ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நிர்ணயம் செய்பவர்கள் தசா புக்திநாதர்கள் என்பது நிதர்சனமான உண்மை. தசாபுக்தியுடன் சம்பந்தம் பெறாத சம்பவங்கள் நடைபெறும் சாத்தியக் கூறுகள் குறைவு. தசை நடத்தும் கிரகம் எந்த விதத்திலும் பங்கப்படாமல் இருந்தால் மட்டுமே அந்த கிரகத்தின் தசை பலன் தரும்.
ஒரு ஜாதகத்திற்கு யோகத்தை அதிர்ஷ்டத்தை வழங்குபவர். 5-ஆம் அதிபதி எனும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி. அதன் மூலம் அடையும் நன்மைகளை அனுபவிக்கும் பாக்கியத்தை தருபவர் 9-ஆம் அதிபதியாக பாக்கியாதிபதி. இந்த கட்டுரையில் 12 லக்னத் திற்கும் அதிர்ஷ்டம் தரும் தசாபுக்திகளை யும் அதற்கான பரிகாரங்கள் பற்றியும் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ லக்னத்திற்கு பூர்வபுண்ணிய ஸ்தான அதிபதி, 5-ஆம் அதிபதி சூரியன். பாக்கியாதிபதி குரு. 9-ஆம் அதிபதி குரு விரயாதிபதியாகவும் இருப்பதால் முழுமையாக சுப பலன்களை வழங்க கடமைப் பட்டவர் சூரியன்.சூரியன் பலம்பெற்று தசை நடந்து புகழ், அந்தஸ்து, கௌரவம் உயரும். நிலையான, நிரந்தரமான தொழில், பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும். பங்குச்சந்தை ஆதாயம், பிள்ளை களால் மகிழ்ச்சி கூடும். குரு பலம்பெற்று தசை நடத்தினால் வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை அமையும். சேவை மனப்பான்மை மிகுதியாகும். தரும் காரியங்கள் செய்யும் பாக்கியம் கிட்டும்.
பரிகாரம்: மேலும் சுபப்பலனை அதிகரிக்க வியாழக்கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்யவும்.
ரிஷபம்
ரிஷப லக்னத்திற்கு பூர்வப்புண்ணிய ஸ்தான அதிபதி புதன். அவர் 2, 5-ஆம் பாவகத் திற்கு அதிபதி. பாக்கியாதிபதி சனி. அதாவது 9, 10-ஆம் அதிபதி. சனி பாதகத்தையும் செய்பவர்.சனி பாதகாதிபதியானாலும் ராஜயோக கிரகமாகவும், தர்மகர்மாதிபதி யோக கிரகமாகவும் வருகிறார். ரிஷபத்திற்கு சனி, புதன் இருவரும் முழு சுபப்பலன் தருபவர்கள். புதன் தசை உரிய வயதில் நடந்தால் திருமணம், குழந்தை பாக்கியம், சமுதாய அந்தஸ்தான தொழில். உத்தியோகம், பங்குச் சந்தை ஆதாயம், பிள்ளைகள்மூலம் வருமானம், பூர்வீகச் சொத்தால் வருமானம் போன்ற நன்மைகள் ஏற்படும். சனி சுபப்பலன் பெற்று தசை நடத்தினால் பல தலைமுறைக்கும் நிலைத்து நிற்கும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தர்ம காரியங்கள்மூலம் தமது வாரிசுகளுக்கு புண்ணிய பலனை சேர்த்து வைப்பார்கள். முன
ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நிர்ணயம் செய்பவர்கள் தசா புக்திநாதர்கள் என்பது நிதர்சனமான உண்மை. தசாபுக்தியுடன் சம்பந்தம் பெறாத சம்பவங்கள் நடைபெறும் சாத்தியக் கூறுகள் குறைவு. தசை நடத்தும் கிரகம் எந்த விதத்திலும் பங்கப்படாமல் இருந்தால் மட்டுமே அந்த கிரகத்தின் தசை பலன் தரும்.
ஒரு ஜாதகத்திற்கு யோகத்தை அதிர்ஷ்டத்தை வழங்குபவர். 5-ஆம் அதிபதி எனும் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி. அதன் மூலம் அடையும் நன்மைகளை அனுபவிக்கும் பாக்கியத்தை தருபவர் 9-ஆம் அதிபதியாக பாக்கியாதிபதி. இந்த கட்டுரையில் 12 லக்னத் திற்கும் அதிர்ஷ்டம் தரும் தசாபுக்திகளை யும் அதற்கான பரிகாரங்கள் பற்றியும் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ லக்னத்திற்கு பூர்வபுண்ணிய ஸ்தான அதிபதி, 5-ஆம் அதிபதி சூரியன். பாக்கியாதிபதி குரு. 9-ஆம் அதிபதி குரு விரயாதிபதியாகவும் இருப்பதால் முழுமையாக சுப பலன்களை வழங்க கடமைப் பட்டவர் சூரியன்.சூரியன் பலம்பெற்று தசை நடந்து புகழ், அந்தஸ்து, கௌரவம் உயரும். நிலையான, நிரந்தரமான தொழில், பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும். பங்குச்சந்தை ஆதாயம், பிள்ளை களால் மகிழ்ச்சி கூடும். குரு பலம்பெற்று தசை நடத்தினால் வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை அமையும். சேவை மனப்பான்மை மிகுதியாகும். தரும் காரியங்கள் செய்யும் பாக்கியம் கிட்டும்.
பரிகாரம்: மேலும் சுபப்பலனை அதிகரிக்க வியாழக்கிழமை சூரிய ஓரையில் சிவ வழிபாடு செய்யவும்.
ரிஷபம்
ரிஷப லக்னத்திற்கு பூர்வப்புண்ணிய ஸ்தான அதிபதி புதன். அவர் 2, 5-ஆம் பாவகத் திற்கு அதிபதி. பாக்கியாதிபதி சனி. அதாவது 9, 10-ஆம் அதிபதி. சனி பாதகத்தையும் செய்பவர்.சனி பாதகாதிபதியானாலும் ராஜயோக கிரகமாகவும், தர்மகர்மாதிபதி யோக கிரகமாகவும் வருகிறார். ரிஷபத்திற்கு சனி, புதன் இருவரும் முழு சுபப்பலன் தருபவர்கள். புதன் தசை உரிய வயதில் நடந்தால் திருமணம், குழந்தை பாக்கியம், சமுதாய அந்தஸ்தான தொழில். உத்தியோகம், பங்குச் சந்தை ஆதாயம், பிள்ளைகள்மூலம் வருமானம், பூர்வீகச் சொத்தால் வருமானம் போன்ற நன்மைகள் ஏற்படும். சனி சுபப்பலன் பெற்று தசை நடத்தினால் பல தலைமுறைக்கும் நிலைத்து நிற்கும் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். தர்ம காரியங்கள்மூலம் தமது வாரிசுகளுக்கு புண்ணிய பலனை சேர்த்து வைப்பார்கள். முன்னோர்களுக்கு முறையான பித்ரு காரியம் செய்து முன்னோர்களின் நல்லாசி பெறுவார்கள். சனி தசை முடிந்து புதன் தசை வருவதால் 36 வருடத்திற்கு தொடர்ந்து ராஜயோக பலன் உண்டு.
பரிகாரம்: சனிக்கிழமை புதன் ஓரையில் சிவ வழிபாடு செய்யவேண்டும். புதன் கிழமை சனி ஓரையில் மகாவிஷ்ணுவை வழிபடவும்.
மிதுனம்
மிதுன லக்கினத்திற்கு பூர்வப்புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன். அவரே விரயாதிபதி. பாக்கியாதிபதி சனி அஷ்டமாதிபதியாகவும் வருவதால், 5 -ஆம் அதிபதி சுக்கிரனால் ஏற்படும் நன்மைகள் சற்று அதிகமாக இருக்கும். 8, 9-ஆம் அதிபதி சனி அசுபப் பலன்களை மிகைப்படுத்தலாகவும், சுபப் பலன்களை மிகக் குறைவாக வழங்குவார். சுக்கிர தசை காலங்களில் கிடைத்த அனைத்து இன்பங்களும் தசை முடிவில் இழக்க நேரும். சனி தசை கால ஆரம்பத் தில் விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம், வம்பு, வழக்கு தொடர்கதையாக இருக்கும். தசை முடிவில் இழந்த அனைத்து இன்பங்களும் துளிர்விடும். இரண்டுமே அதிக காலத்திற்கு வழிநடத்தும் தசைகள் என்பதால் சுய ஜாதகத்தில் சனி, சுக்கிரன் நின்ற நிலைக்கு ஏற்ப வழிபாடு செய்வதால் சுப பலன்கள் மிகுதியாகும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவேண்டும். சனிக்கிழமை புதன் ஓரையில் சக்கரத்தாழ்வாரை வழிபடவேண்டும்.
கடகம்
கடக லக்னத்திற்கு செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. கர்ம ஸ்தான அதிபதி. 5, 10-ஆம் அதிபதி. குரு பாக்கியாதிபதி அவரே ருண, ரோக, சத்ரு ஸ்தான அதிபதி. 6, 9-ஆம் அதிபதி என்பதால் செவ்வாய் தசை புக்தி காலங்களில் அதிக நன்மை அடைவார் கள். கடக லக்னத்திற்கு செவ்வாய் சுப வலுப் பெற்றால் குறுகிய காலத்தில் தன் வாழ்க்கைக் குத் தேவையான அனைத்தையும் சம்பாதித்து விடுவார்கள். குறிப்பாக அரசியல் ஆதாயம் அல்லது அரசாங்க வேலை என ராஜயோக வாழ்க்கை கிடைக்கும். குரு தசை காலங்களில் பிறவிக்கடன், பொருள் கடன் இரண்டிலிருந் தும் மீளமுடியாத பாதிப்பை சந்திக்கிறார்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை குரு ஓரையில் பழநி மலை முருகனை வழிபட சுபப் பலன்கள் இரட்டிப்பாகும்.
சிம்மம்
சிம்ம லக்னத்திற்கு குரு பூர்வப்புண்ணிய ஸ்தானாதி என்றாலும் அவர் அஷ்டமாதி பதி என்பதால் 5, 8-ஆம்மிட வேலையையும் செய்வார். உதாரணமாக ராஜயோக பதவியை யும் அந்தப் பதவியை முழுமையாக அனுபவிக்க முடியாத சில அசவுகரியங்களையும் வழங்குவார். செவ்வாய் 4, 9-ஆம் அதிபதியாகவும், பாதகாதி பதியாகவும் பலன் வழங்குவார். பாக்கியாதி பதியே பாதகாதிபதியாக வருவதால் பாக்கியம் பாதகம் கலந்ததாக இருக்கும். உதாரணமாக செவ்வாய் சொத்து, சுகம், நல்ல கல்வி, தாயன்பு இருந்தாலும் அதை பயன்படுத்த முடியாத வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை அமையும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை குரு ஓரை யில் முருகனை வழிபட பாக்கிய பலனை அடைய முடியும்.
கன்னி
கன்னி லக்னத்திற்கு சனிபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி. அவரே ருண, ரோக, சத்ரு ஸ்தான அதிபதி. 5, 6-ஆம் அதிபதி. சுக்கிரன் தனாதிபதி பாக்கியாதிபதி. 2, 9-ஆம் அதிபதி. கன்னி லக்னத்திற்கு அதிகம் நற்பலன்களைச் செய்பவர் பாக்கியாதிபதி மற்றும் தனாதிபதியான சுக்கிரனே. சனிபகவான் 5, 6-ஆம் அதிபதியாக இருப்பதால் குழந்தை களால், பூர்வீகத்தால், அதிர்ஷ்டத்தால் மன வேதனை கலந்திருக்கும். சுக்கிர தசை காலங் களில் பாக்கிய ஸ்தான வலிமையால் காலத் தால் அழிக்க முடியாத பாக்கிய பலன்கள் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சம், திருமண சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு, புத்திர பாக்கியம் உண்டாகக்கூடிய யோகம், செல்வம், செல்வாக்கு, சேர்க்கை, வண்டி வாகனம், பூமி, மனை வாங்கும் யோகம், ஆடை, ஆபரணங்கள் அமையும் வாய்ப்பு போன்றயாவும் அமையும். பண வரவுகளுக்கும் பஞ்சமில்லாமல் போகும். கடன்கள் யாவும் நிவர்த்தியாகும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை யில் சுமங்கலிப் பெண்களுக்கு மங்களப் பொருட் கள் வழங்கி ஆசிபெற சுபப்பலன் பெருகும்.
துலாம்
துலா லக்னத்திற்கு சனிபகவான் பூர்வபுண்ணிய ஸ்தான அதிபதி. 4, 5-ஆம் அதிபதி. புதன் பாக்கியாதிபதி, விரயாதிபதி. 9, 12-ஆம் அதிபதி. துலா லக்னத்திற்கு ராஜயோகாதிபதியாக வரும் சனியே முதல்தர சுபராவார். சனி பலம் பெற்று தசை நடத்தினால் 19-ஆம் வருடத்திற்கும் ஜாதகரின் வாழ்க்கையில் அடைமழைதான். அள்ள அள்ள குறையாத செல்வ வளம் பெருகும். சனி தசை முடிந்து வரும் புதன் தசை காலங்களில் புண்ணிய காரியத்திற்கு பொருள் விரயம் செய்தால் சுபப்பலன்கள் பல மடங்கு அதிகமாகும்.
பரிகாரம்: சனிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்தநாளில் வில்வ மாலை அணிவித்து சிவனை வழிபட ராஜயோகம் நிலைத்திருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக லக்னத்திற்கு குரு பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி. 2, 5-ஆம் அதிபதி. சந்திரன் பாக்கியாதிபதி, பாதகாதிபதி என்பதால் குரு தசை அதிர்ஷ்ட பலன்களை அள்ளி வழங்கும். சந்திரன் விருச்சிகத்தில் நீசம். லக்னாதிபதி செவ்வாய் கடகத்தில் நீசம் என்பதால் சந்திர தசை புக்தி காலங்களில் விருச்சிக லக்னத்தினர் அனுபவிக்கும் இன்னல்கள் அளப்பரியது. பெரும்பாலும் குரு தசை அள்ளித்தரும். செல்வம் நிலைத்து, நிறைந்து ஜாதகரின் வாழ்நாள் முழுவதும் பயன் தருவதாக அமையும். மத்திம வயதில் குரு தசையை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்களுக்கு சந்திர தசை வராது.
பரிகாரம்: வியாழக்கிழமை சந்திர ஓரையில் திருப்பதி வெங்கடாசலபதியை நேத்திர தரிசனம் செய்வது மிகச் சிறப்பான பலன் தரும்.
தனுசு
தனுசு லக்னத்திற்கு செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி. 5, 12-ஆம் அதிபதி. சூரியன் பாக்கியாதிபதி. செவ்வாய் விரய ஸ்தான அதிபதியாகவும் வருவதால் சூரியன் முதல் தர அதிர்ஷ்டத்தை தனது தசை புக்தியில் வழங்கு வார். குறைந்தபட்ச கால அளவான ஆறு வருடத் தில் இந்த ஜென்மத்தில் லௌகீக வாழ்வில் அடையவேண்டிய அனைத்து இன்பங்களையும் வழங்கிவிடுவார். அழியா புகழ், அந்தஸ்து, நிறைந்த செல்வம், பிள்ளைகளுக்கு சுபகாரியம் செய்து பார்க்கும் பாக்கியம் என நல்ல பலன்களை அடைவார்கள்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை சூரிய ஓரையில் மலைமீது உள்ள முருகனை வழிபட, பாக்கிய பலன்கள் கூடும்.
மகரம்
மகர லக்னத்திற்கு பூர்வப்புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன். 5, 10-ஆம் அதிபதி என்பதால் ஏக யோகாதியாக பலன் தருவார். புதன் பாக்கியாதிபதியாக இருந்தாலும் 6-ஆம் அதிபதியாக இருப்பதால் புதன் தசை காலங்களில் பாக்கிய பலன் மட்டுப்படம். புதன் தசை சிரமத்துடன் கலந்த சுபப்பலன்களை மட்டுமே வழங்கும். சுக்கிர தசை மகர லக்னத்திற்கு வழங்கும் சுபப்பலன்கள் சிறப்பானதாக இருக்கும். 20 வருடகால நீண்ட தசை என்பதால் எல்லாவிதமான இன்பங்களையும் அனுபவத்தி பயன்பெறமுடியும்.
பரிகாரம்: சனிக்கிழமை சுக்கிர ஓரையில் லஷ்மி நரசிம்மரை பானகம் படைத்து வழிபட, சுபப்பலன் மிகுதியாகும்.
கும்பம்
கும்ப லக்னத்திற்கு புதன் பூர்வபுண்ணிய ஸ்தான அதிபதி. 5, 8-ஆம் அதிபதி. சுக்கிரன் பாக்கியாதிபதி, பாதகாதிபதி. 4, 9-ஆம் அதிபதி. சுக்கிரன் பாதகாதிபதி என்றாலும் அவர் ராஜயோக கிரகமாவதால் அவரே முதல் நிலை சுபராவார். சுக்கிரன் பலம் பெற்று தசை நடத்தினால் பூர்வீக சொத்து, தந்தை, தந்தைவழி முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சொத்துக்கள் கிடைக்கும். சுய உழைப்பிலும் சிறப்பான வீடு, மனை யோகம் உண்டு. கல்வி நிறுவனம் நடத்துவார்கள். தாய், தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். வீடு தெய்வ கடாட்சம் நிறைந்து கோவில்போல் இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். குலம் தலைக்கும். வாழ்க்கை சுகமாகவும் அமைதி யாகவும் இருக்கும். பதவி, புகழ், அந்தஸ்துடன் கோடீஸ்வராக வாழ்வார்கள். புதன் பலம் பெற்று தசை நடத்தினால் தாய், தந்தை மற்றும் குலதெய்வம், முன்னோர்களின் நல்லாசி உண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சி, நிம்மதி, பங்குச் சந்தை ஆதாயம் உண்டாகும். கூட்டுக் குடும்ப மாக வாழ்வார்கள். பலருக்கு வேலை வாய்ப்பு வழங்குபவர்கள். சிலருக்கு அதிர்ஷ்ட வாரிசு இல்லாத உயில் சொத்து, பினாமி சொத்து கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்தநாளில் எள்ளுருண்டை தானம் வழங்கவும்.
மீனம்
மீன லக்னத்திற்கு சந்திரன் பூர்வப்புண்ணிய ஸ்தான அதிபதி. செவ்வாய் பாக்கியாதிபதி. 2, 9-ஆம் அதிபதி. இவர்களுக்கு சந்திர தசை, செவ்வாய் இரண்டுமே சுபப்பலனை மிகுதி யாக வழங்கும். செவ்வாய் பலம்பெற்று தசை நடத்தினால் பூர்வீக சொத்து, தந்தை, தந்தை வழி முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சொத்துகள் கிடைக்கும். சுய உழைப்பிலும் சிறப்பான வீடு மனை யோகம் உண்டு. பள்ளி, கல்லூரி நடத்தும் பாக்கியவான்கள். குடும்பம் தெய்வ கடாட்சம் நிறைந்து கோவில்போல் இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். உயர் கல்வி யோகம் உண்டு. செவ்வாய் பலம் பெற்று தசை நடத்தினால் பாக்கிய பலத்தால் வாழ்நாள் முழுவதும் புகழ் அந்தஸ்து உடன் வரும். அரசாங்க பதவி, அரச உத்தியோகம் உண்டு. பூர்வீகச் சொத்தை பல தலைமுறையினர் பயன் படுத்துவார்கள். சிலர் அதிர்ஷ்ட வசத்தால் தீடீர் பணக்காரர்களாக மாறுவார்கள். சந்திர தசை முடிந்தவுடன் செவ்வாய் வரும். சந்திர தசை பத்து வருடம், செவ்வாய் தசை ஏழு வருடம். ஆக 17 வருடம் இவர்களுக்கு அதிர்ஷ்ட மான வாழ்க்கை உண்டு.
பரிகாரம்: யோகத்தை தரும் எந்த தசையும் மத்திம வயதில் நடந்தால் மட்டுமே சிறப்பான பலனை அனுபவிக்கமுடியும். யோகம் தரும் தசை வராதவர்கள், பலனை அனுபவிக்க முடியாதவர்கள் குல, இஷ்ட தெய்வத்தையும் முன்னோர்களையும் வழிபட, நல்ல அதிர்ஷ்டம் கூடிவரும்.
செல்: 98652 20406