பஞ்சபூதங்களின் ஆர்ப்பரிப்பில் அற்புதங்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உலகளாவிய ஜோதிடம் மற்றும் உயிர் இயக்கங்களின் சுவாசமாக, ஜீவிதத்தை உயிர்ப்பிக்கும் ஆற்றல் காற்றைச் சார்ந்ததே.
தவழும் தென்றலாகவும், சீறும் புயலாகவும், தன்னை மாற்றி கைசேர்க்கும் மகத்தான இயல்பைக்கொண்டு மூச்சாக உயிர் அளிக்கும் உயிர்க் காற்றாய் உள்கலந்து உலாவிக்கொண்டு திகழ்கின்றது.
பஞ்சாங்கத்தில் நாள், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் என்கின்ற பகுப்பில் கரணத்தை கைக்கொண்ட காற்று மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற அவையங் களில் மூக்குக்கும், காற்றிற்கும், கரணத்திற் கும், பாலம் அமைத்துக்கொண்டு பயணிக் கின்றது.
வரி வடிவத்தை தழுவுவதற்குமுன்பு ஒ- வடிவமான வேதங்களும், உபநிடதங்களும், ஏன் நாம் பேசுகின்ற வார்த்தைகளும்கூட காற்றின் துணைகொண்டுதான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது.
மாபெரும் சாகசங்களை நிகழ்த்தும் மந்திர உச்சாடணங்கள் காற்றின் முழு சக்தியின் துணைகொண்டுதான் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதி-ருந்து காற்றின் ஆற்றல் நமக்கு புலப்படும்.
ராசிகளில் மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்றும் காற்று ராசிகள் ஆகும்.
காற்று ராசியில் பிறந்தவர்கள் தங்களின் எண்ணங்களுக்கு சிறகு பூட்டி விண்ணைத் தாண்டி பறக்கச் செய்யும் ஆற்றல் உடையவர் கள்.
குறிப்பாக மிதுன புதன், துலா சுக்கிரன், கும்ப சனி என்று வாடை, தென்றல், புயல் என்று பரிமாணப்பட்டு வீசும் தன்மையில் மிளிர்கின்றது.
மிதுன காற்று கவி, இசை, கலை என்று பயணித்து இரட்டைத்தன்மையில் ஒரு நாணயத் தின் இரு புறங்களை ஆராயும் தன்மையுடையது. கலைகளுக்கும், நுண்ணிய அறிவுக்கு, அதிபதி யான புதன் வீட்டில், வேகத்தை பறைசாற்றும் செவ்வாயின் மிருகசீரிடமும், பிரம்மாண்டத்தை அருளும் ராகுவின் திருவாதிரையும், அறிவின் ஆளுமையை அளிக்கும் குருவின் புனர்பூசமும், சமூகத்தில் ஒரு கௌரவமான இடத்தில் இவர்களை நிலைநிறுத்தி வைத்திருக்கும்.
அவசியமான உரையாடலும், மற்றவர்களுக் கான அர்ப்பணிப்பையும், வழிகாட்டும் உள்ளமும் படைத்தவர்கள் இவர்கள்.
எந்த விஷயத்தையும் ஆழ்ந்து கற்காமல் மேலோட்டமாக நுனிப்புல் மேயும் குணமுடையவர்கள்.
காலங்களில் அவள் வசந்தம் என்பதற்கு இணங்க மே 21 முதல் ஜூன் 20 வரையுள்ள காலம் மிதுன காலமான வசந்த காலத்தை குறிக்கின்றது.
ஒரு பருவத்தின் இறுதியை தன்னகபடுத்தி ஆண்டுகொண்டு இனிமையான வாழ்விய-ல் வளம் பெறும் ராசி மிதுனம் ஆகும்.
பொதுவாக ஐயோ அவர்கள என்கின்ற பொறாமைக்கு உட்பட்ட வர்களாக இவர்கள் திகழ்கின்றனர். இதனால் அதீத திருஷ்டியை எதிர் கொள்ளும் தன்மை இவர்களுக்கு அமைந்து விடுகின்றது.
துலாம்
காமத் திரிகோணத்தில் நளினம்மிக்க நங்கையாக திகழ்கின்ற சுக்கிரன், மறைமுக ராசியான துலாமாக திகழ்கின்றது. காற்றில் தென்றலாகி, நடைபோடும் இந்த ராசி இசைக் கருவிகளின் இருப்பிடமாக உள்ளது.
சபாஷ் என்று வெளிப்படையாக கைத்தட்டி ரசிக்காமல் உதடு ஓரம் புன்னகையால் மர்மமாக ரசிக்கும் தன்மையுடையது. எப்பொழுதும் தனக்குள் ஒரு ரகசியத்தை கையாளும் துலாம், சின்னமாக நீதியை பறைசாற்றும் தராசினைகொண்டு இருந்தாலும்,
அவ்வளவு நியாயமாக நடந்துகொள்வதில்லை. அழகின் ஆளுமையில் சுக்கிரனும், தன்னை முழுமையாக வெளி காட்டாத சித்திரை, ரகசிய மிக்க சுவாதி, புத்திக்கூர்மையை பறைசாற்றும் விசாகம் என்று பலமான கூட்டணி மற்றவர்களை சற்று யோசிக்கவே வைக்கின்றது.
காலபுருஷனுக்கு மாறக ஸ்தான அதிபதி யான சுக்கிரன், ஏழுக்கும் பொறுப்பேற்று பல இன்னல்களை இளமையைக் காலங்களிலேயே அனுபவிக்க செய்துவிடுகின்றது.
மேலும் செப்டம்பர் 23-ஆம் தேதிமுதல் அக்டோபர் 22-ஆம் தேதி வரை துலா தனது காலமாக மாற்றி இலையுதிர் காலத்தோடு தன்னை பிணைத்துக்கொள்கின்றது.
பெரும்பாலும் ஊர் சுற்றுதல், புறம் பேசுதலும் இவர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாகும்.
கும்பம்
கும்பக்காற்று புயலாகி மற்றவர்களை ஆண்டு ஆளுமைசெய்யும் தன்மையுடையது. புயலுக்கு பின்புதானே அமைதி என்றார்கள். இவர்களின் அமைதிக்கு பின்பு பெரிய புயலே ஒளிந்துகொண்டு உள்ளது.
பிடிவாதமும், அடங்க மறுப்பதும், இவர்களின் ஆதி குணமாகும்.
பெரும்பான்மையின் வசம் இவர்கள் பயணிப்பது கிடையாது. சிறுபான்மையில் தன்னை தலைமை ஏற்று வழிநடத்துபவர்கள். எனக்கென்று தனி தேசம், என் நாடு, என் மக்கள் என்று தனியாக வாழ துணியும் தூயவர்கள்.
இந்த ராசியின் சின்னமாக ஒரு மகத்தான கௌரவத்தை வழங்கும் கும்பம் முன் வந்துள்ளது.
உள்ளே என்ன ஒளிந்துள்ளது என்பதை யாராலும் கண்டுபிடிக்கவே இயலாது. லாபத்தை கையகப்படுத்தும் மனப்பாங்கு இவர்களுக்கு சற்று உயர்வாக காணப்படும். எங்கும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னை முன்னிலைப்படுத்தி சாதிக்கவும் இவர்களால் முடியும்.
சனி வீட்டில் அமையப்பெற்ற அவிட்டம், சதயம், பூரட்டாதி என்கின்ற இந்தக் கூட்டமைப்பு தீவிரத்தைக் காட்டும் மனப் பான்மையை இவர்களுக்கு சற்று அதிகமாகவே அளிக்கும்.
மேலும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 19 வரை குளிர்காலத்தின் இடைப்பட்ட இந்த காலத்தை கும்பம் தனதாக்கி ஒரு பெரும் தீவிரத்தை பரப்பும் துணிவில் மிளிர்கின்றது இத்தனை சிறப்புவாய்ந்த காற்று ராசிகள் தங்களை எவ்வாறு மெருகேற்றிக் கொள்ளும்; காணலாம் வாருங்கள் மூன்று காற்று ராசிகளிலும், ராகு தனது முழு நட்சத்திரங்களை பதிய வைத்துள்ளார். மேலும் செவ்வாயும், குருவும் கைகோர்ப்பதனால் மந்திரங்கள் மற்றும் வாசனை திரவியங்கள், ஊதுவத்தி, சாம்பிராணி, மூலமும் தங்களின் ஆகப்பெரிய வ-களை மறுத்து வளமையை சேர்க்கமுடியும்.
மந்திரமா? எங்களுக்கு எப்படி தெரியும் என்று தயவுசெய்து யோசிக்க தேவையில்லை. சில அற்புதமான அட்சரங்களின் கோர்வையில் அழகான எளிய மந்திரங்கள் நம்மவர்களால் அருளப்பட்டுள்ளது.
அவற்றில் ஆதிசங்கரரின் அருளால் வழங்கப் பட்ட கனகதாரா ஸ்தோத்திரம் வளமான பொருளாதாரத்தை சேர்க்கும் வல்லமை உடையதாகும். இந்த மந்திரத்தை வெள்ளிக் கிழமைகளில் படித்தோ அல்லது கேட்டோ வர சகல சௌபாக்கியங்களும் கிட்டும். இந்த சமஸ்கிருத மந்திரத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் வாரா ஸ்ரீ அவர்களாகும்.
ர, க, ல, ம ஆகிய அட்சரங்களின் ஆளுமை அதிகம் கையாளப்பட்டு மனித மூளை நியூரான்களில் சில அதிர்வுகளை உண்டாக்கி சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்க இந்த மந்திரம் பெருமளவு உதவிசெய்கின்றது.
திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப் பதிகம் ஏ, ர, ன, ம, த, ய என்கின்ற அட் சரங்களின் கோர்வையினால் பெரும் நோய் களை தீர்க்கும் ஆற்றல் படைத்தது.
இதில் வில்வகாய், திருநீற்று பச்சை, நாட்டு மாட்டு சாணம் ஆகியவற்றின் கூட்டினால் செய்யப்பட்ட சுத்தமான விபூதியை உள்ளங்கை யில் வைத்துக்கொண்டு இந்த பதிகத்தை கூறி நெற்றியில் இட்டுக்கொள்ள பசிப் பிணிமுதல் ஆன்ம பிணிவரை அகலும் என்பதில் ஐயம் ஏதுமில்லை.
இதேபோன்று சகல சௌபாக்கியங் களையும் அருளக்கூடிய அபிராமி அந்தாதி, ல-தா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம், கந்த குரு கவசம் என்கின்ற ஏதாவது ஒன்றின் வசம் பயணித்து, காற்று ராசிகள் உயர் களம் புகுந்து வெற்றிபெற முடியும்.
மேலும் தூபம், சாம்பிராணி என்கின்ற பட்சத்தில் சிற்றிக் என்று சொல்லக்கூடிய எலுமிச்சை, ஆரஞ்சு, அண்ணாச்சி பழம் ஆகிய நறுமணங்களை உபயோகிக்கும்பொழுது பல மாற்றங்களை நிதர்சனத்தில் காணமுடியும்.
காற்று கருவியான புல்லாங்குழல் வீட்டின் வரவேற்பு அறையில் மயி-றகுடன் சேர்த்துவைக்க திருஷ்டி தோஷம் நீங்கி சில வழக்குகளிலும் தீர்வு கிடைக்கும்.
இல்லங்களில் மேற்கூறிய மந்திரப் பாடல்களைகூட புல்லாங்குழல் இசைகளுடன் பாட இறையின் ஆசி எளிதில் கிட்டும்.
மேலும் கோவில்களுக்கு ஊதுவத்தி வாங்கி தானமாக வழங்க மனரீதியான இன்னல்கள் மறைந்து வாழ்வில் சிறப்பான நிலையை அடைய முடியும்.
பனை ஓலை விசிறி மற்றும் மின்விசிறி ஆகியவற்றை தானமாக அளிக்க நீண்டநாள் குணம் பெறாத நோய்களும், கடன் பிரச்சனைகளும், தீர்ந்து வாழ்வில் வெளிச்சத்தை நோக்கி பயணிக்கும் வழி வகுத்து அளிக்கும்.
செல்: 80563 79988