ஒருவருக்கு நிரந்தர உத்தியோகம், வருமானம் இவையிரண்டும் சுலபத்தில் அமைவதில்லை. வருமானத்தில் தினவருவாய், வார வருமானம், மாத வருமா னம், வருட வருமானம் என பல வகையுண்டு. விவசாயிகளுக்கு இரு போகம், முப்போகம், நஞ்சை, புஞ்சை என பலவகையில் வருமானம் கிடைக்கப் பெறும். குடும்பத்திற்கு ஓய்வூதியம், பணிக்குப் பின் ஓய்வூதியம் என பலவகை அதிர்ஷ்டம் உண்டு. சாஸ்திர ரீதியாக எவ்வாறு என சுருக்கமாகப் பார்ப்போம்.
ஐந்தாம் அதிபதியும் குருவும் இணைந்து 10-ஆமிடத்தில் இருப்பது நல்லது. ஒன்று, இரண்டாம் அதிபதிகள் இணைந்து ஜாதகத்தில் காணப் படின் அரசு உத்தியோகம் பலன்தரும். லக்னாதிபதிக்கோ அல்லது 7-ஆம் அதிபதிக்கோ 5-ல் குரு, சுக்கிரன், சந்திரன் யாராவது ஒருவர் இருப்பது யோகம்தான். ஜாதகத்தில் பத்தாம் அதிபதிக்கு இரண்டாம் பாவம் அதன் அதிபதிக்கு தொடர்பு ஏற்பட்டு காணப்பட்டால், நிரந்தர உத்தியோகம், சம்பளம் தடையின்றி வந்துவிடும்.
ஜாதகத்தில் 6-ஆம் அதிபதிக்கு 10-ல் சனி அல்லது 10-ஆம் அதிபதி இருப்பது தின வருவாய் வரும் என்பதை அவருடைய சுண்டுவிரலே சுட்டிக் காட்டும். மோதிர விரலுக்கு இணையாக நீண்டு காணப்படும்.
ப் புதனும் சூரியனும் இணைந்து காணப்பட்டு 1, 4, 8-ல் அவை இருந்து அதில் ஒரு கிரகம் ஆட்சி, உச்சம் பெறுவதும் போதுமானது. நிரந்தர வருமானம் வரும்.
ப் செவ்வாய் 3, 6, 10, 11-ல் இருந்து குருவினால் பார்க்கப்பட்டாலும் 9-ஆம் அதிபதி லக்னத்தில் இருந்து குருவினால் பார்க்கப்பட்டாலும் ஏதோ ஒருவகையில் நிரந்தர வருமானம் வரும். மற்றும் சந்திரனுக்கு 10-ல் சூரியன் பலமாகக் காணப்பட்டாலும். தொடராக தடையின்றி வருமானம் வரும்.
எந்நாளும் செல்வமுடையவர்கள்
ப் இரண்டு, ஏழாம் அதிபதி 7-ல் சுக்கிரன் ஆட்சிபெற்று அவருக்கு 7-ஆம் அதிபதி நட்பு பெற்ற வீட்டில் இருப்பது.
ப் இரண்டு நாலாம் அதிபதி லக்னத் திலும் ஒன்பதாம் அதிபதி. நா-ல் இருப்பது தடையில்லா செல்வம்.
ப் குருவுக்கு திரிகோணத்தில் ஒன்பதாம் அதிபதியும் பதினொன்றாம் அதிபதியும் பலன் பெறுதல் போதும்.
ப் லக்னாதிபதி நாலாம் அதிபதிகள் கூடி நா-ல் சந்திரன் குருவும் மூன்றில் இருப்பது.
ப் 4-ஆம் அதிபதி ஆட்சி பெற்று குரு சந்திரனுடன்கூடி 11-ல், இத்துடன் லக்னாதிபதி 10-ல் இருப்பது போதும்.
ப் 2, 9-ஆம் அதிபதிகள் சூரியனுடன் கூடி திரிகோணம் பெற அவர்களை 5-ஆம் அதிபதி பார்ப்பது. இவையாவும் ஜோதிட சித்தாந்தம். சில உதாரண ஜாதகம் சொல்வதை சுருக்கமாகப் பார்ப்போம்.
மலையாள நடிகர் மம்முட்டி ஜாதகம்
சுக்கிரன் வக்ரம்பெற்று 11-ஆமிடத் தில் உள்ளார். துலா லக்னத்தில் பிறந்த இவர் ஜாதகத்தில் சுக்கிரன் 11-ஆம் இடமான பாதக ஸ்தானத்தில் வக்ரம் பெற்றுள்ளார். படவுலகில் தொடர் புகழ்பெற்றவர். சந்திரன், செவ்வாய் பரிவர்த்தனை. மேலும் பலன் பெற்றுள்ளது. அயன சயன இடத்தில் சனி. எனவே செல்வம் நிலையானது.
இவருடைய மகன் துல்கர் சல்மான் புகழைப் பெற்றவர். மம்முட்டியின் லக்னத்தின் 5-ல் ராகு- சனி வீட்டில். எனவே நல்லவை தொடரும். சுக்கிரன் அருள்புரிந்தாலே போதும்
சச்சின் டெண்டுல்கர் ஜாதகம்
சுக்கிரன் 10-க்கு 10-ஆமிடமான 7-ஆமிடத்தில் உள்ளார்.
எனவே விளையாட்டில் புகழோடு பணமும், வருவதோடு சுக்கிரனும்- குருவும் இணைந்து அருள்புரிவதும் நற்பலனைத் தரும்.
பொதுவில் ஜாதகத்தில், குருவும் சுக்கிரனும் சீராக அமையப் பெற்றாலே நிம்மதி யான பணவரவு- மன அமைதி வந்துவிடும். அவர் ஆட்சி என்றால், பெரிய வி.ஐ.பி.கள் மற்றும் நல்லோர் நட்பு, அதிகாரம், பதவி, ஜீவனம் பிறருக்கு உபதேசம் செய்யும் நல்வாய்ப்பு, சத்புத்திர பாக்கியம், தங்கம், வைடூரியம், தனம் வந்து கொண்டேயிருக்கும்.
சுக்கிரன் ஆட்சி என்றால் வாகன யோகம், பசுமாடு வியாபாரம், பால் உற்பத்தி சார்ந்த வருமானம், சுகமான கவலையில்லா வாழ்வு, முக வசீகரம், தியாகம் செய்யும் குணம், அயல் நாட்டு தொடர்பு வியாபாரம், புண்ணிய ஸ்தலம் போதல், லட்சுமி கடாட்சம், அரசின் பல நன்மைகள் நாடிவருவது, பட்டம், பதவி, புகழ், நல்ல மண வாழ்க்கை, கலையில் எல்லா பிரிவிலும், நல்ல புகழைத் தேடித் தரும். ஆடம்பர வாழ்வு நாடிவரும்.
கிரக தோஷ இருப்பின் சுலபமான சில பரிகாரங் களைப் பார்ப்போம்.
ஜாதகரீதியாக சில அசுபப் பலன்களை, தரக்கூடிய தீயகிரகங்களின் தசா புக்திகள் நடைபெறும் காலம் பாடாய்ப்படுத்தும். இப்படிப்பட்ட இக்கட்டான சமயத்தில், பெரும்பாலோர் போகாத கோவில்கள் இருக்காது. கும்பிடாத தெய்வங்கள் இருக்காது. எந்தவிதமான விமோசனமும் இருக்காது.
"சாட்சிக்காரன் கா-ல் விழுவதைவிட சண்டைக் காரன் கா-ல் விழுவதுமேல்'' என்ற பழமொழியுண்டு. அதைபோல், தீய தசை அல்லது புக்தியை நடத்தக் கூடிய, கிரகத்திற்கு பிரீது செய்து அதற்கு பரிகாரமும், சாந்தியும், செய்வதை விட்டுவிட்டு மற்ற தேவதை களை மேற்கொள்வதில், எவ்வித பலனும் ஏற்படாது என்ற விதிமுறையை அனுசரித்து கிரகநாதர்களை வணங்குவது சிறப்பானது.
குரு சுக்கிர பரிகாரங்களை மட்டும் ஆய்வு செய்வோம்!
குருவுக்கு பரிகாரம்
தானம் செய்யவேண்டியவை மஞ்சள், குதிரை, புஷ்பராகம், மஞ்சள்நிறப் பட்டு வஸ்திரம், சர்க்கரை, நவரத்தின மாலை, அவரை, கடலை, நவரத்தினம் போன்றவை இலவசமாகத் தருதல் நன்று. முல்லைப் பூ மலரால்- விஷ்ணுவோடுகூடிய கருடன் படத்தினை வணங்கலாம்.
இரவில் தூங்கும்போது தலையணை அடியில் பச்சைக் கடலையை மூட்டை யாக்கி வைத்துக்கொண்டு தூங்கி, ஒன்பது நாள் சேமித்து வைத்த கடலையை ஜென்ம நட்சத்திரத்தன்று, புரோகிதர்களுக்குத் தரலாம். பறவைக்கும் போடலாம். கெடுதல் கள் அடியோடு போகும்.
சுக்கிரனுக்கு வெள்ளி விக்ரக வெண் பட்டு வஜ்ஜிரம், வெள்ளை குதிரை, தானம் தகுதிக்கு ஏற்ப செய்யலாம். செந்தாரை மலரால் மகாலட்சுமியைத் தொடர்ந்து வணங்கவேண்டும். கொஞ்சம் மொச்சைப் பயிறை தலையணை அடியில் வைத்து ஊறவைத்து, மறுநாள் பறவை அல்லது வெள்ளைப் பசுவுக்குத் தரலாம். ஒன்பது நாட்கள் செய்வது நன்மை பயிலவைக்கும். வெள்ளிக்கிழமை, தூய ஆடை அணிய வேண்டும்.
ப் சுக்கிரன் லக்னத்தில் இருந்தால், உள்ளக் கிளர்ச்சி அதிகமாகும். நல்லவர்களைக் கண்டால் வெறுக்கத் தோன்றுமாம்.
2-ல் சுக்கிரன், கண் பார்வைக் கோளாறு வரலாம். உஷார்.
3-ல் சுக்கிரன், திருமண விவகாரத்தில் சிக்கல் தோன்றி மறையும்.
4-ல் சுக்கிரன், கேந்திர தோஷத்தால் சுகம் குறையும்.
5-ல் சுக்கிரன், பெண் சந்ததி மிகுதி யாகும்.
6-ல் சுக்கிரன், மனைவி அமைப்பில் சில குறைகள் வரலாம்.
7-ல் சுக்கிரன், போக இச்சை அதிக மாகும்.
8-ல் சுக்கிரன் பணப் புழக்கம் மிகுதி யாகும்
9-ல் சுக்கிரன், உச்சம்பெற்று காணப் பட்டால், அந்த ஜாதகருடைய சுகபோகம் மற்றும் குடும்பம் சிதைந்து போகுமாம்.
10-ல் சுக்கிரன், ஜீவனத்தில் குறைகள் தோன்றும்.
11-ல் சுக்கிரன், பலமான பாதகாதிபத்திய தோஷம் உண்டென்பதால் வருவாயில் லாபம் பல வழிகளில் விரையமாகும்.
12- சுக்கிரன், பலதார அமைப்போ அல்லது அபிமான தாரங்கள் அமையலாம்.
குரு 12 ராசிகளில் குரு லக்னத்தில் இருந்தால், அதுவும் கடக லக்னத்தில் இருந்தால், இளமை முதலே பல நன்மைகள் கிடைக்கப் பெறும்.
குரு 2-ல் தன்நிலை, குடும்ப நிலை சிறப்பாக அமையும்.
குரு 3-ல் இளமையிலேயே தந்தையின் ஆதரவு இல்லாமல் ஆகிவிடும். அல்லது தந்தையை விட்டுப் பிரிய நேரிடும்.
குரு 4-ல் வீடு, மனை, வண்டி, வாகனம் எல்லாம் அமையும்.
குரு 5-ல் கௌரவமான, உத்தியோகம், தொழில், வியாபாரம், புகழ்பட வாழ வழிவகை தெரியும்.
குரு 6-ல் முடிசூடா மன்னரைப் போல வாழலாம் என்கிறது சாஸ்திரம்.
குரு 7-ல் நல்ல தரமான மனைவி மற்றும் குடும்ப வாழ்வு.
குரு 8-ல் தாய்- தந்தையரின் யோகம் சிதையும்.
குரு 9-ல் பல துறைகளிலும் வெற்றி வாகை சூடலாம்.
குரு 10-ல் ஜீவன யோகம் தலை சிறந்ததாக அமையும்.
குரு 11-ல் கணிசமான பணவரவு வரும்
விதமாக தொழில், வியாபாரம் அமையும்.
குரு 12-ல் குல தர்மத்திற்கு மாறான முறையில் திருமணம் நிறைவேறும்.
செல்: 044: 44286 11289