தோஷங்களும் சாபங்களும் உருவாகும் காலங்களை பற்றி தெரிந்துகொண்ட "பாலஜோதிட' வாசகர்களே தற்போது தோஷங்களும் சாபங்களும் உருவாகும் விதம் மற்றும் விலகும் காலங்கள் பற்றித் தெரிந்துகொள்ளலாம். வாங்க.

மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு தீராத, தீர்க்க முடியாத பிரச்சினை இருக்கும். அந்த விஷயத்தில் மன உளைச்சலால் அவதியை சந்திப்பார்கள். சில குடும்பங்களுக்கு பல தலைமுறையாக தீர்க்கமுடியாத தோஷங்களும் சாபங்களும் இருக்கும். ஆரம்பம் என்ற ஒன்று இருந்தால் முடிவும் வரவேண்டும் என்பதுதானே பிரபஞ்ச நியதி. ஒரு பெறும் சாபங்களில் பலவகை உண்டு. சுருக்கமாக புரியும்படி சொன்னால் காசு, காமம், சொத்து என்ற மூன்று ஆசையே அதிகப்படியான தோஷங்களையும், சாபங்களையும் உருவாக்குகிறது.

காசு, காமம், சொத்துமேல் விருப்பமில்லாத ஒரு ஜீவனை இந்த லௌகீக உலகில் பார்ப்பது அரிது. சக மனிதர்களுக்குள் ஏற்படும் காழ்புணர்ச்சியால் ஒவ்வொரு கணமும் எண்ணில் அடங்கா சாபங்கள் உருவாகுகிறது. தனது உணர்விற்கு முக்கியத்துவம் கொடுத்து காசு, காமம், சொத்து இந்த மூன்று விசயத்தை தன் சுயநலத்திற்காக யாரை ஏமாற்றினா லும். பிரபஞ்சத்திடமிருந்து தப்பிக்க முடியாது. சாட்சிகள் இல்லாத தவறைக்கூட பிரபஞ்ச சக்தி தனது பதிவேட்டில் படம் பிடித்துக் கொண்டு இருக்கிறார். தற்போது உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் சாட்டிலைட் படம் எடுக்கிறது.

வாக்கு தோஷம் (காசு)

ஒருவருக்கு கோபமும், சாபமும் ஒருவரின் பேச்சு மூலமாகத்தான் உருவாகும். அதனால்தான் வள்ளுவர்

"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லி ழுக்குப் பட்டு'

என்று கூறியுள்ளார்.

tt

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்கவேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர் என்பது இதன் பொருள்.

நல்ல தரமான நிம்மதி, நியாயம் கிடைக்கும். அழுகை இருக்காது. நியாயமற்ற பிரச்சினைகளால் நிம்மதி, தூக்கம் என எல்லாம் பறிபோவதுடன் சண்டை, அழுகை, கத்துதல், கோபம், சாபம் போன்ற மோசமான சூழலை உருவாக்கும். கலகலப்பும், சலசலப்பும் நிறைந்ததுதான் குடும்ப வாழ்க்கை. குடும்பம் என்றால் கருத்து வேறுபாடு, விவாதம், சண்டை இல்லாமல் வாழ முடியாது. ஆனால் வறட்டு கவுரவம், நியாயமற்ற கோபம், தரமற்ற வார்த்தை கள் குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தவே செய்யும். இதனால் பல குடும்பங் களில் ஒற்றுமைக் குறைவு மிகுதியாகவே இருக் கிறது. இதுவே ஒருவரின் ஜாதகத்தில் வாக்கு தோஷமாக பதிவாகி குடும்பத்தில் நிம்மதி யின்மையை அதிகப்படுத்து கிறது.

அதேபோல் தன ஸ்தானம் எனும் 2-ஆமிடம் கொடுக்கல்- வாங்கலி ல் தகராறைக் குறிக்குமிடம். 2-ஆமிடத்து அதிபதி ஆட்சி உச்சம், நட்பு கிரகம், இயற்கை சுபர் இருந்தால் கொடுக்கல்- வாங்கல் சுமூகமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவார்கள். பிறரின் நல்லாசிகள் நிரம்ப பெறுவார்கள்.

2-ஆமிடத்தில் நீசம், அஸ்தங்கம், வக்ர கிரகம், இயற்கை பாவிகள் நின்றால் கொடுக்கல்- வாங்கலி ல் கருத்து வேறுபாடு மிகுதியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாது. இவர்களுக்கு பணப் பரிவர்த்தனையால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலையால் தோஷமும் சாபமும் ஏற்படும்.

களத்திர ஸ்தானம் (காமம்)

ஒரு ஜாதகத்தில் 7-ஆம் பாவகமான களத்திர ஸ்தானம்மூலம் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணை மற்றும் வாழ்க்கையில் சந்திக்கும் அனைத்து நட்புகளையும் பற்றிக் கூறுமிடமாகும். ஒருவரின் கலவியளைப் பற்றிக் தெரிந்து கொள்ளும் பாவகமும் இதுதான். இது ஆண்பால் பெண்பால் இருவருக்கும் பொருந்தும். 3, 5, 8, 11, 12-ஆம் பாவகங்களுக்கு எந்த விதத்தில் 7-ஆம் பாவக சம்பந்தம் இருந்தாலும் மனதிற்கு ஏற்ற வாழ்க்கைத்துணை இருந்தாலும் மறைமுக கலவியால் வாழ்க்கை உண்டு. சிலர் இளைய தாரம் எனும் வைப்பாட்டி கொடுமையால் உடம்பில் உயிரைத் தவிர மீதி அனைத் தையும் கடனுக்காக இழக்கிறார்கள். பதினொன் றாம் இடம் அசுப வலுப் பெற்றால் மறைமுக வாழ்க்கை துரதிர்ஷ்டத் தைத் தரும்.

ஏழு, பதினொன்றாம் அதிபதிகள் மூன்று, நான்காம் இடத்துடன் சம்பந்தம்பெற்றால் கிளிபோல் மனைவி இருந்தாலும் குரங்குபோல் ஒரு வைப்பாட்டி வைத்த கதைதான். 60 வயதிலும் இளமையாக காதல், காமம் என்று வாழ்வார்கள். இவர்கள் இந்த விசயத்தில் தவறு செய்தாலும் எளிதில் சட்டத்தின் பிடியில் சிக்க மாட்டார்கள். ஆனால் காலபகவான் எழுதிய கணக்கில் சிக்கி சின்னா பின்னமாகுவார்கள்.

பதினொன்றாம் அதிபதி ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடத்துடன் சம்பந்தம்பெற்று குருப் பார்வை பெற்றால் முதல் மனைவி இருக்கும்போதே இரண்டாம் திருமணம் செய்து இளைய தாரத்தால் வம்பு, வழக்கு கட்டப் பஞ்சாயத்து என கடனாளியாக வாழ்வார்கள். சகிப்புத் தன்மை இல்லாதவர்கள் மற்றும் தவறான இன்பத்திற்காக இரண்டாவது வாழ்க்கையை தேடினால் அது குறிப்பிட்ட காலத்திற்குமேல் கசக்கும். ஜனனகால ஜாதகத்தில் சுக்கிரன் கேது, செவ்வாய் கேது சம்பந்தம் இருப்பவர்கள் அனுசரித்துச் போகாமல் பல திருமணம் செய்ததால் சாபம் நிறைந்ததாக இருக்கும்.

என்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒரு செல்வந்தருக்கு 7, 11-ஆம் இருந்தது. நான் அவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட நட்பால் பிறரின் கோபமும் சாபமும் அதிகமாக உள்ளது என்று கூறினேன். அதற்கு அவர் திருமணத்தின்போது மிகச் சாதாரண நிலையில் அடிப்படைத் தேவைக்குக்கூட வருமானம் கிடையாது. திருமணத்திற்கு பிறகு நான் படிப்படியாக முன்னேறி பல கோடிக்கு அதிபதி. தவறான நட்பால் சில கோடிகளை இழந்து நிம்மதி இல்லாமல் தவிக்கிறேன். இதில் இருந்து மீண்டு வரவேண்டும். எனது மனைவி, பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழ விரும்புகிறேன் என்றார். கலவியல் என்பது இருவரின் மனப்பூர்வமான சம்மதத்துடன் மட்டுமே நடக்கும். அங்கு மனம் எனும் ஆன்மா சிலருக்கு ஆழ்ந்த அன்பை காதலை பரிசாக்கிவிடுகிறார். அந்த காதலி ல் பிழை உருவாகும்போது தோஷங்களும் சாபங்களுமே மேலோங்கும். அது இயலாமையின் வெளிப்பாடாகும். இதில் ஆண்- பெண் இருவருக்கும் பொதுவானவை.

அவரவரின் சுய ஜாதகத்திற்கு ஏற்ப அந்த பிறவியில் அல்லது அடுத்தடுத்த பிறவிகளில் அதற்கான வினைப் பதிவுகள் வெளிப்படும்.

சொத்து: 4-ஆம் பாவகம்

இது தொடர்பான பல கருத்துகளை சொத்துகளுக்கும் தோஷம் உண்டா? என்ற கட்டுரையில் நான் விரிவாக எழுதி இருந்தேன். இது நமது "பாலஜோதிட' வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நம்புகிறேன். ஆனாலும் சில கருத்துகளை மட்டும் நான் இங்கு முன் வைக்கிறேன்.

சொந்தத்தாலும், சொத்துகளாலும் மன உளைச்சலை சந்திக்காத மனிதர்களே கிடையாது. அதே நேரத்தில் சில பெற்றோர் கள் ஒரு பிள்ளைகள்மீது தனிக் கவனம் செலுத்ததான் செய்கிறார்கள். இந்த மகன் நன் றாக இருக்க வேண்டும்; அந்த மகன் நன்றாக இருக்கக் கூடாது என்று சபிப்பதும் பல இடங் களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

இன்னும் ஒருபடி மேலே போய் சில பெற்றோர்கள் சொத்துப் பங்கீட்டில் பாகுபாடு காட்டுகிறார்கள். தனக்கு பிடித்த பிள்ளைக்கு அதிக பங்கு கொடுத்து பிள்ளை பாதுகாப்பதாக நினைக்கிறார் கள். உண்மையில் மற்ற பிள்ளைகளின் மனத் தாங்கள் தான் காப்பாற்ற நினைக்கும் பிள்ளையின் ஜாதகத்தில் தோஷமாக பதிவாகும். எது எப்படி இருந்தாலும் பெற்ற பிள்ளைகளை சபிப்பது நியாயமா? உங்களின் சாபம் வாரிசுகளை வதைக்கும். தனது மரபணுவில் உருவானதே வாரிசுகள் என்பதை சில பெற்றோர்கள் மறந்து பிள்ளைகளுக்குள் பிரிவினையை ஏற்படுத்திவிடுகின்றனர்.

எத்தனை வயதானாலும் பெற்றோர் அன்பை எதிர்பார்ப்பது மனித இயல்புதானே. வயதிற்கும் பாசத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஒருவருக்கொருவர் சாபம் கொடுக்கும் போது சாபத்தை நிவர்த்தி செய்ய மறுபிறவி எடுக்க நேரும். ருண பந்தம் தொடரும்.

ஆன்மாவில் வினைப்பதிவு மிகுதியாகி பிறவா நிலையை அடைய முடியாது.

தோஷங்களும் சாபங்களும் தீரும் காலம் கோட்சார கிரங்களான குரு, சனி, ராகு- கேதுவிற்கு மட்டுமே ஒரு ஜாதகத்திலுள்ள தோஷங்களையும் சாபங்களையும் தீர்க்கும் அதிகாரம் உண்டு. ஆக்குபவர்களும் அவர்களே அழிப்பவர்களும் அவர்களே. சுய ஜாதரீதியான தசாபுக்திக்கு ஏற்ப தோஷங்களையும் சாபங்களையும் மிகுதியாக்கி தக்க காலம் வரும்போது அதற்கான நிவர்த்தியையும் வழங்குவார்கள்.

இனி அடுத்த வாரம் கோட்சார கிரகங்கள் எந்த காலகட்டத்தில் தோஷமும் சாபமும் நிவர்த்தியாகும் என்பதை அறிவோம். இனம் புரியாத மீளமுடியாத தோஷங்களுக்கும், சாபங்களுக்குமான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

தொடரும்...

செல்: 98652 20406