பூமியில் வசிக்கும், சில மனிதர்களுக்கு, மனிதர்கள் போன்ற உயிரினம், வேற்றுகிரகத்தில் வசிக்கிறார்களா என அறிய பல தொழில்நுட்பங்களை கண்டறிந்து, வானியல்மூலம் பேரண்டத்தில் தேடிக்கொண்டு இருக்கி றார்கள். அதேபோல சிலர், தனிநபர் வாழ்க்கையில் நேற்று நடந்ததையும், தற்சமயம் நடப்பதையும், எதிர்காலத்தில் நடக்க இருப்பதையும் அறிந்துகொள்ள ஆவல் கொண்டனர்.
அதற்கான ஆய்வில், ஒவ்வொரு நாடுகளிலும், ஒவ்வொரு தொழில்நுட்பத்தை கண்டறிந்து, ஜோதிடவியல்மூலம் வாழ்க்கையை தெரிந்துகொள்கிறார்கள்.
இந்த வானியல், ஜோதிடவியல் இரண்டின் ஆய்வு முடிவுகளும், உலகில் பிறக்கும் எல்லா மனிதர்களுக்கும் தேவைப்படுவதில்லை. எதுவாக இருந்தாலும் அவரவர் தேவை, விருப்பம் சார்ந்ததே. தன்னைபோலே எல்லாரும் இருக்க வேண்டும், தனக்கு பிடித்ததே, எல்லாருக்கும் பிடிக்கவேண்டும், தான் சொல்வதையே எல்லாரும் பின்பற்ற வேண்டும் என நினைக்கும்போதுதான் பிரச்சினை தோன்றுகிறது. உண்மையில் கருத்து முரண்பாடுகள்கொண்ட குழுக்களாகதான் மனிதனால் வாழமுடியும். "தான் மட்டுமே வாழவேண்டும்'' என்கிற சுயநல எண்ணம்கொண்ட பேரினம், மனித இனம் மட்டுமே. அதனால் தான் பூமியில் பல உயிரினத்தை மனிதன் அழித்துவிட்டான். இதில் மதம் பிடித்தவனும் உண்டு. மதம் பிடிக்காதவனும் உண்டு.
மனிதர்களில் "நான் மட்டும் தனியறிவு படைத்தவன், நானே உயர்ந்தவன்'', "நான் இறைவன்'' என பேசும் மனபிறழ்வு நோயாளிகள் இருக்கதான் செய்கிறார்கள். அன்றாடம் சக மனிதர்களின் மரணம், கண்முன் நடந்து கொண்டிருப்பது தெரிந்தும், "தனக்கு மட்டும் மரணமில்லை'' என்பது போல பேசி வாழ்கிறார்கள். நம் நாட்டில் ஜோதிடத்தை மதம், ஆன்மிகம், அறிவியலோடு இணைக்கப் பட்டதால்தான் கருத்து வேற்றுமைகள் அதிகமாகி மக்களுக்குள் விவாதம், பிரச்சினை ஏற்படுகிறது. இன்று ஜோதிடத்தை வைத்து அரசியல் பிழைப்புநடத்துவதுதான் ஜோதிடத்திற்கு தடையாக இருக்கிறது.
அறிவிய-ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் இருப்பதுபோன்று கணிதம், வானியல், ஜோதிடவியல் இருக்கிறது.
ஜோதிடத்தை அறிவியல், கணிதம் ஆகியவற்றோடு ஒப்பிடுவதே தவறானது.
ஜோதிடம் தனித்துவமானது. ஜோதிடம் பற்றி அறியாதவரிடம் ஜோதிடம் உண்மை யானது என நிரூபித்து கொண்டிருப்பது ஜோதிடர்களின் வேலையல்ல. சராசரி மக்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றிய விளக்கம் தேவையில்லை.பயன்பாட்டு முறை மட்டும் சொல்-க்கொடுத்தால் பயன்படுத்துவார்கள்.
பூமியில் வசிக்கும், சில மனிதர்களுக்கு, மனிதர்கள் போன்ற உயிரினம், வேற்றுகிரகத்தில் வசிக்கிறார்களா என அறிய பல தொழில்நுட்பங்களை கண்டறிந்து, வானியல்மூலம் பேரண்டத்தில் தேடிக்கொண்டு இருக்கி றார்கள். அதேபோல சிலர், தனிநபர் வாழ்க்கையில் நேற்று நடந்ததையும், தற்சமயம் நடப்பதையும், எதிர்காலத்தில் நடக்க இருப்பதையும் அறிந்துகொள்ள ஆவல் கொண்டனர்.
அதற்கான ஆய்வில், ஒவ்வொரு நாடுகளிலும், ஒவ்வொரு தொழில்நுட்பத்தை கண்டறிந்து, ஜோதிடவியல்மூலம் வாழ்க்கையை தெரிந்துகொள்கிறார்கள்.
இந்த வானியல், ஜோதிடவியல் இரண்டின் ஆய்வு முடிவுகளும், உலகில் பிறக்கும் எல்லா மனிதர்களுக்கும் தேவைப்படுவதில்லை. எதுவாக இருந்தாலும் அவரவர் தேவை, விருப்பம் சார்ந்ததே. தன்னைபோலே எல்லாரும் இருக்க வேண்டும், தனக்கு பிடித்ததே, எல்லாருக்கும் பிடிக்கவேண்டும், தான் சொல்வதையே எல்லாரும் பின்பற்ற வேண்டும் என நினைக்கும்போதுதான் பிரச்சினை தோன்றுகிறது. உண்மையில் கருத்து முரண்பாடுகள்கொண்ட குழுக்களாகதான் மனிதனால் வாழமுடியும். "தான் மட்டுமே வாழவேண்டும்'' என்கிற சுயநல எண்ணம்கொண்ட பேரினம், மனித இனம் மட்டுமே. அதனால் தான் பூமியில் பல உயிரினத்தை மனிதன் அழித்துவிட்டான். இதில் மதம் பிடித்தவனும் உண்டு. மதம் பிடிக்காதவனும் உண்டு.
மனிதர்களில் "நான் மட்டும் தனியறிவு படைத்தவன், நானே உயர்ந்தவன்'', "நான் இறைவன்'' என பேசும் மனபிறழ்வு நோயாளிகள் இருக்கதான் செய்கிறார்கள். அன்றாடம் சக மனிதர்களின் மரணம், கண்முன் நடந்து கொண்டிருப்பது தெரிந்தும், "தனக்கு மட்டும் மரணமில்லை'' என்பது போல பேசி வாழ்கிறார்கள். நம் நாட்டில் ஜோதிடத்தை மதம், ஆன்மிகம், அறிவியலோடு இணைக்கப் பட்டதால்தான் கருத்து வேற்றுமைகள் அதிகமாகி மக்களுக்குள் விவாதம், பிரச்சினை ஏற்படுகிறது. இன்று ஜோதிடத்தை வைத்து அரசியல் பிழைப்புநடத்துவதுதான் ஜோதிடத்திற்கு தடையாக இருக்கிறது.
அறிவிய-ல் இயற்பியல், வேதியியல், உயிரியல் இருப்பதுபோன்று கணிதம், வானியல், ஜோதிடவியல் இருக்கிறது.
ஜோதிடத்தை அறிவியல், கணிதம் ஆகியவற்றோடு ஒப்பிடுவதே தவறானது.
ஜோதிடம் தனித்துவமானது. ஜோதிடம் பற்றி அறியாதவரிடம் ஜோதிடம் உண்மை யானது என நிரூபித்து கொண்டிருப்பது ஜோதிடர்களின் வேலையல்ல. சராசரி மக்களுக்கு அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றிய விளக்கம் தேவையில்லை.பயன்பாட்டு முறை மட்டும் சொல்-க்கொடுத்தால் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு நதிமூலம், ரிஷிமூலம் தேவைப்படுவதில்லை.
ஜோதிடவியல் தனி மனிதனின் அக, புற வாழ்க்கையை தெளிவாக சொல்லும், தெளிவுபடுத்தும் கால கணிதம்.நேற்றும், இன்றும், என்றும் சிலரால் ஜோதிடம் ஒதுக் கப்படுவதால் ஒழிந்தும், அழிந்தும் போகாது. ஜோதிடம், வெறும் மூடநம்பிக்கையாக மட்டும் இருந்திருந்தால், காலமாற்றத்தில் கட்டாயம் காணாமல்போயிருக்கும். இடைப்பட்ட நூற்றாண்டுகளில் மூட நம்பிக்கைகளின் இடைசெருகலால் பாதிக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது கணினி மயத்தில் மீள்உருப் பெற்று, ஊடகங்களால் வேகமெடுத்திருப்பது மனித இனத்திற்கு பெரிதும் பயன்படும். எந்தத் துறையாக இருந்தாலும் முத-ல் போ-கள் சிறப்பாக வளரதான் செய்யும். வியாபார தந்திரங்கள் வழக்கொழிந்து போவதே வரலாறு. போ-களுக்கான விவாதங்களை விடுத்தலே ஜோதிட வளர்ச்சிக்கு நல்லது.
மனித வாழ்வில் வருடங்கள் செல்லச் செல்ல மருத்துவம், வீடு, வாகனம், கட்டடம், உணவு, உடை, பழக்க- வழக்கம், தொழில் என மாற்றம் புதிதாகிகொண்டே வருகிறது. அதேபோல் கால சூழ்நிலைக்கேற்றவாறு ஜோதிடத்திலும் புதுப்பித்தல் அவசியமாகிறது. அனைத்து துறைகளிலும், புதுப்பித்த-ன்போது ஏற்படும் சோதனை முயற்சிகள், தோல்விகள் தாண்டியே வெற்றியடைந்திருக்கிறது. நம்நாட்டில் தற்சமயம் ஜோதிடத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, துல்-யமாக பலன் சொல்லுகிற முறை, கண்டறியப் பட்டுவருவது. இனி ஏற்படும் போகும் ஜோதிட வளர்ச்சி, ஜோதிட புரட்சி மக்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும்.
இன்று தனக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டால் கடவுள் மட்டுமில்லை, யாரும் தேவையில்லை என்கிற மன நிலையில்தான் எல்லாரும் வாழ்கிறார்கள்.
ஒருவனுக்கு நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் ஜோதிடம் மட்டுமில்லை எதுவும் தேவையில்லை என்கிற மனநிலை இயற்கை யாக எல்லாருக்கும் வந்துவிடும். கோடீஸ்வர னாக மாறுவதற்கு வேண்டுமானால் கடவுள் நம்பிக்கை தேவையாக இருக்கலாம். கோடீஸ்வரன் வீட்டு குழந்தையாய் பிறந்த வர்களுக்கு கடவுள் அவசியமில்லை. கடின முயற்சியால்தான் நினைத்த இடத்திற்கு முன்னேறியவருக்கு ஜோதிடம் தேவையில்லை.
திறமை இருந்தும், உண்மையாக உழைத்தும், முன்னேற முடியாமல் தவிப்பவனுக்கு, "எப்போது எனக்கு நல்ல நேரம் வரும்'' என்கிற தேடலுக்கு ஜோதிடம் தேவைப்படுகிறது. தோல்வியில் இருப்பவனின் புலம்பல்களை அடிக்கடி, அருகில் இருக்கும் யாரும், கேட்க விரும்ப மாட்டார்கள். ஆறுதல் வார்த்தைகள், தன்னம்பிக்கை வார்த்தைகள் மட்டும் ஒருவனுக்கு முன்னேற்றம் தந்துவிடாது. உழைப்பவன் முன்னேறுவான் என்றிருந்தால் இன்னேரம் உழைத்த எல்லாரும் முன்னேறி இருக்கவேண்டும். நல்லவன் வாழ்வான் என பெரியவர்கள் சொல்வார்கள். நன்றாக விசாரித்து பாருங்கள். ஊரில் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களில் அதிகம் பேர் நல்லவர்களாகதான் இருக்கிறார்கள்.
"நான் யார்க்கும் எந்த கெடுதலும் நினைச்சதில்லை''. "எனக்கு கெட்டது செய்ய தெரியாது'', எல்லாரும் நல்லா இருக்கணும்ன்னு நினைப்பேன்'' என்கிற வார்த்தைகள் மட்டும் நம்மை முன்னேற்றி விடாது. "எனக்கு தெரிஞ்சு கெட்டவனெல் லாம் நல்லா இருக்கான்'' என்று நீங்கள் புலம்பினாலும் முன்னேற்றம் வராது. "மற்றவர்களைபோல நானும், இனி கெட்டது செஞ்சு ஏமாத்தி, திருடி முன்னேறப் போறேன்''னு, சபதமெடுத்து போனாலும் முன்னேற முடியாது. இப்படி நம்முடைய எந்த திட்டமும் இங்கு ப-ப்பதில்லை. நமது கட்டத்தில் நல்லது இருந்தால் யார் தடுத்தாலும் நல்லது நடந்தே தீரும். திருட போனாலும் தசை நன்றாக இருந்தால்தான் திருடி தப்பிக்க முடியும். தசை கெட்டிருந்தால் திருட போய், மாட்டி, கேவலப்பட்டு தண்டனை அடைந்தே தீருவர். ஜோதிடம் பார்த்து பலன் தெரிந்துகொண்டாலும், ஜோதிடம் பார்க்காமல் இருந்தாலும், நடப்பது நடந்தே தீரும். ஜோதிடத்தை திட்டினாலும் பழித்தாலும்கூட, நல்லது நடக்க வேண்டுமென பிறந்த ஜாதகத்தில் இருந்தால் நல்லது நடந்தே தீரும்.
ஜோதிடம் பார்த்தால் பிரச்சினையி-ருந்து தப்பித்துக்கொள்ளலாம், ஜோதிடம் பார்க்காமல் இருந்ததால்தான், அவன் மாட்டிக்கொண்டான் என்பதெல்லாம் வீண் வாதம். விதி வ-யது. விதிப்படி நடப்பதை எவராலும் தடுக்கவும் முடியாது; மாற்றவும் முடியாது. ஆனால் ஜோதிடம் பார்ப்பதால் நடப்பதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கண்டிப்பாக கிடைக்கும். எனக்கு அந்த பக்குவம் இயற்கையாகவே இருக்கு என்கிறவர்களுக்கு ஜோதிடம் தேவையற்றது. மனதை சமநிலையில் வைக்கமுடியாதசராசரி மனிதர்கள், வாழ்க்கையில் திடீரென்று ஏற்படும் எதிர்பாராத இழப்பால் நிலை குலைந்து போகிறார்கள். அவர்கள் மீள்வதற்கு ஜோதிடம் மருத்துவமாககூட பயன் படுகிறது. ஜோதிடம் அறியாத நாத்திகவாதி கள் சொல்வதுபோல், ஜோதிடம் மூட நம்பிக்கையாககூட இருக்கட்டும்.விரக்தியில் இருக்கும் ஒருவர் உயிரை காக்கும் நம்பிக்கை யாக ஜோதிடம் இருந்தால் இருந்துவிட்டு போகட்டுமே.
ஒருவர் மனநிம்மதியை குடும்பத்தினரிடம் தேடிக்கொள்ளலாம். இன்னொருவர் கோவிலுக்கு சென்றும் தேடிக்கொள்ளட்டும். சிலர் கெட்ட பழக்கவழக்கத்தாலும் நிம்மதி அடைகின்றனர். குழப்பவாதிகள் மட்டும் எங்கும் செல்லாமல், தானும் குழப்பி, மற்றவரையும் குழம்பிகொண்டே இருப்பார்கள். அவரவர் மனநிலைக்கேற்ற பரிகாரம் பலன் தருகிறது.
நான் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை, கடவுளை வழிபடுவதில்லை, உழைப்பை நம்புகிறவன், சுய முயற்சியில் முன்னேறியவன் என பேசும் பல ஆணவகாரர்களை ஜோதிடர் கள் சந்திக்கிறோம். அவருக்கு கெட்ட தசையும், ஏழரைச்சனி வந்ததும் , உடலையும், மனதையும் சித்ரவதை படுத்துவதையும் அனுபவத்தில் பார்க்கிறோம். பகுத்தறிவு என்றால் எந்த விசயத்தையும் ஆராய்ந்த பின்பே முடிவெடுக்க வேண்டும். பகுத்தறிவு என்னவென்றே தெரியாதவர்கள் கடவுள் மறுப்பு கொள்கையும், ஜோதிட மறுப்பு கொள்கை மட்டுமே பகுத்தறிவு என நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஏழரைச் சனியில் அடிவாங்கிய பின்பும்கூட சிலர் ஈகோ வால்ஜோதிடம் உண்மையில்லை என பேசுவார்கள்.அவர்களுக்கு நிரூபித்து, அவர் களை திருத்தி காப்பாற்றுவது ஜோதிடர் களின் வேலையில்லை. பட்டு வரட்டும் என விட்டுவிடுவதே நல்லது.
_______________
மாரிமுத்துவின் இறப்பு எதை சொல்கிறது?
தமிழ் திரைப்படத்துறையில் இயக்குனர் மற்றும் நடிகரான மாரிமுத்து அவர்கள், "எதிர்நீச்சல்" என்கிற தொலைக்காட்சி தொடர் மூலம் சமீபகாலமாக பிரபலமானார். அவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றின், ஜோதிட விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஜோதிடம் பற்றிய புரிதல் இன்றி, ஜோதிடம் மூடநம்பிக்கை என்றும் ஜோதிடர்கள் ஒழிக்கப்பட வேண்டும் என தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து, ஜோதிடர்கüன் கண்டனத்திற்கு உள்ளானார். அவரை பற்றி ஊடகங்கüல் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென்று வெள்üக்கிழமை 8.9.2023ம் தேதி மாரடைப்பால் இறந்து விட்டார். இன்று தமிழகம் முழுவதும் அவர் பேசு பொருளாக மாறிவிட்டார்.
நடிகர் மாரிமுத்து அவர்கள் ஜோதிடத்தை பழித்து பேசியதால்தான் மரணம் ஏற்பட்டுவிட்டது. அவருடைய கடவுள் மறுப்பு கொள்கையால், அவருக்கு கடவுள் தண்டனை தந்துவிட்டார், ஜோதிடர்களின் சாபம் பழித்து விட்டது என்பதை போன்று தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது ஜோதிட வளர்ச்சிக்கு உகந்ததல்ல. ஊடக விவாதத்தில் அந்த நிமிட சூழ்நிலையில் அவர் பேசிய வார்த்தைகளை, அவர் இறந்தபின் விமர்சிப்பது மனித மாண்பு அல்ல. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
ஜோதிடத்துறை வளர்ச்சிக்காக அவருடைய ஜாதகத்தை ஆய்வுசெய்வது தவறு அல்ல. மாரிமுத்து அவர்கள் கூறிய பிறந்த தேதிப்படி மேஷ ராசி, பரணி நட்சத்திரம். பொதுவாக மேஷ ராசிக்காரர்களுக்கு, தான் என்கிற எண்ணம், பிடிவாத குணம். அதித தன்னம்பிக்கை. எதிலும் தலைமையாக இருக்க நினைப்பது, தனக்கு நிகர் யாருமில்லை என்கிற எண்ணம் இயல்பாகவே இருக்கும். கெட்ட தசாபுக்தி காலங்களில் எதிலும் அடக்கி வாசிப்பர். ஆனாலும் உள்ளுக்குள் இந்த குணம் மாறாது. நல்ல தசாபுக்தி வந்து நல்லது நடந்ததும் தன்னையும் மீறி வெளிவந்துவிட்டது.
ராசிக்கு 9, 12-க்குடைய குருதசை நடக்கிறது. தசாநாதன் குரு, கோட்சார கிரகங்களான சனி, குரு, ராகு, கேதுக்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்சமய கோட்சாரப்படி மேஷ ராசிக்கு ஜென்ம குரு மற்றும் ஜென்ம ராகு நடைபெறுகிறது. கூடுதலாக பாதகாதிபதி சனியின் பார்வை. குரு ஜனன நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில், மாரகாதிபதி சுக்கிர சாரத்தில் இருக்கிறார். உடலான சந்திரனில் குரு சென்றதால் உடலை பாதித்திருக்கிறது. ராகு என்கிற பாம்பு, ராசியை தீண்டியதால், நுரை, தள்ளி உயிரை பிரிந்திருக்கிறது.தசாநாதன் குரு வக்ரமானார், வக்ரத்தில் கிரகம் உக்ர பலன் தரும். ராஜகிரகங்களான குரு, சனி வக்ரம். வக்ர கிரகங்களால் ராசி பாதிக்கப்பட்டு, தசாநாதன் குருவும் பிறந்த நட்சத்திரமான பரணியில் வக்ரம். மொத்தத்தில் தசாநாதன், உயிர்காரகரான குரு, இதயதுடிப்பை நிறுத்தி ஜாதகரை பாதித்துவிட்டது.
பொதுவாக மேஷ ராசிக்காரர்களுக்கு, ஜென்ம குரு அலைச்சல், கடும் மன உளைச்சலை தருகிறது. தற்சமயம் மேஷ ராசிக்காரர்கள் காவல் நிலையம், நீதிமன்றம், சிறைச்சாலை, மருத்துவமனைக்கும் அலைகின்றனர். சிலர் குடும்பப் பிரிவு, தொழில் நஷ்டம், வெளிநாட்டு வாழ்க்கை, மனம் வெறுத்து வாழ்வது, அடுத்து என்ன செய்யவேண்டும் என தெரியாமல் தவிக்கின்ற சூழ்நிலையில் தற்சமயம் இருக்கிறார்கள். தசாபுக்திகள் வலு இழந்து இருப்பவர்களுக்கு கண்டத்தையும் தந்துவிடுகிறது. கெட்ட தசாபுக்தி, கெட்ட கோட்சார காலத்தில், திடீர் அதிர்ஷ்டம் சிலருக்கு ஏற்பட்டால், பணம், புகழ் தந்து எதிர்பாராத கண்டத்தை தந்து ஏமாற்றிவிடுகிறது. மனிதனால் விதியை தெரிந்துகொள்ளவே முடிகிறது. மாற்றமுடிவதில்லை. விதியை வெல்வதற்காக பரிகாரம் செய்து தப்பிக்கவும், விதி இருக்க வேண்டும்.