ங்கள் எதிரிகளை வெல்ல வாராஹி அம்மனுக்கு ஒரு தீபமேற்றினாலே போதும். உங்களைப் பகைத்தவர்கள் பக்கத்தில்கூட வரமாட்டார்கள்.

நம் வீட்டுப் பெரியவர்கள் தெய்வங் களைப் பற்றிப் பேசும்போது, "கூப்பிட்ட குரலுக்கு வந்துவிடுவாள்' என சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறோம் அல்லவா, நாமும் கொஞ்சம் யோசித்ததுண்டு. அது எப்படி தெய்வங்கள் கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கும்?

ஆம்; சில தெய்வங்களை நாம் மனதால் நினைத்தாலே போதும்; அவர்களுக்காக பெரிய அளவில் பூஜை, புனஸ்காரங்கள், விரதங்கள் எதையும் நாம் மேற்கொள்ளவேண்டாம். மனதால் ஒரு நிமிடம் நினைத்து கண்ணீர் மல்க வேண்டினாலே போதும். நமக்காக வந்து நம் குறைகளைத் தீர்ப்பார்கள்.

அப்படிப்பட்ட ஒரு பெண் தெய்வம்தான் வாராஹி அம்மன். சப்த மாதர்களில் ஒருவர்தான் வாராஹி. இந்த தெய்வம் காட்டுப்பன்றியின் முகத்துடனும், பெண்ணுடல் அமைப்பும்கொண்ட பெண் தெய்வம்.

Advertisment

vv

ஒருவருக்குத் தன்நிலை குலைந்துபோகும் அளவுக்குத் துயரம் இருக்கும்போது இந்த அம்மனை ஒரு கணம் மனதால் நினைத்து வேண்டினாலே போதும். அவர்களின் வேண்டுதலை உடனே தீர்த்துவைப்பாள். அத்தகைய மாபெரும் சக்திவாய்ந்த தெய்வம்தான் வாராஹி அம்மன்.

இந்த வாராஹி அம்மனை எப்படி வழிபடவேண்டும் என்பது பற்றிய கட்டுரைதான் இது. இவளை வணங்க பெரிய அளவில் நாம் எதையுமே செய்ய வேண்டாம். காலையில் எழுந்து குளித்து முடித்து, நம் வீட்டில் பூஜையறையில் ஒரு தட்டிலோ அல்லது சிறிய பாத்திரத்திலோ ஒரு மண் விளக்கை மட்டும் வைத்து நெய்யூற்றி தீபமேற்றினாலே போதும்.

அந்த தீபத்தைச் சுற்றி கொஞ்சம் மல்லிகைப் பூ வையுங்கள். அல்லது சிவப்பு நிறத்திலுள்ள செம்பருத்தி, செவ்வரளி என ஏதாவது உங்களிடம் எந்தப் பூ இருக்கிறதோ அதை வைத்துவிடுங்கள். இவளுக்கு நெய் வேத்தியமாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு வைக்க வேண்டும். அது மிகவும் மலிவான ஒரு பொருள் தான். இல்லையென்றால் பயறு வகைகளில் செய்த சுண்டல், அண்ணாச்சிப் பழம், மாதுளம்பழம் என உங்களால் இயன்ற ஏதாவதொரு சிறிய அளவிலான பொருளை வைத்தாலே போதும்.

பிறகு நீங்கள் ஏற்றிய தீபதின்முன் அமர்ந்து இந்த வாராஹி அம்மனுக்கான மந்திரத்தைக் கூறி மனதார உருகி வேண்டினால், உங்களின் குறைகளைக் கேட்க இந்த அம்மன் செவி சாய்ப்பாள்.

வாராஹி காயத்ரி மந்திரம்

"ஓம் ச்யாமளாயை வித்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வாராஹி ப்ரசோதயாத்.'

"நாம் நன்றாக இருக்கக்கூடாதென நினைக்கும் எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்கும் சக்தி வந்தவள். உங்களுக்கு ஏதாவது மனக்குறையோ, அவமானமோ- ஏன் நீங்கள் நிலை குலைந்திருக்கும்போதுகூட இந்த தீபத்தின்முன் அமர்ந்து, இதை இவர்கள் எனக்கு செய்துவிட்டார்கள்; இதனால் நான் இத்தனை துன்பம் அனுபவிக்கி றேன். இவர்களை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று வேண்டினாலே போதும். உங்கள் குறையைத் தீர்த்துவைப்பாள். உங்க ளின் இந்த நிலைக்குக் காரணமாணவர்களே உங்களிடம் திரும்பவும் வந்து மன்னிப்பு கேட்கும் அளவுக்கு மாற்றிவிடுவாள்.

இதில் முக்கியமாக நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பூஜையறையில் நாம் எத்தனை விளக்கை ஏற்றினா லும் இவளுக்காக ஒருவிளக்கு தனியாகத்தான் ஏற்றவேண்டும். அந்த விளக்கு வாராஹி அம்மனுக்குரியது என்று வைத்துவிடுங்கள். இந்த விளக்கை காலை 6.00 மணிக்குள் ளாகவோ அல்லது மாலை 6.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள்ளாகவோ, முதல்நாளில் எந்த நேரத்தில் தொடங்குகிறீர்களோ அந்த நேரத்தையே தொடர்ந்து கடைப்பிடியுங்கள். இதை நீங்கள் தொடர்ந்து செய்துவாருங்கள். உங்களுக்கு தொல்லைதரும் எதிரியென்று ஒருவரும் இருக்கவேமாட்டார்.

ஆனால் இதில் மறக்கக்கூடாத முக்கிய மான ஒன்று- நீங்கள் வைக்கும் வேண்டுதலில் நியாயம் உங்கள் பக்கம் இருக்க வேண்டும். தீமைக்கு ஒருக்காலும் துணை போக மாட்டாள் வாராஹி.

செல்: 98425 50844