குலம் என்றால் உறவு முறையாலும், வம்சாவளியாலும், இணைக்கப்பட்டுள்ள ஒரு வம்சக் குழுவாகும்.
அந்தக் குழுவின் தலைசிறந்த, தன்னை அர்ப் பணித்த, ஒரு உறுப்பினரே, அந்த குலத்திற்கு வழிபாட்டுக் கருப்பொருளாகத் திகழ்வார்.
தனது சமூகத்திற்காக தனது சுக, துக்கங்களை, இழந்து தன்னையும் இழந்தவர்களை, அந்த வழித் தோன்றல்களில் வந்தவர்கள் வழிபாட்டு இறையாக ஏற்றுக் கொண்டு பயணித்தார்கள். அவர்களே குலதெய்வமாகவும், காக்கும் கடவுள்களாகவும், வழிவழியாக விளங்கி வருகின்றனர்.
குலதெய்வம் என்ற ஒற்றைச் சொல்தான் நம் பிறப்பின் மூல ரகசியமே. அதாவது உசஆ. நமக்கு முன் தோன்றிய உசஆ மூலக்கூறுகளே நமது குலதெய்வமாக வருகின்றனர்.
தன்னை அறிந்தார்க்கு தனக் கொரு கேடில்லை என்பது முதுமொழி தன்னை அறிதல் என்பது தனது உசஆ-வான குலதெய்வத் தையும் அறிவதேயாகும்.
இந்த பூமியில் ஜனிக்கும் ஒவ்வொரு ஜீவனும் குலதெய்வம் என் கின்ற இறைசக்தியின் வளையத்தில் பாதுகாக்கப்பட்ட பெட்டகமாக அடுக்கிவைக்கப்பட்டு உள் ளோம். காலத்தின் கட்டாயத்தினாலும், கர்மாவின் கட்டாயத்தினாலும், இறைசக்தி என்னும் வளையத்தை விட்டு நாம் தாமாகவே விடுவிக்கப்பட்டு விடுகிறோம்.
அப்படி விடுவிக்கப்பட்ட ஜீவனாகிய நமக்கு, இந்த உலகத்தில் கிடைக்கவேண்டிய அனுமதிக்கப்பட்ட, இன்பத்தையும், சுகத்தையும்கூட அடையமுடியாமல் திணறிக்கொண்டிருக்கிறோம்.
குலதெய்வத்தின் அருமையினை, வாழ்க்கைக்கு வளமான வழிவகுத்தலித்த வள்ளுவன், ஐந்தாம் அதிகாரத்தில் 43-ஆவது குறளில் கூறியதைக் காணலாம்.
"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா ரோம்பல் தலை.'
அதாவது வாழ்வின் வளமைக்கு ஐந்து பேருடைய அருள்வேண்டும் என்று கூறுகிறார். அதில் முதலாவதாக தென்புலத்தார் என்று கூறப்படும் நமது முன்னோர்கள் ஆகும். பிறகு தான் தெய்வம், விருந்தினர், சுற்றத்தார் என்று வரிசைப் படுத் கிறார். இதிலிருந்து குல தெய்வத்தின் முக்கியத்துவத்தினை நாம் அறிய லாம்.
மேலும் ஊழ்வினையை உயர்த்திக் கூறும் சிலப்பதிகாரத்தில்-
"ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து,
அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து, ஒள்ளெரி உண்ண
உரைசால் மதுரையோடு அரைசு கேடுறும்'
என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஆடி மாதம் தேய்பிறையில் அழல் என்கின்ற கார்த்திகை நட்சத்திரம், குட்டமாக- அதாவது சிறியதாக இருக்கும் அஷ்டமி திதி வெள்ளிக் கிழமையில் மதுரை எரிக்கப்படும், அரசு கேடுறும் என்று, மதுராபுரி மக்களின் குலதெய்வமான, அங்கை யர்க்கன்னி மதுரை தீக்கிரையாகும் நாளினையும், அன்றைய வானியல் நிகழ்வையும், முன்கூட்டியே உரைத்ததாக, சிலம்பு குலதெய்வத்தின் பெருமையினை எடுத்துரைக்கின்றது.
இதுவே குலதெய்வத்தின் உண்மையான நிலையாகும். தங்களின் குலத்தில் வரும் ஜீவன்களைக் காப்பதே அவர்களின் முதல் கடமையாகத் திகழ்கிறது என்பதனை குலதெய்வத்தின் அருள் பெற்றவர்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.
ஒருசில குடும்பங்கள் சூழ்நிலை யின் காரணமாக குலதெய்வத்தினை தொடர்ந்து வழிபடமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். அதாவது ஒரு குடும்பத்தில் பெண் வாரிசுகள் மட்டுமே உள்ள நிலையில், அவர் களின் குலதெய்வம் தொடர்ந்து வழி படும் சூழ்நிலையிலிருந்து விலகி நிற்கின்றது. மேலும் வாரிசே இல்லாத ஒரு குடும்பத்திலும், அந்த குலதெய்வத்தின் வழிபாட்டு முறை துண்டிக்கப்பட்டு விடுகிறது.
ஆனால் ஒருசிலர் வெளியூர், வெளிநாடுகள் சென்றுவிடுவதாலும், பங்காளிகளுடனான தீர்க்கமுடியாத தகராறுகளாலும், குலதெய்வ வழிபாட்டினை விட்டுவிடுகின்றனர்.
ஆனால் அவர்களின் வாரிசுகள் படும் துயரமானது மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது.
ஒரு குடும்பத்தில் குலதெய்வத்தின் அருள் இல்லையென்றால், கிடைக்கவேண்டிய நியாயமான சுகங்கள் கிடைக்கப்பெறு வதில்லை. வஞ்சத்தின் காரணமாக மாந்திரீகம், தாந்திரீகம் போன்ற வழியில் ஒருவரை அழிக்கும் நோக்கில் செயல்படும் எதிரிகள் இருக்கும்பட்சத்தில், குலதெய்வம் மட்டுமே அவர்களைக் காத்து நிற்கும்.
சரி; குலதெய்வ அருள் ஒரு நபருக்கு உள்ளதா- இல்லையா என்பதனை எவ்வாறு அறியமுடியும்? ஒரு ஜாதகத்தில் ஐந்தாமிட மும், சனியுமே, குலதெய்வத்தினை எடுத் துரைக்கும். குலதெய்வ தோஷம் அல்லது குலதெய்வ சாபம் இருக்கிறதா, என்பதனை ஐந்தாம் பாவகத்தை ஆராய்வதன்மூலம் அறியலாம். உதாரணமாக, ஐந்தாம் பாவகாதிபதி நீசம், அடைந்திருந்தாலோ, பாவ கிரகங்களுடன் சேர்க்கை பெற்றிருந் தாலோ அல்லது ஐந்தாம் பாவாதிபதி மாந்தியுடன் இணைந்திருந்தாலோ, குலதெய்வ தோஷம் அல்லது குலதெய்வ சாபம் உள்ளது என்பதனை அறியலாம். மேலும் சனியின் வீடான கும்பத்திலோ அல்லது மகரத்திலோ சூரியன் அமர்வதும் குலதெய்வ தோஷமே.
மேலும் ஐந்தாமிடத்தில் பாவ கிரகங்களின் சேர்க்கையும் இதனை எடுத்துரைக்கும். பிரசன்னத்தில் ஐந்தாம் அதிபதி பாதகாதி பதியாக வந்தாலோ, ஐந்தாம் பாவகத்தில் பாதகாதிபதி நின்றாலோ, உடன் மாந்தியின் தொடர்பிருந்தாலோ குலதெய்வம் அனுக் கிரகம் இல்லை என்பதனை உணரலாம்.
ஒருசிலருக்கு குலதெய்வம் என்ன என்பதே தெரியாமல் இருக்கும் அல்லது பெருமாள், சிவன், முருகன் என்று கூறுவார்கள். ஒரு பொழுதும் இவர்கள் குலதெய்வமாக வர மாட்டார்கள். ஐந்தாமிடம் ஆண் வீடா அல்லது பெண் வீடா- ஐந்தாமதிபதி ஆண் கிரகமா அல்லது பெண் கிரகமா- அவர்கள் எந்த பாவகத்தோடு தொடர்பு கொண்டுள் ளார்கள்- அந்த பாவகத்தின் இருப்பிடம் எது என்பதனை அறிந்து குலதெய்வத்தை எளிதில் அறிந்துவிடலாம்.
மேலும் குலதெய்வத்தை வழிபட்டும் குடும்பத்தில் எந்தவிதமான சுபிக்சமான சூழ்நிலையும், உருவாகாமல் இருக்கிறது, என்பவர்களுக்கு ஒரு அருமையான பரிகாரம்.
குலதெய்வம் ஆண் தெய்வமாக இருந்தால் அமாவாசை அன்றும்,, பெண் தெய்வமாக இருந்தால் பௌர்ணமி அன்றும், இந்த பரிகாரத்தினைச் செய்யவேண்டும்.
ஒன்பது தேங்காய் எடுத்துக்கொண்டு அதனை சமமாக வெட்டி கண் உள்ள பக்கத்தில் நெய்யூற்றி குலதெய்வ கோவிலில் மூன்று அமாவாசைகள் அல்லது பௌர்ணமி நாட்களில் தீபமேற்றி வர தீராத வினையும் தீர்ந்து வளமான வாழ்க்கை அமையப் பெறும்.
செல்: 80563 79988