சுமார் 62 வயதுடைய ஒரு தாய், 35 வயதுடைய தன் மகளுடன், நாடியில் பலன்காண வந்திருந்தார். இருவரையும் அமரவைத்து என்ன "காரணத்திற்காக பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
அந்த தாய், "எனது கணவர் இறந்து விட்டார். இப்போது நானும், எனது மகளும், மட்டும் ஒன்றாக வசித்துவருகின் றோம். இவர் திருமணத்திற்கு எத்தனையோ மாப்பிள்ளைகள் பார்த்தும், திருமணம் அமையாமல், தடையாகிக்கொண்டே வருகிறது. ஜோதிடர்கள் கூறியபடியே அனைத்து, கிரக தோஷப் பரிகாரங்களை யும், பல கோவில்களில், தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் செய்துவைத்தும், என் மகளுக்கு திருமணம் கூடிவரவில்லை.
என் மகளின் தோழி ஒரு பெண், அகத்தியர் ஜீவநாடியில் பலன் பார்த்தால், இவளின் திருமணத் தடைக்கு காரணமும், திருமணம் செய்ய வழிமுறைகளும் தெரியும் என்று கூறி னாள். அதனால்தான், நாடியில் பலன்கேட்க வந்துள்ளோம்'' என்று கூறினார்.
ஜீவநாடி ஓலை கட்ட
சுமார் 62 வயதுடைய ஒரு தாய், 35 வயதுடைய தன் மகளுடன், நாடியில் பலன்காண வந்திருந்தார். இருவரையும் அமரவைத்து என்ன "காரணத்திற்காக பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
அந்த தாய், "எனது கணவர் இறந்து விட்டார். இப்போது நானும், எனது மகளும், மட்டும் ஒன்றாக வசித்துவருகின் றோம். இவர் திருமணத்திற்கு எத்தனையோ மாப்பிள்ளைகள் பார்த்தும், திருமணம் அமையாமல், தடையாகிக்கொண்டே வருகிறது. ஜோதிடர்கள் கூறியபடியே அனைத்து, கிரக தோஷப் பரிகாரங்களை யும், பல கோவில்களில், தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் செய்துவைத்தும், என் மகளுக்கு திருமணம் கூடிவரவில்லை.
என் மகளின் தோழி ஒரு பெண், அகத்தியர் ஜீவநாடியில் பலன் பார்த்தால், இவளின் திருமணத் தடைக்கு காரணமும், திருமணம் செய்ய வழிமுறைகளும் தெரியும் என்று கூறி னாள். அதனால்தான், நாடியில் பலன்கேட்க வந்துள்ளோம்'' என்று கூறினார்.
ஜீவநாடி ஓலை கட்டை பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி, பலன்கூறத் தொடங்கினார்.
இந்தப் பெண்ணின் திருமணத் தடைக்கு, இரண்டு காரணங்கள் உண்டு. அவற்றை தாயும், மகளும் அறிந்துகொள்ளட்டும். இந்த மகளின் முற்பிறவியில், தனது சாதியல்லாத, வேறு சாதியைச் சேர்ந்த ஒருவனிடம் நட்புகொண்டு, அவனையே திருமணம் செய்துகொள்வதாக, சத்தியம்செய்து பழகிவந்தாள். ஆனால் இவளின் தந்தையும் குடும்ப உறவுகளும், வேறு சாதியை சேர்ந்த ஒருவனுக்கு திருமணம் செய்துவைக்க மறுத்து, இவள் சாதியைச் சேர்ந்த ஒருவனுக்கு திருமணம் செய்துவைத்தார்கள்.
இவள் திருமணம் முடிந்து, கணவனுடன் இணைந்து குடும்பம் நடத்தினாள். குழந்தைகள் பிறந்தன. ஆனால் தன் இறப்புவரை, தான் விரும்பி பழகியவனை மறுபடியும் சந்திக்கவேயில்லை. ஆனால் அவனை இவளால் மறக்கமுடியவில்லை. அவனை ஆத்மார்த்தமாக நினைத்து, தன் மனதின் உள்ளே வைத்து, அவன் நினைப் பிலேயே அவனுடன் வாழ்ந்து இறந்தாள்.
முற்பிறவியில், இவள் தன் கணவனுக்கும் துரோகம் செய்யவில்லை, தான் விரும்பியவனையும் மறக்கமுடியவில்லை. அவனுக்குத் தந்த வாக்கினை, அடுத்த பிறவியிலாவது, நிறைவேற்றி தன் ஆசைப்படி, அவனை மணந்து வாழவேண்டுமென்று மனதில் தவமாக எண்ணி வாழ்ந்ததால், அவளின் முற்பிறவி தவப்பலன், இப்பிறவியில் நிறைவேற, தன் முற்பிறவியில் விரும்பிப் பழகியவனையே, இப்பிறவியில் கணவனாக அமைந்து வாழவேண்டுமென்று நிர்ணயிக்கப்பட்டு அமைந்துள்ளதால்தான், இவளை பெண் பார்த்து சென்றவர்கள் யாரும், இவளை திருமணம் செய்துகொள்ள முன்வராமல் விதி தடுக்கின்றது. இந்த உண்மையை அறியாமல் இந்த தாய் பரிகாரங்கள் பலன் தரவில்லை என்று புலம்புகின்றாள்.
இந்தப் பெண்ணின் திருமணத் தடைக்கு இன்னும் ஒரு காரணம் உண்டு. முற்பிறவி யில், இந்த மகள் விரும்பிய வேறு சாதிப் பையனை, திருமணம் செய்துகொள்ள, தந்தையும், குடும்பத்து உறவு களும் எதிர்த்து, தடுத்தபோதும், இவளின் தாய் மட்டும், தன் மகள் விரும்பியவனையே மணந்து, சந்தோஷமாக வாழவேண்டும் என்று மகளின் விருப்பத்திற்கு ஆதரவாக இருந்தாள். ஆனால் தாயின் பேச்சை யாரும் மதித்துக் கேட்கவில்லை.
முற்பிறவியில் மகளின் விருப்பத்தை தடுத்த தந்தை இறந்து போனான். தன் மகள்தான் விரும்பியவனை மணந்து, மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என எண்ணிய தாய் உயிருடன் இருக்கின்றாள். தன் மகளின் திருமணம் முடிந்தபின்பும், இந்த தாய், தன் மகள், மருமகனுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வதைப் பார்த்து, அவர்களுடன் ஒன்றாக, ஒரே குடும்பமாக வாழவேண்டும் என்பது தான் இப்பிறவியின் விதி. இந்த மகளை மணந்துகொள்பவன், திருமணத்திற்குப்பின்பு தன் குடும்பத்தாரைப் பிரிந்து, இவளைத் தன் தாய்போல் எண்ணி, மரியாதை தந்து, தன்னுடன் வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்பது அவன் விதி.
இந்த மகளுக்கு இவள் சாதியைச் சேர்ந்தவன் கணவனாக அமைய மாட்டான் என்று கூறியவர், முற்பிறவியில் இவள் விரும்பியவனை அறிந்துகொள்ளும் வழிமுறைகளையும், அடையாளத்தையும் கூறி, எப்படி திருமணம் செய்யவேண்டும்? திருமணத்திற்குப்பின்பு குடும்ப வாழ்வில் கடைப்பிடித்து, வாழவேண்டிய வழிமுறைகளைக் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந் தார்.
தாயும், மகளும் அகத்தியர் கூறியபடியே அனைத்து வழிமுறைகளையும் கடைப் பிடித்து வாழவோம் என்று கூறி, அவரை வணங்கி விடைபெற்றுச் சென்றனர்.
ஒருவரின் திருமணத்தடை, தாமத்திற்கு ஒவ்வொருவிதமான காரணங்கள் உண்டு என்றும், கிரக தோஷங்களால் தடை, பாதிப்பு கள் உண்டாவது இல்லையென்றும், ஒவ்வொருவரின் முற்பிறவி நன்மை- தீமை செயல்களும், ஆசை, நிராசைகளும், வேண்டுதல்களும்தான், இப்பிறவி வாழ்வில் செயல்பட்டு பலன் தருகின்றது என்பதை நானும் அறிந்துகொண்டேன்.
செல்: 99441 13267