பிறந்த நேரத்தில் இருக்கும் கிரகநிலை ஒருவரது ஜனன ஜாதகமாகும். ஒருவரது வாழ்க்கை நிலையைத் தெளிவாக ஆராய ஜோதிடமென்பது மிகச்சிறந்த வழிகாட்டி யாக உள்ளது. ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபடவேண்டும் என்றாலும் அதற் கொரு அதிர்ஷ்டமும் யோகமும் வேண்டும். நாம் எதைவேண்டுமாலும் ஆசைப்படலாம். ஆனால் அதற்கான அமைப்பு இருந்தால்தான் அதனை அடையமுடியும். ஜாதகப்பலன் பார்க்க வருபவர்கள் பெரும்பாலோர் சொந்தத் தொழில் செய்யமுடியுமா என்னும் கேள்வியைக் கேட்கிறார் கள். அவர்கள் ஜாதகத்தில் அதற்கான அமைப்பிருந்தால் "நன்றாகச் செய்யுங்கள்' என கூறுவேன். அமைப்பில்லை என்றால் "தயவுசெய்து தவிர்த்து விட்டு வேலைக்குச் செல்லுங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்யுங்கள்' என்பேன். சொந்தத் தொழில் செய்யும் அமைப்பு ஜோதிடரீதியாக எப்படி இருந்தால் ஏற்படுமென பார்ப்போம்.
ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 10
பிறந்த நேரத்தில் இருக்கும் கிரகநிலை ஒருவரது ஜனன ஜாதகமாகும். ஒருவரது வாழ்க்கை நிலையைத் தெளிவாக ஆராய ஜோதிடமென்பது மிகச்சிறந்த வழிகாட்டி யாக உள்ளது. ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபடவேண்டும் என்றாலும் அதற் கொரு அதிர்ஷ்டமும் யோகமும் வேண்டும். நாம் எதைவேண்டுமாலும் ஆசைப்படலாம். ஆனால் அதற்கான அமைப்பு இருந்தால்தான் அதனை அடையமுடியும். ஜாதகப்பலன் பார்க்க வருபவர்கள் பெரும்பாலோர் சொந்தத் தொழில் செய்யமுடியுமா என்னும் கேள்வியைக் கேட்கிறார் கள். அவர்கள் ஜாதகத்தில் அதற்கான அமைப்பிருந்தால் "நன்றாகச் செய்யுங்கள்' என கூறுவேன். அமைப்பில்லை என்றால் "தயவுசெய்து தவிர்த்து விட்டு வேலைக்குச் செல்லுங்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் செய்யுங்கள்' என்பேன். சொந்தத் தொழில் செய்யும் அமைப்பு ஜோதிடரீதியாக எப்படி இருந்தால் ஏற்படுமென பார்ப்போம்.
ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு 10-ஆம் பாவமென்பது ஜீவன ஸ்தானமாகும். ஜீவன ஸ்தானமான பத்தாமதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருப்பதும், கேந்திர திரிகோணங்களில் அமையப்பெற்று சுபர் பார்வை பெற்றிருப்பதும் சிறப்பாகும். பத்தாமதிபதி 6, 8, 12-ல் மறைவதும், பாதக ஸ்தானத் தில் இருப்பதும் நல்லதல்ல. 10-ல் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் வலுவாக அமைந்திருப்பது சிறப்பான அமைப்பாகும். சிலருக்கு 10-ஆமதிபதி நல்ல ஸ்தானத்தில் இருக்கும். ஆனால் பாவக சக்கரத்தில் 6, 8, 12-ல் மறைந்திருக்கும். அனுபவரீதியாக நேயர்களுக்கு நான் கூறும் கருத்து என்னவென்றால், பலனை நிர்ணயம் செய்யும்போது பாவகத்தில் கிரகங்கள் எப்படி இருக்கின்றன எனவும் கணக்கிடவேண்டும்.
அடுத்து 10-ஆமதிபதி நிலை மட்டுமல்லாமல் தொழில் செய்யும் காலத்தில் நடக்கும் தசையானது மிகவும் சாதகமானதாக இருக்க வேண்டும். தொழில் செய்யும் காலத்தில் வலுவான கிரகத்தின் தசையோ, லக்னாதிபதிக்கு நட்பு கிரகத்தின் தசையோ நடந்தால் மட்டுமே ஒருவர் சொந்தத் தொழில் செய்து சாதிக்கமுடியும்.
ஒருவர் ஜாதகத்தில் 10-ஆமதிபதி சாதகமற்றிருந்து, அவர்களுக்குத் தொழில் முயற்சி செய்யும் காலத்தில் நல்ல தசை நடைபெற்றால், ஜாதகத்தில் 7-ஆமதிபதி சாதகமாக இருக்கிறதா என பார்க்கவேண்டும். அப்படி 7-ஆமதிபதி சிறப்பாக இருந்தால் கூட்டுத் தொழில் செய்வதன்மூலம் நல்ல பலனை அடையமுடியும். குறிப்பாக எந்த கிரகம் ஜனன ஜாதகத்தில் பலமாக இருக்கிறதோ அந்த கிரகத்தைக் குறிக்கும் நபர்களை உடன்வைத்துக்கொண்டு தொழிலில் ஈடுபட்டால் நல்ல வளர்ச்சியை அடையமுடியும்.
குறிப்பாக சூரியன், குரு வலுவாக இருந்தால் தந்தை, மூத்த சகோதரர், வயது மூத்த ஆண்களை உடன்சேர்த்துக்கொண்டு செயல்படுவதும், சந்திரன் வலுவாக இருந்தால் தாய், மூத்த சகோதரி, வயதில் மூத்த பெண்களை உடன்சேர்த்துக்கொண்டு செயல்படுவதும், செவ்வாய் வலுவாக இருந்தால் இளைய சகோதரர், வயது குறைவான ஆண்களை உடன்சேர்த்துக்கொண்டு செயல்படுவதும், சுக்கிரன் வலுவாக இருந்தால் மனைவி, இளைய சகோதரி, வயது குறைவான பெண்களை உடன்சேர்த்துக்கொண்டு செயல்படுவதும் நன்று. புதன் பலன் பெற்றால் தாய்மாமன்மூலம் வாழ்வில் முன்னேற்றத்தை அடையமுடியும்.
சொந்தத் தொழில் செய்வதற்கு சூரியன் வலுவாக அமைந்தால் அரசு வழியில் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். அதுவே சூரியன்- சனி, ராகு போன்ற பாவகிரகங்களின் சேர்க்கைபெற்றிருந்தாலும், பலமிழந்திருந்தாலும் அரசுவழியில் தேவையற்ற கெடுபிடிகள் ஏற்படும். நவகிரகங்களில் புதன் பலம்பெற்று அமைந்தால் எதிலும் கணக்கிட்டுச் செயல்படும் ஆற்றல், சிந்தித்து செயல் படும் திறன், நல்ல பேச்சுத்திறனுடன் செயல்படும் ஆற்றலை அடையமுடியும்.
குரு பலம்பெற்றால் கொடுக்கல்- வாங்கலில் நற்பலனை அடையமுடியும். சனி தொழில் காரகனாகவும், சிறந்த வேலையாட்கள் அமைவதற்குக் காரகனாகவும் விளங்குகிறார். ஒருவர் ஜாதகத்தில் சனி பலம்பெற்று அமைந்திருந்தால் சிறந்த வேலையாட்கள் அமையும் யோகம், அவர்களை சிறப் பாகக் கையாளும் திறன் உண்டாகும்.
ஆட்சி, உச்சம்பெற்ற கிரகங்களும், நட்பு கிரகச் சேர்க்கை மற்றும் நட்பு கிரக வீட்டிலுள்ள கிரகங்களும் மிகச் சிறப்பான பலனை அளிக்கின்றன. ஒரு கிரகம் பகை கிரக சேர்க்கைபெற்றோ, சர்ப்பகிரக சேர்க்கை பெற்றோ, வக்ர கதியிலோ இருந்தால் நல்ல பலனைத் தராமல் எதிர்மறையான பலனையே ஏற்படுத்துகிறது. உதாரணமாக, சனி வக்ரம் பெற்றவர்களுக்கு வேலை யாட்களால் பிரச்சினை ஏற்படுகிறது.
அதுபோல குரு வக்ரம் பெற்றவர்களுக்கு கொடுக்கல்- வாங்கல் ரீதியாக சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.
சொந்தத் தொழில் செய்பவர்கள் 6, 8, 12-க்கு அதிபதிகள் மற்றும் பாதகாதி பதிகளின் தசாபுக்திக் காலங்களிலும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி போன்றவை நடைபெறும் காலங்களிலும் நெருக்கடி களை சந்திக்க நேரிடும்.