சொந்த வீட்டுக் கனவு யாருக்குக் கைகூடும்?

/idhalgal/balajothidam/who-can-dream-owning-home-dr-murugan-balamurugan

சொந்தவீடு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இருக்கக்கூடிய லட்சிய மாகும். எலி வலையானா லும் தனிவலை வேண்டு மென விரும்புபவர்களே அதிகம். எப்படியாவது கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு வீடு கட்டி அல்லது வாங்கிவிடவேண்டும் என்பது அனைவரின் கனவாகும். இந்த யோகம் எல்லாருக்கும் அமையுமா என்றால் அதற்கு விடைகூற முடியாது.

சிலர் சொந்தவீடு கட்ட நினைத்து வங்கியில் கடன்வாங்கி அலைச்சல் பட்டு, அதை ஒழுங்காகக் கட்டமுடியாமல், போதுமடா சாமி என நினைப்பார்கள். சிலர் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துகளை வைத்துக்கொண்டு சொந்த வீட்டில் வாழும் யோகத்தைப் பெறுகிறார்கள். ஒருசிலர் சிறுக சேமித்து சொந்த வீட்டிற்கு அதிபதியாகவும் ஆகி விடுகிறார்கள்.

ஒருவருக்கு சொந்த வீடு, மனை அமைய ஜோதிடரீதியாக, ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் பாவம் குறிப்பிடப்படுகிறது. இது வீடு, மனை, அசையா சொத்து யோகத்தைக் குறிக்கும் பாவமாகும். நவகிரகங்களில் சுக்கிரன் வீடு காரகனாகவும், செவ்வாய் பூமி காரகனாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஜென்ம லக்னத்திற்கு 4-ஆமதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும் உண்டாகும். 4-ஆமதிபதி கேந்திர ஸ்தானமான 1, 4, 7, 10-ஆம் இடங்களில் இருந்தாலும் அல்லது அதன் அதிபதிகளுடன் இணைந்து அமையப்பெற்றிருந்தாலும், திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் அல்லது 5, 9-ஆம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தாலும், சுப ஸ்தானங்களான 2, 11-ல் இருந்தாலும் அல்லது 2, 11-க்கு அதிபதிகளின்

சொந்தவீடு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இருக்கக்கூடிய லட்சிய மாகும். எலி வலையானா லும் தனிவலை வேண்டு மென விரும்புபவர்களே அதிகம். எப்படியாவது கஷ்டப்பட்டு சம்பாதித்து ஒரு வீடு கட்டி அல்லது வாங்கிவிடவேண்டும் என்பது அனைவரின் கனவாகும். இந்த யோகம் எல்லாருக்கும் அமையுமா என்றால் அதற்கு விடைகூற முடியாது.

சிலர் சொந்தவீடு கட்ட நினைத்து வங்கியில் கடன்வாங்கி அலைச்சல் பட்டு, அதை ஒழுங்காகக் கட்டமுடியாமல், போதுமடா சாமி என நினைப்பார்கள். சிலர் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துகளை வைத்துக்கொண்டு சொந்த வீட்டில் வாழும் யோகத்தைப் பெறுகிறார்கள். ஒருசிலர் சிறுக சேமித்து சொந்த வீட்டிற்கு அதிபதியாகவும் ஆகி விடுகிறார்கள்.

ஒருவருக்கு சொந்த வீடு, மனை அமைய ஜோதிடரீதியாக, ஜென்ம லக்னத்திற்கு 4-ஆம் பாவம் குறிப்பிடப்படுகிறது. இது வீடு, மனை, அசையா சொத்து யோகத்தைக் குறிக்கும் பாவமாகும். நவகிரகங்களில் சுக்கிரன் வீடு காரகனாகவும், செவ்வாய் பூமி காரகனாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஜென்ம லக்னத்திற்கு 4-ஆமதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் பலமான வீடு யோகமும் அதிகப்படியான சொத்து யோகமும் உண்டாகும். 4-ஆமதிபதி கேந்திர ஸ்தானமான 1, 4, 7, 10-ஆம் இடங்களில் இருந்தாலும் அல்லது அதன் அதிபதிகளுடன் இணைந்து அமையப்பெற்றிருந்தாலும், திரிகோண ஸ்தானங்களில் இருந்தாலும் அல்லது 5, 9-ஆம் அதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தாலும், சுப ஸ்தானங்களான 2, 11-ல் இருந்தாலும் அல்லது 2, 11-க்கு அதிபதிகளின் சேர்க்கைப்பெற்றிருந்தாலும் சொந்த வீடு யோகம் உண்டாகும்.

ஜென்ம லக்னத்திற்கு 4-ஆமதிபதியையும், 4-ஆம் வீட்டையும் குரு போன்ற சுபகிரகம் பார்வை செய்வது நல்லது. 4-ஆம் வீட்டதிபதி பலம்பெறுவது மட்டுமன்றி சுக்கிரனும் ஆட்சி, உச்சம்பெற்று பலமாக இருந்தால் சொந்த வீடு யோகம் உண்டாகி, அதன்மூலம் மகிழ்ச்சி ஏற்படும். அதுபோல பூமிகாரகன் செவ்வாய் ஆட்சி, உச்சம்பெற்று பலமாக 4-ல் அல்லது 4-ஆமதிபதியின் சேர்க்கைப்பெற்றிருந்தால், ஒருவருக்கு பூமியோகம் உண்டாவது மட்டுமன்றி பூமியுடன்கூடிய வீட்டை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். அல்லது பூமியை வாங்கி அதில் வீடு கட்டக்கூடிய யோகம் உண்டாகும்.

4-ஆம் வீட்டில் எத்தனை பலமான கிரகங்கள் அமைகிறதோ, 4-ஆமதிபதியுடன் எத்தனை பலமான கிரகங்கள் சேர்க்கைப் பெறுகிறதோ, 4-ஆம் வீட்டை எத்தனை பலமான கிரகங்கள் பார்வை செய்கிறதோ அத்தனை வீடுகள் அமையக்கூடிய யோகம் உண்டாகும்.

ww

வீட்டின் அமைப்பு

ஒருவருக்கு சொந்தவீடு அமையக்கூடிய யோகம் உண்டானாலும், அந்த வீட்டின் அமைப்பு எப்படியிருக்கும் என்பதனையும் 4-ஆம் பாவத்தின்மூலம் அறியலாம்.

சூரியன், கேது 4-ஆம் வீட்டிலிருந்தால், அமையக்கூடிய வீடானது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் உறுதித் தன்மையற்றதாக இருக்கும். சந்திரன் இருந்தால் அழகான புதிய வீடு அமையும் யோகமும், சுக்கிரன் இருந்தால் மிகவும் அம்சமான வீடும் அமையும். குரு இருந்தால் மிகவும் உறுதியான தரமிக்க வீடு அமையும். புதிய வீடும் கட்டக்கூடிய யோகம் உண்டாகும். செவ்வாய் இருந்தால் வீட்டில் விரிசல்கள் உண்டாகக்கூடிய நிலை, சில நேரங்களில் வீட்டிற்கு தீயால் பாதிப்புகள் உண்டாகும்.

சனி, ராகு அமையப்பெற்றாலோ, 4-ஆம் வீட்டையோ, 4-ஆம் அதிபதியையோ சனி, ராகு பார்த்தாலும் பழைய வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

யார்மூலம் சொத்து?

ஒருவரின் ஜாதகத்தில் 5-ஆம் பாவமானது பூர்வீகத்தைக் குறிப்பிடுவதாகும். என்றாலும் பூர்வீக வழியில் அசையா சொத்து யோகம் உண்டாக 4, 5-க்கு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ, இணைந்திந்தாலோ, 4, 5-க்கு அதிபதிகளிடையே பலமான தொடர்பு ஏற்பட்டிருந்தாலோ பூர்வீக வழியில் வீடு யோகம் உண்டாகும்.

நவகிரகங்களில் சூரியன் தந்தை காரகனா வார். 9-ஆமிடம் தந்தை ஸ்தானமாகும். 4, 9-க்கு அதிபதிகள் பலமாக அமைந்து சூரியனும் பலமாக இருந்தால் தந்தைவழியில் அசையா சொத்து யோகம் உண்டாகும். 4, 9-க்கு அதிபதிகள் பரிவர்த்தனைப் பெற்றிருப்பதும் 4-ஆமதிபதி 9-ல், 9-ஆமதிபதியின் சேர்க் கைப் பெற்றிருப்பது போன்றவற்றாலும் தந்தை வழியில் அசையா சொத்து யோகத்தைக் கொடுக்கும்.

நவகிரகங்களில் தாய்காரகன் சந்திரனா வார். ஒருவர் ஜாதகத்தில் 4-ஆமதிபதி பலமாக அமைந்து, தாய்காரகன் சந்திரனும் பலமாக இருந்தால் தாய்மூலம் அசையா சொத்து யோகம் அமையும்.

நவகிரகங்களில் சகோதரகாரகன் செவ்வாய் ஆவார். ஒருவர் ஜாதகத்தில் 3, 11-க்கு அதிபதிகள் பலமாக அமையப் பெற்றோ, பரிவர்த்தனைபெற்றோ அமைந்து, செவ்வாயும் பலமாக இருந்தால் உடன்பிறந்த சகோதரர்கள்மூலம் பலமான வீடு யோகம் உண்டாகும். அதுவே பெண் கிரகங்களான சந்திரன், சுக்கிரன் பலமாக இருந்தால், உடன்பிறந்த சகோதரிகள்மூலம் வீடு யோகம் உண்டாகும்.

திருமணத்தின்மூலம் சொத்து யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் 7-ஆம் பாவம் திருமண வாழ்வு பற்றிக் குறிப்பிடுவதாகும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தா லும் 4, 7-க்கு அதிபதிகள் பலமாக அமையப் பெற்றிருந்து 4, 7-க்கு அதிபதிகளுக்கிடையே பலமான தொடர்பு ஏற்பட்டிருந்தால்- அதாவது பரிவர்த்தனை பெற்றிருந்தாலோ, சேர்க்கைப்பெற்றிருந்தாலோ, பார்வை பெற்றிருந்தாலோ திருமண பந்தத்தின்மூலம் அசையா சொத்து அமையும் யோகம் உண்டாகும். அதுமட்டுமன்றி இருவரும் சேர்ந்து கூட்டாக சொத்துகள் வாங்கி மேலும் மேலும் அபிவிருத்தி செய்துகொள்ள முடியும்.

மற்றவர்கள் பெயரில் சொத்து (பினாமி)

ஒருவரின் ஜனன ஜாதகத்திலுள்ள பலமான கிரகங்களின் தசாபுக்தி நடைபெறும் காலங்களில்தான் வீடு, மனை, அசையா சொத்து யோகம் உண்டாகும். சிலருக்கு 4-ஆமதிபதி பலவீனமாக இருந்தாலோ, நடைபெறக்கூடிய தசாபுக்தி சாதகமற்று இருந்தாலோ, அவர்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தைச் சொத்தாக மாற்றக்கூடிய யோக மிருக்காது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்கள் ஜாதகத்தில் எந்த கிரகம் பலமாக அமையப்பெற்றிருக்கிறதோ,அந்த கிரகத்திற்குரிய நபர்களின்மீது சொத்துகள் வாங்கும்போது, அதன்மூலம் அபிவிருத்தி, முன்னேற்றம் உண்டாகும்.

சூரியன், குரு போன்ற கிரகங்கள் வலுவாக இருந்தால் தந்தை, குடும்பத்தில் மூத்தவர் கள், பிள்ளைகள் பெயரில் சொத்துகள் வாங்கு வது சிறப்பைத் தரும். செவ்வாய் பலமாக இருந்தால் உடன்பிறந்தவர்கள் பெயரில் சொத்தும், சுக்கிரன், சந்திரன் பலமாக இருந் தால் பெண்கள் பெயரிலும் சொத்துகள் வாங்கு வது நல்லது. புதனிருந்தால் உறவினர்கள் பெயரிலோ, தொழில் செய்யக்கூடிய நிறுவனத் தின் பெயரிலோ முதலீடு செய்வது நல்லது. சனி பலமாக இருந்தால் வேலையாட்களால் பலவிதத்தில் ஆதாயம் அடைவார்கள்.

எப்பொழுது சொத்து அமையும்?

ஒருவருக்கு 4-ஆமதிபதி பலம்பெற்று அமைந்திருந்து அதனுடைய தசை அல்லது புக்தி நடைபெற்றாலும், 4-ல் பலமாக அமையப் பெற்ற கிரகத்தின் தசை அல்லது புக்தி நடைபெற்றாலும், சுக்கிரனின் தசை அல்லது புக்தி நடைபெற்றாலும், அத்துடன் கோட்சார கிரக நிலையும் சாதகமாக இருந்தால் அசையா சொத்து யோகம் உண்டாகும்.

சொத்துகளால் பிரச்சினை ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத் திற்கு 6-ஆம் பாவமானது கடன், வம்பு, வழக்குகளைக் குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். பொதுவாக 6-ஆமதிபதி 4-ல் அமைந்தி ருந்தாலும், 4, 6-க்கு அதிபதிகள் இணைந் திருந்தாலும், 6-ஆமதிபதியின் சாரம் பெற்று 4-ஆமதிபதி இருந்தாலும் சொத்துகளால் பிரச்சினை, வம்பு, வழக்கு, கடன் தொல்லை கள் உண்டாகும்.

வீடு, மனை யோகம் இல்லாத அமைப்பு ஒருவர் ஜாதகத்தில் 4-ஆமதிபதி 6, 8, 12-ல் மறைவு பெற்றிருந்தாலும், பாதக ஸ்தானத்தில் அமையப்பெற்றிருந்தாலும், சனிபோன்ற பாவகிரகங்கள் பார்வை செய்தாலும் சொந்த வீடு அமைய தடையுண்டாகும். 4-ஆமதிபதி வக்ரம் பெற்றாலும், நீசம்பெற்றாலும், பாவி களின் சேர்க்கைப்பெற்றிருந்தாலும் வீடு, அசையா சொத்துகள் அமைய இடையூறுகள் ஏற்படும்.

bala100622
இதையும் படியுங்கள்
Subscribe