வகிரகங்களில் எல்லாரும் பார்த்து பயப்படக்கூடிய கிரகமாக அமைந்திருப்பவர் சனிபகவான் ஒருவர்தான்.

சனிபகவான்தான் ஒவ்வொரு மனிதரின் கர்மாவையும் வெளிப்படுத்தும் கிரகமாகும். மனித வாழ்வின் ஆதார சுருதி இவர்தான்.

இதன்காரணமாகவே கிரகப் பெயர்ச்சி களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக சனிபகவான் திகழ்ந்துவருகிறார்.

சூரியனின் ஈர்ப்பு விசையைத் தாண்டி வெகு தொலைவில் இருப்பதினால் வெப்பமும் வெளிச்சமும் இல்லாததொரு இருள் தன்மையுடன் ஒருவிதமான நீல நிற கதிர்களைத் தன்னைச் சுற்றிலும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக் கிறார் சனிபகவான். இந்த நீலக்கதிர்கள் மனிதனுக்கு உகந்தவை அல்ல, அதனால் தான் பொறாமை, திருட்டுத்தனம், வஞ்சகம் போன்ற அனைத்து கெட்ட குணங்களுக்கும் காரக கிரகமாக இவரை குறிப்பிடுகிறோம்.

Advertisment

22

இந்த கிரகத்தைச் சுற்றிலும் எண்ணற்ற வளையங்கள் காணப்படுகிறது.

சூரியனை இவர் சுற்றிவர மிகவும் தாமத மான நாட்களை எடுத்துக்கொள்வ தால்தான் இவரை மந்த காரகன் என்கிறோம்.

பொதுவாக உடல் ஊனமுற்றவர்கள், நோயாளிகள், வயதானவர்கள் மெதுவாகச் செயல்படக்கூடியவர்கள். அதனால்தான் சனிபகவானை இவர்களுக்கு ஒப்பீடாக சொல்லப்படுகிறது.

மனித உடலில் சளியின் தொந்தரவுகள் அதிகரிக்கும் பொழுதுதான் மரணம் நிகழும் என்கிறது மருத்துவ உலகம். அதனால்தான், சனிபகவான் என்ற குளிர்ச்சி கிரகம் ஆயுள்காரகனாக சொல்லப்படுகிறது.

உலக வாழ்வில் மனிதனுக்கு ஆயுளைக் கொடுத்து, எல்லா துன்பங்களையும் அனுபவிக்க வைத்து, அவனது கர்மாவை முடித்துவைப்பதில் இவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை.

பொதுவாக சனிபகவான் நம்முடைய சுய ஜாதகத்தில் அதிக வலுப்பெற்று இருக்கும்போது பெருமளவு நன்மைகளை தருவதில்லை. அதேபோல் சனிபகவான், தான் இருக்கும் பாவகத்தின் பலன்களைத் தாமதப் படுத்தியே வழங்குவார். அதே நேரத்தில் தான் பார்க்கும் இடங்களின் பலன்களையெல் லாம் பாதிப்படையும்படி செய்துவிடுவார்.

ரிஷபம், துலாம், கன்னி, மகரம், கும்பம் லக்னங்களுக்கு நன்மையை செய்யக்கூடியவர் இவர். அதிலும் குறிப்பாக ரி‘பத்திற்கு இவர் ஒருவரே மிகச்சிறந்த யோக பாக்கியத்தை வழங்கிடக் கூடியவராக இருக்கிறார்.

அனைத்து கிரகங்களுக்கும் பொதுவாக ஏழாம் பார்வை உண்டு. சனி பகவானுக்கு சிறப்பு பார்வையாக மூன்று, மற்றும் பத்தாம் பார்வைகள் உண்டு.

அதிலும் குறிப்பாக கர்மப் பார்வையான பத்தாம் பார்வை அதிக சக்தி வாய்ந்ததாக இருந்து அந்த பாவகத்தின் பலனை அதிகமாக பாதிப்பிற்கு உள்ளாக்கு கிறது.

சுபபலம் பெற்ற நிலையில், அதாவது சனிபகவானுக்கு சுபர்களின் தொடர்பு கிடைக்கும்பொழுது மிகப்பெரும் ராஜயோ கத்தை இவரைப்போன்று தரக்கூடிய கிரகம் வேறு இல்லை என்றே சொல்லவேண்டும்.

தொழில் காரகனான சனிபகவானுடன் சேரும் கிரகங்களின் தன்மையைப் பொருத்து ஜாதகருக்கு தொழில் அமையும். பத்தாம் இடத்தோடு சனிபகவான் தொடர்பு கொள்ளும் நிலையில் அதிக அளவிற்கு உழைத்திட வேண்டிய நிலையை அந்த ஜாதக ருக்கு வழங்குவார்.

அதிகமான மக்கள் செல்வாக்கை தரக்கூடியவரும் சனி பகவான்தான். அதற்கு அவர் ஜாதகத்தில் சச யோக அமைப்பிலும், ஆட்சி, வர்கோத்தம அமைப்பிலிருந்து சுபர்களின் தொடர்பை பெறுதல் அவசியம்.

சனி தசா, புக்தி காலத்தில் ஏதேனும் சொத்து சேர்க்கை ஏற்படில் அது கால காலத்திற்கும் நீடித்து நிலைத்து நிற்கும்.

ஆடம்பரத்தை விரும்பாத எளியவரான சனிபகவான், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, சனி தசா, புக்தி காலகட்டங்களில் ஜாதகர் எளிமையான நிலைக்குள் இருக்கும்பொழுது பெருமளவு தன்னுடைய கெடுபலன்களைக் குறைத்துக்கொள்வார் சனிபகவான்.

சுய ஜாதகத்தில் சனிபகவான் எங்கு இருக்கிறாரோ அந்த பாவகம் சார்ந்த பெருமைகளை வெளியில் சொல்லக்கூடாது.

சனிபகவானை நேரடியாக வழிபாடு செய்வதைக் காட்டிலும் ஆஞ்சனேயர் வழி பாடு சிறப்பான பலனைத் தரக்கூடியதாகும்.

வயதானவர்கள், முதியவர்கள், உடல் ஊனமுற்றோர், சாலைப் பணியாளர்கள், துப்புரவுத் தொழிலாளிகள், நாம் பணிபுரியும் இடத்தில் அல்லது நம் இல்லங்களில் வேலை புரியும் வேலைக்காரர்கள் இவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்துவர சனிபகவானின் பரிபூரண அருளைப் பெறலாம்.

செல்: 9952543925