"காலம் தன் கடமையைச் செய்யும்போது கடவுள்கூட கண்டுகொள்வதில்லை' என்ற கூற்றை பலர் தங்கள் அனுபவத்தில் உணர்ந்தி ருப்பார்கள். அதாவது எல்லாம் விதிப்படி தான் நடக்கப்போகிறது என்பது நிதர்சன உண்மை. விதிப்பயன் இவ்வாறிருக்க ஏன் ஜோதிடம் பார்க்கவேண்டும்? ஜோதிடம் பார்ப்பதன் அவசியமென்ன என்பது பலரின் ஆதங்கம்.
தும்மல், இருமல் வந்தால்கூட ஜோதிடரி டம் காரணம் கேட்பவர்களும் இருக்கிறார் கள். முக்கிய தேவைகளுக்கு ஜோதிடம் பார்ப் பவர்களும் இருக்கிறார்கள். எது நடந்தாலும் பரவாயில்லை; விதிப்படி வாழ்வோமென விதியை நம்பி வாழ்பவர்களும் இருக்கிறார்கள்.
வாழ்க்கை என்பது நதியின் ஓட்டத்தைப்போன்று திட்டமிடமுடியாத ஒன்று. அதேநேரத்தில் ஒரு எதிர்பார்ப்பை நோக்கிய பயணமென்பது மறுக்கமுடியாத உண்மை. வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொருவிதமான எதிர் பார்ப்புள்ளது.
சிலருக்கு வீடு, வாகனம், அன்பான மனைவி, குழந்தை என, வாழ்வில் "செட்டில்' ஆனால் போதும் என்ற எண்ணமிருக்கும், ஒரு சிலருக்கு வரலாற்றில் சாதனையாளராக இடம்பெறவேண்டும் என்ற எண்ணம் இருக்க லாம். சிலருக்கு நாடாளும் ஆர்வமிருக்கும். இப்படி பலவிதமான விருப்பங்கள் உண்டு.
ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் எண்ணங் களும் விருப்பங்களும் இருந்துகொண்டே தான் இருக்கும். அவை நடக்குமா? விதியில் உள்ளதா என்பதைத் தெரிவிப்பதே ஜோதிடம்.
பெரும்பாலும் கல்வி, திருமணம், குழந்தைப் பேறு, சொத்து, தொழில், நோய், கடன் போன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளவே ஜோதிடரை அணுகுகிறார்கள்.
கல்வி
ஒருவர் 2, 4, 9, 10-ஆம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறும் கல்வியைத் தேர்ந்தெடுக்கும் போது, கற்ற கல்வியானது உத்தியோகம் மற்றும் தொழிலுக்குத் தொடர்புடையதாக இருக்கும். விதிக்கப்பட்டபடி எதைப் படித்தால் எதிர்காலம் இன்பமாக இருக்கும் என்பதை உணர்த்துவதே ஜோதிடம்.
திருமணம்
இன்னாருக்கு இன்னார் என்று பிரபஞ்சம் விதித்த விதியின்படிதான் திருமணம் நடக்குமென்பது உண்மை. உதாரணமாக, ஒருவருக்கு அழகான, படித்த, வசதியான, நல்ல உத்தியோகத்திலுள்ள பெண்ணை வாழ்கைத் துணையாகத் தேர்வுசெய்யும் ஆர்வமிருக்கலாம். 2, 7, 10 சம்பந்தமிருந்தால் சம்பாதிக்கும் மனைவி கிடைப்பாள். 7-ஆமதிபதி தன ஸ்தானத்து சம்பந்தம் பெறாத ஒருவருக்கு மனைவிமூலம் பொருள் கிடைக்காது. விதியிலில்லாத அமைப்புள்ள வரனைத்தேடி காலம், நேரம், பொருள் விரய மாகும். இந்த இடத்தில் ஜோதிடம் உங்களுக்கு உறுதுணையாக நின்று விதிவழி வாழ்க்கையை அமைக்க உதவுகிறது.
குழந்தைப் பேறு
சிலருக்குத் திருமணம் முடிந்தவுடன் குழந்தை பிறக்கும். சிலருக்கு சிறிது காலம் கடந்தபிறகு புத்திர பிராப்தம் கிடைக்கும். பலருக்கு இயற்கையாக குழந்தை உருவாகும். சிலருக்கு மருத்துவ உதவிக்குப்பிறகு கரு தங்கும். விதிப்படி புத்திர பாக்கியம் உருவாகும் காலத்தை கணித்துக் கொடுப்பதுதான் ஜோதிடம்.
சொத்து
மனிதனின் வாழ்நாள் லட்சியமான சொத்து எல்லாருக்கும் கிடைப்பதில்லை. சிலர் பிறக்கும்போதே சொத்துடன் பிறக்கலாம்.
சிலர் பிறந்தபிறகு பெற்றோர் சொத்து சேர்க்க லாம். சிலருக்கு சுய உழைப்பில் சொத்து உருவாகலாம். சிலரின் சொத்து தலைமுறைக் கும் நிலைத்து நிற்கும். சிலரின் சொத்துகள் குறிப்பிட்ட காலத்தில் கைவிட்டுப் போகும். அந்த காலகட்டத்தில் மனைவி அல்லது பிள்ளைகளின் பெயரில் சொத்தை மாற்றி எழுதினால் இழப்பைத் தவிர்க்கலாம். இக் கட்டான சூழ்நிலையில் கரை சேர உதவும் கலங் கரை விளக்கமாக இருப்பதுதான் ஜோதிடம்.
தொழில்
சிலரின் விதிப்படி சொந்தத் தொழில் சிறப் பாக இருக்கும். சிலருக்கு குலத்தொழில் அமையும். சிலருக்கு அடிமைத் தொழில் தான் நன்றாக இருக்கும். சிலருக்கு அரசு உத்தியோகம் அல்லது தனியார் வேலை அமையும். இவ்வாறு ஒருவரின் வாழ்வாதாரத் தில் பல்வேறு வகை உள்ளன. சொந்தத் தொழில் அமைப்பில்லாத ஒருவர் தொழிலால் கடன் படலாம் அல்லது தொழில் வளராது. இதுபோன்ற காலகட்டத்தில் ஒருவரின் வாழ்வாதாரம் சுய தொழிலா? அடிமைத் தொழிலா என்பதை விதிப்படி உணர்த்துவதே ஜோதிடம்.
நோய், கடன்
இவையிரண்டும் இரட்டைப் பிறவிகள். சிலருக்கு ஒருசில குறுகிய காலம் மட்டும் கடனிருக்கும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும். சிலருக்கு கடனை நினைத்து பயந்து நோய் வரும். ஒருவருக்கு எதிர் காலத்தில் வரக்கூடிய நோயைத் துல்லியமாக ஜோதிடத்தில் கணக்கிடமுடியும். ஒருவரின் ஜாதகப்படி கடன் உருவாகும் காலம், அடைபடும் காலம், நோய் உருவாகும் காலம், நோயிலிருந்து விடுபடும் காலம், நோய்க்கு எந்தமுறை சிகிச்சையைத் தேர்வுசெய்வது என்பதுபோன்ற பல்வேறு விஷயங்களை அறிவுறுத்தி, விதியை சுமுகமாகக் கடக்க உதவிசெய்வது ஜோதிடம்.
கோட்சாரம்
ஒருவருக்கு ஏழரைச்சனிக் காலத்தில் ராசிக்கு 12-ல் சனி வரும்போது விரயச்சனி நடக்கும். அவரவரின் தசாபுக்திரீதியாக திருமணம், வீடு, வாசல் என சுப விரயம் உண்டாகலாம். அல்லது தொழில் நட்டம், வைத்தியம் என அசுபமாக விரயமாகலாம். அதை முழு சுப விரயமாக மாற்றுவதும், அசுப விரயமாக மாற்றுவதும் அவரவர் தனிப் பட்ட வினைப்பயனே. ஏழரைச்சனி ஆரம்பிப்பதற்கு முன்பே சனி லாபஸ்தானத் தைக் கடக்கும் முன்பு கோட்சார சனி பாதிக்கா தென்றால், இயல்பான வாழ்க்கை வாழலாம். பாதிப்பிருக்கும் என்ற நிலையிருந்தால் சொத்தோ, பணமோ மறைமுகமாக இருக்க வேண்டும். அதாவது மனைவி, பிள்ளைகள் பெயரில் இருக்கவேண்டும். கடுமையான காலகட்டத்தில், இதுபோல வினைப் பயனை ஓரளவு மாற்றிவிட்டால், தீய பலனின் தாக்கத்திலிருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ளலாம்.
ராசிக்கு 3, 6, 11-ல் சனி வரும்போது பல புதிய எண்ணங்கள் உதயமாகும். பல புதிய தொழில் முனைவோர்கள் உருவாவார்கள். மிகக் குறுகிய காலத்தில் வாழ்வில் பார்க்கமுடியாத பெரிய பணத்தை சம்பாதிக்கிறார்கள். சனி லாபஸ்தானத் தில் இருக்கும்போது கிடைத்த லாபம் நமக்கு வாழ்நாள் முழுவதும் தொடருமென்று தப்புக் கணக்கு போட்டு, பன்னிரண்டாமிடத்தில்- விரயத்தில் வரும்போது பலர் வாழ்நாளில் மீளமுடியாத இழப்பை சந்திக்க நேர்கிறது. புதிய தொழில் முனைவோர்கள், புதிய பெரிய தொழிலில் முதலீடு செய்பவர்கள் சுய ஜாதக ஆலோசனைக்குப்பிறகே தொழில் முயற்சியில் ஈடுபடவேண்டும்.
ஒவ்வொருவரும் அவரவருடைய சுய ஜாதகத்தை அந்தந்த காலகட்டத்திற்கு ஆராய்ந்து, இயற்கையோடு ஒன்றி வாழப்பழகினால் வாழ்வில் பெரும் துன்பம் நிகழாது. இதுபோன்று பல்வேறு பிரச்சினைகளை- வரப்போகும் சுப, அசுபத்தை ஜோதிடம்மூலம் உணரமுடியும்.
ஒருவருக்கு விதிக்கப்பட்டதை ஜாதகரைத் தவிர யாராலும் மாற்றமுடியாது. அதை அனுபவித்துதான் ஆகவேண்டும். ஆனால் அதை எப்படி அனுபவிக்கவேண்டும் என்பதையும் இறைவன் அவரவர் கையில்தான் கொடுத்துள்ளார். அதுதான் ஆறாமறிவு.
அதேபோல் ஒருவரின் கர்மப்பலன் அனுமதித்தாலன்றி ஜோதிடம் பார்க்க இயலாது. அடிபட்டு நொந்து அடுத்த அடி எடுத்துவைக்க முடியாத நிலையில் ஜோதிடரை சந்திக்க வரும் ஒவ்வொருவர் ஜாதகத்திலும் இந்த அமைப்பிருக் கும். பலர் பிரச்சினை பெரிதாகி அதன் உச்சக்கட்டத்தில்தான் ஜோதிடரிடம் வருகிறார்கள்.
தசாபுக்திரீதியாக நல்ல நேரம், நல்ல கர்மப்பலனை அனுபவிக்கக்கூடிய நேரத்தில் அல்லது விதியின் தாக்கம் ஓரளவு குறையக்கூடிய நேரத்தில் அல்லது அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தில் ஜாதகர் இருக்கும் பட்சத்தில் மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்கக்கூடிய ஒரு ஜோதிடரை சந்தித்து, ஜோதிட ஆலோசனை கேட்க இயலும். நீரில் நனைத்த பஞ்சு மூட்டை கனமாக- சுமக்க கடினமாக இருக்கும். வெறும் பஞ்சு மூட்டையை சுமக்கும்போது, சுமை இலகுவாக இருக்கும்.
இதைத்தான் நமது முன்னோர்கள் விதி, கர்மா என்று கூறியுள்ளார்கள்.
ஜோதிடத்தால் ஒருபோதும் விதியை மாற்றவே முடியாது. விதிக்கப்பட்டது விதிக்கப்பட்டதே.
அதேநேரத்தில் பிரச்சினையின் கடுமையை ஓரளவு குறைக்கமுடியும்.
செல்: 98652 20406