சில சிறுவர், சிறுமிகள் நன்றாக நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென்று நடக்க முடியாமல் போகின்றனர். அதற்கு மருத்துவ ரீதியாக காரணங்கள் இருந்தாலும், ஜோதிட ரீதியாகவும் காரணங்கள் இருக்கின்றன.
சிறுவர்- சிறுமிகளுக்கு இவ்வாறு நிகழக் காரணம் அவர்களின் ஜாதகத்தில் சந்திரனும் சனியும் சரியில்லாமல் இருப்பதுதான்.
சனி பகவானுக்கு இன்னொரு பெயர் மந்தன். சனியை "லங்கடா' என்று வட இந்தி யாவில் குறிப்பிடுவார்கள். அதற்கு "முடவன்' என்று பொருள்.
ஒரு ஜாதகத்தில் சனி, சந்திரனுடன் 6-ல் இருந்தால், அந்த ஜாதகருக்கு 2-ஆம் அதிபதி தசை நடக்கும்போது, அந்த சிறுவனுக்கோ சிறுமிக்கோ திடீரென்று காலில் பிரச்சினை அல்லது முதுகுத்தண்டில் பிரச்சினை உண்டாகி நடக்கமுடியாத நிலை உண்டாகும்.
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் சனி, புதனுடன் 6-ல் இருந்தால், அந்தக் குழந் தைக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகும். ஜாத கத்தில் லக்னாதிபதி அஸ்தமனமாக அல்லது பாவகிரகத்துடன் இருந்தால், குறிப்பாக 8 அல்லது 12-ல் இருந்தால், காலில் பிரச்சினை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.
ஒரு வீட்டில்- குறிப்பாக வடக்கு வாசல் கொண்ட வீட்டின் பின்புறத்தில் தெற்கு காலியாக இருந்து, அங்கு தென்மேற்கு திசையில் கழிவறை அல்லது கிணறு இருந்தால், அந்த வீட்டிலிருக்கும் சிறுவனுக்கோ சிறுமிக்கோ திடீரென்று நடக்கமுடியாத நிலை உண்டாகும்.
6-ல் செவ்வாய், புதன், சுக்கிரன், 8-ல் சந்திரன், சனி இருந்தால், அந்த ஜாதகரின் உடலிலில் நரம்பு இழுக்கும். குறிப்பாக- குழந்தை களுக்கு நரம்புத் தளர்ச்சி உண்டாகும். அதனால், தங்கள் வேலையைப் பிறரின் உதவி கொண்டுதான் அவர்களால் செய்ய முடியும்.
ஒரு வீட்டின் வடகிழக்கில் சமையலறை இருந்து, தென்கிழக்கில் கிணறு இருந்தால், அங்கு வசிக்கும் குழந்தைக்கு திடீரென்று காலிலில் நோய்வரும். சில குழந்தைகள் பிறக்கும் போதே காலிலில் நோயுடன் பிறப் பார்கள். அதனால் வாழ்க்கை முழுவதும் பிரச்சினை ஏற்படும்.
ஒரு வீட்டின் மத்தியப் பகுதியில் கிணறு இருந்து, அந்த வீட்டின் படிகளுக்குக் கீழே கழிவறை அல்லது குளியலறை இருந்தால் அங்கிருக்கும் குழந்தைக்கு காலிலில் நோய் வரும்.
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் சந்திரன், கேது 6, 8 அல்லது 12-ல் இருந்து, அதை சனி பார்த்தால், அந்த குழந்தையின் காலிலில் அரிப்பு ஏற்படும். காலிலில் காயம் உண்டாகக்கூடும்.
செவ்வாய், ராகுவுடன் சேர்ந்து 2-ஆம் பாவத்தில் இருந்தால், அந்த குழந்தைக்கு நெருப்புக் காயம் உண்டாக வாய்ப்புண்டு.
ஒரு ஜாதகத்தில் சந்திரனிலிலிருந்து 8-ஆவது பாவத்தில் சுக்கிரன், சனி இருந்து, 12-ஆம் பாவத்தில் ராகு, செவ்வாய் இருந்தால், அந்தக் குழந்தையின் காலிலில் நோய் ஏற்படும்.
சுக்கிரன், சனி, புதன் 6-ல் இருந்து, 12-ல் செவ்வாய் இருந்தால், அந்தக் குழந்தையின் காலில் அடிக்கடி காயம் உண்டாக வாய்ப்பிருக் கிறது.
ஒரு ஜாதகத்தில் 2-ல் செவ்வாய், சுக்கிரன், 3-ல் கேது, 6-ல் சனி இருந்தால், அந்த ஜாதகரின் காலில் நோய் ஏற்படும்.
ஒரு வீட்டிற்கு கிழக்கு மத்தியில் அல்லது தென்கிழக்கில் நீர்த்தொட்டி அல்லது கிணறு இருந்து, அந்த வீட்டின் தலைவர் வடகிழக் கில் படுத்தால், அந்த வீட்டிலுள்ள குழந் தைக்கு காலில் நோய் உண்டாகும்.
பரிகாரங்கள்
பெற்றோர் செய்ய வேண்டியவை... கருப்பு எள், கடுகெண்ணெய், கருப்பு அல்லது பழுப்புநிற கம்பளி ஆகியவற்றால் குழந்தையை எதிர்சுற்றாகச் சுற்றிவிட்டு (ஆய்ற்ண் ஈப்ர்ஸ்ரீந் ஜ்ண்ள்ங்) அதை சனிக்கிழமை காலையில் யாருக்காவது தானமளிக்க வேண்டும்.
தினமும் அரச மரத்திற்கு நீர் வார்த்தல் நல்லது.
வீட்டில் குழந்தை கிழக்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.
தென்மேற்கு திசையில் கிணறு இருக்கக் கூடாது.
குடும்ப உறுப்பினர்கள் கருப்புநிற ஆடையைத் தவிர்க்கவேண்டும். வீட்டிற்குப் பச்சை வண்ணம் ஏற்றதல்ல.
வீட்டின் வடகிழக்கில் தேவையற்ற பொருட்களை சேர்த்து வைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
சனிக்கிழமை, எண்ணெய்க் குளியல் செய்யவேண்டும்.
சனிக்கிழமை, உளுந்தால் செய்யப்பட்ட உணவுப்பொருளை காகத்திற்கும் ஏழை களுக்கும் அளிப்பது நல்ல பரிகாரம்.
செல்: 98401 11534