ம் அனைவரது உடல் பகுதிகளிலும் ஆறு சக்கரங்கள் இயங்குகின்றன. அவை நம் அன்றாட வாழ்க்கையை இயக்கி வருபவை என்றும், அவை எழுந்து நன்றாக இயங்கு வதாலேயே வாழ்க்கை வளம் பெறுகின்றதென்றும் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத் துதிகளிலிருந்து அறிந்துகொள்ளமுடியும்.

அவற்றுள் அன்னை பராசக்தி சூட்சும வடிவாய் அமர்ந்து நவநாயகர்களைக் கட்டுப்படுத்தி, நம் வாழ்வை சௌபாக்கியங் களோடு அமைத்துச் செயல்படுத்தி வருகிறாள்.

இச்செய்தியை பாரதியார் "எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்.

திருமூலநாயனாரோ, "காற்றில்- விண்ணில்- உடலில் அவளே பரவியிருக்கின்ற நவாக்கரி தேவி' என்று பொருள்படக் கூறினார்.

Advertisment

dd

நவகிரகங்கள் அமர்ந்த சக்கரங்கள் சுழலும் இந்த பூமியில், நாம் அனைவரும் பணம், பொருளைத் தேடியலைந்து வாழ்வை மேன்மேலும் வளப்படுத்திக்கொள்ள சக்கரம் போல சுழன்றுகொண்டிருக்கிறோம். அதற்கு நமது உடலுக்குள் சூட்சுமமாகச் சுழலும் சக்கரங்கள் ஆறினுள் உறையும் நவகிரகங்கள் சக்தி பெற்றிருப்பது அவசியம். இதை ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்திலுள்ள 467-ஆவது நாமாவளி, சக்கரங்களில் தேவி இருப்பதை "சூட்சும ரூபிணி' என்று தெரிவிக்கிறது.

"மூலாதாரைக நிலயாயை நம:' என்று 97-ஆவது நாமாவளி சொல்வதுபோல, மூலா தாரச் சக்கரத்தில் சனீஸ்வரனாகிய ஆயுள் காரகனும் உறவு- ஞானவானாகிய ராகு தேவனும் அமர்ந்திருக்கின்றனர்.

"சுவாதிஷ்டானாம் புஜகதாயை நம:' என்னும் 504-ஆம் நாமாவளியின்படி களத்திர காரகன், தனத்திற்கு அதிபதி சுக்கிரன் அமர்ந் தருள்கிறார்.

அடுத்ததாக மணிப்பூரகச் சக்கரத்தில், "ஓம் மணிப்பூராப்ஜ நிலயாயை நமஹ:' என்ற 495-ஆவது நாமாவளியின்படி, மங்களன் செவ்வாயும், ஞானகாரகனாம் கேதுவும் அமர்ந்திருக்கக் காணலாம்.

அனாகதம் எனும் நான்காவது சக்கரத்தில் ஆரோக்கியக் காரகனாகிய சூரியபகவான் அமர்ந்து அருள் தருவதை 485-ஆம் நாமாவளி, "அநாகதாப்ஜ நிலயாயை, நமஹா:' என்று கூறுகிறது.

விசுக்தி எனும் ஐந்தாவது சக்கரத்தைக் காண்கையில், விஷ்ணு வடிவாய் மாதுல காரகன் புதன்பகவான் வீற்றிருப்பதை 475-ஆவது நாமாவளி, "விசுக்தி சக்ர நிலயாயை நமஹ:' என்று சொல்கிறது.

ஆறாம் சக்கரமான ஆக்ஞாவின் சக்தியைப்பற்றி 521-ஆம் நாமா வளி, "ஆக்ஞா சக்ராப்ஜ நிலயாயை நமஹா:' என்று கூறி, இதில் புகழ் காரகன் சந்திரன் அமர்ந்திருப்பதைச் சொல்கிறது.

ஆறுவிதமான சக்கரங்களோடு நிற்காமல், நமது அங்கம் தெளிவுபெற ஏழாவது சக்கரமான சகஸ்ராரம் இருப்பதையும், அதில் குருபகவான் அமர்ந்துள்ளதையும் "சகஸ்ராராம் புஜாரூடாயை நமஹ:' என்ற 105-ஆம் நாமாவளி விளக்குகிறது. குருபகவான் வாழ்க்கை செம்மையாக ஞானம் தரும் தட்சிணாமூர்த்தியாக இதில் அமர்ந்திருக்கிறார்.

இவர்கள் அனைவரும் நமக்கு பல நலன்களையும் சுகபோக பாக்கியங்களையும் அருளிட, அன்னை பராசக்தி அவர்களோடு இணைந்து சக்தியை வெளிப்படுத்து கிறான்.

மிகவும் அழகாக இச்செய்தியை 775-ஆவது நாமாவளி, மேருவில் உறைபவள் என்பதை "மேருநிலயா' என்று வர்ணிக்கிறது.

மூன்று சக்கரங்களைக் காண்போமா?

மனித வாழ்க்கையானது எல்லா காலத்திலும் இன்பமயமாகவே நகர்வதில்லை. துன்பங்களும், பலவகைத் தடைகளும் பின்தொடர்கின்றன. இவற்றி லிருந்து விடுபட, தாயாக விளங்கும் பராசக்தியை சரணடையவேண்டியதே ஒரேவழி என்று தேவி பாகவதத்திலும் சொல்லப்படுகிறது.

நாளும் கோள்களும் நம்மை என்ன செய்துவிட முடியும் என்ற சக்தி மகிமைப்பாடல் வரிகளின்படி, சக்தியை முறையோடு வணங்கியபடி இருக்கையில் அவற்றின் அசைவுகள்மூலம் இடர்கள் தொடர் வதில்லையே! அதற்குத் தீர்வாக நாம் மூன்று சக்கரங்களைக் கண்டுவந்தால் ஆறாதாரங்களிலுள்ள சக்தி நம் உடலையும் வாழ்வையும் காத்திடுவாள்.

மூன்று சக்கரங்கள் என்று புகழ்ந்து பேசப்படுகிற சக்தி ஆலயங்களிலுள்ள மூன்று மேருக்களைக் கண்டு வணங்கவேண்டும் என்ற சூட்சுமம் ஒருசில சோதிடர்களுக்கும் பக்தர்களுக்கும் மட்டும்தான் தெரிந்திருகிறது.

தொண்டை மண்டலம் என்று சோழர்காலத்தில் சொல்லப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட கிழக்குப் பகுதியில் அந்த மூன்று சக்கரங்கள் வைக்கப்பட்ட சக்தி தேவியின் திருத்தலங்கள் அமைந்து அருளாட்சி செய்கின்றன.

இத்தலங்கள் ஒரே வரிசையில் அமைந்திருக்கின் றன. முழுநிலவு நாளான பௌர்ணமி, வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில், காலை 6.00 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.00 மணிக்குள், தலத்திற்கு மூன்று நெய்தீபங்களை ஏற்றிவைத்து மலர் அர்ச்சனை செய்து, மூன்று சக்கரங்களையும் கண்டு பிரார்த்தனை செய்து வரவேண்டும். மாலை 4.00 மணிக்குத் தொடங்கி இரவு 8.00 மணிக்குள்ளும் சென்று காணலாம்.

முதல் சக்கரம் காணல்

திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தில் தரிசிக்க வேண்டும். தன்னை நாடிவந்து வணங்குகிற பக்தர்களை, ஒரு தாய் தன் கருவிற்குள் பிள்ளையைக் காப்பதுபோல காப்பாற்றுபவள். நாட்டில் மும்மாரி மழை பெய்து பயிர்களைக் காப்பவளாய்க் கருணை மழை பெய்பவள். இத்தலத்தில் 63-வரில் மூர்க்க நாயனார் குருநாதராக குருவருள் தருகிறார். லலிதா சகஸ்ரநாமத்துவதியில் 616-ஆவது நாமத்தில் "ஆதி சக்தியை நம:' என்று சிறப் பிக்கப்படும் தேவி.

இரண்டாம் சக்கரம் காணல்

மாங்காடு கருணை விழிகொண்ட தேவி. காலி மகாலட்சுமி; மாலி ஞானதேவி யான சரஸ்வதியைக் குறிப்பது. இவ்விரு சக்திகளும் இணைந்தவளாக உறைபவளே காமாட்சி. மகாமேருச் சக்கரத்தில் நின்ற நிலையில் காட்சிதரும் அம்பிகை பேறுகள் பதினாறும் தருகின்ற மகாசக்தி. ஆதிசங்கரரே இத்தலத்தின்கண் குருநாதராக ஆசி வழங்கு கிறார்.

மூன்றாம் சக்கரம் காணல்

குன்றத்தூர் கல்யாண காத்யாயனி தேவி. காத்லி திருமணம்; அயனம்- ஆறு மாதங்கள். வழிபடச் செல்லும் பக்தர்களுக்கும் பெண் களுக்கும் ஆறுமாத காலங்களுக்குள் திருமணப்பேறு தந்து "கல்யாணம்' என்ற மகிழ்ச்சியைத் தருபவள். மேருவின்மேல் அமரும் இந்த சக்தி ஒளிதரும் சந்திர காந்தக் கல்லால் ஆக்கப்பட்டவள். மூன்றாம் சக்கரம் அமைந்த இத்தலத்தில் "சிந்தாமணி க்ரு ஹம்' என்ற, தேவியின் சௌந்தர்ய லஹரி வர்ணிக்கும் அஷ்ட லட்சுமிகள் நின்று அருள்தரும் திருமகள் கோபுரம் காட்சிதர, அதற்கும் தீபமிட்டு சுற்றி வந்து வணங்கி பிரார்த்தனை செய்தல் வேண்டும்.

ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் என்ற அம்பிகை யின் வழிபாட்டுக் கல்பம் கூறும்போது, இந்த மூன்று சக்கரங்களுடைய சக்திகளை, "ஆதிசக்தியை, நமஹ' என்று 616-ஆம் நாமாவளியில் கருமாரி தேவியையும், "காமாட்சியை நமஹ' என்று 62-ஆம் நாமாவளியில் காமாட்சி தேவியையும், "காத்யாயன்யை நமஹ' என்று 556-ஆம் நாமாவளியிலும் வரிசைக் கிரமமாகக் குறிப்பிட்டிருக்கிறது.

எனவே, நம் அங்கங்களில் சூட்சுமமாக மறைந்திருந்து செயலாற்றும் நவகிரகங் கள் அமர்ந்துள்ள சக்கரங்கள் நன்றாகத் தடையில்லாமல் இயங்கி, என்றும் ஐஸ்வர்யமான மங்கள கரமான வாழ்க்கையைத் தர மூன்று சக்கரங்களைக் காண இன்றே புறப் படுங்கள்.

நவகிரகங்கள் அவரவர் ஜாதகக் கட்டங்களில் அமர்ந்து தங்கள் தசை களை நடத்தும்போது தோஷம் தந்து நின்றால் சந்தோஷம் கெட்டுவிடும் அல்லவா? ராகு- கேதுக் கள் தரும் காலசர்ப்ப தோஷம், சூரியன் தரும். ஆரோக்கிய பங்க தோஷம், நேத்ர தோஷம், செவ்வாய் தரும் அங்காரக தோஷம், சனி கொடுக்கும் மாங்கல்ய அசுப ஆயுள் பங்க தோஷம், சந்திரன், புதன், குரு தரும் தொழில் விரய தோஷங்கள், கடன் சுமைக்கு ஆளாகின்ற தோஷங்கள் மூன்று சக்கரங்களில் அமரும் தேவியர்களைக் கண்டுவிட்டால் விலகி ஓடிவிடும்.

சென்னை- காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்லும் மக்கள் ஜோதிடர்களின் வழிகாட்டல்படி குடும்பத்துடன் மூன்று சக்கரம் காணுதல் எனும் ஆன்மிக உலாவைச் சென்று வருகிறார்கள்!

செல்: 95511 84326