ஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் மிக ஆதாரமான- அடிப்படையான இரண்டு விஷயங்களைப் பற்றியது இந்தக் கட்டுரை. ஒரு நட்சத்திரத்திற்கு ஏன் நான்கு பாதங் கள் கொடுத்திருக்கிறார்கள்?

இந்த இரண்டு விடயங்களையே கேள்வி களாக எடுத்துக் கொண்டு நான் ஆராய்ந் துணர்ந்த உண்மைகளை உங்களுக்காக இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு கிரகத்திற்கு ஏன் மூன்று நட்சத்திரங்கள்?

இந்த பிரபஞ்சமே முப்பரிமாணத் தன்மையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. முப்பரிமாண நிலையென்பது மூன்றுவித குணபேதங்கள் என்று பொருள். இது காலத் தின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருக்கிறது. எளிமையாகக் கூறினால் வெயில் காலம், மழைக்காலம், குளிர்காலம் எனக்கூட கொள்ளலாம். சூரிய குடும்பம் என்னும் அனைத்துக் கோள்களும் இயங்கும் பாதை ஒரு நீள்வட்டப் பாதை என்பதும், அது 360 டிகிரி என்பதையும் நாமறிவோம். இதில் பூமி ஒரு நாளைக்கு ஒரு டிகிரி நகர்கிறது.

Advertisment

அவ்வாறு 120 டிகிரி நகர்ந்தவுடன் காலத்தின் அடுத்த நிலையை அடையும். இன்னும் விரிவாகக் பார்ப்போம்.

இயற்பியலில் முக்கோண வடிவம்தான் இயக்கத்தை தோற்றுவிக்கும் என்ற விதியை யும் படித்திருப்போம்.

அவ்வாறாயின் 360 டிகிரிக்கு இந்த முக்கோண வடிவமென்பது மூன்று புள்ளிகள், அந்த மூன்று புள்ளிகளை சரிசமமாகப் பிரிப்பின் 360/3 = 120 டிகிரி. ஒரு வட்டவடிவ அமைப்பென்பது 360 டிகிரி. அதில் சரிசமமான மூன்று புள்ளிகள் என்பது 120 டிகிரியிலிருந்து 240 டிகிரி, 240 டிகிரிலிருந்து 360 டிகிரி.

Advertisment

ff

இந்த விதியின் அடிப்படையில்தான் நாம் அன்றாட உபயோகிக்கும் மின்விசிறி அமைக் கப்பட்டிருக்கிறது. அதிக காற்று வேண்டு மென்றால் மூன்று தகடுகளுக்கு பதிலாக நான்கு அல்லது ஐந்து தகடுகளை வைத்திருக் கலாம்தானே அந்த மின்விசிறியின் இயக்கப் படும் வட்டப்பாதை 360 டிகிரிதானே.அதில் இயங்கும் மூன்று தகடுகள் ஒன்றுக்கொன்று 120 டிகிரியில் அமையப்பெற்றிருப்பதை நாம் உணரலாம். ஆக, இயக்கம் நடை பெறுதல் இந்த 120 டிகிரி இடைவெளி யில் இருக்கிற புள்ளிகளாம்.

ஜோதிடத்தில் இந்த 120 டிகிரி இடைவெளிதான் திரிகோணம் என்ற 1, 5, 9 விதியைப் பயன்படுத்தியிருக்கிறார் கள். 1, 5, 9, 120 டிகிரி இடைவெளிதான். 9 என்பது நாம் வந்தமூலம். ஒன்று நாம், 5 என்பது நம்மால் ஏற்படப் போகும் விளைவெனக் கொள்கிறது ஜோதிடம்.

இந்த 120 டிகிரி இடைவெளிதான் இயக்கத் தத்துவமாக சூரிய பாதையில் இயங்கிக்கொண்டிருக்கிறது.

உதாரணமாக மேஷ ராசியில் 0 டிகிரியில் துவங்கும் அஸ்வினி 1-ஆம் பாதம் கடகத்தில் ஆயில்யம் 4-ல் முடியும். இது 120 டிகிரி. மீண்டும் 120 டிகிரி இடைவெளியான சிம்மத்தில் மகம் 1-ஆம் பாதத்தில் துவங்கும்.

அடுத்த பரிமாணம் அல்லது குண பேதம் கேட்டை 4-ல் முடியும். 240 டிகிரியில் மூன்றாம் பரிணாமம் அல்லது குணபேதம் மூலத்தில் துவங்கி ரேவதி 4-ல் 360 டிகிரியில் நிறைவுபெறும்.

இந்த முப்பரிமாண நிலை ஒரு கிரகத்திற்கு வழங்கி, ஒரு கிரகம் பிரபஞ்ச சூரிய பாதையில் தன முப்பரிமாண நிலையை எவ்வாறு வெளிப்படுத்தும் என்ற 120 டிகிரி இடைவெளிப் புள்ளியைக் கணக் கிட்டுதான், ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரம். அஸ்வினிமுதல் ஆயில்யம்வரை அனைத்து ஒன்பது கிரகங்களின் தன்மையினைக் கொடுத்து, அதையடுத்த பரிமாணம் அல்லது குணபேதம் அல்லது மாற்றம் என்று மகம்முதல் கேட்டை, அடுத்த இயக்க பரிமாணம் அல்லது குணமாக மூலம்முதல் ரேவதிவரை என்று கணக்கிட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு 120 டிகிரியும் ஒவ்வொரு இயக்கத் தன்மை கொண்டிருப்பதால்தான் தனித்தனிப் பெய ரிட்டு அடையாளத்திற்காக அழைத்திருக்கிறார்கள்.

மேலும் நான் முதல் பத்தியில் சொன்னது போல கால மாற்றங்கள் இந்த 120 டிகிரியில்தான் இருக்கிறது. முதல் 120 டிகிரி வெயில் காலம். இங்கு இந்த ஒன்பது கிரகங்களின் முதல் நட்சத்திரங்களின் செயல் வேறுவிதமாகவும், அடுத்து மகம்முதல் கேட்டைவரை மழைக்காலம்- இங்கும் இந்த கிரக நட்சத்திரங்களின் செயல் வேறுவிதமாகவும், மூலம்முதல் ரேவதிவரை குளிர்காலம்- இங்கு கிரக நட்சத்திரங்கள் வேறுவிதமாகவும்தான் குணபேதங்களைப் பிரதிபளிப்பதால்தான் ஒரு கிரகம் மூன்றுகால நிலையிலும் தன்னை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்னும் கணக்குதான் ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரம்.

அடுத்த பாகத்தில் ஏன் ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் என்பதைத் தொடர்கிறேன்.

செல்: 73394 44035