ரு ஜாதகத்தில் தோஷங் களும் சாபங்களும் உருவாகும் விதம் பற்றிப் பார்த்தோம். இனி தோஷங்களும் சாபங்களும் தீரும் காலங்கள் பற்றிப் பார்ப் போம். மனிதர்களுக்கு மனிதன் விடும் சாபங்களை இரண்டாக வகைப்படுத்தலாம்.

கோபத்தினால் ஏற்பட்ட சிறு சிறு மனத்தாங்கலான தோஷங்களுக்கும் தீர்வு வழங்கமுடியும்.

பாலாரிஷ்டம்

Advertisment

குடும்ப தோஷம்

பிரபலாரிஷ்ட தோஷம்

குரு சாபம்

Advertisment

செய்வினை தோஷம்

சத்ரு தோஷம்

மித்ரு தோஷம்

திருஷ்டி தோஷம்

மாதுர் தோஷம்

பிராமண சாபம்.

கோட்சாரத்தில் குருவின் பார்வை ராசிக்கு 1, 5, 9-ஆமிடங் களில் பதியும்போது தீர்க்கமுடியும். இந்த காலகட்டங்களில் கோட் சார சனி ராகு கேதுக்கள் 1, 5, 9-ஆமிடங்களுடன் சம்பந்தம் பெறக் கூடாது. கோட்சார சனி, ராகு கேதுக்கள் 1, 5, 9-ஆமிடங்களுக்கு சம்பந்தம்பெறும் காலத்தில் தோஷங்களையும் சாபங்களையும் தீர்க்க முயலக்கூடாது. தீராது அல்லது மிகுதியாகும்.

r

வாக்கு தோஷம்

தெய்வ தோஷம், தெய்வ சாபம்.

சர்ப்ப தோஷம்

ஜீவன தோஷம்

கால தோஷம்

பிதுர் தோஷம்

குரு சாபம்

இட தோஷம்

பெண் சாபம்

களத்திர தோஷம்

ஆகியவை சிலருக்கு தீரும் வகையிலும், சிலருக்கு தீர்க்கமுடியாத வகையிலும் இருக்கும் பல தலை முறை யாக தொடர்ந்துகொண்டே இருக்கும். என்ன வாசகர்களே பயமாக உள்ளதா?

கட்டுரையை முழுமையாக படித்தால் நிச்சயம் விடிவு காலம் பிறக்கும்.

பலரின் வாழ்க்கை இதுபோன்ற தோஷம் மற்றும் சாபங்களால் மீளமுடியாத தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உலகில் வாழ்பவர்களில் 50 சதவிகிதத்தினர் பூமியில் பிறந்து விட்டோம், வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்காக வாழ்பவர்கள்.

வம்சாவழியாக பல தலைமுறையாக எந்த முன்னேற்ற மும் இல்லாமல் கஷ்ட ஜீவனத்துடன் வாழுதல், குடும்பங் களுக்கு வாக்கு தோஷமுள்ளது என்று பொருள்.

தெய்வ நம்பிக்கை குறைவது, மத நம்பிக்கை இல்லாமல் போவது, ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்றுவந்தபிறகு குடும்பத்தில் மனகசப்பான சம்பவங்கள் நடப்பது தெய்வ தோஷம். பிரசன்னம் பார்க்கும் நாட்களில் குரு பலம் இல்லாமல் இருந்தாலும் தெய்வ அனுகூலம் இருக்காது.

இனம்புரியாத நோய், கணவன்- மனைவி பிரிவினை, குழந்தைகளால் ஏற்படும் மனக் கசப்பு, புத்திர தோஷம், புத்திர தோஷம் ஆகியவைகளாகும்.

நிலையான- நிரந்தரமில்லாத தொழில், வேலை, தொழில் நஷ்டம், வேலையாட்களால் ஏற்படக்கூடிய மன உளைச்சல், உழைத்த கூலி கிடைக்காமல் போவது போன்ற பலன்கள் உருவாகும்.

உரிய வயதில் நடக்கவேண்டிய அனைத்தும் காலம் தாழ்ந்து நடப்பது அல்லது நடக்காமலே போவது. குறிப்பாக திருமணம், குழந்தை பிறப்பு போன்றவற்றைக் கூறலாம்.

தந்தை- மகன் கருத்து வேறு பாடு, தேவையான பொருளா தாரம் இன்மை, சுப விசேஷங்களில் தடை, முன்னோர்களின் நல்லாசி குறைவுபடுதல், பித்ருக்கள் வழிபாட்டை கடைபிடிக்க முடியாமல் போவது, குடும்பத்தில் நிம்மதி குறைவது போன்ற பலன்கள் நடக்கும்.

பிள்ளைகள் தவறான செயல் களில் ஈடுபடுவது, கல்வியில் நாட்ட குறைவு, கற்ற வித்தை மற்றும் கல்வியால் பயனற்ற நிலை, குழந்தை பாக்கியமின்மை போன்றவைகள் ஏற்படலாம்.

yy

பூமி தோஷம் பற்றிய கட்டுரை நமது "பாலஜோதிட'த்தில் கட்டுரைகள் தந்துள் ளேன். குடியிருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடு, சல்லிய தோஷம், குடியிருக்கும் வீட்டில் நிம்மதியின்மை, விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கலாம்.

திருமணத்திற்குமுன்பு திருமணம் நடக்க வில்லை என்ற மன வருத்தம். திருமணத்திற்கு பிறகு திருமணம் ஏன் நடந்தது என்ற கவலை. நாட்டில் 99 சதவிகிதத்தினர் சந்திக்கும் பிரச்சினை. இதற்கு தீர்வு உண்டா? என்று வாசகர்கள்தான் பதில் கூறவேண்டும்.

தீராத தீர்க்கமுடியாத பெரிய சாபங்களில் ஒன்று பெண் சாபம். பெண் சாபம் பற்றி நான் உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்தக் கட்டுரையை யும் நமது இதழில் நான் எழுதியுள் ளேன். அதேபோல் மேலே உள்ள சில முக்கிய தோஷத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் அதற்கான தீர்வினையும் பின்வரும் சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

20-2-2025 (மாசி 8) அன்று காலை 9.10-க்கு நமது சேலம் அலுவலகத்தில் பார்க்கப்பட்ட சோழிப் பிரசன்னம்.

பிரசன்ன கர்த்தா: பெண்.

கிழமை: வியாழன்.

நட்சத்திரம்: விசாகம் 4.

திதி: தேய்பிறை சப்தமி.

உதய லக்னம்: மீனம்.

யோகம்: துருவம்.

கரணம்: பவம்.

ஆரூட சோழி: 36.

சோழி லக்னம்: மீனம்.

சோழி லக்னமான மீனத்தில் சுக்கிரனும் ராகுவும் நெருக்கமான டிகிரியில் சஞ்சாரம். ஆரூட சோழி லக்னாதிபதி குரு 3, 8-ஆம் அதிபதி சுக்கிரனுடன் பரிவர்த்தனை.

ஆரூட லக்னத்திற்கு 3-ல் குரு இருந்ததால் தெய்வ அனுகூலம் குறைவாக உள்ளது.

குடும்பத்தில் பசி, பட்டினியால் அல்லது உணவு அருந்த முடியால் இறந்த நபர்கள் உண்டு.

தற்சமயம் வீட்டில் நோய்வாய்ப் பட்டவர்கள் அறுவை சிகிச்சை நிலையில் உள்ளனர்.

பிறருக்கு செய்த உதவியினால் அதிக துன்பத்தை சந்திக்க நேர்ந்துள்ளது. குடுபத்தில் அதிகமான கலப்புத் திருமணம் நடக்கிறது. மூன்று தலைமுறையாக பலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் நடந்துள்ளது. திருமணம், குடும்ப வாழ்க்கையிலும் நிம்மதி இல்லை. பிறந்த பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை. அவமானமான கோர்ட், கேஸ் பிரச்சனை உள்ளது கடந்த காலங்களில் நடந்த பிரச்சினைகள் நிகழ்காலத்தில் எதிர்காலம் பற்றிய பயத்தை மிகைப்படுத்தியுள்ளது.

வேற்று மதம் சார்ந்த பெண்ணின்மேல் ஆசைப்பட்டு அவரின் குடும்ப வாழ்க்கையை கெடுத்ததால் பெண் சாபத்தால் திருமணம் சார்ந்த பாதிப்பு.

பிரசன்னம் பார்க்கவந்த பெண் மேலே கூறிய அனைத்து பிரச்சினைகளும் குடும்பத்தில் நடந்துவருகிறது. மிகக்குறிப்பாக காதல் திருமணம், திருமண வாழ்க்கையில் விவாகரத்து அதிகம் உள்ளது என்று கூறினார்.

சில தோஷங்களையும் சாபங்களையும் தீர்ப்பது கடினம். மேலும் உங்கள் வம்சத்தினர் வாழும் குடும்பத்து பெண்ணின் வாழ்க்கையை சேதப் படுத்தியுள்ளார்கள் என்று கூறினோம்.

கணவனை இழந்த வசதியில்லாத பெண்ணிற்கு பசுவுடன் கூடிய கன்று வழங்க கூறப்பட்டது. ஒரு வருடம் பசுவையும் கன்றையும் பராமரிக்க தேவையான பண உதவியும் வழங்கவேண்டும்.

அதன்பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் தாக்கம் குறைந்துள்ளதா என்பதை கண்டரிய மீண்டும் பிரசன்னம் பார்க்க வரக் கூறப்பட்டுள்ளது.

இனம்புரியாத தீராத, தீர்க்கமுடியாத பிரச்சனைகளால் தினமும் அதிகாலை 4.30 முதல் 530 மணி வரையான பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் நெய் தீபம் ஏற்றி பிரபஞ்ச சக்தியிடம் சரணாகதி அடைந்து மன்னிப்பு கேட்கவேண்டும்.

கோபமோ சாபமோ நியாயமானதாகவோ -நியாயமற்றதாகவோ இருக்கும். எத்தகைய தோஷமானாலும் விமோசனம் உண்டா? இல்லையா? என்பதே கேள்வி. கோபத்தினால் ஏற்பட்ட சாபம் சில குறிபிட்ட காலத்தில் வலிமையை இழந்துவிடும். நியாயமான சாபம் பாதிப்பை ஏற்படுத்தியவருக்கு மீள முடியாத விளைவை தருகிறது.

சாபத்தினால் ஏற்பட்ட தோஷத்திற்கு விமோசனம் கிடைப்பது எளிதல்ல. பாதிக்கப்பட்டவர் மன்னித்தால் மட்டுமே விமோசனம் கிடைக்கும். தவறு செய்தவரும் பாதிக்கப்பட்டவரும் ஒருவரையொருவர் சந்தித்தால் மட்டுமே இது சாத்தியம். தவறு செய்தவருக்கு தான் செய்த தவறு என்ன என்று தெரியவேண்டும்.

சில தோஷங்கள் வம்சா வழியாக தொடரும்போது எங்கே போய் மன்னிப்பு கேட்பது? எப்படி கேட்பது? என்ற கேள்விக்கு பிரசன்னம் தெளிவான தீர்க்கமான பதிலைத் தரும். நியாய மற்ற கோபமும் சாபமும் எய்தவரை பதம் பார்க்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. கோபத் தையும் சாபத்தையும் உருவாக்கியவனும் உருவாகச் செய்தவனும் பிறவி எடுத்து தங்கள் கோபத்தையும் சாபத்தையும் தீர்த்துக் கொள்ளும்போதே தோஷம் நிவர்த்தி யாகிறது.

இந்நிலை தேவையா? உலகத்தில் மிகவும் சுலபமான வேலை அறிவுரை சொல்வது என்பதை நானும் உணர்கிறேன். எந்த நிகழ்வாகினும் பிரபஞ்சத்திடம் சரணடைந்தால் முக்தி கிடைக் கும். எவ்வளவு பூஜை செய்தா லும், வரம் பெற்றாலும், மாந்த்ரீகம் செய்தாலும் ஒரு நல்லவரை அழிக்க முடியாது.

ஆனால் ஆற்ற முடியா அழுகையால் பதறி ஆழ் மனதிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறும்போது எப் பேர்ப்பட்ட வலிமையான மனிதனையும் உருத் தெரியாமல் அழித்து விடும்.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒருவர் சேர்க்கும் பாவ- புண் ணியங் கள் மட்டுமே உடன் வருமென்பதை உணர்ந்து செயல்பட்டால் தோஷங்களும், சாபங்களும் செயலற்று போகும்.