காலம் ஒருநாள் மாறும் கவலைகள் யாவும் தீரும் என்பது பலரின் நம்பிக்கை. உலகியல் வாழ்வில் மனிதர்களின் கவலைகளைத் தீர்க்கும் சக்தியாக விளங்குவது பணம். மனிதன் பணத்தைப் படைத்தான இல்லை பணம் மனிதனை என்று வியக்கும்வகையில் பணமே உலகை இயக்குகிறது.ஒருவரின் ஜனனகால ஜாதகரீதியாக 2, 5, 11-ஆமிடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசாபுக்தி நடக்கும் பணம் குவியும். எந்த தசாபுக்தியாக இருந்தாலும் கிடைக்கும் பணத்தின் அளவையும் பயன்பாட்டையும் நிர்ணயப்பது பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடம்.

dd

ஒருவரின் வாழ்நாளில் அதிர்ஷ்டமோ, கடவுளின் அருளோ, கர்ம வினையோ எதுவாக இருந்தாலும் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடமே தீர்மானம் செய்கிறது. ஏனெனில் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் தான் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்து வினைகளும் பதிவாகியிருக்கும். ஆழ்மன எண்ணங்களை குறிக்கும் ஐந்தாமிடத்தில் பொதிந்திருக்கும் கர்மாக்கல் எதுவானா லும் மனதின் வழியாகத்த்தான் வெளியில் வந்தாக வேண்டும். மனதின் சக்தியைப் பெருக்கி சரியான வழியில் மனதைப் பயன் படுத்தும் நுட்பத்தைத் தெரிந்துகொண்டால் கர்ம வினைகளைச் சர்வசாதாராணமாய் வெல்லலாம் என்பது அனுபவ உண்மை.

பிறப்புமுதல் இறப்புவரை அனைத்து நிகழ்வுகளும் காலத்தால் நிர்ணயிக் கப்பட்டவை. அப்படியிருக்க உழைப்பு, உழைப்பு என்று உங்க, உறங்க நேரமின்றி உழைப்பவர்களையும் பார்த்து இருக்கி றோம். அதிர்ஷ்டம், அதிர்ஷ்டம் என உழைக்காமல் அதிர்ஷ்ட குதிரையை நம்பி வாழ்வை தொலைப்பவர்களையும் பார்க்கிறோம். உழைத்தவர்கள் எல்லாம் உயர்ந்துவிடவும் இல்லை. அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்கள் அதிர்ஷ்டத்தை துரத்துவதை ஆயுள் முழுவதும் நிறுத்தப் போவதும் இல்லை. மனிதராய் பிறந்த அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின் மேல் தனி ஆர்வம் உண்டு. மாடமாளிகையில் வாழ்பவர்கள்முதல் பிளாட்பாரத்தில் வசிப்பவர்கள்வரை அனைவருக்கும் அதிர்ஷ்டத்தின்மேல் தனி விரும்பம் ... தனி மரியாதை .... தனி கவனம் உண்டு.

Advertisment

அதிர்ஷ்டம் என்றால் என்ன? அதை அடைவது எப்படி?

நாம் விரும்பும்போது வருவது அதிர்ஷ்டமா? அல்லது எதிர்பார்க்காமல் தேடிவருவது அதிர்ஷ்டமா? அதிர்ஷ்டத்தை ஜாதகத்தால், வாஸ்துவால், அதிர்ஷ்ட, எண்கள், அதிர்ஷ்ட கற்களால் அழைக்க முடியுமா?

தேடும் அனைவருக்கும் கிடைக்காமல் ஒருசிலரின் வாழ்வில் மட்டும் முகம் காட்டு வது ஏன்? என்ற அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் தருவது திருமண வாழ்க்கை.

Advertisment

திருமணத்திற்குமுன்பு கட்டுக்கடங்காத காளையாக சுற்றிவந்த பலர் திருமணத் திற்குபிறகு நன்றாக சம்பாதித்து மனைவி குழந்தைகளுடன் சந்தோசமாக வாழ்க் கையை பார்க்கிறோம். அதைத்தான் மனைவி வந்த நேரம் என்று கூறுகிறோம். மனைவி வந்தபிறகு அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் ஜாதக அமைப்பு எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

வாலிப வயதுமுதல் திருமணமாகும்வரை நிலையான வேலை இல்லாமல் தொழில், வருமானம் இல்லாமல், இருக்கும் ஒருவருக்கு திடீரென திருமணமான பிறகு தொழிலும் வருமானமும் முன்னேற்றமும் ஏற்படுகிறது. ஒரு மனிதனுக்கு பொருளாதார வளர்ச்சியை கொடுப்பதில் பணபர ஸ்தானம் முன்னிலையில் இருக்கிறது. அதன்படி பணபர ஸ்தானங்களான 2, 5, 8, 11-ஆம் பாவகங்கள் 7-ஆம்மிடத்துடன் சம்பந்தம் பெறும் மனைவி வந்தபிறகு பண வளர்ச்சி பல மடங்காக பெருகும்.

7-ஆம் பாவகம்

கணவருக்கு மனைவியையும் மனைவிக்கு கணவரையும் குறிக்கும் பாவகம் 7. இந்த பாவகத்தை தனகாரகன் குரு 1, 3, 11-ஆமிடத்திலிருந்து பார்வை செய்ய மனைவிவழியான தனசேர்க்கை, பணபுழக்கம் தரும். மனைவிவழியான தொழில் ஆதரவு, வேலையில் பதவி உயர்வு, அதிர்ஷ்டம், சீரான பணபுழக்கத்தை தரும். குறிப்பாக 7-ஆம் அதிபதி 2, 9, 10, 11-ஆம் அதிபதியோடு இணைந்து 2, 3, 4, 5, 9, 10, 11-ஆமிடங்களில் இருப்பதும் ஐந்தாம் அதிபதியோடு ஏழாம் அதிபதி இணைந்து குரு பார்வைபெறுவது, ஐந்தாம் இடத்தில் ஏழாம் அதிபதி இருப்பது, ஏழாம் இடத்தில் ஐந்தாம் அதிபதி இருப்பது போன்றவை திருமணத்திற்குபிறகு மனைவி வந்தபிறகான அதிர்ஷ்டம் காரணமாக தொழில், உத்தியோகம் முன்னேற்றத்தை தரும்.

2, 7-ஆம் பாவக சம்பந்தம்

குடும்பஸ்தானமான இரண்டா மிடத்திற்கு 7-ஆம் அதிபதி சம்பந்தம் இருந்தால் வாழ்க்கைத்துணை வசதியானவாரக இருப்பார். அல்லது நல்ல உத்தி யோகத்திலுள்ள வரன் அமையும். திருமணத் திற்குப் பிறகு பொருளாதாரம் உயரும். வசதிவாய்ப்பு பெருகும். குடும்பம் கோவிலாக இருக்கும். ஒருவரின் பேசிற்கு மற்றொருவர் கட்டுப்படுவார்கள். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளுடன் இணைந்து கூட்டுத் தொழிலில் லாபம் ஈட்டுவார்கள். தம்பதிகள் நல்ல அதிர்ஷ்டம் வசதிமிகுந்தவராக வாழ்வார்கள்.

5, 7-ஆம் பாவக சம்பந்தம்

எந்த லக்னமாக இருந்தாலும் ஏழுக் குடையவன் ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்றால் காதல் திருமணம் நடக்கும் அல்லது நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும்.

திருமணத்திற்குப்பிறகு அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். 5, 7-ஆம் அதிபதிக்கு அசுப கிரக சம்பந்தம் இல்லாதவரை எந்த தொந்தரவும் இருக்காது. நல்ல வசதியான சமுதாய அந்தஸ்து நிறைந்த வாழ்க்கை, தொழில், உத்தியோகம், பங்குச் சந்தை ஆதாயம், பிள்ளைகள்மூலம் வருமானம், பூர்வீகச் சொத்தால் வருமானம் போன்ற நன்மைகள் ஏற்படும். நிலைத்து நிற்கும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தர்ம காரியங்கள்மூலம் தமது வாரிசு களுக்கு புண்ணியப் பலனை சேர்த்து வைப்பார்கள்.

7, 8-ஆம் பாவக சம்பந்தம்

ஏழுக்குடையவன் எட்டில் இருக்கும் போது வாழ்க்கைத் துணையால் திருமணத் துக்குப் பின் பொருளாதாரநிலை உயரும். 7-க்கு 2 என்பதால் மனைவியால் விபரீத ராஜயோகம் ஏற்படும்.

அடிப்படை வசதி இல்லாதவர்களுக்கு வீடு, கார், பங்களா, நகை, நட்டு, தங்கம், வெள்ளி, பணம், சீர் வரிசை என பெரும் பொருளுடன் மனைவி அமையும். 8-ல் நிற்கும் கிரகம் 2-ஆம்மிடத்தை பார்ப்ப தால் தனது வாய்ஜாலத்தால் மனைவியை மகிழ்வித்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக் கும் யோகம் தொடரும்.

அதாவது மனைவிக்கு கூஜா தூக்க வேண்டும். மனைவி சொல்லே மந்திரம் மீதி எல்லாம் தந்திரம் என்று குதிரைக்கு கடிவாளம் போட்டதுபோல் மனைவி யின் பின்செல்லும்போது வாழ்க்கை வசந்தமாகும். மனைவியை தவறான வார்த் தைகளால் வசைபாடினால் முதல் திருமண பந்தத்தில் விவாகரத்து கோர்ட், கேஸ் என அலைந்து மன நோயாளியாகுவார்கள். இது வழுவான இரண்டு தார யோக அமைப்பாகும். நிலையான நண்பர்கள் அமையமட்டார்கள். இவர்கள் கூட்டுத் தொழிலை தவிர்ப்பது நல்லது. தம்பதிகள் சண்டை நீதிமன்றம் வரை சென்று அவ மானத்தை அதிகப்படுத்தும்.

7, 11-ஆம் பாவக சம்பந்தம்

ஏழாம் அதிபதிக்கு லாப ஸ்தான சம்பந்தம் இருந்தால் தம்பதிகள் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் அனுகூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கைத் துணை உண்டு. வருமானம் எந்த வழியில் வருகிறது என்று உணரமுடியாத வகையில் குபேர சம்பத்து கிடைக்கும். 7 -ஆம் அதிபதி பலம் குறைந்திருந்தால் இருதார தோஷத்தை ஏற்படுத்தி விடும். கூட்டுத்தொழிலுக்கு உகந்த கிரக அமைப்பு, பொருளாதார அந்தஸ்து மிகுந்தவர்கள்.

சுக்கிரன்

வாழ்க்கைத் துணையை மனைவியை குறிக்கும் கிரகமான சுக்கிரன் ஆணின் ஜாதகத்தில் 2, 4, 5, 9, 10, 11 பாவகத் தில் நட்பு வலுவோடு இருக்கவேண்டும். 1, 4, 10-ஆமிடங்களில் ஆட்சி, உச்சம் பெற்று தனித்த சுக்கிரனாக இருந்து பிற சனி செவ்வாய் கிரக பார்வை இன்றி இருக்கவேண்டும். இத்தகைய அமைப்பை மாளவியா யோகம் என்று அழைக்கபடும். இத்தகைய அமைப்பு இருந்தால் மனைவி வந்தபிறகு ஜாதகருக்கு வண்டி, வாகன யோகம் அதன்மூலமான வருமானம், தொழில் முன்னேற்றத்தை தரும்.

ஆடம்பரமான பொருட்களால் வீடு நிரம்பி சந்தோஷமான சூழல் நிலவும். பொருளாதாரம் மனித வாழ்க்கைக்கு மிக அவசியம்.

திருமணத்திற்கு பிறகே மனித வாழ்க்கையின் அனைத்து சம்பவங்களையும் பொருளாதாரம் நிர்ணயம் செய்கிறது. அத்தகைய பொருளாதாரம் மனைவிமூலம் கிடைத்தால் அந்த மனிதன் அதிர்ஷ்ட சாலிதான்.

செல்: 98652 20406