சொந்த வீடு அமையுமா? உங்கள் உள்ளங்கையே சொல்லும்! -பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை

/idhalgal/balajothidam/will-you-have-your-own-house-your-palm-will-tell-pandit-map-pillai

சொந்த வீடு கட்டி அதில் சுகமாக வசிக்க ஆசை இருக்கும். சிலருக்கு பூர்வீக வீடு இருக்கும். இருந்தாலும் காலத்திற்கு ஏற்ப படுக்கையறை முதல் கழிவறை வரை ஏதுவாக அமையாத முறையில் இருக்கும். அதையும் நவநாகரீகத்திற்கு ஏற்றவாறு அமைக்கும் யோகம் சிலருக்குதான் அமையும். சொந்தவீடு இருந்தும் அதில் வசிக்காமல் வாடகை வீட்டில் வசிப்போரும் உண்டு. இவற்றில் எல்லாம் சாஸ்திரரீதியாக ஜாதக அமைப்பு எவ்வாறு இருத்தல் வேண்டும் என ஆய்வு செய்வோம்.

என்னதான் அட்டகாசமாக சம்பாதித் தாலும் சொந்தமா வீடு இல்லையே என்ற ஏக்கம் பல நேரங்களில் மன வருத்தத்தை உருவாக்கும்.

சொந்த வீடு அமையவில்லையே என்ற மனக்கவலை யாருக்கு?

ப் 4-ஆம் பாவம் 4-ஆம் அதிபதி பாவகர்த்தாரி எனும் யோகம் பெற்று, சுக்கிரனும் பாவிகளும் சம்பந்தம் பெற்றாலும், வாடகை வீடுதான் கதியென வாழ நேரிடும்.

ப் சந்திர மேடும், சுக்கிர மேடும் நீசம்பெற்று சந்திரனுக்கு 4-ஆம் அதிபதியும், 6-ஆம் அதிபதியும் சுக்கிரனும்கூடி 4--லும், 4-ஆம் பாவத்திற்கு இருபுறம் பாவிகள் இருந்தாலும், சொந்த வீடு அமைவது சுலபமல்ல.

ww

ப் ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு 4-ல் 6-ஆம் அதிபதி நின்று 12-ஆம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றால், சொந்த வீடு காலதாமதமாகும்.

சொந்தமாக வீடு கட்டும் காலம்

ப் ஜாதகத்தில் 6-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம்பெற்று காணப்பட்டால் அதன் தசாபுக்திகளில், சொந்தமாக வீடு கட்டும் சூழ்நிலை உருவாகும்.

வீடு அமையும் யோகம் காலம் நாலாம் வீடும் அதன் பெருமையும்

லக்னத்தில் இருந்து எண்ணிவரும் நாலாம் வீட்டைகொண்டு ஒருவருக்கு சொந்த வீடு அமைவது சார்ந்த செய்திகளை அறிந்துகொள்ளமுடியும். ஆகவே நாலாம் வீடும் அதற்குரிய கிரகமும் பலம் பெற்றிருக்க வேண்டும். நாலாம் வீட்டோன் தன்

சொந்த வீடு கட்டி அதில் சுகமாக வசிக்க ஆசை இருக்கும். சிலருக்கு பூர்வீக வீடு இருக்கும். இருந்தாலும் காலத்திற்கு ஏற்ப படுக்கையறை முதல் கழிவறை வரை ஏதுவாக அமையாத முறையில் இருக்கும். அதையும் நவநாகரீகத்திற்கு ஏற்றவாறு அமைக்கும் யோகம் சிலருக்குதான் அமையும். சொந்தவீடு இருந்தும் அதில் வசிக்காமல் வாடகை வீட்டில் வசிப்போரும் உண்டு. இவற்றில் எல்லாம் சாஸ்திரரீதியாக ஜாதக அமைப்பு எவ்வாறு இருத்தல் வேண்டும் என ஆய்வு செய்வோம்.

என்னதான் அட்டகாசமாக சம்பாதித் தாலும் சொந்தமா வீடு இல்லையே என்ற ஏக்கம் பல நேரங்களில் மன வருத்தத்தை உருவாக்கும்.

சொந்த வீடு அமையவில்லையே என்ற மனக்கவலை யாருக்கு?

ப் 4-ஆம் பாவம் 4-ஆம் அதிபதி பாவகர்த்தாரி எனும் யோகம் பெற்று, சுக்கிரனும் பாவிகளும் சம்பந்தம் பெற்றாலும், வாடகை வீடுதான் கதியென வாழ நேரிடும்.

ப் சந்திர மேடும், சுக்கிர மேடும் நீசம்பெற்று சந்திரனுக்கு 4-ஆம் அதிபதியும், 6-ஆம் அதிபதியும் சுக்கிரனும்கூடி 4--லும், 4-ஆம் பாவத்திற்கு இருபுறம் பாவிகள் இருந்தாலும், சொந்த வீடு அமைவது சுலபமல்ல.

ww

ப் ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு 4-ல் 6-ஆம் அதிபதி நின்று 12-ஆம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றால், சொந்த வீடு காலதாமதமாகும்.

சொந்தமாக வீடு கட்டும் காலம்

ப் ஜாதகத்தில் 6-ஆம் அதிபதி ஆட்சி, உச்சம்பெற்று காணப்பட்டால் அதன் தசாபுக்திகளில், சொந்தமாக வீடு கட்டும் சூழ்நிலை உருவாகும்.

வீடு அமையும் யோகம் காலம் நாலாம் வீடும் அதன் பெருமையும்

லக்னத்தில் இருந்து எண்ணிவரும் நாலாம் வீட்டைகொண்டு ஒருவருக்கு சொந்த வீடு அமைவது சார்ந்த செய்திகளை அறிந்துகொள்ளமுடியும். ஆகவே நாலாம் வீடும் அதற்குரிய கிரகமும் பலம் பெற்றிருக்க வேண்டும். நாலாம் வீட்டோன் தன் சொந்த உச்ச வீடுகளில் இருப்பது அல்லது நட்பு வீடுகள் ஒன்றில் அட்டகாசமாக அமர்வது நாலாம் வீட்டில் சுபகிரகங்கள் வீற்றிருப்பது நாலாம் வீட்டிற்கு சுபகிரகங்கள் பார்வை கிடைத்தாலும் நாலாம் வீடு பலமுள்ளதாகிவிடும். நாலாம் வீட்டிற்குரிய கிரகம் சுபகிரகமோ, அசுபகிரகமோ அது தன் சொந்த வீட்டில் அமர்வது பலமுள்ளதாகும். இப்படியாக நாலாம் எவ்விதத்திலாவது பலமுடன் இருப்பின் ஜாதகர் தனக்கென ஒரு சொந்த வீட்டை அமைத்துக்கொண்டு அதில் சுகமாக ஜீவிக்கும் யோகம் அமையும்.

ஜாதகம் இல்லாதோருக்கு உள்ளங்கையை பாருங்கள். உள்ளதை உணர்த்திவிடும். உங்கள் கையில் சந்திரமேடு உச்சம்பெற்று காணப்பட்டால், சொந்த வீடு, சொந்த வாகனம் வந்துவிடும். மேலும் நடுவிரலுக்கு நேர்பாகம் அமையப்பெற்ற சனிமேட்டில் மெல்-ய ரேகை திடமாக காணப்பட்டால் நிச்சயமாக அசையா சொத்து வரும் வாய்ப்புகள் அதிகம். வீடு, தோட்டம் எல்லாம் சேர்ந்துவரும்.

லக்னங்களில் மொத்தம் 12 உண்டு என்பது தெரியுமா. அதில் மேஷம் முதல் மீனம் வரைவுள்ள அந்தந்த லக்னத் திற்கு தகுந்தார் போல் ஒருவருக்கு சொந்த வீடு அமையும்.

செவ்வாய் கிரகத்தின் சக்தி மிக முக்கியமானது

சொந்த வீடு அமைய செவ்வாய் ஜாதகத்தில் பலம்பெற்று காணப்பட வேண்டும். செவ்வாய் பலம்பெற்று தனது சொந்த உச்ச வீடுகளில் இருப்பின் அவர் தன் செல்வாக்கால் சொந்த வீட்டை சுலபமாக பெற்றுத்தருவார். செவ்வாயும் பலம்பெற்று நாலாம் வீடும் பலமுடன் இருந்தால் இப்படிப்பட்ட ஜாதகர் ஒன்றுக்கு மேற்பட்ட சொந்த வீடுகளை தனதாக்கும் பாக்கியத்தை மிக சுலபமாக பெற்று விடுவார்.

ஜாதகமில்லாதோருக்கு, நீங்கள் 4, 13, 22, 31 தேதிகளில் ஏப்ரல் செப்டம்பர் மற்றும் மே மாதங்களில் பிறந்திருந்தாலும், உள்ளங் கையில் சந்திரமேடு வலுவாக காணப்படும். மேலும் கட்டைவிரலை ஒட்டிய சுக்கிர மேட்டில் உட்பாகம் ரேகை உதயமாகி சனி மேட்டை அடைந்தால், வீடு மற்றும் சொத்து சுகத்துடன் வரன் கிடைக்கப்பெறும்.

மேஷ லக்னம்

மேஷ லக்னத்திற்கு அதிபதி செவ்வாய், நாலாம் வீடு கடகம். சந்திரனும் செவ்வாயும் நண்பர்கள். எனவே சந்திரன் கடகத்தில் இருந்தால் மனதுக்கு உகந்த வீடு அமையப் பெறும். பூர்வபுண்ணிய பலத்தால் சொந்த வீடு ஏற்பட 5-ல் சூரியன் இருக்கவேண்டும். செவ்வாய் மேஷத்தில் இருந்தாலும் சொந்த வீடு உறுதி. மகரத்தில் செவ்வாய் அமர்ந்திருந் தால், வீடு, மாந்தோப்பு, தெனந்தோப்பு, மலர் தோட்டம் போன்று எல்லாமே சுலபமாகும் மேலும், சந்திரனோ, செவ்வாயோ பார்க்கப் பட்டால் வீடு வலுவில் வரும்.

ரிஷப லக்னம்

ரிஷப லக்னத்திற்கு 4-ஆம் வீட்டிற்குரிய சூரியன் 4-ல் அமர்ந்திருந்தால். சொந்த வீடு சாத்தியமே. புதன் கன்னியில் உச்சம் பெற்று சுக்கிரன் 4-ல் அமர அமைப்பு தரும் யோகம் படா டோபமான வீடு அமையும். அன்பர்களே உங்கள் ஜாதகத்தில் சூரியன் மீனத்தில் அமர்ந்து குருவால் பார்க்கப் பட்டால் சூரிய தசையில் சொந்த வீட்டை எதிர்பார்க்கலாம். செவ்வாய் விருச்சிகத்தில் அல்லது மேஷத்தில் இருந்தால் திருமணத் திற்குபிறகு சொந்த வீடு வந்துவிடும்.

மிதுன லக்னம்

மிதுன லக்னத்திற்கதிபதியான புதன் கன்னியில் இருப்பினும், லக்னத்தில் இருப்பினும் கலை அம்சம்கொண்ட அற்புத வீடு அமையும். கன்னி ராசிக்கு செவ்வாய் பார்வை ஏற்பட்டாலும், சொந்த வீடு சுலபமாகும். அத்துடன், 3, 6, 12, 24-ல் பிறந்திருந்தால் அசையா சொத்து அதிகமாகும்.

கடக லக்னம்

லக்னத்திற்கு சுக்கிரன் 4-ல் அமர்ந் திருந்தாலும் 11-ஆம் வீடான ரிஷபத்தில் அமர்ந்திருந்தாலும், மீனத்தில் உச்சம் பெற்றாலும், நிச்சயம் சொந்த வீடு பிரம் மாண்டமாக அமைந்துவிடும். சுக்கிரன் பார்வை நாலாம் வீட்டிற்கு கிடைத்தாலும் ஜாதகர் சொந்த வீட்டிலேயே நிம்மதியாக வாழலாம்.

சிம்ம லக்னம்

சிறந்த இருப்பிடத்தை நிச்சயம் பெறலாம். எவ்வாறென்றால் நாலாம் வீட்டிற்குரிய செவ்வாய் லக்னத்தில் அமர்ந்து தன் வீட்டை விருச்சிகத்தை பார்வையிட்டால் சொந்த வீடு அமையப்பெறும். மேலும் மகரத்தில் செவ்வாய் அமர்ந்து தம் வீடான மேஷத்தை 4-ஆம் பார்வையாக பார்க்க பூமி, தோட்டம், எஸ்டேட் என எல்லாமே சுலபமாகும்.

கன்னி லக்னம்

லக்னத்திற்கு நாலாம் வீட்டிற்கு அதிபதியாகும் குரு உச்சமாகில் லக்னத் தில் அமர்ந்திருந்தால், சொந்த வீடு சுலபம். சுக்கிரன் தனுசில் இருந்தாலும் மிதுனத்தில் அமர்ந்திருந்தாலும், தனுசு பார்த்தாலும் சொந்த வீடும் அசையா சொத்தும் அதிக மாகும். உங்கள் கைகளில் சுண்டு விரலுக்கு அடியில் அமர்ந்துள்ள புதன்மேடு உச்சம் பெற்று அதில் மெல்-ய ரேகைகள் பல அமைந்தாலும் நீங்கள் மருத்துவராகி, அந்த துறையில் புகழ்பெற்று பெரிய மருத்துமனை உருவாக்கலாம்.

துலா லக்னம்

உங்களுக்கு 4-ஆம் வீட்டோன் சனி இவர் லக்னத்தில் உச்சம்பெற்று காணப்பட்டால் ஜாதகருக்கு மிக பாதுகாப்பான இல்லம் அமையும். சனி தனது வீடான மகரம், கும்பத்தில் இருந்தால், சொந்த வீடு சுலப மாகும். புதனும் சனியும் கூடி லக்னம் மகரம், கும்பம் இவற்றில் இருந்தால் ஆடம்பரமான வீடு நல்ல ஜன நெருக்கமான இடத்தில் அமைப்பும். மேலும் இந்த துலா லக்னத்திற்கு குரு 3, 6-க்குடைய பாவியாகுகிறார். இவர் 8, 12-ல் மறைவு பெற்றிருப்பின் விபரீத ராஜயோகம், படாடோபமான வீடு அமையும்.

விருச்சிக லக்னம்

4-ஆம் வீட்டிற்கு சனி அதிபதி. இவர் சிம்மம், கும்பம் எங்கிருந்தாலும் சொந்த வீட்டை நிச்சயமாக தருவார். குரு லக்னத் தில் 2-ஆம் வீட்டில், மீனத்தில் அல்லது கடகத்தில் காணப்பட்டால் அற்புதமான வீட்டை தந்துவிடுவார். குரு, சந்திரன் இருவரும் கூடி தனுசு, மீனம், கடகம், சிம்மம் இவற்றில் எங்கு இருந்தாலும் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளை பெறலாம்.

தனுசு லக்னம்

4-ஆம் வீடாகிய மீனத்தில் அமர நிகரில் லாத உயர்வான வீடு அமையும். மீனத்தில் உச்சம்பெற்ற சுக்கிரன் அமர்ந்துவிட்டால், விலையுயர்ந்த வீடு, நவயுக பிளாட், அடுக்கு மாடி, ஆடம்பர மாட மாளிகை வரும். உங்களுக்கு திடமான விதி ரேகை, புத்தி ரேகையில் உதயமானால், அதுவும் அது சூரியமேட்டை அடைந்தால், உச்சம் பெற்ற குரு மேடும் காணப்படின் புண்ணிய ஸ்தலம், உல்லாச பூமிகள் இங்கெல்லாம் இருப்பிடம் அமையும்.

மகர லக்னம்

மகர லக்னத்திற்கு 4-க்குடைய செவ்வாய் லக்னத்தில் உச்சம்பெற்று காணப்பட்டால் மாட மாளிகைகூட கோபுரம் எல்லாம் சுய முயற்சியால் பெறுவீர்கள். மகர லக்னத் திற்கு யோகக்காரர் சுக்கிரன். இவர் ரிஷபத் தில் அமர்ந்து அல்லது துலாத்தில் அமர்ந்து இருக்கப்பெற்றால் அட்டகாசமான ஆடம்பர வீடு, வாங்கும் வாய்ப்புகள் மிக சுலபமாகும்.

கும்ப லக்னம்

லக்னத்திற்கு 4, 9-ற்குரிய சுக்கிரன் ரிஷபம், துலாத்தில் இவற்றில் அல்லது மீனத்தில் (2-ல்) அமர்ந்தால் சொகுசான பங்களா தயங்காது நாடிவரும்.

மீன லக்னம்

புதன் மீனத்தில் ஆட்சிபெற்றாலும் கன்னியில் உச்சம்பெற்றாலும், வானளாவிய பெரிய வீட்டை பெறலாம். குரு கடகத்தில் உச்சம்பெற்று காணப்பட்டால், பத்துக்கு மேற்பட்ட கிரவுண்டில் வீடு கட்டி உல்லாச வாழ்வு கிடைக்கப்பெறும்.

மனிதனின் வாழ்க்கைக்கு வசதியும், வாய்ப்பும் கிரக பலத்தை வைத்தே அமையும்.

ஜாதகம் இல்லாருக்கு சந்திரமேடு, சூரியமேடு, குருமேடு சுக்கிரமேடு முயற்சிக்கு உற்ற துணை புரியும்.

bala160525
இதையும் படியுங்கள்
Subscribe