ல்லை தெய்வ வழிபாடு என்பது இன்றைய சூழ்நிலையில் மக்களின் நம்பிக்கையினாலும், உணர்வினாலும், பின்னப்பட்ட ஒரு ஆழ்ந்த சடங்காக இருந்துவருகின்றது.

பல காலங்களாக நம் தமிழ் மண்ணில் எல்லை மற்றும் காவல் தெய்வங்களின் வழிபாடு வேர் ஊன்றி விருட்சமாகி உள்ளது. இது மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவும் அமைந்துள்ளது.

புராணத்தில் வால்மீகி இராமாயணத்தில் வரும் சுந்தர காண்டத்தில் இலங்கையின் காவல் தெய்வமாகிய லங்கா லக்ஷ்மி, அனுமன் இலங்கையில் நுழைவதற்கு தடையாக நின்று, பல கேள்விகளைக் கேட்டு, அதற்கு பதில் அளித்த பின்னரே அனுமனுக்கு இலங்கையில் அனுமதியை அளித்ததாக ஒரு நிகழ்வு அமைந்துள்ளது.

dd

Advertisment

அதேபோல் சிலப்பதிகாரத்தில் மதுரையின் காவல் தெய்வமான அங்கையர் கன்னி கார்த்திகை நட்சத்திரம் அஷ்டமி திதியில் மதுரை தீக்கிரையாகும் என்று கூறியதாகவும் சிலம்பு எடுத்துரைக்கின்றது.

இதிலிருந்து மக்களும் காவல் தெய்வங்களுக்கும் இடையிலான அடிப்படை பிணைப்பினை அறியமுடிகின்றது.

குறிப்பாக தென்னிந்தியாவில் ஒரு எல்லை தெய்வம் அல்லது காவல் தெய்வம் என்பது கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள கிராமத்தின் பாதுகாப்பிற்காக அமைக்கப்படுகிறது என்பது ஒரு பொதுவான முறையாகும்.

பொதுவாக தெய்வங்களில் காவல் தெய்வமாக அய்யனார், மதுரை வீரன், தொட்டிச்சி அம்மன், சுடலைமாடன், பாவாடைராயன், கருப்பண்ணசாமி, முனீஸ்வரன், இசக்கியம்மாள், பேச்சியம்மாள் போன்ற தெய்வங்களே பெருமளவு காவல் தெய்வங்களாகவும், எல்லை தெய்வங்களாகவும், அறியப்படுகின்றது.

மேற்கூறிய தெய்வங்கள் ஒரு சமூகத்தின் முன்கொடியாக இருந்து அந்த சமூகம் மற்றும் ஊரை காப்பாற்றுவதற்காக தங்களின் உடமை மற்றும் உயிரை நீத்தவர்களாக இருக்கக்கூடும் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. மிகவும் பழமைவாய்ந்த சிந்து சமவெளி நாகரிகங்களிலும் இந்த எல்லை காவல் தெய்வங்களுக்கு உண்டான சான்றுகளும் மக்கள் அவர்களை வழிபட்டதற்கு உண்டான உருவ அமைப்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நமது ஊரின் காவல் தெய்வம்தான் ஒரு பிரச்சினை வெளியில் இருந்து வருவதை தடுக்கும் முதல் சக்தி.

அதனால்தான் மக்கள் இன்றும் கிராமப்புறங்களில் ஆடி மாதத்தில் எல்லை தெய்வத்திற்கும் பொங்கல் வைத்து வழிபட்டு தங்களின் ஒரு வருட வேண்டுதலை சமர்ப்பிக்கின்றன.

மேலும் நமது வாழ்வில் ஏற்படும் திடீர் அசம்பாவிதங்கள், அக்கம் பக்கத்து வீட்டுக்கு வீட்டுடன் ஆன சண்டை, சச்சரவு, மீள முடியாத, என்னவென்றே யூகிக்கமுடியாத முடியாத துயரங்களை, அழிக்கும் ஆற்றல் போன்றவற்றை இந்த எல்லை காவல் தெய்வங்களை வழிபடுவதன்மூலமே ஒருவரால் அடைந்துவிட முடியும். பலதரப்பட்ட இன்னலை தீர்த்துக்கொள்ள முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமது கிராம மக்களிடையே ஆழமாக பொதிந்துள்ளது.

ஒருவர் வசிக்கும் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு வியாபார நிமித்தமாகவோ பணி நிமித்தமாகவோ அல்லது கல்வி இன்னும் சில வேலைகளின் நிமித்தமாக சென்று வரக்கூடிய சூழல் அமையப்பெறும், சூழ்நிலை இன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் இன்னல்களை துடைக்கும் முதல் சக்தியே இந்த எல்லை காவல் தெய்வங்கள்தான்.

அதோடு மட்டுமல்லாமல் ஒரு கிராமத்தில் உள்நுழையும் களவு, பஞ்சம், பிணி போன்றவற்றை போராடி தடுத்து நிறுத்தும் சக்தியும், இந்த எல்லை தெய்வங்களின் வசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த எல்லை தேவதைகளுக்கு ஜாதி அல்லது மதம் குறிப்பிடவில்லை என்பதனால் அந்த ஊரிலுள்ள அனைவருக்கும் இந்த எல்லை தெய்வம் ஒரு உறவாகவே அமைந்துவிடுகின்றது.

அந்த கிராமத்தின் சூழலுக்கு ஏற்றவாறு எல்லை தெய்வத்திற்கு அருவா, கம்பு, ஈட்டி, பெரிய அளவிலான சிலைகள் வரை அனைத்து வகையான வழிபாடும் மேற்கொள்ளப்படுகின்றது. பெரும்பாலும் எல்லை தெய்வங்களுக்கு பலியிடும் வழிபாடு வகுக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு எல்லாவித சூழ்நிலையும் சரியாக அமைந்தும் குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலையும் வருமானத்தில் தடையும் நோய்வாய்ப்பட்ட உறவுகளும் அமைந்திருந்தால் அவர்கள் பௌர்ணமி தினத்தில் விரதமிருந்து அந்த கிராம எல்லை தெய்வத்தின் உடைய ஆலயத்தில் இரவு 7 மணிக்கு மாவிளக்கு போட்டுவிட்டு வீட்டில் சிறிய அளவிலான படையல் போடவேண்டும். படையில் போடும்பொழுது ஏற்றப்படும் தீபமானது அன்று இரவு முழுவதும் எரியும் வகையில் அமைக்கவேண்டும். இரவில் நிச்சயமாக விழிக்கும் சூழ்நிலை உருவாகும். அந்த தருணத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை வாசலில் நின்றுகொண்டு தலையை சுற்றி கைகளால் உடைத்துவிட்டு கை, கால் சுத்தம் செய்துவிட்டு வீட்டினுள் வந்து ஏற்றிய தீபத்தை பார்த்து வணங்கிவிட்டு உறங்கச் செல்லலாம். இந்த பரிகாரத்தின்மூலம் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள அனைத்துவித இன்னல் களும் தீர காவல் தெய்வம் துணையாக நிற்கும்.

செல்: 80563 79988