆணாக இருந்தாலும் சரி; பெண்ணாக இருந்தாலும் சரி- அவர்கள் யோகமிக்கவர்கள் என்றே சொல்லவேண்டும்.

யோகத்தை தோஷமென்று கூறுவது ஏன்?

இந்த இடத்தில் நீங்கள் ஒரு கேள்வி கேட்கலாம்! கிரக பலத்தின் அடிப்படையில், அவர் அமரும் இடங்களின் அடிப்படையில் இத்தகைய வலிமையும் யோகமும் ஒரு மனிதருக்கு உண்டாகின்றபோது அதை ஏன் தோஷமாக எழுதி வைக்கவேண்டும்?

அதை தோஷமாக நினைத்து திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும்போது அதைவைத்து ஜாதகங்களை ஏன் ஒதுக்கிவைக்க வேண்டும்? என்ற கேள்விகளை நீங்கள் கேட்கலாம்.

இந்த இடத்தில் மிக முக்கியமான ஒரு தகவல். நம்முடைய முன்னோர்கள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்கள் எழுதிவைத்துள்ள பல்வேறு தகவல்கள், அது ஜோதிடமாக இருந்தாலும், ஆன்மிக நெறியாக இருந்தாலும், வாழ்வியலாக இருந்தாலும், சாஸ்திரங்களாக இருந்தாலும் அனைத்தையுமே மறைமுகமாகவே நமக்கு உணர்த்தியுள்ளனர். எந்த ஒன்றையும் அவர்கள் வெளிப்படையாக சொன்னதில்லை.

இப்படித்தான், ஒரு ஜாதகருக்கு செவ்வாய் அமர்ந்துள்ள இடத்தை வைத்து அவர் தாம்பத்திய சுகத்தை அதிகமாக விரும்புகிறவராக இருப்பார். இல்லற வாழ்க்கையில் அதிக ஈடுபாடுகொண்டு, ஆசையோடு செயல் படக் கூடியவராக இருப்பார் என்பதை நம்முடைய முன்னோர்கள் உணர்ந்துள்ளனர்.

அதன்காரணமாக, அவர்களுக்கு அமைகின்ற வாழ்க்கைத் துணை இதே சம ஆசையுடன், சம எண்ணத்துடன், சம வேகத்துடன் இருந்திடவேண்டும் என்பதற்காகவே ஒருவருக்கு இருப்பதுபோல் அவருடைய வாழ்க்கைத் துணைக்கும் கிரகம் அமைந்தி ருக்க வேண்டும் என்று எழுதி வைத்துள்ள னர்.

குடும்ப வாழ்க்கையின் ஆதாரம் செவ்வாய் ஒரு ஆண்மகன், செவ்வாயின் அருளினால் இல்லற விஷயத்தில் அதிகபட்சமான ஆசை கொண்டவராக இருக்கின்றபோது அவருக்கு மனைவியாக வருகின்றவர் அவருடைய ஆசைகளைப் புரிந்துகொண்டு அதைப் பூர்த்தி செய்திடக் கூடியவராக இருக்கவேண்டும். அந்த நிலையில் இல்லாமல், அதன்மீது விருப்பம் இல்லாதவராகவும், தட்டிக் கழிப்பவராகவும் இருந்தால் இருவருடைய வாழ்க்கையும் நிச்சயமாக சங்கடத்திற்கு ஆளாகும்.

அதேபோல் ஒரு பெண்மகள் செவ்வாய் பலத்தினால் இல்லற சுகத்தின்மீது அதிகபட்ச நாட்டம் கொண்டவராக இருக்க, அவருக்கு கணவராக வருபவர் அந்தப் பெண்ணின் விருப்பத்தை உணராமல், அவளுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்யக்கூடியவராக இல்லாமல் போனால் அவர்களுடைய வாழ்க்கையும் நரகமாகிவிடும்.

வாழ்க்கையில், கௌரவம், அந்தஸ்து, செல்வாக்கு என்பதெல்லாம் நம் குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து உண்டாவது தான். கணவனின் ஆசையை மனைவி பூர்த்தி செய்வதிலும், மனைவியின் ஆசையை கணவன் பூர்த்தி செய்வதிலும்தான் இருவருக்கு மிடையே நெருக்கமும், ஒற்றுமையும் ஒருவருக்காக ஒருவர் வாழும் நிலையினையும் ஏற்படுத்துகிறது.

தாம்பத்திய வாழ்க்கையில் தடமாற்றம் ஏன்?

இல்லறத்தில் ஆசை நிறைந்த ஒருவனுக்கு இல்லற சுகத்தின்மீது ஆசையில்லாத ஒருத்தியை இணைத்து வைக்கின்றபோது, அவனின் தேவைகள் அங்கே நிறைவேறாமல் போவதால் அவன் வேறிடம் நோக்கிச் செல்வ தும், அதேபோல் இல்லற சுகத்தின்மீது ஆசை கொண்ட ஒருத்திக்கு அதில் ஆசையில்லாத அல்லது இயலாத ஒருவனை இணைத்து வைக் கின்றபோது அவள் தன்னுடைய தேவைக்காக வேறிடத்தை நோக்கிச் செல்வதும் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது.

இதன்காரணமாகவே நம் முன்னோர் கள் நம் ஜாதகத்தில் செவ்வாய் அமர்ந் துள்ள இடங்களை வைத்து, இவர்கள் ஆசை நிறைந்தவர்கள், படுக்கை சுகத்தில் ஆர்வமிக்க வர்கள், காதல் உணர்வும் காம சிந்தனையும் நிறைந்தவர்கள், வீரியமானவர்கள் என்று இனம் பிரித்து வைத்ததுடன், இவர்களுக்கு இணையானவர்களாக வரக்கூடியவர்கள் இவர்களைப்போலவே இருந்தால்தான் அவர்களிடையே ஒற்றுமை இருக்கும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும், இதற்கு எதிர்மாறாக இருந்தால், தன் சுகத்திற்காக மனைவிக்குத் தெரியாமல் வேறு பெண்ணைத் தேடிக்கொள்ளும் நிலை யும், கணவனுக்குத் தெரியாமல் வேறு ஆணைத் தேடிக்கொள்ளும் நிலையும் உண்டாகிவிடும் என்பதை நம் முன்னோர்கள் செவ்வாய் அமர்வினை திருமண வாழ்க் கைக்கு முக்கியமானதாகத் தெரிவித்துள்ளனர்.

திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள பலரை நாம் பார்க்கும்போது இவையெல் லாம் உண்மை என்ற உண்மை நமக்குத் தெரிய வரும். குடும்ப வாழ்க்கைக்கு அடிப்படை யானது ஆசைகொண்ட, ஆசையைப் பூர்த்தி செய்கின்ற படுக்கையறை சுகமாகும். அதுவே தம்பதிகள் இருவரையும் ஒருவருக்குள் ஒருவராக இணைத்து வைத்திருக்கிறது. அந்த இடமே பிரச்சினைக்குள்ளாகும் போதுதான் குடும்ப வாழ்க்கையில் குழப்பமும் சிக்கலும் ஏற்படுகிறது..

நம் முன்னோர்கள் சொல்லிவைத்த செவ்வாய் தோஷம் என்பது, நமக்குள் இருக்கின்ற ஆற்றலின் வெளிப்பாடு என்பதை நாம் உணரவேண்டும். நமக்குரிய யோகம்தான் அது என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். அந்த யோகம் கொண்டவர்களை யோகம் கொண்டவர்களுடன் இணைப்பதுதான் என்பதையும் உணர்ந்து நாம் செயல்பட வேண்டும்.

இந்த இடத்தில், ஸ்தான பலன்களின் காரணமாக, மற்ற கிரக இணைவுகளால் செவ்வாயின் இயல்பில் மாற்றம் ஏற்பட்டி ருப்பவர்கள் செவ்வாய்க்குரிய பரிகாரத்தை செய்துகொள்வது நன்மையாகும்.

பரிகாரம்

செவ்வாய் அருள்வேண்டுவோர் ஒருமுறை திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி நாழிக்கிணற்றில் குளித்து செந்தில் வேலனுக்கு அர்ச்சனை செய்துவர நன்மை அதிகரிக்கும்.

வைத்தீஸ்வரன் கோவிலில் குடி கொண் டுள்ள செவ்வாய் பகவானை நேரில் சென்று தரிசித்து அர்ச்சனை செய்துவர உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.

bala070723
இதையும் படியுங்கள்
Subscribe