மக்களால் அறியப்பட்ட பஞ்சாங்கம் என்னும் பஞ்ச அங்கங்கள் ஆகிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகியவற்றுள், கரணம் என்னும் மாபெரும் சூட்சுமத்தைப் பற்றிய சிந்தனையில் பயணிப்போம்.
வாழ்வியல் வழக்கத்தில் பல பழமொழிகளை நாம் அறிந்திருப்போம். அதில் ஒன்று "கரணம் தவறினால் மரணம்' என்பது. நாம் நினைப்பதுபோல் கரணம் என்பது நம் வீட்டுப் பிள்ளைகள் அடிக்கும் குட்டிக்கரணம் அல்ல. இந்த பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட் டுள்ள ஐந்தாவது அங்கமாகிய கரணமாகும்.இதிலிருந்து இந்த கரணத்தின் வீரியத்தை அறிய முடிகின்றது.
வாழ்வின் ஒவ்வொரு அசைவிற்கும் ஆதாரமான கிரகங்கள், நம்மை பஞ்ச பூதங்களின்மூலமாக வழிநடத்துகின்றன. இந்த கிரகங்களின் ஆளுமையினை அறிவது ஜோதிடமாகும். என்ற பொழுதிலும் இந்த ஜோதிடம் என்னும் மாபெரும் பொக்கிஷம் பஞ்சாங்கம் இல்லாமல் தனித்து இயங்க முடியாது.
கரணம் என்பது ஒரு திதியின் இரண்டு பங்குகள் ஆகும். அதாவது ஒரு திதியின் 12 பாகையில் ஆறு பாகை ஒரு கரணமாகும்.
கரணங்கள் மொத்தம் 11. அவை: பவம், பாலவம், கௌலவம், தைதுலை, கரசை, வணிசை, சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்கணம், பத்திரை ஆகியவை ஆகும்.
இதில் ஸ்திர கரணங்கள் நான்கு; சர கரணங்கள் ஏழு ஆகும்.
அதாவது தேய்பிறை சதுர்த்தி திதியில் இரண்டாவது கரணம், அமாவாசை திதியில் இரண்டு கரணம், வளர்பிறை பிரதமையில் முதல் கரணம் மட்டும் ஸ்திர கரணங்களாகும். மற்ற ஏழு கரணங்களும் சர கரணங்களாகும்.
கரணங்கள் ஒவ்வொன் றிற்கும் ஒரு மிருகமும், கிரகமும், அளிக் கப்பட்டுள்ளது.நம்மால் செய்யக் கூடிய ஒவ்வொரு செயல்பாடுகளும் வெற்றியடையவும், நமக்கு நன்மையான பலன்களை நிகழ்த்தவும், நாம் வெற்றிபெறவும் வேண்டுமென்றால் இந்த 11 கரணங் களில் சுபம், அசுபம், பார்த்து காரியங்களை மேற்கொண் டோம் என்றால் எடுத்த காரியத்தில் நிச்சயம் வெற்றி யடைய முடியும்.
கரண நாதனுக்குரிய கிரகம் சுய ஜாதகத்தில் வலிமை இழக்கக்கூடாது.சுய ஜாதகத்தில் எந்தவித மோசமான கிரக அமைப்பு இருந்தாலும், கரண நாதன் என்று சொல்லக்கூடிய கிரகம் நம்மைக் காப்பாற்றியே தீரும். இந்த கரண நாதன் எந்த நிலையில் இருந்தாலும்- அதாவது அஸ்தமனம், மறைவு ஸ்தானம் என்று எப்படியிருந்தாலும் நன்மையே செய்வார்.
திதி சூனியத்தில் அகப்பட்டிருந்தால் மட்டும் சற்று குறைந்த பலன் அளிக்கப்படும். ஒரு மனிதனின் உள்மன ஆசையை சொல்வது திதி. அந்த ஆசையை நிறைவேற்றி தருபவர் கரணநாதன்.
கரணம்
இது ஒரு ஜாதகத்தின் உயிர் போன்றதாகும். ஒவ்வொரு ஜாதகத்தின் கரண நாதனே மிகவும் முக்கியமானவராகக் கணக்கிடப்படுகின்றது.
கரணங்களின் சந்தியில் பிறக்கும் குழந்தைகள் ஊனமாகப் பிறக்கின்றன.
கரணம் சந்திரனின் நகர்வை வைத்து செயல்படு வதால் எண்ண அலைகளின் ஓட்டம் மிகவும் மிகுதி யாகக் காணப்படும்.
ஜனன ஜாதகத்தில் லக்னத்தைத் தவிர 11 பாவத்தையும் இயக்குவது இந்த 11 கரணங்களாகும்.
ஒரு கரணம் என்பது அதிகபட்சமாக 11:30 மணி நேரம்தான் இருக்கும்.
நமது பஞ்சாங்கத்தில்கூட கரணத்தைப் பற்றிய விரிவான விளக்கங்கள் எதுவுமில்லை. தை மாதத்தில் வரும் மகர சங்கராந்தி மட்டும் எந்த கரணத்தில் வரும் என்ற குறிப்பு உள்ளது.
பொதுவாக ஒரு கரணம் முடியும் நேரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு வரும் இரண்டு கரணங்களில், இரண் டாவது கரணத்தின் முடிவு பஞ்சாங்கத்தில் தரப்பட்டி ருக்காது. அந்த அளவிற்கு கரணத்தின் சூட்சுமத்தை மனதில்வைத்து மறைத்து வைத்துள்ளார்கள்.
ஒரு ஜாதகத்தில் கரணநாதனின் நட்சத்திரத்தில் நின்று தசை நடத்தும் கிரகங்களின் தசாபுக்தியில் பெரும்பாலும் நன்மைகளை நிகழ்கின்றன.
மேலும் கரணநாதன் அமர்ந்துள்ள பாவகம் எந்த பாவகமாக இருந்தாலும் அந்த பாகம் சார்ந்த நன்மைகளே பெருமளவு நடைபெறுகின்றது என்பதை நிதர்சனத்தில் காணமுடிகின்றது.
பதினோரு கரணங்களுக்கும் உண்டான மிருகம், கிரகம், தெய்வம் ஆகியவை பின்வருமாறு:
பவம் கரணம்: சிங்கம், செவ்வாய், லட்சுமி நரசிம்மர்.
பாலவ கரணம்: புலி, ராகு, சாஸ்தா மற்றும் காவல் தெய்வ வழிபாடு.
கௌலவ கரணம்: பன்றி, சனி, பூவராகப் பெருமாள்.
தைதுலை கரணம்: கழுதை, சுக்கிரன், ஜேஸ்ட்டா தேவி.
கரசை கரணம்: யானை, சந்திரன், விநாயகர்.
வணிசை கரணம்: காளை மாடு, சூரியன், நந்தீஸ்வரர்.
சகுனி கரணம்: காகம், சனி, திருநள்ளாறு.
சதுஷ் பாதம் கரணம்: நாய், குரு, ருத்ரன் மற்றும் பைரவர்.
நாகவம் கரணம்: பாம்பு, ராகு, நாகராஜன்.
கிம்ஸ்துக்னம் கரணம்: புழு, புதன், தன்வந்திரி.
பத்திரை கரணம்: தேள், செவ்வாய், வைத்தீஸ்வரன் முருகன் கோவில்.
மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு கரணத்திற்கும், உண்டான மிருகங்களை அந்த கரணத்தைச் சார்ந்தவர்கள், அடிப்பதோ வதைப்பதோ கூடாது.
அப்படி செய்தால் பல இன்னல்கள் இவர்களின் வாழ்வில் சூழும்.
இந்த கரணநாதனின் மிருகங்களை, உருவமாகவோ, போட்டோவாகவோ, அடிக்கடி பார்க்கும் சூழலை ஏற்படுத்திக்கொள்வதும், இந்த மிருகங்களுக்கு உணவளிப்பதும், வாழ்வில் பெரும் பொருளாதார வளர்ச்சியும், பல ஆனந்தமான சூழல் களையும் தந்து இன்னலைத் தீர்த்து இன்பத்தைத் தரும்.
செல்: 80563 79988