Advertisment

சரிப்பட்டு வராது! யாருக்கு-எது? -ஜாலியான மினி தொடர்(2) - ஆர். மகாலட்சுமி

/idhalgal/balajothidam/will-not-be-adjusted-whom-what-fun-mini-series-2-r-mahalakshmi

ரு கிரக பாவகத்தில் அசுபத் தன்மையடைந்த கிரகம் சேருவதைக்கொண்டு, அந்த ஜாதகர் எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்பதைக் கண்டறியலாம். கடந்த இதழில் நான்காம் பாவம்வரை கண்டோம். இனி தொடர்ந்து காண்போம்.

ஐந்தாமிடமும் அசுப கிரக சம்பந்தமும்

Advertisment

ஐந்தாமிடம்+சூரியன்: சூரியன் கெட்டு ஐந்தாமிடத்தில் அமர, இந்த ஜாதகர் சுறுசுறுப்பான மூளை, லட்சிய வெறி, பரம்பரை சொத்து ஆகியவற்றுக்கு சரிப்பட்டு வரமாட்டார். கும்பகோணம் திருலோக்கி கீழச் சூரியமூலை கோவில் சென்று வணங்கவும்.

ஐந்தாமிடம்+சந்திரன்: சந்திரன் அசுபராகி ஐந்தாமிடத்தில் சேர, ஜாதகர் நல்ல மனம், தெளிவான அறிவு, நல்ல பெண் குழந்தைகள் பிறத்தல், ஆரோக்கியமான கர்ப்பம் ஆகியவற்றுக்கு சரிப்பட்டு வர மாட்டார். குற்றாலநாதர் கோவில் சென்று வழிபடுவது நல்லது.

hh

ரு கிரக பாவகத்தில் அசுபத் தன்மையடைந்த கிரகம் சேருவதைக்கொண்டு, அந்த ஜாதகர் எதற்கு சரிப்பட்டு வரமாட்டார் என்பதைக் கண்டறியலாம். கடந்த இதழில் நான்காம் பாவம்வரை கண்டோம். இனி தொடர்ந்து காண்போம்.

ஐந்தாமிடமும் அசுப கிரக சம்பந்தமும்

Advertisment

ஐந்தாமிடம்+சூரியன்: சூரியன் கெட்டு ஐந்தாமிடத்தில் அமர, இந்த ஜாதகர் சுறுசுறுப்பான மூளை, லட்சிய வெறி, பரம்பரை சொத்து ஆகியவற்றுக்கு சரிப்பட்டு வரமாட்டார். கும்பகோணம் திருலோக்கி கீழச் சூரியமூலை கோவில் சென்று வணங்கவும்.

ஐந்தாமிடம்+சந்திரன்: சந்திரன் அசுபராகி ஐந்தாமிடத்தில் சேர, ஜாதகர் நல்ல மனம், தெளிவான அறிவு, நல்ல பெண் குழந்தைகள் பிறத்தல், ஆரோக்கியமான கர்ப்பம் ஆகியவற்றுக்கு சரிப்பட்டு வர மாட்டார். குற்றாலநாதர் கோவில் சென்று வழிபடுவது நல்லது.

hh

Advertisment

ஐந்தாமிடம்+செவ்வாய்: செவ்வாய் கெட்டு ஐந்தாமிடம் சென்றிட, ஜாதகர் விளையாட்டுப் போட்டிகள், பரம்பரை மனை, பெருந்தன்மை போன்ற எதற்கும் சரிப்பட்டு வரமாட்டார். (பெண்களுக்கு இவ்வித அமைப்பிருந்தால் கருச்சிதைவு ஏற்படும்.) திருப்புல்லாணி கோவிலில் சந்தான கிருஷ்ணர் சந்நிதியில் பால் பாயசம் படைத்து வழிபடவும்.

ஐந்தாமிடம்+புதன்: புதன் கெட்டு ஐந்தாமிடம் போய்விட, ஜாதகர் நல்ல மனநிலை, தெளிவான அறிவு ஆகியவற்றுக்கு சரிப்பட மாட்டார். சிங்கிரிகுடி (புதுச்சேரி) சென்று நரசிம்மரையும் கனகவல்லித் தாயாரையும் வழிபடவும்.

ஐந்தாமிடம்+குரு: குரு கெட்டு ஐந்தாமிடம் சேர, நல்ல புத்திசாலித்தனம், நல்ல குழந்தைகள், ஒழுக்கம், ஆச்சாரம், குலதெய்வ வழிபாடு போன்றவற்றுக்கெல் லாம் சரிப்பட மாட்டார். தேவூர் சென்று வழிபடவும்.

ஐந்தாமிடம்+சுக்கிரன்: சுக்கிரன் அசுபராகி ஐந்தாமிடம் ஏறிட, ஜாதகர் அழகியல் விஷயம், கலை, திரைப்படம், அழகான குழந்தை, நல்ல காதல் போன்ற எதற்கும் சரிப்பட மாட்டார். கரிவலம்வந்த நல்லூர் சென்று வழிபடவும்.

ஐந்தாமிடம்+சனி: சனி கெட்டு ஐந்தாமிடம் ஏறிட, குழந்தைகள் இன்பம், ஒழுக்கமான காதல், குலதெய்வ அனுசரணை, நல்ல உடல்நலம் போன்ற எதற்கும் ஜாதகர் சரிப்பட மாட்டார். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை வணங்கவும்.

ஆறாமிடமும் அசுப கிரக சம்பந்தமும்

ஆறாமிடம்+சூரியன்: சூரியன் கெட்டு ஆறாமிடம் அடைய, ஜாதகர் அரசு வேலை, கண் பாதுகாப்பு, அரசு கடன், வழக்கில் வெற்றி போன்றவற்றுக்கு சரிப்பட மாட்டார். பரிதியப்பர் கோவில் சென்று வழிபடவும். காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலும் நன்று.

ஆறாமிடம்+சந்திரன்: சந்திரன் அசுபராகி ஆறாமிடம் சாய, ஆரோக்கியமான தாய், தண்ணீர், விவசாயப் பெருக்கம், வேகமான வேலை, திறமை, சளித் தொந்தரவு இல்லாமை போன்றவை சரிப்படாது. தென்குடித்திட்டை சென்று வணங்கவும்.

ஆறாமிடம்+செவ்வாய்: செவ்வாய் ஆறா மிடம் செல்ல, விவசாயம், தோட்டவேலை, ரத்தம் சிந்தாமல்- காயப்படாமல் இருப்பது, கடனின்றி இருப்பது போன்றவை சரிப்படாது. திருச்சேறை சென்று வணங்கவும்.

ஆறாமிடம்+புதன்: புதன் கெட்டு ஆறாமிடம் போக, நல்ல நினைவாற்றல் இருத்தல், புத்திசாலித்தனமான வேலை, வட்டி, கடன் ஆகியவற்றை நல்லமுறையில் திரும்ப செலுத்துதல், நரம்புகள் பழுதின்றி இருத்தல் போன்றவை சரிப்பட்டு வராது. மதுரை- சிம்மக்கல் ஆதி சொக்கநாதரை வழிபடவும்.

ஆறாமிடம்+குரு: குரு அசுபராகி ஆறாமிடம் அமர்ந்திட, ஆன்மிக வேலை, பேர், புகழ் சொல்லும் பணி, கொழுப்பில் லாத நல்ல உடல் ஆரோக்கியம், வாங்கிய கடனை நாணயமாகத் திரும்பக் கொடுப்பது போன்றவையெல்லாம் சரிப்பட்டு வராது.

புளியங்குடி- தாருகாபுரம் தட்சிணா மூர்த்தியை வணங்கவும்.

ஆறாமிடம்+சுக்கிரன்: சுக்கிரன் கெட்டு ஆறாமிடம் செல்ல, நல்ல கலைத்தொழில், அழகான- நுணுக்கமான வேலை, சர்க்கரை நோய் இல்லாமலிருப்பது, மனைவியைப் பிரியாமலிருப்பது போன்றவற்றுக்கு ஜாதகர் சரிப்பட்டு வரமாட்டார். விருதுநகர்- திருத்தங்கல் சென்று கருடாழ்வாரை வழிபடவும்.

ஆறாமிடம்+சனி: சனி கெட்டு ஆறாமிடம் ஏறிட, ஒரே இடத்தில் ஒரே வேலையாக- சுறுசுறுப்பாகப் பொருந்தி இருப்பது, வாதநோய் வராமலிருப்பது, கடன் கிடைப் பது, நல்லவிதமாக சம்பளம் பெறுவது போன்றவை சரிப்பட்டு வராது. ஆம்பூர் சென்று அனுமனை வழிபடவும்.

(தொடரும்)

செல்: 94449 61845

bala300721
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe