உயர் கல்வி யோகம் எந்தத் துறையில்? -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/which-field-higher-education-melmaruvathur-s-kalaivani

ல்வி என்பது மானுடத்தை மலர்ந்திடச் செய்யும், ஓர் அற்புத, ஆன்ம விதை, என்பதனை உணர்த்தும் வகையில் மூத்தோரம், சான்றோர்களும் நமக்கு ஆழ உணர்த்தியுள்ளனர்.

"கேடில் விழுசெல்வம் கல்வி ஒருவர்க்கு

மாடல்ல மற்றையவை.'

ஒருவருக்கு அழிவில்லாத, உயர் செல்வம் கல்வியே. மற்ற செல்வங்கள் எல்லாம், காலத்திற்கு ஏற்றாற்போல் கரையும் நிலையற்ற தன்மையுடையது. என்று கல்வியின் சிறப்பினை வள்ளுவம் வலியுறுத்தியுள்ளது.

இதனை முழுக்க ஏற்றுக்கொண்ட, தலைமுறையாக இந்த தலைமுறை திகழ்கிறது.

ss

எனவே தான் வசதி வாய்ப்பு களைக் குறைத்துக்கொண்டும், கடன் பட்டும், தங்களின் சந்ததி கல்வியில், சிறப்புற வேண்டுமென்று பல வழிகளிலும் பயணிக்கின்றனர் இன்றைய பெற்றோர்கள்.

அன்றையகால சூழலானது நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, பட்டப் படிப்பு, ல்ன்ஸ்ரீ, தொழிற்கல்வி, போன்றவை களாகும், சிறு சதவிகிதத்தினர் பொறியியல், மருத்துவம் என்று தங்களின் திறமைக்கு ஏற்றவாறும், பொருளாதார நிலைக்கு ஏற்றவாறும் பயனித்தனர். ஆனால் இன்றைய சூழலானது அப்படியா அமைந்துள்ளது?

பொறியியல் கல்வியில் மட்டுமே 64 துறைகள் உள்ளன, மற்றும் மருத்துவத் துறையில் அதிநவீன சிகிச்சைகளுக்கான கல்வி, கலை மற்றும் அறிவியல், ஆடை, ஆபரணங்களுக்கான கல்வி, உணவு, உயிரியல் கல்வி, கப்பல்முதல் விமானம்வரை ஆயிரம் நுட்பமான தொழில் சூட்சுமக் கல்விகள், மனோதத்துவம் முதல் செயற்கைக் கருத்தரிப்புவரை, எண்ணில் அடங்காத நுட்பங்களையும், சாகசங்களையும், வேகத்தில் இன்றைய காலகட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

இந்த அதிவேக சுழற்சியில் தங்களின் குழந்தை களும், பிரகாசிக்க வேண்டுமென்ற நியாயமான ஆசையும், பிரியமும் எல்லா பெற்றோரிடமும் இருப்பது வியப்புக்குரியதல்ல. ஆனால், கல்வி பயிலும் மாணவ- மாணவி யரின் கருத்தும், ஆசையும், கவனிக் கப்பட வேண

ல்வி என்பது மானுடத்தை மலர்ந்திடச் செய்யும், ஓர் அற்புத, ஆன்ம விதை, என்பதனை உணர்த்தும் வகையில் மூத்தோரம், சான்றோர்களும் நமக்கு ஆழ உணர்த்தியுள்ளனர்.

"கேடில் விழுசெல்வம் கல்வி ஒருவர்க்கு

மாடல்ல மற்றையவை.'

ஒருவருக்கு அழிவில்லாத, உயர் செல்வம் கல்வியே. மற்ற செல்வங்கள் எல்லாம், காலத்திற்கு ஏற்றாற்போல் கரையும் நிலையற்ற தன்மையுடையது. என்று கல்வியின் சிறப்பினை வள்ளுவம் வலியுறுத்தியுள்ளது.

இதனை முழுக்க ஏற்றுக்கொண்ட, தலைமுறையாக இந்த தலைமுறை திகழ்கிறது.

ss

எனவே தான் வசதி வாய்ப்பு களைக் குறைத்துக்கொண்டும், கடன் பட்டும், தங்களின் சந்ததி கல்வியில், சிறப்புற வேண்டுமென்று பல வழிகளிலும் பயணிக்கின்றனர் இன்றைய பெற்றோர்கள்.

அன்றையகால சூழலானது நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி, பட்டப் படிப்பு, ல்ன்ஸ்ரீ, தொழிற்கல்வி, போன்றவை களாகும், சிறு சதவிகிதத்தினர் பொறியியல், மருத்துவம் என்று தங்களின் திறமைக்கு ஏற்றவாறும், பொருளாதார நிலைக்கு ஏற்றவாறும் பயனித்தனர். ஆனால் இன்றைய சூழலானது அப்படியா அமைந்துள்ளது?

பொறியியல் கல்வியில் மட்டுமே 64 துறைகள் உள்ளன, மற்றும் மருத்துவத் துறையில் அதிநவீன சிகிச்சைகளுக்கான கல்வி, கலை மற்றும் அறிவியல், ஆடை, ஆபரணங்களுக்கான கல்வி, உணவு, உயிரியல் கல்வி, கப்பல்முதல் விமானம்வரை ஆயிரம் நுட்பமான தொழில் சூட்சுமக் கல்விகள், மனோதத்துவம் முதல் செயற்கைக் கருத்தரிப்புவரை, எண்ணில் அடங்காத நுட்பங்களையும், சாகசங்களையும், வேகத்தில் இன்றைய காலகட்டம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

இந்த அதிவேக சுழற்சியில் தங்களின் குழந்தை களும், பிரகாசிக்க வேண்டுமென்ற நியாயமான ஆசையும், பிரியமும் எல்லா பெற்றோரிடமும் இருப்பது வியப்புக்குரியதல்ல. ஆனால், கல்வி பயிலும் மாணவ- மாணவி யரின் கருத்தும், ஆசையும், கவனிக் கப்பட வேண்டியது முக்கியம்.

இதில் பயணம் செய்கின்றவர்கள் அவர்கள்தான் என்பதனால், அவர்களின் ஆர்வம் எந்தத் துறையில் அமைந்துள்ளது என்பதனை எண்ணத்தில் கொள்ள வேண்டியது பெற்றோர்களின் முக்கியமான கடமை யாகும்.

நிதர்சனத்தில் பார்க்கும்பொழுது பள்ளி, கல்லூரி, படிப்பை முடிக்காத ஒருவர் அதீத அறிவியல் சிந்தனையும், ஆற்றலையும் விரல் நுனியில், பல கருத்தியல், கருக்கலை யும், வைத்திருப்பதையும், பட்டம்பெற்று ஆராய்ச்சிக் கல்வி முடித்தும் அடிப்படைக் கல்வியின் சாராம்சம் அறியாமல் இருக்கும் முரண்பட்டவர்களையும், நாம் கடந்தே வந்திருப்போம், மேலும் ஆரம்பக் கல்வியில் நன்கு படித்து, உயர்கல்வியில் தேர்ச்சிபெறாமல் சென்றவர் களையும், ஆரம்பக் கல்வியில் அவ்வளவு ஆர்வமில்லாமல் உயர்கல்வியில் சிறந்த நிலையை அடைந்தவர்களையும், நாம் கடந்தே வந்திருப்போம், இதற்குக் காரணம் என்ன என பார்த்தோமேயானால், அவர்களின் ஜாதகத்தில் விடை காணமுடியும்.

ஒருவருடைய ஜாதகத்தில் 2, 4, 5, 9-ஆம் பாவகங்களும் புதன், சனி ஆகிய கிரகங்கள் பெறும் வலிமையும், அவற்றின் நிலையும்தான் என்பதில் சந்தேகமே இல்லை.

மேலும் ஒருவரின் ஜாதகத்தில் வித்யா காரகன், என்னும் புதபகவானும், ஐந்தாம் பாவகாதிபதி என்னும் புத்தி காரகனும், வலுப்பெற்று இருப்பது பெரும் சிறப்பினை தரும். ஏனென்றால் படிக்கும் ஒரு பாடத்தை நினைவில் ஏற்றி அதை தேவையான இடத்தில் வெளிப்படுத்துவது புதன் மட்டுமே. அதனோடு புத்திஸ்தானாதிபதியும் இணைந்து கொள்வார். அதுமட்டுமல்லாமல் ஒரு ஜாதகத் தின் கல்வியினை நிர்ணயிப்பது எந்த பாவகம் மற்றும் கிரகங்கள் என்று பார்க்கும்பொழுது இரண்டாம் இடம் என்ற அடிப்படைக் கல்வி, நான்காம் இடம் என்ற உயர் கல்வி, ஐந்தாம் இடம் என்ற ஆசை மற்றும் அறிவின் நிலையினை குறிக்கும் பாவகம், இடம் என்கின்ற உயர் பட்டப்படிப்பு, மேலும் அந்த ஜாதகத்தின் ஜீவனக் காரனாகிய பத்தாம் அதிபதியும், சனிபகவானும் பொறுப்பேற்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அந்த ராசியில் அமையப்பெற்ற நட்சத்திரங்கள், ராசிநாதன் போன்றோரும் காரண கர்த்தாவாக திகழ்கின்றனர்.

மேலும் கர்ம கிரகங்கள் என்றும், சாயா கிரகங்கள் என்றும், கூறப்படுகின்ற ராகு- கேதுக்கள், கடகம் அல்லது மகர ராசியில் இருந்தால், அவர்களுக்கு கல்வியறிவு பிரகாசமாக இருக்கும். அவர்களிடம், அனுபவ அறிவும், விஷயநாணமும், அபரிவிதமாக காணப்படும்.

அந்த வகையில் ஒருவரின் சுய ஜாதகத்தை வைத்தே முழு பலனையும் அறிவது சிறப்பென்றாலும், பொதுவான விதிகளின்படி, எந்த ராசியில் பிறந்தவர்கள் என்ன படிப்பு படிக்கலாம் என்பதனை பின்வருமாறு காணலாம்.

மேஷ ராசி

மேஷ ராசி மருத்துவத்திற்கான ராசியில் முதலிடமாக திகழ்கின்றது அதில் அமையப்பெற்ற, கேதுவின் நட்சத்திரம், இதற்கு ஒரு காரணமாக அமைகின்றது. மேலும் செவ்வாயின் ஆளுமைக்குரிய இடம் என்பதனால், பூமி சார்ந்த துறையும் சிறப்பினை தரும். அந்தவகையில் சிவில் இன்ஜினியரிங், விளையாட்டுத்துறை, மருத்துவத் துறை படிப்புகள், பல் மருத்துவம், சிகிச்சை மருத்துவம், புவியியல் துறை, ஆளுமைக்குரிய அட்மினிஸ்ட்ரேடிவ் துறைகள், மற்றும் அரசு வேலைக்கான தேர்வுகளை கைகொள்ளுதல் போன்றவை சிறப்பினை தரும்.

ரிஷப ராசி

ரிஷப ராசி சுக்கிரனின் ஆளுமையும், சந்திரனின் பலமும், நிறைந்த ராசியாக திகழ்வதனால் வங்கித் துறை, கல்வித்துறை, கால்நடைத் துறை, ஃபேஷன் டெக்னாலஜி, மருத்துவம், உணவு பாதுகாப்புத் துறை, ஃபார்மா ஷூட்டிகள் இன்ஜினியரிங் மற்றும் ஜுவல் மேக்கிங், பிளாஸ்டிக் சர்ஜன்ஸ், அழகியல் துறை சார்ந்த கல்வி சிறப்பினை நல்கும்.

மிதுன ராசி

புதனின் ஆளுமையும், மதிநுட்பத்தையும் கொண்ட மிதுன ராசி, புள்ளியில், நில அளவை, கணிதம், தணிக்கை, நூலாசிரியர், பேராசிரியர், ஆடிட்டிங், வணிகவியல், நூலகம், தகவல் தொடர்பு, பத்திரிகை, ஜோதிடம், டேட்டா என்ட்ரி, போன்ற துறைகளில் சிறப் பினை அடையலாம்.

கடக ராசி

சந்திரன் மற்றும் குருவின் அருளாசி நிறைந்த கடகம், விவசாய ஆராய்ச்சி கல்வி, கடல்சார் படிப்புகள், மீன்களின் ஆராய்ச்சி கல்வி என்று அழைக்கப்படும், ஃபிஷரீஸ், மருத்துவம், இலக்கியம், மொழியியல் போன்ற துறை வாழ்வினை வளமாக்கும்.

சிம்ம ராசி

சூரியனின் தீட்சண்யத்தை பெற்ற சிம்ம ராசி பொறியியல் துறை இதயம் மற்றும் கண் சார்ந்த அறுவை சிகிச்சை துறை, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பி.பி.ஏ., எம்.பி.ஏ., போன்ற அட்மினிஸ்ட்ரேடிவ் துறைகளினாலும், அரசு நடத்தும் தேர்வுகளின்மூலம் உயர்நிலை அடையும் சூழலையும் கை கொண்டால் சிறப்பினை அடையலாம்.

கன்னி ராசி

புதனின் நுண்ணறிவினை மிகுதியாகக்கொண்ட கன்னி ராசி, சித்த மருத்துவம், கல்வித்துறை, வணிகவியல், கணக்கியல், தணிக்கையாளர்கள், டேட்டா என்ட்ரி, ஊடக கல்வி, ஐடி, கணினி சார்ந்த அனைத்துக் கல்விகளும், நிர்வாக மேலாளர், டெக்னிக்கல் கல்விகள், திரைப்பட தொழில்நுட்பம் சார்ந்த கல்விகள், சிறப்பான ஒரு இடத்தில் அமரச் செய்யும்.

துலா ராசி

சுக்கிரன் மற்றும் சனியின் சுபிக்ஷம் நிறைந்த துலா ராசி, நிதித்துறை, நீதித்துறை, டெக்ஸ்டைல்ஸ் இன்ஜினியரிங், சினிமா தொழில்நுட்பம், இசை சார்ந்த கல்வி, மரைன் இன்ஜினியரிங், தொழிற்கல்வி, சினிமா போட்டோகிராபி, அச்சகம் சம்பந்தமான கல்வி, இவர்களுக்கு சிறப்பான ஒரு பயணத்தை நல்கும்.

விருச்சக ராசி

செவ்வாயில் அருள் நிறைந்த விருச்சிக ராசி, மருத்துவம், பொறியியல், இராணுவம், விளையாட்டுத்துறை, மருந்து தயாரிப்பு, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, பார்மா சூட்டிக்கல்ஸ் இன்ஜினியரிங், அறுவை சிகிச்சை மருத்துவர், லேப் டெக்னீசியன், காவல்துறை, மின்னணு வியல், பயோ கெமிக்கல், இயந்திரம் தொடர்பான கல்வி, இவர்களுக்கு சிறப்பு அளிக்கும்.

தனுசு ராசி

குருவின் பரிபூரண அருள் நிறைந்த தனுசு ராசி, கல்வித்துறை, அறிவியல் சார்ந்த அனைத்து துறைகளும், வங்கி சார்ந்த கல்வி, பொருளாதார கல்வி, ஆலோசகர்கள், நீதித்துறை, ஆடிட்டர், மக்கள் சேவை துறை, பொதுப்பணித்துறை, பட்டய படிப்புகள், ஆராய்ச்சி துறை போன்றவை சிறப்பானதொரு வாழ்வியலுக்கு வழிவகுக்கும்.

மகர ராசி

சனி மற்றும் செவ்வாயின் வீரியத்தைக்கொண்ட மகர ராசி, அனைத்துவகையான தொழிற்கல்விகளும், ஐ.டி.ஐ., சட்டத்துறை, மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், சுரங்கம் மற்றும் கனிமங்கள், சார்ந்த கல்வி, ஆர்க்கிடெக், விளையாட்டுத்துறை போன்றவை சிறப்பினை தரும்.

கும்ப ராசி

சனியின் அருளாசிகொண்ட கும்ப ராசி எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்ட், வரலாறு, புவியியல், பொறியியல், பெட்ரோலியம் சார்ந்த கல்வி, கப்பல் சார்ந்த படிப்பு, சட்டம், ஆர்க்கியாலஜி, சுரங்கம் மற்றும் கனிமம் சார்ந்த கல்வி, வாழ்வில் வளர்த்த அளிக்கும்.

மீன ராசி

குரு மற்றும் சுக்கிரனின் அருள் நிறைந்த மீன ராசி, நீதித்துறை, நிதிதுறை, குழந்தை மருத்துவம், மைக்ரோ பயாலஜி, பொருளாதார கல்வி, ஜோதிடம், ஆலோசகர்கள், ஆசிரியர் கல்வி, மயக்க மருந்து கல்வி, செயற்கை கருத்தரிப்பு மருத்துவம், சினிமா போட்டோகிராபி போன்ற துறைகள் பெரும் சிறப்பினை நல்கும்.

மேற்கூறியவாறு பன்னிரண்டு ராசிகளும், அவை பெற்றுள்ள பலமும் பலவீனத்தையும் கொண்டு பொதுவான கல்விக்குரிய பலனை சமர்ப்பித்துள்ளோம் இதனையும் ஒரு அளவுகோலாக எடுத்துக்கொண்டு அவரவர் சுய ஜாதகத்திலுள்ள பலம் பலவீனத்தை யும் அறிந்து, கல்வி பயிலும் மாணவ- மாணவியரின் மனோநிலைக்கேற்ப கல்வியை அவர்களுக்கு வழங்குவது சிறப்பினைத் தரும்.

செல்: 80563 79988

bala160623
இதையும் படியுங்கள்
Subscribe