லக்னம்
லக்னாதிபதியில் தெரிந்துவிடுகிறது..
ஜாதகர் நினைத்தது நடக்குமா
நடக்காதா என்று?!...
லக்னம்,லக்னாதிபதி
ஆறு, எட்டு, பன்னிரண்டில்
மறையாமல் இருந்தாலே
ஜாதகர் சுப யோகியாகிறார்...
லக்னாபதியுடன்கூடி நின்ற
ஆறு, எட்டு, பன்னிரண்டாம் அதிபதி
எக்காலமும் தொல்லைதான்...
பரிகாரம் சொல்வதென்றால்
பிறரை பரிகாசம் செய்யாமல்
இருந்தாலே
உனக்கு வெற்றிமேல் வெற்றிதான்...
தனாதிபதி
கேந்திர, திரிகோணங்களில் இருந்தால்
நல்ல வருமானம் கிடைக்கும்
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்..
மறைவிடத்தில் நின்ற இரண்டாம் அதிபதி
குடும்பத்தில் வறுமையை கொடுக்கும்..
இல்லாதவனை இல்லாளும் மதியாள்
விதி அப்படி இருக்க
இரண்டாம் இடம் கெட்டுத்தான் போகும்...
சுப கிரக பார்வை மட்டுமே
ஓரளவு சுபிட்சம் தரும்...
பரிகாரம் என்னவென்றால்
பணம் வர
பக்குவமாய் பேசு...
மூன்றாம் அதிபதி கெட்டுப் போனால்
தைரியம் இல்லாத கோழையாய் இருப்பாய்...
செய்த வேலையை
திரும்பத் திரும்ப செய்து
எந்த வேலையும்
உருப்படியாய் செய்ய மாட்டான்...
விதாண்டா வாதம் பேசி
வரும் நல்லதையும் கெடுத்துவிடுவான்...
கோபத்துடன் எழுகிறவன்
தோல்வியோடு அமர்வான்...
பொறுமை நிதானத்துடன்
நீ இருந்தால்
பொக்கிஷம் உன் கைக்கு வரும்...
மூன்றாம் இடம் கெட்டுப் போனவனை
மாமனாரும் மதிக்க மாட்டான்...
நான்காம் இடம் நன்றாக இருந்தால்
நான்கு வீட்டுக்குச் சொந்தக்காரன்...
நான்காம் இடம் கெட்டுப் போனால்
நாய் படாத பாடுதான்..
சுகஸ்தானம் நன்றாக இருந்தால்
தாயும் மதித்து தாரமும் மதிப்பாள்...
நான்காம் அதிபதி 6, 8, 12-ல் இருந்தால்
நல்லதொரு வாழ்க்கை இல்லை...
பரதேசம் சென்றாலும்
பாவம் உன்னை துரத்துமப்பா...
அனாதை ஆசிரமத்திற்கு
ஆண்டுதோறும்
உடை தானம் செய்ய
உருப்படியான வாழ்வு வருமப்பா...
ஐந்தாமிடம் நன்றாக இருந்தால்
குலதெய்வ அருளால்
நல்ல குழந்தைகள் பிறக்கும்...
ஐந்தாம் இடம் கெட்டுப் போனால்
புத்திர தோஷம்..
குழந்தைகளால் அவமானம்,
அனாதையாகி நிற்பார்கள்...
குழந்தை இல்லாமல் தவிப்பதைவிட
இவன் ஏன்டா பொறந்தான்னு
வருத்தப்படுவார்கள்...
விதி இப்படித்தான்
செய்த கர்மாவை
அனுபவித்தே ஆகவேண்டும்...
பூர்வபுண்ணியம்
கெட்டுப் போனவனுக்கு
புத்திரர்களால் தொல்லையே...
அனாதை குழந்தைகளை
தத்தெடுத்து வளர்க்க
புத்திர தோஷம் நீங்கும்...
ஆறாம் இடத்து அதிபதி
நன்றாக இருந்தால்
நோய், எதிரி, கடன் இல்லாமல்
நீண்ட ஆயுளுடன் இருப்பான்...
6, 8, 12-ஆம் அதிபதிகள்
6, 8, 12-ஆம் இடத்தில் மறைந்தால்
கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும்
ராஜயோகம்...
சுபத் தன்மை பெற்ற
மறைவிட அதிபதிகள்
பரதேசம் அனுப்பி
பணக்காரனாய் ஆக்குமப்பா...
வெளிநாட்டு வாழ்க்கை
வெளிப்படையான வாழ்க்கை...
6, 8, 12-ஆம் அதிபதிகள் தசை வந்தால்
வெளிநாடு சென்றுவிடு
வெற்றிகரமாய் வாழ்வாய்..
நினைத்ததெல்லாம் கைகூடும்...
ஏழாமிடம் கெட்டுப்போனவனுக்கு
8 பொண்டாட்டி கட்டினாலும்
ஏற்றம் இல்லையப்பா...
உன்னால்தான்
வாழ்க்கை கெட்டுப்போனது என்று
மனைவியை ஒருபோதும் பழிக்காதே..
நீ யாரை கட்டினாலும்
உன் விதி இதுதானப்பா...
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்...
தோஷங்கள் எத்தனை இருந்தாலும்
நீ பேசும் வார்த்தைகள்தான்
வாழ்க்கையை வாழவைக்கும்...
நிதானமாய் பேசு
நிம்மதியாய் வாழு...
எட்டாம் இடம் கெட்டுப் போனவனை
எவனாலும் அசைக்க முடியாது..
ஆயுள் பலமும் உண்டு
ஆட்சி அதிகாரப் பதவியும்
இவனுக்கு உண்டு...
எட்டாம் அதிபதி தசையில்
எதிரி எவனும் இல்லாமல் போவான்..
எட்டாம் இடம் பாவிகளால் சூழ்ந்தால்
சூழ்ச்சி வலையில் விழுந்து
சுக்குநூறாய் உன் வாழ்க்கை போகும்..
எல்லா கெட்ட பெயரும் உண்டாகி
உன்னையே அழித்துக்கொள்ளும்
காலம் வந்துவிடும்...
எட்டாம் இடத்தை எப்பொழுதும்
கணிக்க முடியாது..
கரணம் தப்பினால் மரணம் நிகழுமடா...
ஒன்பதாமிடம்
நன்றாக அமைந்தால்
இந்த ஜென்மமே உனக்கு சொர்க்கம்..
ஏதாவது ஏடாகூடமானால்
ஜென்மமே நரகம்தான்...
ஒன்பதாம் இடத்து அதிபதி
பாவ கிரக பார்வை
பாவ கிரக சேர்க்கை பெற்றால்
தந்தைக்கு கண்டம் தரும்...
தந்தைக்கு கிரகம் நன்றாக அமைந்தால்
இன்னொரு தாரம் உண்டு...
குருவை வணங்க கூசி நிற்காதே
குருவே சரணம் என்று போற்று
நீ நினைத்த காரியம் ஜெயமாகும்...
பத்தாம் இடம் கெட்டுப் போனவனுக்கு
மாமியார் எதிரி ஆவாள்...
அடிக்கடி தொழில் மாறி அவதிப்படுவான்...
மாமியாரை மதிக்காதவன்
மாமியாரை இழந்தவன்தான்
நிம்மதியாய் இருப்பான்...
பத்தில் ஒரு பாவியாவது இருந்தால்தான்
பதட்டமில்லாமல் பணி செய்வான்..
சுப கிரகப் பார்வைபெற்றால்
அரசாங்கத்தில் பெரும் பதவி அடைவான்...
கர்ம ஸ்தானத்தில் பாவிகள் கூடினால்
கர்மவினைகள் தீரும்வரை
கஷ்டமே அனுபவிப்பான்...
பதினோராம் இடம் வலுத்தவனுக்கு
கண்ட கனவெல்லாம் நிறைவேறும்...
லாப ஸ்தானம் வலுத்ததனால்
செய் தொழி-ல் லாபம் உண்டு...
ஒன்றுக்கு இரண்டு மனைவிகள்
இருந்தாலும் இன்புற்றே வாழ்வான்...
பதினோராமிடம்கெட்டவன்
பட்டதே போதும் என்பான்...
மூத்தோரை நீ வணங்க
முன்னம் செய்த பாவம் தீரும்...
பன்னிரண்டாம் இடம்
சுப கிரகப் பார்வை பட்டால்
வெளிநாட்டில் யோகம் உண்டு...
தப்பித்தவறி
பாவிகள் பார்த்தால்
பறந்து பறந்து பாடுபட்டாலும்
பத்து பைசா மிஞ்சாதப்பா...
பரதேச வாழ்க்கை மட்டும்
கெட்டுப் போகாது...
பக்கத்தில் பட்டு மெத்தை இருந்தாலும்
படுக்கையும் நரகம்தான்...
நல்லதொரு பரிகாரம்
நான் சொல்கிறேன் கேளப்பா...
படுத்த படுக்கையாய் வாழும்
முதியோருக்கு
பண உதவி செய்தால்தான்
உனக்கு படுக்கை சுகம் கிடைக்குமப்பா...
12-ல் பாவி அமர்ந்தால்
செத்தாலும் நரகம்தான்...
செய்த வினைகளைத் தீர்க்க
வீழ்ந்து கிடக்கும்
விலைமாதருக்கு வீடு கட்டிக்கொடு...
நீ விட்ட புகழை எட்டிப் பிடிப்பாய்..
ஏற்றம்பெற பரிகாரம் நீ செய்தால்
இறங்கு முகமே
உனக்கு இல்லையப்பா...
செல்: 96003 53748