குரு பகவான் நவகிரகங்களில் முதன்மையான சுபகிரகமாவார். சுப கிரகங்களில் தலைமை கிரகமான குரு, மனிதர்கள் வாழ்வில் பல்வேறு உன்னத மான உணர்வுகளை உண்டாக்கக்கூடியவர். ஒருவரின் ஜனன ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும். தனம், புத்திரம், பொருளாதார நிலை, கொடுக்கல்- வாங்கல், பொதுக் காரியம், தெய்வீக விஷயங்கள், பூர்வ புண்ணியம் போன்றவற்றுக்குக் காரகன் குரு.
ஒருவர் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருந் தால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். குருபகவான் தான் இருக்கும் இடத்திலிருந்து 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்ப்பார். ஒரு ஜாதகத்தில் எவ்வளவு தோஷமிருந்தாலும் குரு பார்வை பட்டால் தோஷம் விலகிவிடும். குருவின் பார்வை பட்ட பாவகப்பலன் பெருகும். பலமிழந்து அமையப்பெற்ற கிரகங்களுக்கும் குரு பார்வை இருந்தால், அதிலுள்ள தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும். சுருக்கமாக, ஒருவரின் ஜாதகத்திலுள்ள குறையை நிவர்த்தி செய்யும் சக்தி குருவுக்குண்டு. அத்துடன் ஒருவரின் பொருளாதார நிலையை நிர்ணயிப்பதில் குருவின் பங்கு அளப்பரியது.
பொதுவாக ஜாதகத்தில் குரு தனித்திருப் பது நல்லதல்ல. அதுவே குரு, கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால் அந்த இடம் பலம் வாய்ந்ததாக மாறுகிறது.
குரு பகவானால் உண்டாகக்கூடிய யோகங்கள் குருச் சந்திர யோகம்
குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இணைந்தோ அல்லது ஒருவருக்கொருவர் திரிகோணத்திலோ இருந்தால் குருச்சந்திர யோகம். இந்த யோகமிருக்கும் ஜாதகர்கள் நீண்ட ஆயுள், நீடித்த புகழ், அழியா செல்வம், செல்வாக்கு, காரிய சித்தி, சமுதாயத்தில் உயர்ந்த பதவி என்று பலன் ஏற்படும்.
ஹம்ச யோகம்
குரு ஆட்சியோ, உச்சமோ பெற்று ஜென்ம லக்னத்திற்கோ, சந்திரனுக்கோ கேந்திர ஸ்தானத்தில் அமையப் பெறுவது.
இதனால் நீண்ட ஆயுள், சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை உயரும் அமைப்பு, செல்வம், செல்வாக்கு போன்ற யாவும் சிறப் பாக அமையும்.
குரு மங்கள யோகம்
குருவுக்கும் செவ்வாய்க்கும் சம்பந்தம் எந்தவிதத்தில் இருந்தாலும் குரு மங்கள யோகம் எனப்படும். இதனால் பூமி, மனை சேர்க்கை அதிகரிக்கும்.
கோடீஸ்வர யோகம்
இது குரு, கேது சேர்க்கையால் உண்டாவது. இதனால் பெரிய மனிதர்களின் நட்பு ஆன்மிக, தெய்வீக காரியத்தில் ஈடுபாடு, செல்வம், செல்வாக்கு போன்றவை யாவும் சிறப்பாக அமையும்.
சண்டாள யோகம்
குரு, ராகு இணைவால் ஏற்படும் யோகம். இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.
சகடை யோகம்
சந்திரனுக்கு 6, 8, 12-ல் குரு இருந்தால் உண்டாவது. இதனால் வாழ்வில் ஏற்றத் தாழ்வுள்ள பலன்களே உண்டாகும. வாழ்க்கை வண்டி சக்கரம்போல சாண் ஏறினால் முழம் சறுக்கும்.
குருவினால் உண்டாகும் யோகங்கள் பல இருந்தாலும் அனைவராலும் பேசப்படும் யோகம் குருச்சந்திர யோகம். பொதுவாக யோகமென்ற சொல்லுக்கு சேர்க்கையென்று பொருளாகும். சிலர் யோகமென்றால் அதிர்ஷ்டமென்று நினைத்துக்கொள்கின்றனர்.
குருச்சந்திர யோக அமைப்பிருக்கும் பலர் வாழ்க்கையில் தடுமாற்றத்தை சந்திப் பதை நடைமுறையில் பார்க்கிறோம். பன்னிரு லக்னத்தவரில் குருச்சந்திர யோகம் யாருக்கு வரமென்பதை இங்கு பார்க்கலாம்.
மேஷம்
மேஷ லக்னத்தினருக்கு சந்திரன் சுகஸ்தானாதிபதி; குரு பாக்கியாதிபதி மற்றும் விரயாதிபதி. குரு, சந்திரன் சம்பந்தம் ஜாதகத்தில் எந்தவிதத்தில் இருந்தாலும் சகல சௌபாக்கியங்கள், புகழ், அந்தஸ்து கௌரவத்துடன் வாழ்வார்கள். இவர்களுடைய முன்னோர் கள் "மாடுகட்டிப் போரடித்தால் மாளாது என்று, யானைகட்டிப் போரடித்த' பண்ணையாளர்களாக இருப்பார்கள். தாய்வழி, தந்தைவழிப் பூர்வீகச் சொத்து கிடைக்கும். சுய உழைப்பால் உருவாகும் சொத்தும் மிகைப்படுத்தலாக இருக்கும். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். தாயும் தந்தையும் பாக்கியவான்கள். உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். தாய்- தந்தைவழியில் அதிக உறவினர்கள் இருப்பார்கள். உற்றார்- உறவினர்கள் ஆதரவு, அனுசரணை உண்டு. இவர்கள் பெரும்பாலும் வெளியூர் அல்லது வெளிநாட்டில் வாழ்வதால் இவர்களுடைய சொத்துகள் தந்தையால் அல்லது குடும்ப உறவுகளால் பராமரிக்கப்படுகின்றன. குரு தசை வராதவரை மேஷ லக்னத்தினர் பாக்கியவான்கள். பாக்கியாதிபதி குரு விரயாதிபதியாக சுகாதிபதியுடன் சம்பந்தம் பெறுவதால் குரு தசையின் பிற்பகுதியில் தந்தைக்காக அல்லது தந்தையால் சொத்துகளை இழக்க நேரும். முறையான பித்ருக்கள் வழிபாடு இன்னல்களை நீக்கும்.
ரிஷபம்
ரிஷப லக்னத்தினருக்கு சந்திரன் முயற்சி ஸ்தானாதிபதி; குரு அஷ்டமாதிபதி, லாபாதிபதி. சுய ஜாகத்தில் குரு- சந்திரன் சேர்க்கை எந்த இடத்தில் இருந்தாலும், ஓரிடத்தில் நிலையாக வாழமுடியாமல் அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். அஷ்டமாதிபதி குரு, முயற்சி ஸ்தானாதி பதி சந்திரனுடன் இணைவதால் சிறிய செயலுக்கும் பலமுறை முயற்சிசெய்ய நேரும். சகோதரர்களுக்குள் வம்பு, வழக்கு உருவாகும். சிலருக்கு காதல், கலப்புத் திருமணம் நடக்கும் வாய்ப்பு அதிகம். குரு தசை புக்திக் காலங்களில் அஷ்டமாதிபதி என்பதால் காலதாமதத் திருமணத்தைத் தரலாம். அல்லது திருமணத்திற்குப்பிறகு வம்பு வழக்கை சந்திக்க நேரும்.
இளம்வயதில் அஷ்டமாதிபதியின் தசை புக்தி நடந்தால் ரகசியத் திருமணம் நடக்கும். இவரே 11-ஆம் பாவாதிபதியாக இருப்பதால் மத்திம வயதில் இரண்டாம் திருமணம் நடக்கும். ரிஷபத்திற்கு 3-ஆமதிபதி சந்திரனு டன் சம்பந்தம் பெறும் குருபகவான் அஷ்ட மாதிபதி வேலையை பரிபூரணமாகச் செய்வார். லாபாதிபதியாக சுபப் பலன்களை வழங்குவதரிது.
வியாழக்கிழமை காலை 11.00-12.00 வரையிலான சந்திர ஓரையில் வேங்கடா சலபதியை வணங்க நன்மை உண்டாகும்.
மிதுனம்
மிதுன லக்னத்தினருக்கு சந்திரன் தனாதி பதி. குரு களத்திர ஸ்தானாதிபதி, மாரகாதி பதி, பாதகாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி.
தனாதிபதி சந்திரன் தொழில் ஸ்தானாதி பதியான குருவுடன் சம்பந்தம் பெறுவதால் பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலைச் செய்பவர்களுக்கு வருமானம் அதிகமாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். 7-ஆம் அதிபதி யாகி தன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவதால் வாழ்க்கைத் துணையால், நண்பர் களால், தொழில் கூட்டாளியால், வாடிக்கை யாளர்களால் சகாயமான பலனுண்டு. குரு, சந்திரன் தசை புக்திக் காலங்களில் மாரகம், பாதகம் மிகைப்படுத்தலாக இருக்கும். கூட்டுத் தொழிலில் பிரிவினை, கருத்து வேறு பாட்டால் தம்பதிகள் விவாகாரத்து பெறுவது, நண்பர்கள்மூலம் வம்பு, வழக்கு உருவாவது போன்றவற்றால் நிம்மதி குறையும்.
புதன்கிழமை காலை 7.00-8.00 மணி வரையிலான சந்திர ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபட நிம்மதி அதிகரிக்கும்.
கடகம்
கடகத்திற்கு லக்னாதிபதி சந்திரன். குரு ருண, ரோக, சத்ரு ஸ்தானாதிபதி, பாக்கியாதி பதி. குரு, சந்திரன் சம்பந்தம், இணைவு எந்தவிதத்தில் இருந்தாலும் தேவைக்கு மிகுதியாகவே பொருள் கடனாகவோ, உழைப்பாலோ கிடைக்கும். லக்னத்தில் குரு உச்சம்பெற்றாலும், தனுசில் ஆட்சிபெற்றா லும், குருவின் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தாலும், சந்திரனின் நட்சத்திரத்தில் குரு இருந்தாலும் கடன் கதவைத் தட்டும்.
குரு, சந்திரனுக்கு சனி, கேது சம்பந்தமில்லாத வரை கடனைப் பற்றி கவலைப்படத் தேவை யில்லை. ஏதாவதொரு வழியில் "ரொட்டே ஷன்' செய்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.
குருவுக்கு சனி, கேது சம்பந்தம் இருப் பவர்களின் கடன் ஜாதகரை உருத் தெரியாமலாக்கிவிடும். குரு மற்றும் கேது தசைக் காலங்களில் மிகுந்த கவனம் தேவை. குருவே பாக்கியாதிபதி என்பதால், லக்னாதி பதியுடன் சேரும்பொழுது முன்னோர்களின் நல்லாசியும் இவர்களுக்குண்டு. இவர்களுக்குப் பிறவிக் கடனும், பொருள் கடனும் தொடர் கதையாக இருக்கும். ஆனால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சமாளித்துவிடுவார்கள்.
திங்கட்கிழமை காலை 6.00-7.00 மணிவரை யிலான சந்திர ஓரையில் சிவபெருமானை வழிபட கடன் தொல்லை கட்டுப்படும்.
சிம்மம்
சிம்ம லக்னத்திற்கு குரு ஐந்தாமதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. சந்திரன் விரயாதி பதி; அயன, சயன ஸ்தானாதிபதி. ஐந்தாம் அதிபதி குரு விரயாதிபதியுடன் இணையும் பொழுது பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக அதிக பொருள் விரயத்தை சந்திக்க நேரும். பங்குச்சந்தை வணிகத்தில் அதிக இழப்பை சந்திப்பார்கள். சிலருக்கு வம்பும் வழக்கும் நிறைந்த காதல் திருமணம் நடக்கும். அஷ்ட மாதிபதி குரு விரயாதிபதி சந்திரனுடன் சம்பந்தம் பெறும்போது, பல பெண்கள் கணவருடன் தீராத வம்பு வழக்கு, கடன் தொல்லை தாங்கமுடியாமல் தாலியைக் கழற்றி வீசுகிறார்கள் அல்லது தாலியை அட மானம் வைக்கிறார்கள். முழுச்சுபரான குரு வின் செயல்பாடே இப்படியென்றால் அசுப கிரகங்களின் செயல்பாடு எப்படியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக் கிறதல்லவா? குரு, சந்திர தசை, புக்திக் காலங் களில் அல்லது கோட்சாரத்தில் அசுப கிரகங்களின் சம்பந்தம் ஏற்படும் காலங்களில் இதுபோன்ற கிரகங்களின் செயல்பாட்டை அவ்வளவு எளிதில் யாரும் நிதானிக்க முடியாது. ஞாயிறு காலை 9.00-10.00 மணிவரை யிலான சந்திர ஓரையில் வயது முதிர்ந்த பெண்களுக்கு தயிர்சாதம் தானம் தர சுபம் உண்டாகும்.
கன்னி
கன்னி லக்னத்திற்கு குரு சுகாதிபதி, கேந்திராதிபதி, களத்திர ஸ்தானாதிபதி, பாதகாதிபதி, மாரகாதிபதி. சந்திரன் லாபாதி பதி. சுகாதிபதி குரு லாபாதிபதி சந்திரனுடன் சம்பந்தம் பெறும்போது அசையும்- அசையா சொத்துகளின் சேர்க்கை நல்ல நிலையிலிருக் கும். பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர் களாக இருப்பார்கள். களத்திர ஸ்தானாதிபதி குரு லாபாதிபதி சந்திரனுடன் சம்பந்தம் பெறும்போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமண வாழ்க்கை யைத் தருகிறது. எத்தனை திருமணம் நடந்தா லும் குரு, சந்திர தசை புக்திக் காலங்களில் திருமணத்தில், திருமண வாழ்க்கையில் பாதகத் தையும் மாரகத்தையும் செய்யத் தவறு வதில்லை. மூத்த சகோதரம் மற்றும் சிற்றப் பாவுடன் கூட்டுத்தொழில் செய்தால் குடும்ப உறவுகளிடம் கடுமையான மனபேதம் உண்டாகிறது. பாதகாதிபதி மற்றும் மார காதிபதியாக வரும் கிரகங்கள் விசாரணையே செய்வது கிடையாது. நேரடியாக எதிர்பாராத தண்டனையைக் கொடுத்து விடுவதுதான் விபரீத விளைவு. உபயம் லக்னம் என்பதால் பிரச்சினையின் தீவிரத்தை உணரும்முன்பு தண்டனையே கிடைத்துவிடும். மேலும் என் அனுபவத்தில், பல கன்னி லக்னத்தினர் குரு தசைக் காலங்களில் கனகபுஷ்பராகக் கல்லை அணிந்தே மாரகத்தைத் தேடிக்கொள்கிறார் கள். கன்னி லக்னத்தினர் புதன்கிழமை காலை 7.00-8.00 மணிவரையிலான சந்திர ஓரையில் மல்லிகைப்பூ அணிவித்து நவகிரகத்திலுள்ள சந்திர பகவானை வழிபட ஏற்றம் உண்டாகும்.
துலாம்
துலா லக்னத்தினருக்குச் குரு சகாய ஸ்தானாதிபதி, ருண, ரோக, சத்ரு ஸ்தானாதி பதி. சந்திரன் தொழில் ஸ்தானாதிபதி. 3-ஆமதிபதியாகிய குரு 10-ஆமதிபதி சந்திரனு டன் சம்பந்தம் பெறும்போது "ஆன்லைன்' வர்த்தகம் நல்ல பொருளாதார முன்னேற்றத் தைத் தரும். அதேபோல் ஊடகம், தகவல் தொடர்புத் துறையில் பணிபுரிபவர்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக இருக்கும். 6-ஆமதிபதியாகிய குரு 10-ஆமதிபதி சந்திரனுடன் சேர்க்கை பெறும்போது அடிமைத் தொழிலில் இருப்பவர்களும், முதலீடில்லாத கமிஷன் அடிப்படைத் தொழில் செய்யும்போதும் பெரும் வாழ்வியல் மாற்றமும் சுபயோகமும் உண்டாகிறது. அதிக முதலீட்டில் சொந்தத் தொழில் செய்யும் துலா லக்னத்தினர் தொழிலால் கடனாளி யாகிறார்கள். உடன்பிறந்த இளைய சகோதரத் தால், தாய்மாமாவால் வஞ்சிக்கப்படுகிறார் கள். சிலர் ஜாமின் பிரச்சினையில் மாட்டுகிறார் கள். ஆனால் துலா லக்னத்தினருக்கு மாமியார் (10-ஆமிடம்), மாமனார் (3-ஆமிடம்) ஆதரவும் பொருளாதாரமும் உண்டு. வெள்ளிக்கிழமை காலை 8.00-9.00 மணிவரையிலான சந்திர ஓரையில் முல்லை மலர் அணிவித்து மகாலட்சுமியை வழிபட சீரான முன்னேற்றம் உண்டாகும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)